Saturday, May 2, 2020

பொடுகு! தவிர்க்கலாம்... தடுக்கலாம்!



விளம்பரங்களைப் பார்த்து கண்டகண்ட ஷாம்புக்களை, கண்டிஷனர்களைப் பயன்படுத்தி பொடுகை (Dandruff) விரட்டப்போய் முடியை இழப்பவர்கள் அதிகம். பொடுகுப் பிரச்னை ஏன் ஏற்படுகிறது? அதைத் தவிர்க்க வழிகள் என்னென்ன?

பொடுகு எப்படி உருவாகிறது?
பொடுகு என்பதை இறந்த செல்கள் எனலாம். உடலில் உள்ள செல்கள் குறிப்பிட்ட இடைவெளியில் உதிர்ந்து, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. நம் தலையின் மேற்புறத்தில் உள்ள தோல் செல் உதிர்ந்து, சருமம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் பயணத்தில் சிலருக்கு அளவுக்கு அதிகமாக உதிர்ந்து அரிப்பை ஏற்படுத்துவதை பொடுகு என்கிறோம். பொடுகு என்றால், சுத்தம், சுகாதாரமில்லாத நிலையால்தான் வருகிறது என்று கருத வேண்டியது இல்லை. இது பெரும்பாலானவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைதான்.
பொடுகுப் பிரச்னை ஏற்பட, உடல் மற்றும் மனம் என பல்வேறு காரணங்கள் உள்ளன. பொடுகுத் தொல்லை இருக்கும்போது, தலையில் செதில் செதிலாக தோல் படலம் ஏற்படுகிறது. நீண்ட நாள் பொடுகுப் பிரச்னையால், கண்கள், காதுகள், மூக்கு  மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள சருமத்தையும் அது பாதிப்படையச் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

சருமத்தின் தன்மை: வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, எண்ணெய்ப் பசை சுரக்கும் செபாசியஸ்  சுரப்பியின் (sebaceous secretions) குறைபாட்டால் பொடுகு ஏற்படும்.

 எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கு, அதிகப்படியான சுரப்பு காரணமாக, பூஞ்சைத்தொற்று (Fungus) உருவாகி, பொடுகை ஏற்படுத்தும்.

சுகாதாரக் குறைபாடு: தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக்கொள்வது, முறையாகப் பராமரிக்காதது.
தோல் ஒவ்வாமை: சிலருக்குத் தோல் ஒவ்வாமை பிரச்னை இருக்கும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் சோப்பு அல்லது ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்துவதால், பொடுகு ஏற்படலாம்.

ஊட்டச்சத்துக் குறைபாடு: சில வகை உணவுகள் சருமப் பிரச்னைக்கு வழிவகுக்கும். துத்தநாகம், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் குறைந்த உணவுகள் உட்கொள்வது, எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது பொடுகுக்குக் காரணம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தட்பவெப்பநிலை மாறுபாடு: குளிர் காலங்களில் வியர்வையே இன்றி இருப்பதும், கோடை காலத்தில் அதிகமாக வியர்ப்பதும் சிலரின் சருமத்தைப் பாதிக்கும். இந்த தட்பவெப்ப நிலை மாறுபாடுகளாலும் சிலருக்கு பொடுகு ஏற்படலாம்.

ஹார்மோன் சமச்சீரின்மை: பொடுகு, ஏற்பட ஹார்மோன் சமச்சீரின்மையும் ஒரு காரணம். ஆண்களுக்கு  சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) மற்றும் பெண்களுக்கு சுரக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் (Androgen) ஆகிய ஹார்மோன் சீரின்மை காரணமாக இது ஏற்படலாம்.

பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் தினசரி இரண்டு முறை குளிக்கலாம். பொடுகு என்பது ஒருவகையான தூய்மைக் குறைபாடுதான். நோய் அல்ல. இந்தப் பிரச்னையைக் கவனிக்காமல்விட்டால், சொரியாசிஸ் என்ற தோல்அழற்சி நோய் ஏற்படும்.


பொடுகுத் தொல்லையைத் தவிர்க்க!

*வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது உடல்நலத்துக்கு நல்லதுதான். ஆனால், பொடுகுத்தொல்லை உள்ளவர்களுக்கு எண்ணெய்ப் பசை அதிகரிக்கும் என்பதால், அவர்கள் இதைத் தவிர்க்கலாம்.
*கொழுப்புச்சத்து நிறைந்த நெய், பால், வெண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட் களைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
*டீன் வயதில் உடலில் அதிகமான ஹார்மோன் சுரப்பு ஏற்படும். பொதுவாக, பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பினால் அதிகமான எண்ணெய் சுரக்கும். பொடுகுத் தொல்லையும் ஏற்படும். எனவே, எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
*தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஷாம்பு உபயோகிப்பது நல்லது. அதற்காக, குளிக்கும்போது கடுமையாக  அழுத்தித் தேய்க்க வேண்டும் என்பது இல்லை. சாதாரணமாக உடலுக்கு சோப்பு தேய்த்துக் குளிப்பது போன்று தலை முடிகளை தேய்த்துக் குளித்தாலே போதுமானது.  அதிக நேரம் தலையில் ஷாம்புவை ஊறவைத்துக் குளிக்க வேண்டாம்.
*குளிக்கும்போது, தேவையான ஷாம்புவை எடுத்து ஒரு கப் தண்ணீரில், நன்றாகக் கலந்து உபயோகிக்க வேண்டும்.

*குளிப்பதற்கு அதிக உப்புத்தன்மை கொண்ட நீரைத் தவிர்க்கவும்.

*தலைமுடிக்கு சோப் பயன்படுவதையும் அடிக்கடி ஷாம்புவை மாற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.

*அதிகமாக நுரை ஏற்படுத்தும் ஷாம்புக்களைப் பயன்படுத்த வேண்டாம்.

*உடல் உஷ்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க, நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறி, தண்ணீர், இளநீர் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.

பொடுகை போக்க இயற்கை வழிகள்=

இந்த ஆலிவ் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் கலந்து தேய்த்துவந்தால், பொடுகுத் தொல்லை ஒழியும்.


நான்கு வேப்பங்கொட்டைகளின் தோலை அரைத்து விழுதாக்கி, தலையில் தேய்க்கவும்.  நல்லெண்ணெய் தேய்த்து தலையை வாரி, தலை முழுவதும் வேப்ப விழுதைத் தடவி பேக் போடவும்.  ஒரு மணி நேரம் கழித்து சீப்பால் வாரினால், பேன், ஈறு வெளியில் வந்துவிடும்.  பொடுகுத் தொல்லையும் மறையும்.

ஒரு கப் நல்லெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் மிளகை உடைத்து காய்ச்சி, வடிகட்டவும்.  இந்த எண்ணெய்யைத் தலை முழுவதும் விடவும்.  ஒரு காட்டன் துணியால் ஒற்றி எடுக்கும்போது பேன், பொடுகு வந்துவிடும்.  பிறகு சின்ன சீப்பினால் வாரவும்.  

வெந்தயப்பொடி, வேப்பம்பூ பொடி இவற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பேன்/பொடுகு/ஈறு தொல்லை இருக்காது.  

பெண்கள் உள்ளாடை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

பெண்கள் உள்ளாடை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

உள்ளாடைகள் உடலை மறைக்க மட்டுமே கிடையாது. உடல் உறுப்பை பாதுகாப்பாக வைக்கவும் தான் என்பதை முதலில் புரிந்துகொள்ள....

samayam tamil

வெளிப்புற ஆடைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெண்கள் உள்ளே அணியும் ஆடைகளுக்கு கொடுப்பதில்லை. இதை யார் பார்க்க போகிறார்கள் என்று விலை குறைந்த ஆஃபரில் கிடைக்கும் ஆடைகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். உள்ளாடைகளில் ஒன்றான பிராக்கள் குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம். பிராக்கள் பொருத்தமாக அணியாவிட்டால் முதுகுவலி, மார்பு வலி, தோள்பட்டை வலி போன்றவை உண்டாகிறது. அதோடு சருமத்தின் நிறமும் கருமையாகி அரிப்பு புண் போன்றவற்றையும் உண்டாக்கிவிடுகிறது. வெகு சிலருக்கு பிராக்களால் புற்றுநோய் கூட வருவதற்கு வாய்ப்புண்டு. பருவ வயதில் உள்ளாடை அணிவதை தொடங்கும் பெண்கள் அதை தேர்வு செய்வதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அப்படி கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

தயக்கமும் அச்சமும் வேண்டாம்

samayam tamil

உள்ளாடை பற்றி உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்துகொள்ளவும் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும் வெட்கமோ தயக்கமோ படவேண்டாம். பருவ வயதில் மார்பகங்கள் வளர்ச்சி அடையும் போதே உங்களுக்கு தகுதியானவற்றை அணிய தொடங்கிவிட்டால் மார்பகம் விரைவில் தளர்ந்து போகாமல் அழகாக பராமரிக்க முடியும். மார்பகங்கள் வளர்ச்சி பருவ வயதில் தொடங்குகிறது.

படிப்படியாக இவை முழு வளர்ச்சியை அடைகிறது. பிறகு கர்ப்பக்காலங்களிலும், குழந்தை பிறந்த பிறகும் தாய்ப்பாலுக்கு பிறகும் மார்பகங்களின் வளர்ச்சியில் மாற்றம் உண்டாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்குரிய உள்ளாடையை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

முதலில் அளவு


samayam tamil

ஒவ்வொரு உடல்வாகுக்கும் ஏற்றபடி அளவு மாறக்கூடும். முதன்முதலில் வாங்கும் போதே சரியான அளவை எடுக்க வேண்டும். சிலர் மார்பக அளவை காட்டிலும் சற்று பெரிய அளவை வாங்கிவிடுவார்கள். குறிப்பாக பருவவயதில் ஏனெனில் மார்பக வளர்ச்சிக்கு இவை தான் பொருத்தமாக இருக்கும் என்று சொல்வார்கள். அதே போன்று சிலர் மார்பகங்கள் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்று இறுக்கமான பிரா வாங்குவார்கள். இன்னும் சிலர் இடுப்பின் அளவை அளந்து அதற்கேற்ப பிரா வாங்குவார்கள். இந்த மூன்றுமே தவறான முறை என்பதோடு மார்பகங்களை ஃபிட்டாக வைக்காமல் விரைவில் தளரவும் செய்துவிடும்.
சுற்றளவில் இவ்வளவு சந்தேகம் இருக்கும் போது அதைவிட முக்கியாமான கப் சைஸிலும் இந்த தவறு செய்வதுண்டு. மார்பகங்களை பொருத்தும் அளவுக்கு சரியான கப் சைஸ் கொண்ட பிராக்களை தேர்வு செய்ய வேண்டும். கப் சைஸ் சிறியதாக இருந்தாலோ பெரியதாக இருந்தாலோ அவை தொந்தரவை தான் தரும்.

கப் சைஸ் அளவு

samayam tamil



உடல் சுற்றளவை முதலில் எடுத்துகொள்ளுங்கள். பருவ வயது பெண்கள் ஒல்லியாக இருந்தால் 28 அல்லது 30 ல் உடல் சுற்றளவு தொடங்கும். உடல் பருமனுக்கு ஏற்றபடி இவை 32, 34 என்று தொடங்கி இரண்டின் எண்ணிக்கையில் 42 வரை போகும். முதலில் இதை குறித்து கொள்ள வேண்டும். சரியான அளவை எடுத்துகொள்ள வேண்டும்.
அதற்கடுத்து கப் சைஸ் என்று தனியாக இருக்கும். இவை மார்பங்களின் அளவுக்கேற்ப இருக்கும். A,B,C என்று மூன்று விதமான கப் சைஸ் ஒவ்வொரு சுற்றளவிலும் இருக்கும். பெரிய, சராசரி மற்றும் சிறிய அளவிலான கப் சைஸ்களையே இவை குறிக்கும். மார்பகங்களுக்கு சற்று கீழ்ப்புறமாகவும் இடுப்புக்கு மேலும் உள்ள பகுதியில் தான் இதை பொருத்துகிறோம் என்பதால் சுற்றளவும் கப் சைஸும் முக்கியம் என்பதை கவனித்து அளவை குறித்து வாங்குங்கள். உங்கள் அளவு குறித்த சந்தேகம் இருந்தால் கடை விற்பனையில் ஈடுபடும் அனுபவமிக்க பெண்களிடம் ஆலோசனை செய்யவும் தயங்கவேண்டாம்.



​உடைக்கேற்ற உள்ளாடை


samayam tamil



உள்ளாடையிலும் பலவகைகள் உண்டு. பருவ வயதை அடைந்த பெண்கள் டீனேஜ் பிரா, அன்றாட பயன்பாட்டுக்கு எவ்ரிடே பிரா என்னும் எடை குறைந்த எளிமையான பிரா வாங்கவேண்டும்.
பின்பக்கம் கொக்கி இருப்பதால் அணிய சிரமம் கொண்டிருப்பவர்கள் ஃப்ரண்ட் ஓபன் பிரா வாங்கிகொள்ளலாம். அதிக எடை கொண்டிருக்கும் பெண்கள் மார்பகங்களை பெரியதாக கொண்டிருந்தால் அவர்கள் ப்ளஸ் சைஸ் பிராக்களை வாங்கி அணியலாம். இவை மார்பகத்தை முழுமையாக உள்ளடக்கி சங்கடமில்லாமல் வைக்கும். உடைகளில் மெல்லிய ஆடை அணிபவர்கள் டீஷர்ட் பிராக்களை அணியலாம்.
மாடர்ன் யுவதிகளுக்கேற்ற தோள்பட்டை இல்லாத பிராக்களும் விற்பனை செய்யப்படுகிறது. இவை தவிர மார்பகங்கள் தளர்ந்து இருப்பதை உணர்ந்தால் புஷ் அப் பிரா உதவும். தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் நர்சிங் பிராவை அணியலாம். இப்படி காலத்துக்கேற்றபடியும் உங்கள் வயதுக்கேற்றபடியும் உரிய பிராக்களை தேர்வு செய்வது அவசியம்.



​கலரும் கவனிக்க வேண்டும்


samayam tamil

முன்பெல்லாம் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் மட்டும் தான் பிராக்கள் இருந்தது. தற்போது நிறங்களிலும் டிஸைன்களிலும் அதிகளவு பெருகிவிட்டது. ஆடைக்கேற்ற அனைத்து நிறங்களிலும் பிராக்கள் வந்துவிட்டது. ஆனால் அப்படி தேர்வு செய்யாமல் வெளிர் நிறங்களில் இருக்கும் உள்ளாடைகளை மட்டும் தேர்வு செய்யுங்கள். குறிப்பாக வெயிலில் புறௌஉதாக்கதிர்களை உள்ளிழுக்கும் அடர் நிறங்களை கொண்டிருக்கும் பிராக்கள் தவிர்க்க வேண்டும். அதே போன்று சிந்தடிக் ரகங்களை தவிர்த்து தரமான காட்டன் பிராக்களை மட்டும் வாங்குங்கள். இதனால் மார்பகங்களுக்கு கீழ் புண், அரிப்பு போன்றவை உண்டாகாமல் தவிர்க்கலாம்.

அதே போன்று உள்ளாடைகளை வருடத்துக்கு ஒருமுறை மாற்றவேண்டும். அதே போன்று உடல் எடை மெலிந்தாலும் உடல் எடை சட்டென்று கூடினாலும் பிராக்களை மாற்ற வேண்டும். அதே போன்று கர்ப்பக்காலத்திலும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் கூட பிராக்களை மார்பகங்களின் வளர்ச்சிக்கேற்றவாறு மாற்றிகொள்ள வேண்டும்.
மார்பகங்களை அழகாக பாதுகாக்க உள்ளாடைகளின் பங்கு மிகவும் முக்கியம். அதனால் சரியான அளவு வாங்கி பயன்படுத்துவங்கள். சந்தேகம் இருப்பின் உரிய நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும் தயங்கவேண்டாம்.

பழ ஃபேசியல் செய்வது எப்படி?

பழ ஃபேசியல் செய்வது எப்படி?

தொகுப்பு  | April 29, 2020, 12:29 PM IST


femina

பன்னீர் திராட்சையை விதையோடு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து 2 நாட்கள் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். 2 நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் மெல்லிய வெள்ளை ஏடு படிந்திருக்கும். இதற்கு Alpha Hydroxy Acid (AHD). என்று பெயர். அதை நன்றாக கலக்கி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு சின்ன பாட்டிலில் ஊற்றி எடுத்துக் கொண்டு பஞ்சினால் முகம், கழுத்துப்பகுதிகளில் தடவி 10 நிமிடம் வைத்துவிட்டு, தண்ணீரால் முகத்தை கழுவலாம். கிபிஞி வெயிலினால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்திற்கு நல்ல பொலிவைக் கொடுக்கும்.

திராட்சைச் சாறுடன் அரிசி மாவு கலந்து முகத்திற்கு அப்ளை செய்யும்போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் நீங்கி, முகம் பளிச்சென்று ஆகும்.பட்டர் ஃப்ரூட் என்று சொல்லப்படும் அவகடோ சதைப்பற்றுடன் சிறிது வெண்ணெய், தேன் கலந்து முகத்தில் தடவுவதால், முகத் தோலில் உள்ள வறட்சி நீங்கி, தோலின் முதுமைத் தன்மையைக் குறைக்கும். வாழைப் பழத்தின் தோல் மிகவும் நல்லது.

வாழைப்பழத்தோலை ஒட்டியிருக்கும் சதைப்பகுதியுடன், 10 சொட்டு கிளிசரின், கால் டீஸ்பூன் சர்க்கரை கலந்து தோலை அப்படியே முகத்தில் வைத்து தடவி 5 முதல் 10 நிமிடம் வைக்க வேண்டும். இந்த வாழைப்பழ ஃபேஷியல் இறந்த செல்களை நீக்கி, நிறத்தை அதிகப்படுத்தக் கூடியது.

அடுத்து ஸ்ட்ராபெர்ரியில் என்சைம்கள் அதிகம் உள்ளது. இவை இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்டாக செயல்படுகிறது. ஸ்ட்ராபெர்ரியை மிக்சியில் அரைத்து 10 சொட்டு தேன், மக்காச்சோள மாவு கலந்து முகத்தில் போடும்போது நல்ல பலன் கிடைக்கும்.

தர்ப்பூசணி பழத்தில் உள்ள விதைகளை நீக்கி, உலோக வடிகட்டியில் போட்டு கரண்டி வைத்து மசித்தால் கிடைக்கும் சாறு 10 மிலி, சாத்துக்குடி சாறு 10 மிலி, இத்துடன் ஜவ்வரிசி மாவு மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகம் கழுத்திற்கு தடவினால் நல்ல பளபளப்பையும் கொடுக்கும்.

பெண்கள் அழகான சருமம் பெற 10 வழிகள்..!

பெண்கள் அழகான சருமம் பெற 10 வழிகள்..!

தொகுப்பு  | May 17, 2019, 3:11 PM IST


femina


1. பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

2. நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் பரு குணமாகும்.

3. திராட்சைப் பழத்தை சிறிதளவு எடுத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

4. தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.

5. ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு குளித்தால் முகச் சுருக்கம், பருக்கள் போன்றவை ஏற்படாது. மேலும் முகம் பொலிவு பெறும்.

6. புதினா, கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை இவற்றுள் ஏதாவது ஒன்றை துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் சோம்பல் ஏற்படாமல் இருக்கும்.
7. பிழிந்த எலுமிச்சம் பழத்தோலை மோர் அல்லது தயிருடன் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

8. பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது.

9. முகத்தில் உள்ள துவாரங்களை போக்க ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி அதை எலுமிச்சை சாறில் நனைத்து துவாரங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் துவாரங்கள் அடைபட்டு விடும்.

10. காலில் உள்ள நகங்களை உப்பு கலந்த நீரில் பாத்து நிமிடம் ஊறவைத்து பிறகு பழைய பிரஷ்ஷினால் தேய்த்தால் நகங்கள் சுத்தமாகும். மேலும் கிருமிகள் அழிந்து விடும்

ஒரே மாதத்தில் முகம் பளபளப்பாக 5 டிப்ஸ்!

ஒரே மாதத்தில் முகம் பளபளப்பாக 5 டிப்ஸ்!

தொகுப்பு  | April 22, 2020, 12:05 PM IST




femina

சருமம் அழகாக கண்ணாடி போல பளப்பளப்பாக இருக்க வேண்டும் என ஆசை. ஆனால், இதெல்லாம் நடக்குமா என்பார்கள் பலர். நிச்சயம் இயற்கை பொருட்கள் மூலம் சருமம் அழகாக, பளப்பளப்பாக மின்னும். அதற்கு இந்த 05 வகை சிகிச்சைகள் பலன் அளிக்கும்.

1. மா£ம்பழ ஸ்கரப்
மாம்பழத்தின் காம்பு பகுதியை நீக்கி விடுங்கள். மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள். ஒரு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் மாம்பழ ப்யூரி, 2 மேசைக்கரண்டி வெள்ளை சர்க்கரை, லு டீஸ்பூன் பால் இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை நன்றாக கழுவிய பிறகு, ஈரத்தைத் துடைத்த பின் இதை முகத்தில் பூசி, தேய்க்கவும். கழுத்து, உதடு, கை, கால்களில் கூட ஸ்கரப் செய்யலாம். குளிப்பதற்கு முன், உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். இந்த மாம்பழ ஸ்கரப்பை வாரத்தில் இருநாள் பயன்படுத்தி குளிக்கலாம். ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

2. ஆரஞ்சு ஸ்கரப்
பாதி ஆரஞ்சு பழச்சாறை எடுத்துக் கொள்ளுங்கள். விதைகளை நீக்கிவிடுங்கள். 4 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து ஸ்கரப் தயாரிக்கவும். வாரத்தில் 3 நாட்கள், இதை வைத்து ஸ்கரப் செய்யலாம்.

பயன்கள்
பளப்பளப்பான சருமம் கிடைக்கும். தோலுக்கு தேவையான சத்துகள் சேரும். சீரான, அழகான சருமமாக மாறும். முகப்பொலிவு கூடும். பருக்கள் வராது

femina

3. ஃபேஸ் மாஸ்க்
ஒரு மேசைக்கரண்டி கஸ்தூரி மஞ்சள், 2 மேசைக்கரண்டி கடலை மாவு, ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய், 2 மேசைக்கரண்டி பால்  ஏடு, 2 மேசைக்கரண்டி பால், 1 மேசைக்கரண்டி தேன் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். சரியான பேஸ்ட் பதத்துக்கு வர சிறிதளவு பால் சேர்க்கலாம். முகம் கழுவிய பிறகு இந்த மாஸ்கை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, சர்குலர் மோஷனில் மசாஜ் செய்து கழுவி விடுங்கள். வாரம் இருமுறை செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
பயன்கள்
· கருமையை நீக்கும்.
· சன் டேன் நீக்கும்.
· கரும்புள்ளிகள் நீங்கும்.
· பருக்கள் வராது.
· சருமத்தில் பொலிவு கிடைக்கும்.
· எண்ணெய் பசையை நீக்கும்.
· முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கும்.

4. மிராக்கிள் ஜூஸ்
· மாதுளை பழம் - 1/2
· வேக வைத்த பீட்ரூட் - அரை
· சிறிய கேரட் - 2
· தக்காளி - 1
· நெல்லி - 1
· ஆப்பிள் - 1/2
இவற்றை ஜூஸாக அரைத்து வாரம் 3 முறை குடித்து வந்தால் சருமம் பிரகாசமாக மாறிவிடும். எந்த மேக் அப்பும் தேவையில்லை. அழகான சருமம் உங்களுடையதுதான்

5. பளப்பளப்பாக்கும் மாஸ்க் - பருக்களை விரட்டும்
1 தேக்கரண்டி கற்றாழை ஜெல், எலுமிச்சை சாறு பாதி பிழிந்து கொள்ளவும். இதை நன்றாக கலந்து காட்டனில் நனைத்து முகத்தில் பூசவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.

பளிச் முகம் பெற இந்த 3 வழிகளை பின்பற்றுஙகள்!

பளிச் முகம் பெற இந்த 3 வழிகளை பின்பற்றுஙகள்!

தொகுப்பு  | April 23, 2020, 1:54 PM IST


femina

பளபளப்பான சருமம் என்பது வரம் என்பார்கள். ஆனால், இந்த வரத்தை அனைவரும் பெற முடியும். கொஞ்சமாக உங்கள் சருமத்தைப் பராமரித்துக்கொள்ள கேர் எடுத்துக் கொள்ளுங்கள். மாசற்ற, பளிங்கு சருமம் உங்களுக்கும் கிடைக்கும். அதை எப்படி முறையே செய்வது எனப் பார்க்கலாம். இயற்கை வழியிலும் இது சாத்தியமே.

1.கிளென்சிங்
கிளென்சிங் என்றால் சுத்தம் செய்வது. முகத்தில் உள்ள அழுக்கு, தூசு ஆகியவற்றை நீக்க வேண்டும். முகத்தில் மேக்கப் போட்டு இருந்தாலும் கட்டாயம் அதை நீக்காமல் படுத்து உறங்க கூடாது. ஐ-ப்ரோ, லிப்ஸ் ஸ்டிக் என எது போட்டிருந்தாலும் கட்டாயம் நீக்கி விட வேண்டும். வெளியே சென்று வந்தால் சருமத்தில் பதிந்த புகை, சுற்றுப்புற மாசு ஆகியவற்றை நீக்குவதுதான் சரியான வழி. தரமான கிளென்சிங் ஜெல் அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்வது கிளென்சிங். கெமிக்கல் வேண்டாம் என நினைப்பவர்கள், இயற்கை ஃபேஸ்வாஷ் பவுடர் பயன்படுத்துங்கள்.

2.டோனிங்
டோனிங், இதை பெரும்பாலும் நிறையப் பேர் தவற விடுவர். டோனிங் என்பது சருமத்துக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு முறை. கிளென்சிங் மூலமாக திறந்த சரும துளைகள், மூடும் முறை டோனிங். மார்க்கெட்டில் விற்கும் நல்ல தரமான டோனரை வாங்கி பஞ்சில் நனைத்து முகத்தில் அதை ஒத்தி எடுக்கலாம். வீட்டிலே டோனர் தயாரிப்பதும் ஈஸி வழி. ரோஜா இதழ்களை சுடுநீரில் போட்டு 2 மணி ஊறவிடுங்கள். பின்னர் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமித்து வையுங்கள். டோனர் ரெடி. 2 வாரத்துக்கு ஒருமுறை ஃபிரெஷ்ஷாக செய்து கொள்ளுங்கள். ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். ஆர்கானிக் ரோஸ் வாட்டர் வாங்கிக் கொள்ளுங்கள். இதுவும் டோனர்தான். வெள்ளரிக்காய் ஜூஸ், கிரீன் டீ கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் டோனர்தான். இப்படி உங்களுக்கு எது ஈஸியானதோ அந்த டோனர் முறையைப் பின்பற்றுங்கள். சருமம் அழகாக மின்னும். சரும துளைகளை மூடும்.

3.மாய்ஸ்சரைசிங்
தரமான, உங்கள் சருமத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். உலர்ந்த சருமம் உள்ளவர்கள், கிரீம் டைப் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் உள்ளவர்கள், ஜெல் டைப் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். காம்பினேஷன் சருமம் உள்ளவர்கள், காம்பினேஷன் ஸ்கின் என போடப்பட்டிருக்கும் மாய்ஸ்சரைசர் வாங்கலாம். இரவில், நைட் கிரீம், நைட் ஜெல் என விற்பதைப் பயன்படுத்தலாம். இரவு தூங்கும் முன்னும் உங்களது சருமத்தை கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சரைசர் செய்வது நல்லது. மாய்ஸ்சரைசர் கெமிக்கல் என நினைப்பவர்கள், கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி கொள்ளலாம்.

femina


இவற்றைத் தவிர, வாரத்தில் 2 முறை செய்ய வேண்டிய ஸ்கின் கேர் ஸ்கரப்

கிளென்சிங் எனும் ஸ்டெப்பை செய்து விட்ட பின், ஸ்கரப் செய்ய வேண்டும். ஸ்கரப்பர் என்றதும் என்ன இது, இன்னொரு காஸ்மெட்டிக்கா எனப் பயப்பட வேண்டாம். ஸ்கரப்பர் என்றால் முகத்தில் உள்ள அழுக்கை முற்றிலுமாக நீக்குவது, இறந்த செல்களை நீக்குவது என அர்த்தம். தோசை மாவு, இட்லி மாவுகூட ஸ்கரப்பர் தான். இதை முகம், கழுத்தில் தடவி நன்கு தேய்த்து, மசாஜ் செய்து கழுவி விடலாம். பயத்தமாவு, அரிசி மாவு, கடலமாவு, நலங்கு மாவுகூட ஸ்கரப்பர்தான். இதை கூட சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து, மசாஜ் செய்து கழுவுங்கள். கடைகளில் ஸ்கரப்பர் எனும் கிரீம் விற்கிறது. அதை வாங்கியும் பயன்படுத்தலாம். தரமானதாக வாங்குவது நல்லது. வீட்டிலே ஹோம்மேட் ஸ்கரப் செய்வது எப்படி என இங்கே பாருங்கள். ஸ்கரப் செய்துவிட்ட பின் ஃபேஸ் மாஸ்க் அல்லது ஃபேஸ் பேக் போட வேண்டும்.

பாரம்பரிய உணவு

பாரம்பரிய உணவு

தொகுப்பு  | April 25, 2020, 12:00 AM IST


Femina

உள்ளூரிலேயே நிறைய ஆரோக்கிய உணவுகள் இருக்கின்றன என்கின்றனர் வல்லுனர்கள். இவற்றில் சில வெளிநாட்டு காய்கறிகளை விட ஊட்டச்சத்து மிக்கவை. அவை என்னென்ன என்று பட்டியலிடுகிறார் கயல்விழி அறிவாளன்.

நமது நெல்லிக்காயையை எடுத்துக்கொள்வோம். ஊறுகாய், பொறியல் அல்லது உப்பு கலந்து உட்கொள்ளப்படும் நெல்லிக்காய் அதிக வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடெண்ட்கள் கொண்டுள்ளதால் கிரேன்பெரி போன்றவைக்கு மாற்றாக அமைகிறது. நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துவதாக ஆர்கானிக் ஸ்டோர் மற்றும் ரெஸ்டாரண்ட் ஹாப்பி, ஹெல்தி மீ இணை நிறுவனர் மற்றும் சி..இ.ஒ நமுகினி கூறுகிறார். மூன்று ஆண்டுகளாக நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதாகவும், ஒருமுறை கூட ஜலதோஷம் வந்ததில்லை என்கிறார்.
இது போன்ற இன்னொரு அற்புத உணவு தென்னிந்திய வீடுகளில் அதிகம் காணப்படும் முருங்கைகாய். சாம்பரில் பயன்படுத்தப்படும் முருங்கை மற்றும் அதன் இலைகள் அதிக ஆண்டிஆக்ஸிடெண்ட் கொண்டுள்ளதோடு, வைட்டமின் ஏ, பி காம்பிலக்ஸ் மற்றும் சி நிறைந்துள்ளன. முருங்கை கீரை எதனுடனும் பயன்படுத்தலாம். இவற்றை கிளைகளை நீக்கி சுத்தமாக்கி பயன்படுத்த வேண்டும். தோசை மாவு, ஆம்லெட் மற்றும் சூப்களில் இதை பயன்படுத்தலாம். பொடியாக்கி காலை உணவுடனும் பயன்படுத்தலாம். முருங்கை கீரை தவிர வேறு பல இந்திய கீரை ரகங்களும் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்தியர்களுக்கு நன்கு பழக்கப்பட்ட சில பொருட்களை சூப்பர் உணவு துறை அண்மை காலங்களில் சேர்த்துக்கொண்டுள்ளது. பெங்களூருவைச்சேர்ந்த ஊட்ட்சத்து வல்லுனரான ஷாலின் மகாலிங்கம், மஞ்சளின் அதிகரிக்கும் செல்வாக்கை சுட்டிக்காட்டுக்கிறார். “மஞ்சளை சமையல், பால் மற்றும் சருமத்தில் என நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம். இதன் குணமாக்கும் ஆற்றலை மேற்குலகம் புரிந்து கொள்ளத்துவங்கியிருக்கிறது” என்கிறார் அவர். தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவையும் மேற்குலகை ஈர்க்கத்துவங்கியுள்ளன. சிறுவயதில் நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஆயில் மசாஜ் மேற்கில் இப்போது பிரபலமாக உள்ளது. நெய்யும் இதே போல அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது.

Femina
அருமையான மாற்று
நாம் பேசிய இரண்டு ஊட்டச்சத்து வல்லுனர்களுமே, நம் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக விளங்கும் ஒற்றை உணவு இல்லை என்கிறனர். நம்முடைய உடலுக்கு பழக்கமான உணவுகளை அளவுடன் உண்பது தான் முக்கியம். “நம்முடைய பாக்கெட்டிற்கும், உடலுக்கும் ஏற்றதா என்று பார்க்காமலேயே மேற்குலகை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறோம். விஞ்ஞான ஆய்வுகளை விட வேகமான இணையமும், சமூக ஊடகமும் உணவு செய்திகளை வெளியிடுகின்றன. இது குழப்பத்தை அதிகமாக்குகிறது” என்கிறார் ஷீலா கிருஷ்ணசாமி. நம்முடைய நாட்டு தகவல்களைவிட மேற்கத்திய ஆய்வு முடிவுகள் நமக்கு எளிதாக கிடைப்பதே இதற்கு காரணம் என்கிறார் கினி. “நம்முடைய பாட்டி சொல்லும் கதைகள் மற்றும் உணவு குறிப்புகளை நாம் அதிகம் நம்பவேண்டும். ஏனெனில் அவை நம் உடலுக்கு ஏற்றவை.” இந்திய உணவு பற்றிய ஆய்வு முடிவுகள் கிடைக்கவில்லை எனில் ஒவ்வொரு பகுதியிலும் பிரபலமாக உள்ள உணவு வகைகளை கவனிக்கவும். பெரும்பாலான இந்திய உணவுகள் சமமானவை என்று ஊட்டச்சத்து வல்லுனர்கள் கூறுகின்றனர். நம் உணவில் பருப்புகள் புரத சத்து அளிக்கின்றன, சிறு தானியங்கள் நார்ச்சத்து அளிக்கின்றன. கீரைகள் இரும்புச்சத்து தருகின்றன், காய்கறிகள் வைட்டமின்களை அளிக்கின்றன. சப்ஜாவிதை நார்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடெண்ட் நிறைந்துள்ளது. எனினும் உள்ளூர் வல்லுனர்கள் உற்சாகம் கொள்வது சிறுதானியங்கள் குறித்து தான். இந்தியாவில் கர்நாடகத்தில் தான் சிறுதானியம் அதிகம் உற்பத்தியாகிறது., “சமமான உணவுக்கு தேவையான எல்லாம் சிறுதானியங்களில் உள்ளன. கேச்வரகு, குதிரைவாலி, திணை உள்ளிட்டவை இதில் அடங்கும்” என்கிறார் பெங்களூருவைச்சேர்ந்த பிட்னஸ் வல்லுனர் வனிதா அசோக்.

Femina
தண்டுகீரை விதைகள் பற்றி விஷேசமாக குறிப்பிடுகிறார். “இவற்றைக்கொண்டு வெல்லம் கலந்த லட்டு செய்தால் உணவு கட்டுப்பாடு மிக்கவர்களுக்கான ஆரோக்கியமான ஸ்னேக்சாகும். இதன் மாவை பரோட்டா மற்றும் மென் உணவுகளில் பயன்படுத்தலாம். இந்த தானியம் ஹார்மோன்களை சீராக்கி, பெண்களின் மெனோபாஸ் காலத்திற்கு ஏற்றதாக இருக்கிறது.” ஆனால் சிறுதானியங்களை அளவுடன்பயன்படுத்த வேண்டும் என்கிறார் அவர். ஒரு நாளுக்கு ஒரு முறை உணவில் பயன்படுத்தினால் போதும் என்கிறார்.
எனவே இன்ஸ்டாகிராமில் பார்க்கும் உணவுப்பொருளை உணவில் சேர்த்துக்கொள்ளும் முன் அவை எங்கிருந்து தோன்றின என்று பார்க்கவும். இதே ஊட்டச்சத்து கொண்ட உள்ளூர் உணவு இருக்கிறதா என்றும் ஆய்வு செய்யவும். உண்மையில் நம்முடைய சமையலறையிலேயே சூப்பர் உணவுகள் காத்திருக்கின்றன.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள்!

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள்!

தொகுப்பு  | March 17, 2020, 11:07 AM IST


femina

இப்போது, ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கிக்கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். அதனால், முடிந்தவரை கீழே குறிப்பிட்ட உணவுகளில் ஒரு நாளில் ஒன்றிரண்டாவது எடுத்துக்கொள்ளுங்கள.
பூண்டு
பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.
இஞ்சி
நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.
தயிர்
தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.
பார்லி, ஓட்ஸ்
பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு
பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
femina

காளான்
உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.
பழங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு. ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது. பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு. ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.
எலுமிச்சை
எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.
கீரைகள், காய்கறிகள்
பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் நோய்களை அண்ட விடாமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.

பாதாம் பருப்பின் நன்மைகள்

பாதாம் பருப்பின் நன்மைகள்

தொகுப்பு  | March 25, 2020, 4:00 PM IST


Femina
டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைக் குறைக்க நினைபவர்களுக்கும் பாதாம் பருப்பு பெஸ்ட் ஃப்ரெண்ட். இதன் பலன்களை மேலும் பார்க்கலாம்.
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு சாப்பிட வேண்டும்.
நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் ஊறவைத்த பாதம் பருப்புகளை உட்கொள்ளலாம்.
பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த உகந்தது.
பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமின் மூளை வேலைப்பாட்டிற்கு உதவுகிறது.
சிற்றுண்டி பதிலாக பாதாமை எடுத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது.
சருமத்தை பளபளப்பாக வைக்கவும் பாதாம் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு மற்றும் செரிமான ஆற்றலைத் தூண்டும் பப்பாளி!

நோய் எதிர்ப்பு மற்றும் செரிமான ஆற்றலைத் தூண்டும் பப்பாளி!

தொகுப்பு  | March 27, 2020, 6:00 PM IST


femina

பழங்கள் ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்கள் மற்றும் அவற்றில் ஒரு கிண்ண அளவு தினமும் சாப்பிடுவது உங்களை உற்சாகப்படுத்துவதோடு பல நோய்களிலிருந்து தடுக்க உதவும். அவ்வாறான பழங்களில் ஒன்றுதான் பப்பாளி. நம்மில் பலருக்கு பப்பாளி பிடிப்பதில்லை, ஆனால் சதைப்பற்றுள்ள வெப்பமண்டல பழம் வைட்டமின்கள் சி மற்றும் ஏ ஆகியவற்றின் களஞ்சியமாக இருப்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பைபர் மற்றும் ஆரோக்கியமான தாவர சேர்மங்களையும் கொண்டுள்ளது. பப்பாளியின் வழக்கமான நுகர்வு சில ஆரோக்கிய நன்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.


1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வைட்டமின் சி நிறைந்த பப்பாளி நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராட, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த சிறந்த உணவு வகைகளில் ஒன்றாகும்.
பப்பாளியில் உங்கள் தினசரி டோஸ் வைட்டமின் சி 200%-க்கும் அதிகமாக உள்ளது, இது தவிர, பழத்தில் வைட்டமின்கள் கி, ஙி மற்றும் ரி ஆகியவை நிறைந்துள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் ஆய்வில், பழத்தில் உள்ள லைகோபீன் மற்றும் வைட்டமின் சி ஆகியவை இதய நோய்களைத் தடுக்க உதவும் என்று கண்டறிந்துள்ளது.

2. ஆன்டிகான்சர் பண்புகள்
பப்பாளியில் உள்ள லைகோபீன் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும். மார்பக புற்றுநோய் உயிரணுக்களில் பப்பாளி ஆன்டிகான்சர் செயல்பாட்டைக் காட்டுகிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

3. ஆக்ஸிஜனேற்ற
பப்பாளிகளில் கரோட்டினாய்டுகள் உள்ளன, அவை ப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகின்றன மற்றும் வயதானவர்களுக்கு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும். ஆக்ஸிஜனேற்ற மன அழுத்தம் நாள்பட்ட அழற்சிக்கு வழிவகுக்கும், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது.

femina

4. வீக்கத்தை எதிர்த்துப் போராடுங்கள்
பல நோய்களுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் மனித உடலில் ஏற்படும் அழற்சி குறிப்பான்களைக் குறைக்க பப்பாளி உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இது கரோட்டினாய்டுகளின் களஞ்சியமாகவும் உள்ளது, இது வீக்கத்தைக் குறைக்கும்.

5. செரிமானத்திற்கு உதவுகிறது
பப்பாளியில் காணப்படும் பப்பேன் என்ற நொதி புரதத்தை செரிக்க எளிதாக்குகிறது.

எலுமிச்சையின் பலன்கள்

எலுமிச்சையின் பலன்கள்

தொகுப்பு  | April 6, 2020, 3:00 PM IST


Femina
இயற்கையான சிட்ரஸ் ஊட்டச்சத்து நிறைந்த எலுமிச்சையை பெரும்பாலான உணவுப் பொருள்களில் பயன்படுத்தலாம். உங்கள் சமையலறையில் எலுமிச்சை எப்போதும் ஏன் இருக்க வேண்டுமென்று கூறுகிறார் ஃபரா பாலியா

பல வகையான நச்சுக்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எலுமிச்சை அவசியம் என்று பண்டைய எகிப் தியர்கள் நம்பினார்கள். இதில் ஏராளமான வைட் டமின் சி இருக்கிறது.
எலுமிச்சை மலிவான தாக இருந்தாலும் ஊட்டச் சத்துகள் நிறைந்தது. ஒரு கப் எலுமிச்சை சாறில் 55 கி. வைட்டமின் சி உள்ளது. பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டியதில் இது 70%. இதைத் தவிர, பொட்டாசியம், கொஞ்சம் கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் உள்ளன. மும்பையைச் சேர்ந்த நியூட்ரீஷியனிஸ்ட் ஷிபானி தல்படே, அது தரும் பலன்களை பட்டியலிடுகிறார்: “எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, ரத்தக் குழாய்களின் சுவரை வலுவூட்டும். மேலும் இரும்புசத்து உட்கிரகித்தலை எலுமிச்சை மேம் படுத்துவதால், ரத்த அடர்த்தி அதிகரிக்கும். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு இது நல்லது.”

பலன்கள்
1. எலுமிச்சை ஜூஸில் கிட்டத்தட்ட 5% சிட்ரிக் அமிலம் இருக்கிறது. இந்த சிட்ரஸ் பழம் நோய்தொற்றுகளை சரி செய்கிறது.
2. வெந்நீரில் எலுமிச்சை சாறை கலந்து பருகினால், அது செரிமான கோளாறுகளை சரிசெய்யும். சாதாரண சளியை சீர்செய்யவும் உதவும்.
3. ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸை தேனு டன் கலந்து சாப்பிட்டால், சளி தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். சுடுநீர் அல்லது தேநீரில் எலுமிச்சையைச் சேர்த்து குடித்தால் உடல் வலி குறையும்.
4. எலுமிச்சையில் குணமளிக்கும் பண்புகளும் நிறைய உண்டு. உமிழ்நீரை அதிகமாக சுரக்க வைப்பதால் வறண்ட வாய் பிரச்சினை சரியாகும். எலுமிச்சை துண்டை நுகர்வதன் மூலம் தலைசுற்றலை எளிதாக தவிர்க்கலாம். இது மயக்கத்தையும் போக்கும்.

வாழைப் பூ, காய் , தண்டு ஆகியற்றில் இருக்கும் பயனுள்ள சத்துகள்

வாழைப் பூ, காய் , தண்டு ஆகியற்றில் இருக்கும் பயனுள்ள சத்துகள்

தொகுப்பு  | April 6, 2020, 12:33 PM IST


femina

அனைத்துப் பகுதிகளும் பயனுடைய ஒரு மரம் என்றால், அது வாழைமரம்தான், அதுவும் சாதரண மரம் கிடையாது. மருத்துவப் பயனுள்ள மரம். என்னென்ன பயன்கள் என்பதை விரிவாக காண்போம்.

வாழைத்தண்டு
வாழை தண்டு வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வர சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவுகிறது. சிறுநீர் எரிச்சலை குணப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும். குறிப்பாக வயிற்று புண்ணை குணப்படுத்தும் சிறந்த இயற்கை உணவு இந்த வாழைத்தண்டு தான்.

வாழைப்பூ:

வாழைப்பூவில் நிறைந்துள்ள சத்துக்கள்:-
· கால்ஷியம்
· பாஸ்பரஸ்
· இரும்புசத்து
· புரதச்சத்து
· வைட்டமின் பி, சி
· நார்ச்சத்து

வாழைப்பூ பயன்கள்:
வாழைப்பூவை வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும்.
பெண்கள் இந்த வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறு, வெள்ளைப்படுதல், வயிற்று வலி போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும். வாழைப்பூவை தினமும் சாப்பிட்டு வர இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.
femina


வாழைக்காயில் நிறைந்துள்ள சத்துக்கள்:
· இரும்பு சத்து
· வைட்டமின் ஏ, பி, சி
· போலிக் ஆசிட்
· பொட்டாசியம்

வாழைக்காய் பயன்கள்:
வாழைக்காயில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், கர்ப்பிணி பெண்கள், சிறிய குழந்தைகள் என்று அனைவருமே சாப்பிடலாம்.
குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...