Friday, April 10, 2020

பொன் வண்ண மேனி.. காரட் எண்ணெய் ஒரு மேஜிக்


கேரட் எண்ணெய் தயாரிப்பது எப்படி?


அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசையா? அதனுடன் சேர்த்து உங்கள் சருமமும் பொலிவாக இருக்க வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் கேரட் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். 

இந்த கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் நீங்கள் இளமையாகவும் தோன்ற முடியும்.

கேரட் எண்ணெய், வறண்ட சேதமடைந்த கூந்தலுக்கு ஒரு இயற்கையான புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் இதில் பல வித நன்மைகளும் உள்ளன. 

கேரட் எண்ணெயில் வைட்டமின் ஈ, வைடமின் ஏ, பீட்டா கரோடின் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், புண் போன்றவை மறைகின்றது. இந்த பல்வேறு ஊட்டச்சத்துகள் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்கிறது, பல்வேறு சரும பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது. கேரட் எண்ணெய் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் உடலுக்குக் கிடைக்கிறது. கூந்தல் மற்றும் சருமத்திற்கு சிறந்த முறையில் பலன் அளிக்க உதவுகிறது. குளிர் காலத்தில் மற்றும் மழைக் காலங்களில் சருமம் வறண்டு இருப்பதால், கேரட் எண்ணெய் பயன்படுத்தி சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கலாம். 

குறிப்பாக பாத வெடிப்புகள் மற்றும் தோல் உரிவது போன்றவை மழைக் காலங்களில் அடிக்கடி ஏற்படும் பாதிப்பாகும். இதனைப் போக்க கேரட் எண்ணெய் சிறந்த முறையில் உதவுகிறது.

கேரட் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் .
கேரட் அல்லது ஆர்கானிக் கேரட் - 2 அல்லது 3.
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் .
கேரட் துருவி .
வடிகட்டி . 
ஒரு சுத்தமான கண்ணாடி குடுவை

செய்முறை:
கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். . துருவிய கேரட்டை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் மெல்லிய தீயில் வைக்கவும்  . உங்களுக்கு விருப்பமான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும். . கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு எண்ணெய்யை ஊற்றவும். . இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். . நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். . அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு ஆற விடவும். . அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊறட்டும். . ஆறியவுடன், ஒரு வடிகட்டி பயன்படுத்தி எண்ணெய்யை வடிகட்டிக் கொள்ளவும். . பிறகு அதனை ஒரு கண்ணாடி குடுவையில ஊற்றி வைக்கவும்.


இப்படி தயாரிக்கும் கேரட் எண்ணெய் கூந்தலுக்கு பல அற்புதங்களை செய்கிறது. தலைக்கு ஷாம்பூ தேய்த்து குளிப்பதற்கு முன்னால் இந்த எண்ணெய்யை தலையில் தடவிக் கொள்ளலாம். இப்படி செய்வதால் உங்கள் கூந்தல் எண்ணெய்யை உறிஞ்சி, தலை முடிக்கு ஈரப்பதம் அளித்து, அழகாக்குகிறது. 

இந்த கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோடின் போன்றவை சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து, உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையை சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ஆய்லி ஸ்கின் போயே போச்சு.


முகத்தில் எண்ணெய் வடிகிறதா?


வெயில் காலம் ஆரம்பிக்கும்போதே, முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்னையும், `யெஸ் ஐ யம் கம்மிங்' என்று பிசுபிசுக்கும். ''முகத்தில் எண்ணெய் வழிதல் எல்லா சீசனிலும் நடக்கிற விஷயம்தான். அதுதான் நம் முகத்துக்குப் பளபளப்பைத் தருகிறது. வெயில் காலத்தில் சருமத் துவாரங்கள் இன்னும் பெரிதாகத் திறந்துகொள்வதால், எண்ணெய் வழிவது அதிகமாகி, முகப்பரு வந்துவிடுகிறது. இதைச் சின்னச் சின்ன டிரிக்ஸ் மற்றும் ஃபேஸ் பேக்குகள் மூலம் கட்டுப்படுத்தலாம்'' என்கிறார், 'அரோமா தெரபிஸ்ட்' கீதா அசோக்.

* முகத்தில் எண்ணெய் அதிகமாக வடிகிறபோது, குழாய்த் தண்ணீரை கைகளில் பிடித்து, முகத்தில் வேகமாக அடித்துக் கழுவி, அழுத்தமாகத் துடைத்தெடுங்கள். சோப், ஃபேஸ்வாஷ் எதுவும் வேண்டாம். இப்படி வேகமாக அடிக்கிறபோது, சருமத்தில் இருக்கும் துளைகளுக்குள் நீர் சென்று, அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கிவிடும்.

ஐஸ் க்யூபை மெல்லிய காட்டன் கர்ச்சிப்பில் சுற்றி, முகம் முழுக்க வட்ட வட்டமாகத் தேயுங்கள். சருமத் துவாரங்கள் அடைபட்டு, எண்ணெய் வழிவது கட்டுப்படும்.

* ஈரமான டிஷ்யூவில் ஐஸ் கியூபைச் சுற்றி, முகத்தில் தேய்த்தாலும் எண்ணெய் சருமத்துக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

* வெயில் காலத்தில் முகத்துக்கு எந்த வகை பேக் போடுவதாக இருந்தாலும்,சொரசொரப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து சொரசொரப்பான பேக்குகளைப் போடுவதால், முகம் முதிர்ச்சியாக, வயதானதுப் போன்ற தோற்றத்தை உண்டாக்கும்.

* வெயில் காலங்களில் பாசிப்பருப்பு மாவு, கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் முகத்தில் அப்ளை செய்வதைத் தவிர்க்கவும். இவை இரண்டுமே, வெயில் காலங்களில் பெரிதாகத் திறந்துகொண்டிருக்கிற சருமத் துவாரங்களை அடைத்து, முகத்தில் சின்னச் சின்ன கரும்புள்ளிகளை ஏற்படுத்திவிடும்.

* அரிசி மாவுக்கு எண்ணெய் வழிவதைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. அதனால், ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன், ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர், வெண்ணெய் இல்லாத மோர் சேர்த்துக் குழைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பசையை முகத்தில் தடவி, அரை மணி நேரம் காயவிடுங்கள். காய்ந்தப் பிறகு, தண்ணீரைத் தொட்டுத் தொட்டு முகம் முழுக்கத் தடவி, ஈரத் துணியால் துடைத்து எடுங்கள். குறைந்தது 3 மணி நேரத்துக்கு எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி முகம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

* விழாக்களுக்குச் செல்ல வேண்டும். 5 மணி நேரத்துக்கு முகத்தில் எண்ணெய் வழியக் கூடாது என்பவர்கள், சிறிதளவு சோளமாவில், விதையில்லாத தர்பூசணித் துண்டுகள் மற்றும் 5 சொட்டு எலுமிச்சை சாறு  சேர்த்து, குழைத்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு, ஐஸ் வாட்டரால் முகத்தைக் கழுவுங்கள். விழா முடியும் வரை பளிச் முகத்துடன் இருப்பீர்கள்.

* மஞ்சள்பூசணியுடன் (pumpkin)தேங்காய்ப்பால், ஒரு டீஸ்பூன் ஜவ்வரிசி மாவு சேர்த்து அரைத்து, தொடர்ந்து முகத்தில் பேக்காகப் போட்டுவந்தால், முகம் பாலீஷ் போட்டதுபோல மாற ஆரம்பிக்கும். எண்ணெய் வடிவதும் கட்டுப்படும்.

* மேலே சொன்ன டிப்ஸை எல்லாம் செய்ய நேரமில்லையா? காய்ச்சாத பாலில் ஒரு பிரெட்டை ஊறவைத்துப் பிசைந்து, முகத்தில் தினமும் பேக்காக போட்டு வாருங்கள். பிரெட்டில் இருக்கும் ஈஸ்ட், முகத்தில் எண்ணெய் வடிவதைக் கட்டுப்படுத்திப் பொலிவாக்கும்.
 
நன்றி விகடன் ஹெல்த்

கரு கரு கூந்தலுக்கு அற்புத எண்ணெய்


நெல்லிக்காய் எண்ணெய் :


நெல்லிக்காய் நரை முடியை தடுக்கும். கூந்தல் வளர்ச்சியை அபாரமாகத் தூண்டும். மென்மையான கூந்தலை தரும்.


செய்முறை. 
 முதலில் 2 டம்ளர் நீரில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து கொதிக்க வையுங்கள்.
நீர் வற்றி அரை டம்ளர் குறையும் வரை சுண்ட காய்ச்சியபின் , அடுப்பை அணைத்து நீரை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டி நீர்தான் நெல்லிக்காய் டிகாஷன்.
பின்னர் துணியில் மீதமிருக்கும் நெல்லிக்காய் துகள்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் டிகாஷன், நெல்லிக்காய் துகள்கள் மற்றும் 100 மி.லி. தேங்காய் என்ணெய் கலந்து கொதிக்க வையுங்கள்.

நீர் முழுவதும் வற்றிப் போன பின் நெல்லிக்காய் எண்ணெய் மட்டும் மீதமிருக்கும். அப்போது அடுப்பை அணைத்து, ஆறியபின் பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

வாரம் இரு முறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால், சிறந்த முறையில் கூந்தல் வளரும். முடி உதிர்தல் நிற்கும்.

உங்க நோயெதிர்ப்பு ஆற்றல் பலவீனமாக இருப்பதன் அறிகுறிகள் என்ன? இதோ தெரிஞ்சிக்கங்க

ங்க நோயெதிர்ப்பு ஆற்றல் பலவீனமாக இருப்பதன் அறிகுறிகள் என்ன? இதோ தெரிஞ்சிக்கங்க

கொரோனா போன்ற தொற்று நோய்கள் நம்மை அண்டுவதற்கு நம்முடைய நோயெதிப்பு மண்டலமும் காரணமாக அமைகிறது. பலவீனமான நோயெதிப்பு மண்டலம் இருப்பவர்கள் நோய்கள் தொற்ற அதிக வாய்ப்புள்ளது. எனவே உங்க நோயெதிப்பு மண்டலத்தை வலுவாக்க மருத்துவர்கள் சில ஆலோசனைகளை தருகிறார்கள்.

samayam tamil

ஒரு மனிதனை நோய் அண்டாமல் இருக்க வேண்டும் என்றால் அவனுடைய நோயெதிப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டும். நோயெதிப்பு மண்டலம் என்பது இரத்த அணுக்கள், நோயெதிப்பு செல்கள் மற்றும் உறுப்புகளின் சிக்கலான அமைப்பாகும். இந்த சிக்கலான அமைப்பு தான் நோய்களிடம் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது. இதுவே உங்களுக்கு பலவீனமான நோயெதிப்பு மண்டலம் இருந்தால் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும். நம்முடைய உடலில் உள்ள வெள்ளை மற்றும் இரத்த அணுக்கள், ஆன்டிபாடிகள், உறுப்புகள் மற்றும் நிணநீர் கணுக்கள் உள்ளிட்ட பாகங்கள் தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. நம்முடைய நோயெதிப்பு மண்டலம் வலிமையானதாக இருக்கிறதா இல்லை பலவீனமாக இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதை அறிந்து கொண்டு எப்படி நோயெதிப்பு சக்தியை பலப்படுத்தி நோய்கள் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பதற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்

பலவீனமான நோயெதிப்பு மண்டலத்தின் அறிகுறிகள்

samayam tamil

சோர்வு : உங்களுக்கு சளி, காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் ரொம்ப சோர்வாக இருப்பீர்கள். இது உங்க உடலில் நோயெதிப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.
தொடர்ச்சியான தொற்றுகள்
நாள்பட்ட சைனஸ் நோய்த்தொற்றுகள், காது நோய்த்தொற்றுகள், நிமோனியா போன்ற நோய்த்தொற்றுகள் அடிக்கடி தோன்றுதல்.
சளி, இருமல் மற்றும் ப்ளூ போன்ற உடல் உபாதைகள் மீண்டும் மீண்டும் தோன்றுதல்
அதே மாதிரி சீரண பிரச்சனைகளாக வயிற்றுப் போக்கு, வாயுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் ஏற்படுதல்

இதர அறிகுறிகள்

samayam tamil

டைப் 1 டயாபெட்டீஸ், முடக்கு வாதம், லூபஸ் போன்ற உடல் உபாதைகள் உண்டாகுதல்.
உள் உறுப்புகளில் அழற்சி உண்டாதல்.
இரத்தம் சம்பந்தமான நோய்கள் அல்லது அனிமியா போன்ற பாதிப்புகள் உண்டாகுதல்.
குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாடுகள், தாமதமான வளர்ச்சி போன்றவை ஏற்படுதல்.
சரும பிரச்சினையாக சரும வடுக்கள், எரிச்சல், அரிப்பு, வறட்சி மற்றும் சிவந்து போதல் ஏற்படுதல்.
மேற்கண்ட அறிகுறிகள் பலவீனமான நோயெதிப்பு சக்தியை கொண்டவர்களுக்கு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நோயெதிப்பு மண்டலத்தை பலப்படுத்துவது எப்படி

சுத்த பராமரிப்பு
பல நோய்கள் நம்மளை அண்டுவதற்கு சுத்தமற்ற கைகள் தான் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே நோய்கள் அண்டாமல் இருக்க நாம் கை சுகாதாரத்தை மேற்கொள்ள வேண்டும். எனவே எப்பொழுதும் கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்பொழுது எல்லாம் கைகளை கழுவ வேண்டும்.
உணவு மற்றும் சிற்றுண்டி தயாரிப்பதற்கு முன் மற்றும் பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை கழுவ வேண்டும் . இருமல், மூக்கில் இருந்து சளி வெளிவரும் சமயங்களில் தொட்டால் கைகளை கழுவ வேண்டும்

கை கழுவுங்க

samayam tamil

காயம் அல்லது வெட்டுப்பட்ட சருமத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பு உங்ள கைகளை கழுவ வேண்டும். உடல்நிலை சரியில்லாத ஒருவருடன் தொடர்பு கொண்ட பிறகு கைகளை கழுவ வேண்டும்.
குழந்தைகளுக்கு பாத்ரூம் போக உதவி செய்த பிறகு, டயப்பர் மாற்றிய பிறகு கைகளை கழுவ வேண்டும்.
விலங்குகளை அல்லது செல்லப் பிராணிகளை தொட்டாலோ அல்லது அதன் கழுவிகளை அப்புறப்படுத்தினாலோ கைகளை கழுவ வேண்டும். குப்பை கழுவிகளை தொட்ட பிறகு கைகளை கழுவ வேண்டும்

காயம் அல்லது வெட்டுப்பட்ட சருமத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பு உங்ள கைகளை கழுவ வேண்டும். உடல்நிலை சரியில்லாத ஒருவருடன் தொடர்பு கொண்ட பிறகு கைகளை கழுவ வேண்டும்.
குழந்தைகளுக்கு பாத்ரூம் போக உதவி செய்த பிறகு, டயப்பர் மாற்றிய பிறகு கைகளை கழுவ வேண்டும்.
விலங்குகளை அல்லது செல்லப் பிராணிகளை தொட்டாலோ அல்லது அதன் கழுவிகளை அப்புறப்படுத்தினாலோ கைகளை கழுவ வேண்டும். குப்பை கழுவிகளை தொட்ட பிறகு கைகளை கழுவ வேண்டும்

நோய் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொள்வதை தவிருங்கள்


உங்களுக்கு பலவீனமான நோயெதிப்பு சக்தி இருந்தால் சளி, இருமல் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு வைத்திருப்பதை தவிருங்கள். ஏனெனில் நோய்த்தொற்று உங்களுக்கு எளிதாக தொற்ற வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் இருமல் மற்றும் தும்மல் வழியாக வெளியேறும் நீர்த்துளிகள் வழியாக நோய் பரவ வாய்ப்புள்ளது.
நோய்த் தொற்று இருப்பவர்களிடம் இருந்து எப்போதும் தள்ளியே இருப்பது நல்லது. வீட்டிலேயே தனித்திருப்பது நல்லது. ஒருவேளை வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் மட்டும் செல்லுங்கள். கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல மறக்காதீர்கள்

வீட்டு பொருட்களை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்

நோய்களை பரப்பும் கிருமிகள் வீட்டுப் பரப்பில் இருப்பது, கதவுகள், ரிமோர்ட் கண்ட்ரோல்கள் போன்றவற்றில் கிருமிகள் வசிக்கலாம். எனவே அந்த மாதிரியான பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யுங்கள்.
மன அழுத்தத்தை போக்க வேண்டும்
உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் நோயெதிப்பு மண்டலம் பலவீனம் அடைய ஆரம்பித்து விடும். எனவே மன அழுத்தம் நீங்க யோகா, தியானம், உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு இவற்றை செய்து மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்



கிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்


காஸ்ட்லி க்ரீம்களிலும்  பார்லர் சிகிச்சைகளிலும் மட்டுமல்ல, உங்கள் வீட்டுக் கிச்சனிலும் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம். கைக்கெட்டும் தூரத்தில் உள்ள பொருள்களைக் கொண்டு, அரைமணி நேரத்தில் உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ளும்ம் வழிமுறைகள் இதோ... 

♥️3 இன் 1 பேக்
ஓர் எலுமிச்சைப் பழத்தை எடுத்து அதன் மேல்பகுதியில் துளையிட்டு, சாறு முழுவதையும் நீக்குங்கள். அதற்குள் முட்டையின் வெள்ளைக்கருவை நிரப்பி, இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டும். மறுநாள் காலை, எலுமிச்சைப் பழத்தின் உள்ளே இருக்கும் வெள்ளைக்கருவை எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் உலரவிடுங்கள். உங்கள் சருமம் இறுக்கமடைவதை உணர்வீர்கள். பிறகு, கைகளைத் தண்ணீரில் நனைத்து, முகத்தில் மெதுவாகத் தடவி, கழுவவேண்டும். இது சருமச் சுருக்கங்களை நீக்கும்; சருமத்தின் தொய்வைத் தடுக்கும்; பளிச்சென மாற்றும்.  40 வயதுக்கு மேலானவர்கள் இதை வாரம் இரு முறை செய்யலாம்.
இனி எண்ணெய் வழியாது
எண்ணெய் அதிகம் வழியும் சருமம் என்றால், அடிக்கடி வெறும் தண்ணீரில் முகம் கழுவுங்கள். 

நன்றாகப் பழுத்த ஒரு தக்காளியின் கூழ், 4 துளிகள் எலுமிச்சைச் சாறு, அரை டீஸ்பூன் உலர்ந்த எலுமிச்சைப் பழத்தோல் பொடி அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால், எண்ணெய் வழியும் சருமம் மெருகு பெறும்.

♥️சீக்ரெட் ப்ளீஸ்!
40 வேர்க்கடலை(pea nut), 10 பாதாமுடன் பன்னீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். அடுத்த நாள் அவற்றின் தோலை நீக்கி, கிளிசரின், தேன், பன்னீர், வைட்டமின் ஈ ஆயில், பேபி ஆயில்  தலா ஒரு டீஸ்பூன் சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். தினமும் காலையில் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறிய பின் கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் சருமம் பளபளக்கும். 20 நாள்கள் தொடர்ந்து இதைச் செய்து வந்தால், எதிர்கொள்கிற எல்லாருக்கும் உங்கள் சரும அழகின் சீக்ரெட்டைச் சொல்ல வேண்டியிருக்கும்.

♥️முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை நன்கு கலந்து கொள்ளவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதை வாரத்தில் மூன்று முறை செய்துவந்தால், சரும நிறம் கூடும்; சுருக்கங்கள் குறையும்.
♥️அழகு தரும் அவகேடோ
சரும ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமான வைட்டமின் ஈ சத்து, அவகேடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட்டில் உள்ளது. அவகேடோ பழத்தை மசித்து, சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்துக் குழைத்து, சருமத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். உங்கள் சருமம் உடனடியாக மிளிரும்

அழகான முகத்திற்க்கு பப்பாளி எண்ணெய்


பளிச்சிட செய்யும் பப்பாளி எண்ணெய்
பப்பாசிப்பழம் சரும நிறத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றுவதை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால் என்ன.. !!பப்பாசி பழம் எப்போதும் கிடைப்பதில்லை..
இனி பப்பாசிப்பழம் கிடைக்கும் போதே நீங்கள் இந்த எண்ணெயை செய்து வைத்தீர்கள் என்றால் எப்பொழுதும் உங்களை அழகு படுத்தலாம்...
தேவையான பொருட்கள். 

இரசாயன கலப்பற்ற பப்பாசி (organic )
தூய தேங்காய் எண்ணெய். (Virgin or white )

செய்முறை -

#நன்கு பழுத்த பழமொன்றை எடுத்து முதலில் நன்கு கழுவிக்கொள்ளவும். (பால் நீங்கும் வரை )
#தேவையான அளவு பப்பாசி பழத்தை தோலோடு மிக சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும் (விரும்பினால் சில விதைகளை சேர்க்கலாம் -விதைகள் முகப்பருக்கள் மற்றும் அழற்சிகள் வருவதை தடுக்கும் ).
#இதை அடுப்பில் வைத்து பழத்துண்டுகள் மூழ்கும் வரை எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
#மெல்லிய தீயில் வைத்து பழத்துண்டுகள் பொறிபடும் பதம் அளவு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
#பழத்துண்டுகளை நசிக்க வேண்டாம்.
# ஆறியவுடன் வடியொன்றில் கலவையை ஊற்றி மெதுவாக வடிய விடவும்.
#ஆரஞ்சு கலர் அழகான எண்ணெய் தயார் (நீங்கள் எடுக்கும் பழத்தை பொறுத்தே நிறம் வரும் )
 
பூசும் முறை :

இரவில் தூங்கும் முன் நன்கு கழுவி துடைத்த முகத்தில்  மற்றும் கழுத்தில் நன்கு பூசி சில வினாடிகள் மசாஜ் செய்து விடுங்கள். காலையில் கழுவிவிடலாம்.
Or
பகலில் பூசி மசாஜ் செய்து பின் பயறு மா போட்டு கழுவி கொள்ளலாம்


பயன்கள் :
#சரும சுருக்கங்களை நீக்கும்
#வயதாகும் போது முகத்தில் தோன்றும் கருந்திட்டுக்களை நீக்கும்
#வெய்யிலினால் தோன்றும் கருமையை நீக்கி முகத்தை பொலிவாக்கும்.
#கண்ணின் கருவளையம் மற்றும் உதட்டின் வறட்சியை நீக்கும்

நாற்பதை வயதை நெருஞ்கிற பொழுது, பொதுவாகவே எல்லோருக்கும் ஜீரணக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். அதனால் புரோபயாடிக் நிறைந்த உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. தயிர், சோயா, டோஃபு பனீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவை பொதுவாக இந்த காலகட்டத்தில் தான் வளர்ச்சிதை மாற்றங்களில் சிக்கல், எலும்புகளின் வளர்ச்சி குறைபாடு மற்றும் தசைகளின் வளர்ச்சி நிலைகள் ஆகியவை பாதிக்கப்படும். அதனால் புரோபயாடிக் உணவுகள் சேர்த்துக் கொன்பிற பொழுது, இதுபோன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும்

40 வயதை நெருங்கும் பெண்கள் என்ன மாதிரியான உணவுகள் அதிகமாக சாப்பிட வேண்டும்

நாற்பது வயதைத் தொடுகிற, தாண்டிய பெண்கள் எந்த மாதிரியான ஊட்டச்சத்து உணவுகளை தங்ள் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்

samayam tamil

பெண்கள் எந்த விஷயத்தில் பெண்கள் கவனமாக இருந்தாலும் தங்களுடைய ஆரோக்கிய விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். வீட்டில் உள்ளவர்களின் நலன் பற்றியே முழு நேரமும் யோசிக்கும் அவர்கள், அதிலும் குறிப்பாக 40 வயதை கடந்துவிட்ட அம்மாக்கள் தங்களுடைய உடலைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் தான் இருக்கிறார்கள். இதுவே ஆண்களாக இருந்தால், வயது என்பது வருட வருடம் அதிகரித்துக் கொண்டே போகிற எண் மட்டும் தான். அதனால் என்னுடைய வாழ்வில் அவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படப் போவதில்லை என தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்வார்கள். அதற்குக் காரணம் அவர்கள் குழந்தைப் பருவம் முதலே எடுத்துக் கொள்ளும் உணவு, விளையாட்டு, பயிற்சி, வாழ்க்கை முறை ஆகியவை தான். ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை

பெண்கள் 40

பெண்கள் 40 வயதைக் கடக்கும் பொழுது, இனிமேல் நமக்கென்ன என்று அலட்சியமாக சொல்வதுண்டு. ஆனால் 40 வயதுக்கும் மேல் தான் பெண்கள் தங்களுடைய ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முன்பெல்லாம் மெனோபஸ் என்று சொல்லப்படுகிற மாதவிடாய் சுழற்சி நிற்கும் பருவம் என்பது ஐம்பது வயதுக்கும் மேலாகவே இருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக 40 வயதைத் தாண்டுகிற பொழுதே மெனோபஸ் வந்துவிடுகிறது.
அதேபோல் பெண்களுக்கு வயதாவதை உணர்த்துகிற இரண்டு முக்கியமான விஷயம் என்னவென்றால், தலைமுடி நரைப்பதும் கண் பார்வையில் சற்று தெளிவின்மை, உடல் சோர்வு போன்ற பிரச்சினையும் ஏற்படும். இதுபோன்ற சில அறிகுறிகளைக் கொண்டாவது, இனியாவது தங்களுடைய உடல் நலனில் பெண்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக, சின்ன சின்ன உடற்பயிற்சிகள், யோகா, ஆரோக்கியமான உணவு ஆகியவற்றை முறையாகக் கடைபிடித்தாலே போதும்

​ஊட்டச்சத்து உணவு

samayam tamil

பெண்களுக்கு 35 வயதைத் தாண்டுகிற பொழுதே எலும்புகளின் தேய்மானமும் நடக்கத் தொடங்கி விடும். இதை ஆரம்பத்தில் இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. பிறகு அவதிப்படுவதுண்டு. நாற்பதைத் தொடும் பெண்கள் கட்டாயம் தங்களுடைய உணவு விஷயத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முடிந்தவரையில் எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் இருப்பது போன்ற சமச்சிர் உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்

கால்சியம்

samayam tamil

கால்சியம் நிறைந்த உணவு பெண்களுக்கு மிக மிக அடிப்படைத் தேவையான ஒன்று. உடலில் உள்ள தசைகள், இதயத்திற்கு செல்லுகின்ற ரத்த நாளங்கள் ஆகியவற்றின் சீரான இயக்கத்துக்கு கால்சியம் மிக மிக முக்கியம். உடலில் கால்சியம் சத்துக்கள் குறைகின்ற பொழுது, எலும்புகளில் உள்ள கால்சியத்தை உடல் உறிஞ்சத் தொடங்கும். அதன் விளைவாக உடல் தளர்ந்து போதல், கடுமையான உடல் வலி ஆகியவை உண்டாகும். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு உணவில் கால்சியம் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு பசலைக்கீரை, ப்ரக்கோலி, பாதாம், பால் பொருள்கள், புரோபயாடிக் நிறைந்த தயிர் ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

​வைட்டமின் டி பற்றாக்குறை

வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்படுகின்ற பல பிரச்சினைகளுக்கு வைட்டமின டி பற்றாக்குறை ஒரு காரணமாக அமைகிறது. இதய நோய், புற்றுநோய் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அடிப்படையில் இந்த வைட்டமின் டி ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உடலுக்குத்தேவையான அனைத்து சத்துக்களையும் உறிஞ்சி, உடலை முறைப்படுத்தும் ஆற்றல் இந்த வைட்டமின் டிக்கு உண்டு. இவை சீஸ், சோயாபீன்ஸ், ஆரஞ்சுப் பழங்கள், சால்மன் மீன் ஆகியவற்றில் மிக அதிக அளவில் இருக்கிறது. அதைவிட எந்த வித செலவும் இல்லாமல் நம்முடைய உடலுக்குத் தேவையான வைட்டமின் டி பெற காலையில் எழுந்து அரை மணி நேரம் சூரிய ஒளியில் நில்லுங்கள். அன்றைய நாளுக்குத் தேவையான சூரிய ஒளியை அதன்மூலமே நீங்கள் பெற்றுவிட முடியும்.

மக்னீசியம்

samayam tamil

உடலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க இந்த மக்னீசியம்உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதயப் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது. தசைகளை வலிமைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பொதுவாக மக்னீசியம் குறைகின்ற பொழுதுதான், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சினைகள் ஆகியவை உடலில் தலைதூக்கத் தொடங்கும். பீன்ஸ், கீரைகள், பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் ஆகியவற்றில் அதிக அளவில் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் தேவைக்கு ஏற்ப அன்றாட உணவில் சிறிது சேர்த்துக் கொள்வது நல்லது.

​ஒமேகா-3

samayam tamil

நம்முடைய உடலின் செயல்பாட்டுக்கும் மூளையின் இயக்ககத்துக்கும் எலும்புகளை வலுப்படுத்துவதிலும் மிக துரித ஆற்றலோடு இந்த ஒமேகா 3 செயல்படுகிறது. குறிப்பாக, பெண்கள் தங்களுடைய உணவில் இந்த ஒமேகா 3 அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். சால்மன் மீனில் அதிக அளவில் ஒமேகா 3 இருப்பது நமக்குத் தெரியும். அதைத் தாண்டி, ஆளி விதை, சோயா ஆகியவற்றிலும் இந்த ஒமேகா 3 அதிக அளவில் இருக்கிறது.

புரோபயாடிக் உணவுகள்


samayam tamil

நாற்பதை வயதை நெருஞ்கிற பொழுது, பொதுவாகவே எல்லோருக்கும் ஜீரணக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். அதனால் புரோபயாடிக் நிறைந்த உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. தயிர், சோயா, டோஃபு பனீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவை பொதுவாக இந்த காலகட்டத்தில் தான் வளர்ச்சிதை மாற்றங்களில் சிக்கல், எலும்புகளின் வளர்ச்சி குறைபாடு மற்றும் தசைகளின் வளர்ச்சி நிலைகள் ஆகியவை பாதிக்கப்படும். அதனால் புரோபயாடிக் உணவுகள் சேர்த்துக் கொன்பிற பொழுது, இதுபோன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும்

சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை மட்டும் நிறைய சாப்பிடலாமாம்... என்ன பழம்னு தெரியுமா?

த்திப்பழத்தில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நம் இதய நோய்க்கு அரணாக, சரும பிரச்சனைகளை தீர்க்க, சிறுநீரக கற்கள் நீங்க இப்படி 


samayam tamil

அத்திப்பழம் மிகவும் அத்தியாவசியமான பழங்களுள் ஒன்றாகவே குறிப்பிடலாம். மனிதனுக்கு பல வகைகளில் பயன்படும் அத்திப்பழம் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பொதுவாக ஜூலை பிற்பகுதியிலிருந்து அக்டோபர் நடுப்பகுதி வரை இதன் சீசன் இருக்கும். இந்த அத்திப்பழத்தின் உட்புறம் பார்ப்பதற்கு சிவப்பாக இருக்கும். இதை காய வைத்து உலர்ந்த வடிவிலோ அல்லது அப்படியே ப்ரஷ்ஷாகவோ சாப்பிடலாம். அத்தி பழத்தில் புரத சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10 மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள், விட்டமின் சி, விட்டமின் பி, டி, சர்க்கரை, சுண்ணாம்பு சத்து, இரும்பு, தாமிர சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளனஉள்ளது. இந்த அத்தி பழத்தை உலர வைத்து டின்களில் அடைத்தோ அல்லது அத்தி பழம் பொடியாகவோ நாம் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இது நமது எலும்புகள் மற்றும் சருமத்திற்கு முக்கியமானது. இது போன்று இன்னும் ஏராளமான நன்மைகளைத் தரும் அத்திப்பழத்தை பற்றி இப்பகுதியில் காண்போம்

முகப்பருக்கள் மற்றும் கொப்பளங்கள்

samayam tamil

அத்திப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நம் முக ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இது முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கொப்பளங்களை போக்குகிறது. இதற்கு பழுத்த அத்திப்பழத்தை முகத்தில் தடவி 15 - 20 நிமிடங்கள் உலர விடுங்கள். பிறகு இதை நீரால் கழுவுங்கள். முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கொப்புளங்களை உலர வைத்து காணாமல் போகச் செய்கிறது. மேலும் பருக்கள் இருந்த வடுக்களையும் மறையச் செய்கிறது. முகழகிற்காக அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து பயன்படுத்தி வரலாம். முகத்தில் அத்திப்பழத்தை பூசும் போது துளைகள் இறுக்கப்பட்டு சரும எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில் சரும துளைகளும் அடைபடாமல் இருப்பதால் சருமம் சுவாசிக்க முடியும். எனவே உங்க முகத் தோற்றத்தை மேம்படுத்த விரும்பினால் அத்திப் பழத்தை பயன்படுத்துங்கள்

​மலச்சிக்கல் தீர

samayam tamil

அத்திப்பழம் இயற்கையாகவே ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது. எரிச்சலுடன் மலம் கழிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் அத்திப்பழம் சாப்பிட்டு வரலாம். எனவே இரவே 2-3 அத்திப் பழங்களை தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். இதை ஒரு மாத காலத்திற்கு காலையில் எழுந்ததும் சாப்பிட்டு வாருங்கள். உங்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு நல்ல தீர்வளிக்கும்

இதய நோய்கள் மற்றும் சிறுநீரக கற்கள்

உலர்ந்த அத்தி பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறையவே உள்ளது. நாம் அன்றாட உணவில் சேர்க்கும் தக்காளியைப் போல் அத்திப்பழமும் நம் இரத்தத்தை சுத்தம் செய்கிறது. இதில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த இரண்டு விட்டமின்களும் ஒரு ஆக்ஸினேற்றியாக செயல்பட்டு நமக்கு இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் இதய நோய்கள் மற்றும் சிறுநீரக கற்கள் பிரச்சினையில் இருந்து நம்மை காக்கின்றன. ஒரு கப் தண்ணீரில் 6 அத்திப்பழங்களை போட்டு வேகவைக்கவும். பின்னர் அதை தினமும் ஒரு மாதம் கால வரை உட்கொள்ளுங்கள். உங்களுக்கு இதய நோய்கள் மற்றும் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவும்.

எலும்புகளை வலிமையாக்கும்


அந்திப்பழத்தில் எலும்புகளை வலிமையாக்க கூடியதாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் டி போன்ற சத்துக்கள் உள்ளன. 1 உலர்ந்த அத்திப் பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் தேவையில் 3 சதவீதம் வரை பூர்த்தி ஆகிறது. இதை பெண்கள் உண்டு வரும் போது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் முதுகு வலி போன்ற எலும்பு பிரச்சனைகள் வராமல் இருக்கும். கால்சியம் பற்றாக்குறையால் எலும்புகள் மெலிந்து போதல் தடுக்கப்படும்

​மார்பக புற்றுநோயை தடுக்கும் மருந்து

தற்போதைய கால கட்டத்தில் பெண்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை மார்பக புற்று நோய். அதிலும் குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிப்படைகின்றனர். ஆனால் பெண்கள் இந்த அத்திப்பழத்தை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்று நோய் அபாயத்தை குறைக்க முடியும். செல்களில் ஏற்படும் செல் பிறழ்ச்சியை தடுத்து புற்றுநோய் செல்கள் உருவாக்கத்தை தடுக்க அத்திப்பழம் பயன்படுகிறது

40 வயதை நெருங்கும் பெண்கள் என்ன மாதிரியான உணவுகள் அதிகமாக சாப்பிட வேண்டும்

40 வயதை நெருங்கும் பெண்கள் என்ன மாதிரியான உணவுகள் அதிகமாக சாப்பிட வேண்டும்

நாற்பது வயதைத் தொடுகிற, தாண்டிய பெண்கள் எந்த மாதிரியான ஊட்டச்சத்து உணவுகளை தங்ள் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்

samayam tamil

பெண்கள் எந்த விஷயத்தில் பெண்கள் கவனமாக இருந்தாலும் தங்களுடைய ஆரோக்கிய விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். வீட்டில் உள்ளவர்களின் நலன் பற்றியே முழு நேரமும் யோசிக்கும் அவர்கள், அதிலும் குறிப்பாக 40 வயதை கடந்துவிட்ட அம்மாக்கள் தங்களுடைய உடலைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் தான் இருக்கிறார்கள். இதுவே ஆண்களாக இருந்தால், வயது என்பது வருட வருடம் அதிகரித்துக் கொண்டே போகிற எண் மட்டும் தான். அதனால் என்னுடைய வாழ்வில் அவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படப் போவதில்லை என தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்வார்கள். அதற்குக் காரணம் அவர்கள் குழந்தைப் பருவம் முதலே எடுத்துக் கொள்ளும் உணவு, விளையாட்டு, பயிற்சி, வாழ்க்கை முறை ஆகியவை தான். ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை

பெண்கள் 40

பெண்கள் 40 வயதைக் கடக்கும் பொழுது, இனிமேல் நமக்கென்ன என்று அலட்சியமாக சொல்வதுண்டு. ஆனால் 40 வயதுக்கும் மேல் தான் பெண்கள் தங்களுடைய ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முன்பெல்லாம் மெனோபஸ் என்று சொல்லப்படுகிற மாதவிடாய் சுழற்சி நிற்கும் பருவம் என்பது ஐம்பது வயதுக்கும் மேலாகவே இருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக 40 வயதைத் தாண்டுகிற பொழுதே மெனோபஸ் வந்துவிடுகிறது.
அதேபோல் பெண்களுக்கு வயதாவதை உணர்த்துகிற இரண்டு முக்கியமான விஷயம் என்னவென்றால், தலைமுடி நரைப்பதும் கண் பார்வையில் சற்று தெளிவின்மை, உடல் சோர்வு போன்ற பிரச்சினையும் ஏற்படும். இதுபோன்ற சில அறிகுறிகளைக் கொண்டாவது, இனியாவது தங்களுடைய உடல் நலனில் பெண்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக, சின்ன சின்ன உடற்பயிற்சிகள், யோகா, ஆரோக்கியமான உணவு ஆகியவற்றை முறையாகக் கடைபிடித்தாலே போதும்

​ஊட்டச்சத்து உணவு

samayam tamil

பெண்களுக்கு 35 வயதைத் தாண்டுகிற பொழுதே எலும்புகளின் தேய்மானமும் நடக்கத் தொடங்கி விடும். இதை ஆரம்பத்தில் இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. பிறகு அவதிப்படுவதுண்டு. நாற்பதைத் தொடும் பெண்கள் கட்டாயம் தங்களுடைய உணவு விஷயத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முடிந்தவரையில் எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் இருப்பது போன்ற சமச்சிர் உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்

கால்சியம்

samayam tamil

கால்சியம் நிறைந்த உணவு பெண்களுக்கு மிக மிக அடிப்படைத் தேவையான ஒன்று. உடலில் உள்ள தசைகள், இதயத்திற்கு செல்லுகின்ற ரத்த நாளங்கள் ஆகியவற்றின் சீரான இயக்கத்துக்கு கால்சியம் மிக மிக முக்கியம். உடலில் கால்சியம் சத்துக்கள் குறைகின்ற பொழுது, எலும்புகளில் உள்ள கால்சியத்தை உடல் உறிஞ்சத் தொடங்கும். அதன் விளைவாக உடல் தளர்ந்து போதல், கடுமையான உடல் வலி ஆகியவை உண்டாகும். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு உணவில் கால்சியம் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு பசலைக்கீரை, ப்ரக்கோலி, பாதாம், பால் பொருள்கள், புரோபயாடிக் நிறைந்த தயிர் ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

​வைட்டமின் டி பற்றாக்குறை

வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்படுகின்ற பல பிரச்சினைகளுக்கு வைட்டமின டி பற்றாக்குறை ஒரு காரணமாக அமைகிறது. இதய நோய், புற்றுநோய் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அடிப்படையில் இந்த வைட்டமின் டி ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உடலுக்குத்தேவையான அனைத்து சத்துக்களையும் உறிஞ்சி, உடலை முறைப்படுத்தும் ஆற்றல் இந்த வைட்டமின் டிக்கு உண்டு. இவை சீஸ், சோயாபீன்ஸ், ஆரஞ்சுப் பழங்கள், சால்மன் மீன் ஆகியவற்றில் மிக அதிக அளவில் இருக்கிறது. அதைவிட எந்த வித செலவும் இல்லாமல் நம்முடைய உடலுக்குத் தேவையான வைட்டமின் டி பெற காலையில் எழுந்து அரை மணி நேரம் சூரிய ஒளியில் நில்லுங்கள். அன்றைய நாளுக்குத் தேவையான சூரிய ஒளியை அதன்மூலமே நீங்கள் பெற்றுவிட முடியும்.

மக்னீசியம்

samayam tamil

உடலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க இந்த மக்னீசியம்உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதயப் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது. தசைகளை வலிமைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பொதுவாக மக்னீசியம் குறைகின்ற பொழுதுதான், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சினைகள் ஆகியவை உடலில் தலைதூக்கத் தொடங்கும். பீன்ஸ், கீரைகள், பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் ஆகியவற்றில் அதிக அளவில் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் தேவைக்கு ஏற்ப அன்றாட உணவில் சிறிது சேர்த்துக் கொள்வது நல்லது.

​ஒமேகா-3

samayam tamil

நம்முடைய உடலின் செயல்பாட்டுக்கும் மூளையின் இயக்ககத்துக்கும் எலும்புகளை வலுப்படுத்துவதிலும் மிக துரித ஆற்றலோடு இந்த ஒமேகா 3 செயல்படுகிறது. குறிப்பாக, பெண்கள் தங்களுடைய உணவில் இந்த ஒமேகா 3 அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். சால்மன் மீனில் அதிக அளவில் ஒமேகா 3 இருப்பது நமக்குத் தெரியும். அதைத் தாண்டி, ஆளி விதை, சோயா ஆகியவற்றிலும் இந்த ஒமேகா 3 அதிக அளவில் இருக்கிறது.

புரோபயாடிக் உணவுகள்


samayam tamil

நாற்பதை வயதை நெருஞ்கிற பொழுது, பொதுவாகவே எல்லோருக்கும் ஜீரணக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். அதனால் புரோபயாடிக் நிறைந்த உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. தயிர், சோயா, டோஃபு பனீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவை பொதுவாக இந்த காலகட்டத்தில் தான் வளர்ச்சிதை மாற்றங்களில் சிக்கல், எலும்புகளின் வளர்ச்சி குறைபாடு மற்றும் தசைகளின் வளர்ச்சி நிலைகள் ஆகியவை பாதிக்கப்படும். அதனால் புரோபயாடிக் உணவுகள் சேர்த்துக் கொன்பிற பொழுது, இதுபோன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும்

எலுமிச்சை தோலில் பொடி செய்து பயன்படுத்தினால் ஏராளமான அழகு தருமாமே!

எலுமிச்சை தோலில் பொடி செய்து பயன்படுத்தினால் ஏராளமான அழகு தருமாமே!

samayam tamil
எலுமிச்சை பழம் இருந்தால் போதும் உச்சி முதல் பாதம் வரை அழகை அதிகரிக்கலாம். ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் முதல் பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் எலுமிச்சையின் பயன் தவிர்க்கமுடியாதது. எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின்சி, கால்சியம், பீட்டா கரோட்டின், மெக்னீசியம் போன்றவை சருமத்தை மிளிரவைக்க உதவுகிறது. எலுமிச்சை சாறுக்கு சற்றும் குறைந்ததில்லை எலுமிச்சை தோல் தரும் நன்மைகள். எலுமிச்சை கிடைக்கும் காலங்களில் இதன் தோலை பொடித்து வைத்துகொள்ளுங்கள். எப்படி சத்து குறையாமல் பொடித்து வைப்பது, அதை எப்படி பயன்படுத்துவது தெரிந்துகொள்வோமா?


எலுமிச்சை தோலில் பொடி

எலுமிச்சை அதிகம் கிடைக்கும் காலங்களில் 50 பழங்களை வாங்கி இரண்டாக நறுக்கி சாறு பிழியாமல் அப்படியே வெயிலில் காய வையுங்கள். சாறை தோல் இழுத்து கொள்ளும். தோல் காய வைத்ததும் அதை நறுக்கி மிஷினில் கொடுத்து பொடியாக்குங்கள்.


இந்த பொடியை சலித்து எடுத்து வைத்துகொள்ளுங்கள். சுகாதாரமான முறையில் பொடித்திருந்தால் இதை உணவில் கூட சேர்க்கலாம். எலுமிச்சை புளிப்பு நிறைந்திருக்கும். வெறும் வயிற்றில் கால் டீஸ்பூன் சேர்த்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இப்போது இதை எப்படி எதற்கு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்



samayam tamil

முகத்தில் முகப்பருக்கள் இருப்பவர்கள் தினமும் காலையில் முகத்தில் எலுமிச்சை தோலில் பேக் போட்டு வந்தால் பருக்கள் குறையும். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை தோல் பொடியை 5 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் போல் குழைத்து கொள்ளவும். பிறகு பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காயும் வரை விட்டு பிறகு மிதமான நீரில் முகத்தை கழுவி விடவும்.
எலுமிச்சை சிட்ரிக் அமிலம் நிறைந்தது என்பதால் நேரடியாக முகத்துக்கு போடக்கூடாது என்றும் சொல்வார்கள். ஆனால் எலுமிச்சை தோல் பொடியை பாலில் கலந்து குழைத்து போடும் போது சருமத்தில் அதன் தாக்கம் குறைவாக இருக்கும். வேறு பாதிப்பும் வராமல் இருக்கும்.

முகத்தில் இறந்த செல்களை நீக்க


ஓட்ஸ் பொடி - 2 டீஸ்பூன்,
எலுமிச்சை பொடி - 2 டீஸ்பூன்,
தேன் - 1 டீஸ்பூன்,
பன்னீர் - 1 டீஸ்பூன்
ஓட்ஸ் பொடியுடன் சம அளவு எலுமிச்சை பொடி கலந்து ஒரு டீஸ்பூன் தேன் பன்னீர் கலந்து நன்றாக பேஸ்ட் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.
இறந்த செல்கள் சருமத்துவாரங்களை அடைக்கும் போதுதான் பருக்கள், முகத்தின் நிறம் மங்குதல், பருக்கள் அடங்கினாலும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் அடுக்கடுக்காய் வரும். இதை தவிர்க்க அவ்வபோது எலுமிச்சை பொடி சேர்த்து முகத்துக்கு ஸ்க்ரப் செய்வது பலன் தரும்
மெனிக்யூர் செய்யும் போது
கை நகங்கள் பொலிவாக அழகான தோற்றத்துடன் இருக்க மெனிக்யூர் செய்வதுண்டு. வீட்டில் மெனிக்யூர் செய்யும் போது கை விரல் நகங்களை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சை பொடி கலந்து பயன்படுத்தலாம். மிதமான வெந்நீரில் எலுமிச்சை பொடி சேர்த்து பத்து நிமிடங்கள் விரல் நகங்களை வெந்நீரில் ஊறவிட்டு 15 நிமிடங்கள் கழித்து நகங்களை தேய்த்து கழுவினால் நகங்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கி வெள்ளை பளிச் என்று இருக்கும். நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் பளிச் வெண்மையாக கூடுதலாக ஜொலிக்கும்
​பெடிக்யூர் செய்யும் போது
பாதங்களில் வெடிப்பு பிரச்சனை, தோல் உரிதல் போன்ற பிரச்சனை வராமல் பாதங்கள் பொலிவுடன் இருக்க, பெடிக்யூர் செய்வதுண்டு. அகலமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் வெந்நீரை ஊற்றி ஒரு டீஸ்பூன் எலுமிச்சை பொடி, பன்னீர் கலந்து பாதங்களை ஊறவைத்து கழுவலாம்.எலுமிச்சை சாறு கலந்து பாதங்களை நனைப்பதுண்டு. ஆனால் அதை காட்டிலும் கூடுதல் பலனை எலுமிச்சை பொடி தரும் என்பதை பயன்படுத்தும் போதே உணரலாம்.

samayam tamil




இயற்கை ஹேர்டை என்னும் ஹென்னா பயன்படுத்தும் போது ஒரு டீஸ்பூன் எலுமிச்சை பொடி கலந்து பயன்படுத்தலாம். கெமிக்கல் அதிகம் இருந்தாலும் அதில் இருக்கும் நச்சுகளை எலுமிச்சை நீக்கிவிடும். இள நரை பிரச்சனை அதிகரிக்காமல் இருக்கவும், உஷ்ணத்தை குறைக்கவும் கூட உதவும். கூந்தல் பொலிவாகவும், பளபளவென்றும் வைக்கும். முடியின் கருமையை அதிகரிக்க உதவும். முடி வளர்ச்சியை அதிகரிக்கும். முடி உதிர்தலை தடுக்கும். இதையெல்லாம் விட கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும்

இதை அனைத்தையும் எலுமிச்சை பொடியால் சாத்தியமே என்பதை பயன்படுத்த தொடங்கினால் நீங்களும் உணர்வீர்கள். எலுமிச்சை சாறை நேரடியாக முகத்தின் மீது பயன்படுத்தும் போது சருமத்தில் எரிச்சலும், ஒவ்வாமையும் சிலருக்கு உண்டாகும். ஆனால் எலுமிச்சை பொடியை எல்லா அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தலாம்

.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...