Tuesday, April 28, 2020

குட்டி பாப்பாவுக்கு சாப்பாடு கொடுக்க போறீங்களா.. !


ஆறு மாத குழந்தைக்கான திட உணவு எப்படி இருக்க வேண்டும்

ஒரு குழந்தையின் முதல் உணவு, தாய்ப்பால். குறைந்தது ஆறு மாத காலத்துக்குப் பிறகு, திட உணவைக் கொடுக்க ஆரம்பிக்கலாம். தாய்ப்பாலுக்குப் பிறகு கொடுக்கும் முதல் திட இணை உணவு எப்படியிருக்க வேண்டும் என்பதை ரெசிப்பியாக சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நியூட்ரீஷியனிஸ்ட், பிரியா ராஜேந்திரன்.

 
குழந்தைகள் சரியான எடையின்றி மெலிந்து இருக்கிறது என்பதே எங்களைத் தேடிவரும் பெற்றோரின் மனக்குறையாக இருக்கிறது. இது தேவையற்ற கவலை. சராசரி எடை என்று ஒன்று வகுக்கப்பட்டிருந்தாலும் ஒரு குழந்தை பிறந்தபோது இருந்த எடையை வைத்தே இன்றைய எடையைக் கணக்கிட வேண்டும். சில குழந்தைகள் பிறக்கும்போது 3 கிலோ இருப்பார்கள். சில குழந்தைகள் 2.5 கிலோ இருப்பார்கள். எனவே, மற்ற குழந்தையின் வளர்ச்சியுடன் உங்கள் குழந்தையின் இன்றைய வளர்ச்சியை ஒப்பிட்டு, மெலிந்திருப்பதாக கவலைப்பட வேண்டாம். குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்று பாருங்கள். தாய்ப்பாலுக்குப் பிறகு குழந்தைகளுக்கு முதன்முதலாகத் திட உணவுகளைக் கொடுக்கும்போது எந்த வகை உணவுகளைக் கொடுக்கலாம் என்பதில் பல தாய்மார்களுக்குக் குழப்பம் ஏற்படும். சிலர், விளம்பரங்களைப் பார்த்து, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை வாங்கி ஊட்டுவார்கள். இது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதற்குப் பதில், வீட்டிலே எளிமையாகவும் சுத்தமாகவும் தயாரித்த உணவுகளைக் கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க முடியும். இதோ அத்தகைய உணவுக்கான ரெசிப்பிக்கள்.


🥣அரிசிக் கஞ்சி:
தேவையானவை:
புழுங்கல் அரிசி - 500 கிராம்
பொரி கடலை - 200 கிராம்
ஏலக்காய் - 5
உப்பு - சிறிதளவு
செய்முறை:
உப்பு தவிர்த்து மற்ற எல்லாப் பொருள்களையும் தனித் தனியாக வறுத்து ஆறவைக்கவும். பிறகு, மிக்ஸியில் சேர்த்து மாவாகத் திரித்துக்கொள்ளவும். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடிவைக்கவும். தேவையானபோது, இந்த மாவில் 3 டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். சிறிது கெட்டியானதும் உப்பு சேர்த்து, இறக்கவும். ஆறியதும் குழந்தைகளுக்கு ஊட்டவும்.
இந்தக் கஞ்சியை தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
பயன்:
அரிசி, பொரிகடலையில் உள்ள கார்போஹைட்ரேட் சத்துகள், குழந்தைக்குக் கிடைக்கும்.
🥣கேரட் கூழ்:
தேவையானவை:
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
பாசிப்பருப்பு- ஒரு டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
கேரட், உருளைக்கிழங்கு, பருப்பு மூன்றையும் வேகவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து, மதிய நேரத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
பயன்: கேரட்டில் உள்ள 'வைட்டமின் சி' சத்து, குழந்தையின் பார்வைதிறனை அதிகரிக்கும். மேலும் குழந்தைகளுக்கு புரதச்சத்து அதிகரிக்கும்.

🥣கிச்சடி:
தேவையானவை:
அரிசி - 6 கிராம்
பாசிப்பருப்பு - 10 கிராம்
நெய் - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
அரிசியையும் பருப்பையும் சேர்த்து வேகவைக்கவும். இதனை நன்கு மசிக்கவும். பிறகு, அடுப்பில் வாணலி வைத்து, மசித்துள்ள அரிசி, பருப்பு கலவையுடன், நெய், தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கலவை நன்குக் கொதித்ததும் இறக்கிவிடவும். ஆறியதும் குழந்தைக்குக் கொடுக்கவும்.

🥣பப்பாளிக்கூழ்:
தேவையானவை:
பப்பாளி - 100 கிராம்
பால் - சிறிதளவு
செய்முறை:
பப்பாளியைச் சுத்தம்செய்து, பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, தினமும் ஒரு வேளை குழந்தைக்குக் கொடுக்கலாம்.
பயன்: வயிற்றில் உள்ள குடற்பூச்சிகளை அழித்து, குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்

🥣கோதுமை மிக்ஸ்:
தேவையானவை:
கோதுமை - 35 கிராம் (ஆட்டா மா )
பாசிப்பயறு - 20 கிராம்
வேர்க்கடலை - 10 கிராம்
கருப்பட்டி - சிறிதளவு
செய்முறை:
தேவையானவற்றில் கருப்பட்டியைத் தவிர்த்து, மற்ற பொருள்களைச் சுத்தம் செய்து, தனித்தனியே வறுத்துக்கொள்ளவும். பிறகு, வறுத்தவற்றை ஒன்றாகக் கலந்து, கருப்பட்டி சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். இதனை  பசும்பாலுடன்  கலந்து கொடுக்கலாம்.

➡️இணை உணவு கொடுக்க ஆரம்பித்துவிட்டாலும், இரண்டு வயது வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.

நன்றி :விகடன் ஹெல்த் 

என்ன செய்தும் உடல் எடை குறையவில்லையா?



என்ன  செய்தும் எடை குறையவில்லையா? சப்ஜா விதைகளை தினமும் சாப்பிடுங்கள்!

தற்போதைய நவீன காலத்தில் உடல் எடை அதிகரிப்பால் பலர் அவதியுறுகின்றனர். கடைகளில் விற்கும் புட்டிகளில் அடைத்த உணவுகள், குளிர் பானங்கள், பீட்ஸா, பர்கர் ஆகியவை உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணிகளாக உள்ளது. இதனால் சின்ன வயதிலேயே உடல் எடை பிரச்சனை ஏற்படுகிறது.  உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பல்வேறு முறைகளை பின்பற்றியும் எடை குறையவில்லை என வருத்தப்படுகிறீர்களா? இதோ இயற்கையாக கிடைக்கும் சப்ஜா விதைகளை(sabja seeds) பயன்படுத்தி உடல் எடையை (weight loss)விரைவில் குறைக்கலாம்.


சப்ஜா விதைகள்  என்றால் என்ன? (About sabja seeds)
சப்ஜா விதைகள்(sabja seeds) கருப்பு நிறத்தில் எள் போன்று காணப்படும். . இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தற்போது பரவலாக சப்ஜா விதை பயன்படுத்தப்படுகிறது. இது சூப்பர் புட் என்று அங்கு அழைக்கப்படுகிறது. இந்த விதைகள் (seeds) பலூடாக்களில் பயன்படுத்தபடுவதால் இதனை பலூடா விதைகள் (falooda seeds)என்றும் அழைக்கப்படுவதுண்டு. சியா விதைகளும், சப்ஜா விதைகளும் ஓன்று என்ற கருத்து நிலவுகிறது ஆனால் இரண்டும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது. சப்ஜா விதைகள் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும். சியா விதைகள் கருப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது. ஆனால் இரண்டு விதைகளுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

உடல் எடையை குறைக்க (for weight loss)
ஊற வைத்த சப்ஜா விதையை சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். இதனால் அடிக்கடி நொறுக்குத்தீனி சாப்பிடுவது கட்டுக்குள் வைக்கப்படும். மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலை இந்த விதை கொடுக்கும். ஒமேகா 3 அமிலம் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைக்க சப்ஜா விதைகள் பயன்படுத்தப்படுக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் சக்தி இந்த விதைகளுக்கு உண்டு. சப்ஜா விதையில் குறைந்த அளவு எரிசக்திகளே (calories) உள்ளது. ஒரு ஸ்பூன் சப்ஜா விதையில் இரண்டில் இருந்து நான்கு சதவிகித எரிசக்திகள் மட்டுமே உள்ளது. இதனால் தினமும் காலை வெறும் வயிற்றில் சப்ஜா விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை weight loss) கட்டுக்குள் வைப்பதோடு தொப்பையும் குறையும்.


பயன்படுத்தும் முறை (how to use)
சப்ஜா விதையை நீரில் ஊற வைத்து பயன்படுத்த வேண்டும் முதல் நாள் இரவில் ஊற வைத்து பின்னர் அடுத்த நாள் பயன்படுத்தலாம். சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைத்தால் நல்லது. அல்லது வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்தால் போதுமானது. இதில் அதிகளவு பைபர் காணப்படுகிறது. இந்த பைபர் தண்ணீரை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது. தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்று காணப்படும். வழவழப்பாக காணப்படுவதை வெறுதாக விதையை மட்டும் சாப்பிட சிலருக்கு பிடிக்காது அதனால் ஊறிய விதையை லெமன் ஜூஸ், பலூடா மற்றும் நன்னாரி சர்பத்தில் கலந்து குடிக்கலாம்.
!.உடல் மெலிய சாப்பிடுபவர்கள் சீனி சேர்க்க வேண்டாம்.

💎மருத்துவ பயன்கள்

உடல் எடையை குறைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இரவில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

வயிற்றுப்புண் பிரச்சனைக்கு சப்ஜா விதை நல்ல ஒரு மருந்து.

சர்க்கரை நோய்(Diabetes) உள்ளவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
சப்ஜா விதை உடலுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. உடல் சூட்டை குறைத்து நமது உடலை சீரான வெப்பநிலைக்கு கொண்டுவர உதவுகிறது. எனவே இதை கோடைகாலத்தில் மட்டுமல்லாமல் உடல் சூட்டை குறைக்கவும் பயன்படுத்தலாம். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் இதை மதியம் இளநீரில் போட்டு குடிக்கலாம்.

பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியை குறைக்க உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை(LEUCORRHEA) குணப்படுத்த உதவுகிறது.

மூலநோயால்(Hemorrhoids) பாதிக்கப்பட்டவர்கள் இந்த சப்ஜா விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம். மூலநோய்க்கு நல்ல ஒரு மருந்து.

மலச்சிக்கல்(Constipation) நோயால் அவதிப்படுபவர்கள் பாலில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை போட்டு சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், சிறுநீரக எரிச்சல்(Kidney irritation) மற்றும் சிறுநீர் தொற்று(Urinary tract infection) போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

வயிற்று எரிச்சல், வயிற்று பொருமல், வாயு பிரச்சனை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.
உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.
ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்ற உதவுகிறது.

🚫🚫யாரெல்லாம் சாப்பிடக்கூடாது (who do not eat?)
குழந்தைகளுக்கு சப்ஜா விதையை அதிகம்  (sabja seeds) கொடுப்பதை தவிர்க்கலாம்.  கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் வாய்ப்புகள் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க கூடாது. அதே போல் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் செய்ய இருப்பவர்கள் சப்ஜா விதையை தவிர்ப்பது நல்லது. சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் சப்ஜா விதையை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

📍யாருமே ஒரு நாளைக்கு ஒரு தே.கரண்டி க்கு மேல் எடுத்து கொள்ள கூடாது

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...