Wednesday, June 3, 2020

பாசி பயறு தரும் பால் போன்ற வெண்மை முகம், பாட்டி கால பராமரிப்பு, தைரியமா பயன்படுத்துங்க!


ஒரு பொருள் பல பயன் என்பது தான் முன்னோர்களின் சிகிச்சையாக இருந்தது. முகத்துக்கு பாசிபயறு மட்டும்தான் அழகை கொடுப்பதாக பாட்டிகள் நம்பினார்கள். அதனால் அதை மட்டுமே பயன்படுத்தியும் வந்தார்கள். 


ஆனால் இப்போது போன்று அந்த காலத்தில் அழகு படுத்தி கொள்ள க்ரீம் வகையறாக்கள் எதுவும் கிடையாது.
மஞ்சள் அழகும், சற்று கூடுதல் கவனம் செலுத்துபவர்கள் அதனுடன் பாசிப்பருப்பு மாவும் கலந்து பயன்படுத்திவந்தார்கள். 

தற்போது அழகு கலை நிபுணர்களும் பாசிபருப்பை கொண்டு பராமரிப்பு செய்வதையே விரும்புகிறார்கள். இப்போதுபோன்று முகத்தில் இறந்த செல்களை நீக்கவும், சன் டான் நீங்கவும், முகப்பருக்களை வெளியேற்றவும், முகத்தை பளபளப்பாகவும் வைத்திருக்க என்று தனி தனி பொருளெல்லாம் கிடையாது. ஆனால் ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்த பாசிப்பருப்பு ஒன்றே இவை அனைத்தையும் செய்துவிடுகிறது என்பதா
ல் பெரும்பாலும் இயற்கை அழகு கலை நிபுணர்கள் இதையே தேர்வு செய்கிறார்கள்.


💟​முகத்தின் நிறம் மேம்பட

இரண்டு டீஇஸ்பூன் அளவு பாசிப்பயறு இரவில் ஊறவைத்து மறுநாள் அதை மிக்ஸியில் நன்றாக அரைத்துவிடுங்கள். கொரகொரப்பாக இருக்க கூடாது. நன்றாக மைய அரைத்து அதில் கெட்டித்தயிர், 5 துளி பன்னீர் சேர்த்து கலந்து விடுங்கள். இதை முகத்தில் கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழிந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இரண்டு நாளைக்கு ஒருமுறை இப்படி செய்து வந்தால் முகத்தின் நிறம் மேம்படும்.
பாசிப்பருப்பு ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்க உதவுகிறது.

💟​முகத்தை ஈரப்பதமாக்க

கோடையிலும் முகத்தை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு பழங்களை போன்று பாசிப்பயறும் கூட உதவும். சருமத்தில் வறட்சியை கொண்டிருப்பவர்கள் முறையாக இதை செய்துவந்தால் கோடையிலும் குளிர்காலங்களிலும் கூட முகத்தில் ஈரப்பதம் இருக்கும். இதை அனைவருமே செய்யலாம்.
இரண்டு டீஸ்பூன் அளவு பச்சைபயறை காய்ச்சாத பசும்பாலில் ஊறவைத்து மறுநாள் அந்த பாலை கொண்டு அரைக்கவும். மைய அரைக்க வேண்டும் . இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். பாசிப்பருப்பில் இருக்கும் ஊட்டசத்துகள் சருமத்தை ஈரப்பதமாக மென்மையாக வைத்திருக்க உதவுகின்றன.

💟​பருக்களுக்கு தீர்வு

முகத்தில் பருக்கள் வராமல் இருக்காது. பருக்கள் வராமல் தவிர்க்கவும் கூட இதை பயன்படுத்தலாம். 4 டீஸ்பூன் அளவு பாசிப்பயறு ஊறவைத்து அரைத்து அதனுடன் கற்றாழை சாறு 2 டீஸ்பூன் அளவு சேர்க்கவும். இப்போது அதை பேஸ்ட் பதத்துக்கு குழைக்கவும்.
முகத்தில் மசாஜ் போன்று கீழிருந்து மேல் நோக்கி தடவ வேண்டும். பிறகு கைகளால் வட்டவடிவில் மசாஜ் செய்தபடி முகத்துக்கு இலேசாக அழுத்தம் கொடுக்கவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்துவந்தால் முகத்தில் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை முழுவதும் துடைத்து வெளியேற்றுவதால் சருமம் எப்போதும் க்ரீம்கள் இல்லாமலே புத்துணர்ச்சியாக இருக்கும். வாரத்துக்கு இரண்டு முறையாவது இதை பயன்படுத்துங்கள்.

💟​முகத்தில் வளரும் முடிகளை அகற்ற

தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் பொருள்களில் இதற்கும் முக்கிய பங்குண்டு. பாசிப்பயறை ஊறவைத்து பேஸ்ட் போல் அரைக்கவும். அதில் மஞ்சள் தூள், தயிர், எலுமிச்சை தோல் பொடி கலந்து நன்றாக பேஸ்ட் போக் குழைத்து கொள்ளவும். தயிருக்கு பதிலாக பால் சேர்க்கலாம்.
இதை முகத்தில் முடி இருக்கும் இடங்களில் உதடு, தாடை, கீழ் தாடை பகுதியில் தடவி கொள்ளவும். பிறகு அவை நன்றாக உலர்ந்ததும் அதை காயவிட்டு பஞ்சை நீரில் நனைத்து துடைத்து எடுக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி செய்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் கொஞ்சம் நாளில் உதிர்ந்து விடும்.  மேலும் வளராமல் தடுக்கப்படும்.


பச்சை பயறை ஊறவைத்து பயன்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்பவர்கள் மாவாக்கி பயன்படுத்தலாம்.
பச்சைபயறை வாங்கி கல் இல்லாமல் சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து மாவாக்கி பயன்படுத்தலாம்.

 இதனுடன் வெந்தயம் கலந்தால் மேலும் வழவழப்பும் பொலிவும் கூடும். குறிப்பிட்ட ஃபேஸ் பேக் போடும் போது ஒரு டீஸ்பூன் இதையும் சேர்க்கலாம்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...