Thursday, April 23, 2020

மருத்துவ பார்வையில் நோன்பு


மருத்துவ பார்வையில் நோன்பு


முஸ்லிம்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதில் பல மருத்துவ பயன்கள் உள்ளன என்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்கள் யாரும் தாங்கள் இப்படி நோன்பு வைப்பதால் மருத்துவ பயன்கள் அடையவேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது உடம்பை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ நோன்பு பிடிப்பதில்லை... தன் இரட்சகன் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட மணி நேரங்களில் உண்ண, பருக உடலுறவு கொள்ள தடைசெய்து உத்தரவு பிறப்பித்துள்ளான் என்ற கட்டளைக்கு அடிபணிய முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றனர் ..


ஆனால் அவர்களுக்கு இரட்சகனின் கட்டளையை அடிபணிந்த நன்மை முதல் நிலையாக கிடைத்தாலும் இரண்டாம் நிலை பயனாக (secondary benefit )மருத்துவ பயன்களும் கிடைக்கின்றது பொதுவாக மருத்துவத்தில் பட்டினி இருப்பது, உணவு கட்டுப்பாடு கொள்வது எல்லாமே உடல் எடையை குறைக்கவோ அல்லது ஜீரன மண்டலத்திற்கு ஓய்வு அளிக்கவோ அல்லது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவோ மேற்கொள்ளபடுகிறது. 

முழுநேர விரதத்திலும், crash diet எனப்படும் உணவு கட்டுப்பாடு முறைகளிலும் அநேக பக்க விளைவுகள் வரலாம்.
இஸ்லாம் கூறும் நோன்பு என்பது இவைகளை விட முற்றிலும் வித்தியாசமானது. இதில் ஊட்டசத்து குறைபாடு நிலை வந்ததாக இன்று வரை எந்த ஆதாரங்களும் இல்லை. 
முஸ்லிம்கள் ரமலான் மாதம் மேற்கொள்ளும் நோன்பின் போது,( தினமும் ஒவ்வொரு வகையான மனிதன், இவ்வளவு கலோரி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்உள்ளது ), தினம் தேவையான கலோரியை விட சிறுது குறைவாக மட்டும் எடுத்து கொள்ளுகிறார்கள். இதுபோக ரமலான் நோன்பு என்பது ஒவ்வொரு முஸ்லிம்களும் எந்தவித நிர்பந்தமும் இல்லாமல், எந்த மருத்துவர்களாலும் அறிவுருத்தபடாமல், தானாக முன்வந்து மேற்கொள்ளப்படும் கடமை.

ரமலான் மாதம் ஒருவனுக்கு சுய கட்டுப்பாடு மற்றும் சுய பயற்சி அளித்து, அப்படி அளிக்கப்பட்ட கட்டுபாடுகளும், பயிற்சிகளும் அந்த மாதத்திற்கு அப்பாலும் மற்ற காலங்களிலும் தொடரும் நம்பிக்கை தரும் மாதம். ரமலானில் பெற்ற பாடம் அது ஆகாரம் விசயத்திலும் சரி அல்லது நேர்மையிலும் சரி, அந்த மாதத்திற்கு பிறகும் மற்ற காலங்களிலும் பின்பற்றினால், அது ஒரு மனிதனின் வாழ்நாள் பூரா பயன் தரும். மற்ற விரதங்களை விட ராமலான் நோன்பு வேறுபடுவது, ரமலானில் நாம் சூரியன் உதயம் முதல் அஸ்தம் வரை (தோரயமாக ), நம் உண்ணு தல், பருகுதல், உடலுறவு கொள்வதை தவிர்க்கிறோம். இந்த நேரங்களில், நாம் தண்ணீர் அருந்துவதை முழுவதுமாக தவிர்ப்பாதல் உடலுக்கு கேடு உண்டாகும் என்று பலர் நினைக்கின்றனர். உண்மையில் தண்ணீரை முழுவதுமாக தவிர்ப்பதால், உடலில் உள்ள இரத்தம் போன்ற திரவங்கள் மிக அடர்த்தி தன்மை அடைகிறது. இதனால் சிறுது நீர்சத்து குறைவு ஏற்படலாம். ஆனால் மனித உடல், நீர்சத்து குறைவு ஏற்பட்டாலோ அல்லது நீர் அதிகம் ஆனாலோ இயல்பாகவே உடலின் நீரை பராமரிக்கும் பொறிமுறை .(water conservation mechanism )பெற்றுள்ளது.
ஒரு உண்மை என்னவென்றால், சிறுது நீர்சத்து குறைவும் மற்றும் அதனால் உடலில் ஏற்படும் நீரை பராமரிக்கும் தன்மையும் சேர்ந்து. நீண்ட ஆயுளை தரும் வல்லமை உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நோன்பு நோற்பதினால் உடலியல் என்னும் physiological ரீதியான நன்மைகளான, இரத்த சர்க்கரை அளவு கட்டுபடுதல், இரத்தத்தில் உள்ள கொலேஸ்டேரால் குறைதல் மற்றும் இரத்த அழுத்தம் (systolic )குறைதல் ஆகியவை ஏற்படுகிறது. உண்மையில், ரமலான் நோன்பு என்பது, மிதமான லேசான, கட்டுபாட்டில் உள்ள type 2 சர்க்கரை நோய் (இன்சுலினை சார்ந்து இராத சர்க்கரை நோய்), உடல் பருமன மற்றும் இரத்த கொதிப்பு ஆகிய நோய்களுக்கு சிறந்த பரிந்துரையாகும்.
இந்த நோய் உள்ளவர்கள் நோன்பு நோற்கும் முன், தங்களது மருத்துவர்களை ஆலோசித்து உணவு முறை, மாத்திரை சாப்பிடுவது தொடர்பாக ஆலோசனை பெறவேண்டும். (இது பற்றி பிறகு விவரமாக பார்போம் ) 1994 ஆம் ஆண்டு மொரோக்கா தலைநகர் casablanca வில் நடந்த "ஆரோக்கியமும் ரமளானும்" என்ற தலைப்பில் முதல் சர்வதேச கூட்டமைப்பு அமர்வு நடந்தது. 

அதில் உலகம் முழுவதில் இருந்தும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ நெறிமுறையில் ரமலான் பற்றி சுமார் 50 ஆராய்ச்சி படைப்புகளை சமர்பித்தனர். எல்லா ஆய்வுகளும் ரமலான் நோன்பால் பல மருத்துவ நோய்களின் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி இருந்தது. இதில் எந்த ஆய்விலும் நோன்பால் நோயாளியின் ஆரோக்கியம் மற்றும் அடிப்படை மருத்துவ இயல்பு நிலை (baseline medical condition ) பாதிப்பு அடைந்தாக, முடிவு இல்லவே இல்லை. எனினும் மிக மோசமான, கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோயாளிகள், இன்சுலின் போடும் சர்க்கரை நோயாளிகள், இதய இரத்தக்குழாய் அடைப்பு நோய் (ஹார்ட் அட்டாக் ) நோயாளிகள், கிட்னி கல் உள்ள நோயாளிகள் நோன்பை தவிர்க்கும்போடி அறிவுறுத்தியது.


இந்த நோன்பால் உளவியல் ரீதியான நன்மைகளும் உண்டு. நோன்பு நோற்கும் போது மன அமைதியும், சாந்தியும் கிடைக்கிறது (peace and tranquility ). தனிப்பட்ட விரோதம் (personal hostility ) மற்றும் குற்ற விகிதங்கள் (crime rates ) குறைகிறது. ஏனெலில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் "ஒருவன் உன்மீது அவதூறு கூறினால் அல்லது அத்துமீறினால், நீ கூறு 'நான் நோன்பு நோற்றுள்ளேன்' என்று". நோன்பினால் உளவியல் ரீதியான முன்னேற்றம் கிடைக்க காரணம், இரத்தத்தில் சர்க்கரை அளவு நல்லமுறையில் கட்டுபடுவதால். நோன்பு காலங்களில் இரவில் உபரியாக தொழுவாதல், சில நன்மைகள் கிடைக்கின்றன.


இது நோன்பு திறந்த பின்னர் உட்கொண்ட உணவு நல்ல முறையில் ஜீரணித்து, உடல் அதை உபயோக்கிக்கவும், அதனால் உண்டான அதிக கலோரி எரிக்கபடவும் உதவுகிறது. ஒரு ஆய்வு முடிவு படி, ஒவ்வொரு ரக்அத் தொழுகையும் 10 கூடுதல் கலோரிகளை நீக்குகிறது நாம் தொழுவது உடற்பயிற்சிக்காக இல்லை என்றாலும், தொழுவதன் மூலம், கூடுதல் கலோரி எரிவதுடன், மூட்டுகளுக்கு மிதமான அசைவு கிடைப்பதால், இது நல்ல படியான உடல்பயிற்சியாக அமைகிறது ரமலானில் அதிகமாக குர்ஆன் ஓதும் நடைமுறை உள்ளது. குர் ஆன் ஓதுவதால் மன அமைதி கிடைப்பதோடு, ஞாபக சக்தி அதிகரிக்கிறது. ஆகவே முஸ்லிம் நோயாளிகள் தங்கள் மருத்துவரின் மேற்பார்வையில் நோன்பு நோற்பதை மருத்துவ அறிவியல் ஊக்க்படுத்துகிறது. ஆரோக்கியமான வயது வந்த முஸ்லிம்கள், நோன்பினால் வலுவிழந்து போவோம் என்று என்ன வேண்டாம் மாறாக நோன்பு ஆரோக்கியத்தையும், சகிப்புதன்மையையும் மேம்படுத்துகிறது

மருத்துவ நெறியின் பார்வையில் - ரமலான் நோன்பு - டாக்டர் த முஹம்மது கிஸார்.(இந்தியா )

பிறந்த குழந்தைக்கு குளியல் பொடி, என்னவெல்லாம் சேர்த்தா சருமம் பட்டுபோல் இருக்கும்

பிறந்த குழந்தைக்கு குளியல் பொடி, என்னவெல்லாம் சேர்த்தா சருமம் பட்டுபோல் இருக்கும்

பிறந்த குழந்தைக்கு பேபி சோப்பு, பேபி ஆயில், பேபி ஷாம்பு இவையெல்லாம் விட சிறந்தது வீட்டில் தயாரிக்கும் மூலிகை குளியல் 


குளியல் பொடி தயாரிக்க

குளியல் பொடி தயாரிக்க


ஹைலைட்ஸ்:

  • குழந்தையை குளிப்பாட்டும் போது இந்த பொடியை நன்றாக தேய்த்து உடல் முழுக்க பூசி குளிப்பாட்டுங்கள்.
  • குழந்தையின் நிறம் கூடுதலாக ஜொலிக்கவும், பளபளப்பாக்கவும் செய்கின்றன. பட்டுபோன்ற சருமத்தையும் ..
பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது என்ன பொருள் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மிருதுவான சோப்பாக இருந்தாலும் அதை விட மென்மையான குழந்தையின் சருமத்துக்கு அவை ஒவ்வாமையை உண்டாக்காமலும் இருக்க வேண்டும். சிறிதளவே இரசாயனங்கள் இருந்தாலும் கூட அவை குழந்தையின் சருமத்தை பாதிக்க செய்யும்.

குழந்தையின் சருமத்தை பாதுகாக்க ஒரே வழி முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை குளியல் பொடிதான். இவை குழந்தையின் பட்டுபோன்ற சருமத்துக்கு எந்தவிதமான பாதிப்பையும் உண்டாக்காது. அதோடு குழந்தையின் சருமம் பட்டுபோன்று வழவழப்பாக மென்மையாகவும் இருக்கும்.

இயற்கை பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை பொடியை நீங்களே தயாரிக்கலாம். எப்படி என்று பார்க்கலாமா?
மூலிகை பொடிக்கு தேவையான பொருள்கள்:

பாசிப்பயறு - 250 கிராம்,
வேப்பிலை, துளசி- தலா 25 கிராம்,
வெந்தயம்- 25 கிராம்,
ஆவாரம்பூ - ஒரு கைப்பிடி,
எலுமிச்சை தோல்- 20 எண்ணிக்கை அளவு,
சந்தனம்- 50 கிராம்,
கஸ்தூரி மஞ்சள் - எண்ணிக்கை 10,
பன்னீர் ரோஜா இதழ்- 100 கிராம்,
வெட்டிவேர்- சிறிதளவு,’
மகிழம்பூ- 10 கிராம்,
பூந்தி கொட்டை - 5
பச்சை அரிசி- ஒரு கைப்பிடி.

கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் தனித்தனியாக உலர்த்தவும். பருப்பு வகைகளை தனியாகவும். இலைகளை பூவிதழ்களை தனியாகவும் காயவைத்து சேகரிக்கவும்.

வசம்பு : பிறந்த குழந்தைக்கு கொடுக்கலாமா? வேண்டாமா?அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..

எலுமிச்சை தோலை சாறு நீக்காமல் நறுக்கி அப்படியே காயவிடவும். பச்சை அரிசியை காயவைக்க வேண்டியதில்லை. வேப்பிலையை காம்பு நீக்கி கொள்ளுங்கள். துளசி இலையையும் உலர்த்தி கொள்ளுங்கள். இவை நொறுக்கும் அளவு காயவேண்டும். பிறகு இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து நைஸாக அரைத்துகொள்ளுங்கள்.
பன்னீர் ரோஜா இதழ்- 100 கிராம்,
வெட்டிவேர்- சிறிதளவு,’
மகிழம்பூ- 10 கிராம்,
பூந்தி கொட்டை - 5
பச்சை அரிசி- ஒரு கைப்பிடி.

கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் தனித்தனியாக உலர்த்தவும். பருப்பு வகைகளை தனியாகவும். இலைகளை பூவிதழ்களை தனியாகவும் காயவைத்து சேகரிக்கவும்.

வசம்பு : பிறந்த குழந்தைக்கு கொடுக்கலாமா? வேண்டாமா?அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..

எலுமிச்சை தோலை சாறு நீக்காமல் நறுக்கி அப்படியே காயவிடவும். பச்சை அரிசியை காயவைக்க வேண்டியதில்லை. வேப்பிலையை காம்பு நீக்கி கொள்ளுங்கள். துளசி இலையையும் உலர்த்தி கொள்ளுங்கள். இவை நொறுக்கும் அளவு காயவேண்டும். பிறகு இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து நைஸாக அரைத்துகொள்ளுங்கள்.

பாலுடன் தேன் கலந்து குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?

பாலுடன் தேன் கலந்து குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?

பொதுவாக குழந்தைகளுக்குக் கூட பாலில் தேன் கலந்து கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படி பாலுடன் தேன் அருந்துவதால் உடலில் என்னன்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் அதனால் ஏற்படக் கூடிய நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும் பார்ப்போம்.

samayam tamil

பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் நன்மையா தீமையா? தேன் மற்றும் பால் என்பது ஒரு சிறந்த சேர்க்கையாகும், இது பெரும்பாலும் நீர் பானம் மற்றும் இனிப்பு வகைகளில் ஒரே மாதிரியாக இடம்பெறும். நம்பமுடியாத அளவிற்கு அமைதியான தூக்கமும் மற்றும் உள்ளம் அமைதியையும் தரும்.இரவில் வெதுவெதுப்பான பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்மேலும்,பால் மற்றும் தேனை ஆராய்ந்தால் அதில் அதிகமாக மருத்துவ குணங்களுகள் இருக்கிறது, மேலும் அவை பலவிதமான சுகாதார நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க இயற்கையான மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. இதில் தேன் மற்றும் பால் கலவையினால் ஏற்படும் நன்மைகளும் மற்றும் அதனின் குறைகளைப் பற்றி விமர்சிக்கலாம்.

நல்ல தூக்கம்

samayam tamil


தேனுடன் பால் சேர்த்துக் குடிப்பதால் பல ஆற்றல் வளம் மிக்க ஆரோக்கியமான நன்மைகளை தருகிறது. நிம்மதியான தூக்கத்தை தரச் சிறந்தது.
இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலுடன் தேன் கலந்து குடிப்பதன் மூலம், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். மேலும் இது சிறந்த தீர்வு என்று அறிவியல் ஆராய்ச்சியில் ஆதரிக்கப்படுகிறது.
மேலும், பல ஆய்வுகளில் பால் மற்றும் தேன் இரண்டும் தனித்தனியாக குடித்து வந்தாலும் தூக்கத்தை அதிகமாக்கும் என்று குறிப்பிட்டுள்ளன.

இரவு நேர இருமல்

samayam tamil

எடுத்துக்காட்டாக, ஒரு ஆய்வில், தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் 10 கிராம் அல்லது 1/2 தேக்கரண்டி தேனை உட்கொள்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது மேலும் சுவாச நோய்த்தொற்றுடைய குழந்தைகளின் இரவுநேர இருமலைக் கட்டுப்பட்டுத்துகிறது.
இதேபோல்,ஒரு ஆய்வில் 421 வயதான பெரியவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களை தவறாமல் உட்கொள்பவர்களுக்கு தூங்குவதில் சிரமம் குறைவாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

எலும்புகளின் வலிமை

samayam tamil

நம் உடலில் உள்ள எலும்புகளின் வலிமையை ஆதரிக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கால்சியத்தின் சிறந்த மூலமாகும் பால் விளங்குகிறது.
தினமும் பால் குடிப்பதால் எலும்பு தாது அடர்த்தியை மேம்படுத்துகிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகளின் ஆபத்துகள் ஏற்படுவது குறைகிறது என்று சில ஆராய்ச்சியில் கூறுகிறார்கள். பாலை தேனுடன் கலந்து குடித்து வர எலும்புகளை உருவாக்கும் நன்மைகளை இன்னும் அதிகரிக்கும்.
உண்மையில், தேன் அதன் ஆண்டிஆஸிடண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளினால் நம் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவித்தது.
ஒன்பது ஆய்வுகளின் மற்றொரு ஆய்வு, தேன் அதிகமாக சேர்த்துக் கொண்டால் எலும்பு உருவாக்கம் அதிகரிக்கும் போது, உடற்பயிற்சியுடன் தொடர்புடைய சில எதிர்மறை விளைவுகளைக் குறைக்கிறது என்று ஆய்வில் கூறுகிறார்கள்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த


samayam tamil

இதய ஆரோக்கியத்திற்கு பால் மற்றும் தேன் பல சாத்தியமான நன்மைகளை தருகிறது.
குறிப்பாக பால் அருந்துவதால் நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்கிறது இதனால் இதயத் தமனிகளில் உள்ள பிளேக்குகள்(plaque)அழித்து இதய நோய்க்கு எதிராக செயல்படுகிறது.இது ஸ்கீம் பாலைத் தவிர அனைத்து வித பாலிற்கும் இது பொருந்தும்.
இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது ஆகையால் உயர் இரத்த அழுத்த நோயை குறைக்க உதவுகிறது.
இதற்கிடையில், தேன் ட்ரைகிளிசரைடுகள், மொத்த கொழுப்பு மற்றும் எல்.டி.எல் (மோசமான) கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றது இவை அனைத்தும் இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் ஆகும்.
இது அழற்சியின் பல குறிப்பான்களைக் குறைக்கவும் உதவுகிறது.இது இதய நோயை தடுப்பதற்கான பங்களிப்பாகும்.

பாலுடன் தேன் சேர்ப்பதால் ஏற்படும் தீமைகள்

samayam tamil

பால் மற்றும் தேன் பல ஆரோக்கியமான நன்மைகளை வழங்கக்கூடும் என்றாலும், நம் கருத்தில் கொள்ள வேண்டிய சில குறைபாடுகளும் உள்ளன.
பாலால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் பிடிக்கவில்லை என்றாலும்,பால் குடித்தாலே அலர்ஜி ஏற்படும் என்றாலும், லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தாலும் உங்களுக்கு பசும் பால் பொருத்தமாகாது.
பால் அருந்துவதால் முகப்பரு, ரோசாசியா மற்றும் அரிக்கும் தோலழற்சி உள்ளிட்ட சில தோல் நோய்கள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

அதிக எடையும் நீரிழிவும்

samayam tamil



தேனில் ஆரோக்கிய பண்புகள் இருந்தாலும், அதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதிக அளவு சர்க்கரை உட்கொள்வதால் எடை அதிகரிப்பு, இதய நோய், நீரிழிவு மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
12 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தேன் பொருத்தமற்றது, ஏனெனில் இது குழந்தைகளின் தாவரவியலுக்கு பங்களிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது, இது ஒரு தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலை உருவாக்கும்
மேலும்,அதிக வெப்பநிலையில் தேனை சூடாக்குவது ஹைட்ராக்ஸிமெதில்ஃபர்ஃபுரல் (எச்.எம்.எஃப்) உருவாவதை அதிகரிக்கும், இதனை அதிக அளவில் உட்கொள்ளும்போது ஆரோக்கியத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
எனவே, நீங்கள் தேனை உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்,மற்றும் அதிக வெப்பநிலையில் சூடேத்துவதையும் தவிர்ப்பது சிறந்தது.

நோன்பு: ஆரோக்கியமாக வரவேற்போம்.


நோன்பு கால ஆரோக்கியம்


வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம்.
இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.

நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம்.
ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம்.
ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.

இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும்.

ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.

எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் அதிக  சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது.
இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.

ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது.
வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.
இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.
மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும்.
முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.

📍📍📍நோன்பும் சில முதல் உதவிகளும்
மயக்கம் :
நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

தலைவலி :
கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.


-டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...