Sunday, September 13, 2020

தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும்…. முகத்தில் சுருக்கங்களே இல்லாமல் இளமையாக இருக்கலாம் தெரியுமா????




நமக்கு வயதான தோற்றத்தை தர ஆரம்பிப்பது முதலில் நம் முகத்தில் தோன்றும் சுருக்கங்களும், கோடுகளும் தான். இது போன்ற அறிகுறிகளை உங்களுக்கு உள்ளதா… கவலை வேண்டாம். அதனை சரி செய்ய வேண்டிய சரியான நேரம் இது. கடைகளில் விற்கப்படும் கிரீம்களை பயன்படுத்தும் போது முதலில் அது நமக்கு நன்மை அளிப்பது போல தெரிந்தாலும் அந்த கிரீம்களில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் நம் சருமத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே இயற்கையான முறையில் இதனை சரி செய்வது தான் நமக்கு நல்லது. நம் வீட்டில் எளிதாக கிடைக்கும் தேங்காய் எண்ணெயை கொண்டு தான் நம் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்க இருக்கிறோம். ஆச்சரியமாக உள்ளதா…??? ஆம் தேங்காய் எண்ணெயில் உள்ள எக்கச்சக்க ஊட்டச்சத்துக்கள் சருமத்தை அழகாக்குவதோடு சுருக்கங்களையும் குறைக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் கொண்ட தேங்காய் எண்ணெய் ஃப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளை போக்க வல்லது. சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து இளைமையான தோற்றத்தை தருகிறது. தேங்காய் எண்ணெயுடன் எதனை சேர்த்து பயன்படுத்தினால் மேற்கூறிய பலன்களை பெறலாம் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

■மஞ்சள் தூளோடு தேங்காய் எண்ணெய்:




ஒரு பவுலில் தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளுங்கள். இதனோடு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் காய விடுங்கள். பிறகு நன்றாக கழுவி விடலாம். நல்ல பலன் கிடைக்க இதனை தினமும் செய்ய வேண்டும்.

■பால், எலுமிச்சை சாற்றோடு தேங்காய் எண்ணெய்:

அடுப்பில் ஒரு தேக்கரண்டி அளவு பாலை காய்ச்சுங்கள். அதில் ஓரிரு துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து பால் திரிந்து வரும்வரை கொதிக்கட்டும். இப்போது ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். இது ஆறிய பிறகு முகத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வர வேண்டும்.

■விளக்கெண்ணெயோடு தேங்காய் எண்ணெய்:


ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ளவும். இதனை நல்ல தாராளமாக எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் இதனை அப்படியே விட்டு விட்டு காலை எழுந்தவுடன் முகத்தை கழுவி கொள்ளலாம். சுருக்கங்கள் மறைய இவ்வாறு தினமும் செய்ய வேண்டும்.

      


முடி வளர என்னென்னவோ செஞ்சிருக்கோம், இத கவனிக்கலையே....





தலைமுடியை கவனிப்பது நமக்கு இயல்பாகவே வர வேண்டும். இதற்காக நீங்கள் அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் தலைமுடியின் தன்மை மற்றும் அமைப்பு உங்களுக்கு புரியவில்லை என்றால், அதற்கு சரியான தீர்வை கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலான மக்கள் முடியின் அடர்த்தியைப் பெருக்க, பொடுகுத் தன்மையைக் குறைக்க, தலைமுடியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்த வெவ்வேறு விஷயங்களை முயற்சிப்பார்கள். ஆனால் அவர்கள் மறக்கும் ஒரு விஷயம் சீப்பு.



இதை நீங்கள் நம்பினாலும் சரி, இல்லையென்றாலும் சரி மர சீப்புகள் வழக்கமான பிளாஸ்டிக் பொருட்களை விட சிறந்ததாக கருதப்படுகின்றன. பிளாஸ்டிக் சீப்பு அதிக உடைப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனால் மர சீப்பு நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது. அது குறித்து இங்கே விரிவாகப் பதிவிடுகிறோம்.


ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்




மர சீப்புகள் பெரும்பாலும் லேசான எடைக் கொண்டவை. மென்மையான முட்கள் கொண்ட, அவை உச்சந்தலையில் சேதத்தை குறைக்கும். இதனால்  இரத்த ஓட்டத்தை மேம்படும். இதனால் முடியின் தரமும் மேம்படும். அதோடு இயற்கையாகவே எண்ணெயை உற்பத்தி செய்து, உச்சந்தலையில் வறட்சி மற்றும் நமைச்சலை நீக்கும்.


குறைவான முடி உதிர்தல்

மர சீப்புகள் முடி உடைவதைத் தடுக்கலாம். நீங்கள் ஏற்கனவே முடியை இழந்து, பல சிக்கல்களைச் சந்திக்கும்போது, மர சீப்பு நன்மை பயக்கும். இது முடி பலவீனமடைவதையும் தடுக்கும். உங்கள் தலைமுடி ஈரமாக இருந்தாலும்,  உலர்ந்து இருந்தாலும், தலைமுடியை இழுக்காமல், மென்மையாக வாரும்.


பொடுகு தொல்லை குறையும்

பொடுகு பிரச்னை பலருக்கும் இருக்கும் பொதுவான முடி பாதிப்பு. முன்னர் குறிப்பிட்டபடி, மர சீப்பு இயற்கையாக எண்ணெய் பசையை உற்பத்தி செய்யும். இதன் விளைவாக உச்சந்தலை வறண்டு போகாமல் இருக்கும்.  கூர்மையான பல் கொண்ட சீப்புகள், பிளாஸ்டிக் போன்றவை உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் மர சீப்பு பயன்படுத்த மென்மையானது, மேலும் இது முடி உடைவு மற்றும் உச்சந்தலையில் வெட்டுக்களை ஏற்படுத்த வாய்ப்பில்லை. பொடுகு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு பெரிதும் உதவும்.


சருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் பயன்படுத்தலாம்




 மஞ்சள் ஒரு கிருமிநாசினி பொருள் என்று நம் அனைவருக்கும் தெரியும். பெண்கள் தினமும் சாதாரண மஞ்சளை சருமத்தில் பூசுவதற்கு பதில், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் சரும அழகை அதிகரிக்கும்,வெறும் மஞ்சளை பூசுவதற்கு பதில் கஸ்தூரி மஞ்சளுடன் சில பொருட்களை கலந்து சருமத்திற்கு பயன்படுத்திவதினால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும். இந்த பதிவில் சருமத்திற்கு அழகு தரும் கஸ்தூரி மஞ்சள் ஃபேஸ் பேக் சிலவற்றை பதிவு செய்துள்ளோம். சரி வாங்க அவற்றையெல்லாம் இப்பொழுது படித்து பயன் பெறுவோம்.

➡️ஒரு பவுலை எடுத்து எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பால், ஒரு சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையினை சருமத்தில் இப்பொழுது அப்ளை செய்து நன்றாக காயவிடுங்கள், பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பால், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேன் இவை மூன்று சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்குவதுடன், இயற்கையான முறையில் சருமத்தை என்றும் பளிச்சென்று வைத்து கொள்ளும்.


➡️அடுத்ததாக நாம் சருமத்தில் ஸ்க்ரப்பிங் செய்ய போகிறோம், இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு தேக்கரண்டி வெள்ளை சக்கரை, 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது ஸ்க்ரப்பர் தயாராகிவிட்டது, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள் பின் 5 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களுக்கு புத்துயிர் அளிப்பதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும்

.தேங்காய் எண்ணெய் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சருமத்தை மென்மையாகவும், பொலிவுடனும் வைத்து கொள்ளும்.

அடுத்ததாக  ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், 1 சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் இரண்டு வைட்டமின் ஈ மாத்திரையை பிழிந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் இந்த கலவையை சருமத்தில் நன்கு அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள் அதாவது 10 முதல் 15 நிமிடங்கள் வரை சருமத்தை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.முகத்திற்கு இவ்வாறு மசாஜ் செய்வதினால் சரும செல்கள் புத்துணர்ச்சியாக காணப்படும், மேலும் முகப்பருவினால் ஏற்படும் கரும் புள்ளிகள் மற்றும் கரும்திட்டுகள், சரும வறட்சி நீங்கி சருமம் பட்டுப்போல் ஒளிரும்.


➡️இறுதியாக நாம் சருமத்திற்கு இயற்கையான முறையில் ஃபேஷ் பேக் தயார் செய்ய போகிறோம், இதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள்.அவற்றில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் ஆகியவற்றில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது ஃபேஷ் பேக் தயார் இந்த ஃபேஸ் பேக்கினை முகத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் கழுத்து பகுதியிலும் நன்றாக அப்ளை செய்யுங்கள் பின்பு 30 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையினை வாரத்தில் ஒரு முறை செய்து வரலாம், முகத்திற்கு இது போன்று அடிக்கடி பேசியல் செய்வதினால் முகம் வெள்ளையாகவும், மென்மையாகவும், முகம் வசீகரமாக காணப்படும்.

வைட்டமின் இ ஆயில்.. வயசு தெரியாதாம் ... தோல் சுருக்கமும் விழாதாம்..

 




சிலருக்கு முகம் இயல்பாகவோ சொரசொரப்பாகவோ அல்லது கடினமாகவோ இருக்கும். இவர்கள் பல பராமரிப்பு முறைகளையும் பலவித மான க்ரீம்களையும் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்த மென்மையான சருமத்தை பெறுவது சந்தேகம் தான். ஆனால் இவர்கள் வைட்டமின் இ ஆயிலை பயன்படுத்தினால் நினைத்தது போன்று சருமத்தை விரைவாக நிரந்தரமாக மென்மையாக்க முடியும். அவை தவிர இதை எதற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்.

​வைட்டமின் இ ஆயில்




வைட்டமின் இ எண்ணெய் மாத்திரை வடிவில் கடைகளில் கிடைக்கும். இதை மாதம் ஒரு முறை மொத்தமாக வாங்கி வைத்துகொள்ளுங்கள். தினமும் இதை பயன்படுத்தி வந்தால் சருமத்துக்கு மிகவும் நல்லது என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள்.

இந்த வைட்டமின் இ ஆயிலை கொண்டு சருமத்தை மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தில் சுருக்கம் விழுவதை தள்ளி போட முடியும். சருமத்தில் இருக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். முகத்துக்கு இயல்பான இரத்த ஓட்டம் சீராக கிடைக்கும் முகம் பொலிவாகவும் இருக்கும். இன்று இளவயதிலேயே அதிகப்படியான மேக்கப் சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் வெகு விரைவில் இந்த வயதான தோற்றத்தை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் இந்த வைட்டமின் இ ஆயில் மசாஜ் நல்ல பலனை தரும்.

​​➡️சருமத்துக்கு பொலிவு

சருமம் பொலிவாகவும் அழகாகவும் இருக்க சருமத்தில் எண்ணெய் சத்து இருக்க வேண்டும் . ஆனால் போதுமான எண்ணெய் சத்து இல்லாமல் சருமம் வறண்டு விடுகிறது அல்லது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருக்கிறது. இவை இரண்டுமே போதுமான பொலிவை சருமத்துக்கு தராது. ஆனால் வைட்டமின் இ ஆயில் கொண்டு மசாஜ் செய்யும் போது அவற்றில் இருக்கும் சத்துகள் சரும துவாரங்கள் வழியாக உள் சென்று நன்மைபயக்கிறது.

சருமத்துக்கு மட்டும் தான் இந்த வைட்டமின் இ ஆயில் என்பதில்லை. பளபளப்பான கூந்தலுக்கும் சருமத்தில் உண்டாகக்கூடிய தழும்புகளை மறைக்கவும் இவை உதவுகிறது. தற்போது கடைகளில் மாத்திரை வடிவில் வைட்டமின் இ ஆயில் கிடைக்கிறது.

​​➡️மாய்சுரைசர்

தினமும் குளித்து முடித்ததும் பொதுவாக மாய்சுரைசர் தடவுவோம். ஆனால் அதற்கு மாற்றாக வைட் டமின் இ ஆயிலை தடவி வரலாம். குறைந்த நாட்களில் இவை சருமத்திற்குள் சென்று சருமத்தை மிருதுவாக மாற்றுகிறது.சில அழகு க்ரீம்களை அந்தந்த காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண் டும். ஆனால் வைட்டமின் இ ஆயில் அப்படியானதல்ல. எல்லா காலங்களிலும் இதை பயன்படுத்த லாம். மேலும் க்ரீம்களை உடல் முழுக்க பயன்படுத்த மாட்டோம். ஆனால் இந்த வைட்டமின் இ ஆயிலை உடல் முழுவதும் பயன்படுத்தலாம். முகத்தில் இரவு நேரத்தில் மசாஜ் செய்து படுக்கலாம்.

➡️➡️​என்னென்ன பலன்கள் பெறலாம்

சாதாரணமாக புருவத்தின் அடர்த்தி அதிகரிக்க புருவத்துக்கு மசாஜ் செய்ய சொல்வார்கள். அதற்கு இந்த வைட்டமின் இ ஆயில் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். இதனால் புருவங்கள் அடர்ந்து வள ரும். கண்களுக்கு கீழ் வரும் கருவளையத்தால் சருமத்தில் கடினத்தன்மை கூடும். கருவளையத்துக் கான பராமரிப்பு எதைசெய்தாலும் அது முடிந்தவுடன் இந்த ஆயில் கொண்டு மசாஜ் செய்து விடுங்கள்.

வயிற்றில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க் கர்ப்பக்காலத்திலும் பிரசவக்காலத்திற்கு பிறகும் வருவதுண்டு. சிலருக்கு உடல் எடை அதிகரித்து எடை குறைப்பில் ஈடுபடும் போது உடலில் ஸ்ட்ரெச் மார்க் வரு வதுண்டு. தினமும் அந்த இடத்தில் வைட்டமின் இ ஆயில் தடவி வந்தால் நாளடைவில் அந்த தழும்புகள் நீங்கும்.

​சரும சுருக்கத்தை தள்ளி போட
இதற்குதான் நாம் வைட்டமின் இ ஆயில் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள் தோல் மருத்துவர்கள். மேக்கப் போட்டவர்கள் தினமும் படுக்கும் போது மேக்கப்பை கலைத்துவிட வேண் டும் என்று சொல்வார்கள். ஆனால் என்னதான் மேக்கப்கலைத்தாலும் அதன் நிறம் ஆங்காங்கே கருமையாக படர்ந்திருக்கும். இவர்கள் மேக்கப் கலைக்கும் போது எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து பிறகு முகத்தை கழுவி துடைத்தால் மேக்கப் சுத்தமாக துடைக்கப்பட்டிருக்கும்.

அதிக மேக்கப் போட்டால் சருமம் தளர்ந்து விரைவில் வயதான தோற்றம் உண்டாகும் என்று சொல் வார்கள். அதை தாண்டி இயல்பாகவே உணவில் போதிய சத்தின்மையால் சருமங்கள் சுருக்கம் அடைகிறது. தினமும் வைட்டமின் இ ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தை இள மையாகவும் மென்மையாகவும் வைத்திருக்கலாம்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...