Thursday, April 30, 2020

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை இயற்கையாக நீக்க



முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க சிறந்த டிப்ஸ்.


எல்லா பெண்களுக்கும் அழகான பொலிவான முகம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். முகத்தில் உள்ள முடியால் முகத்தின் பிரகாசம் சிறிது குறையும். அந்த முடிகளை நீக்க வாக்ஸிங், த்ரெட்டிங் எல்லாம் தற்காலிக தீர்வு அதனால் முடி இன்னும் திடமாக வளர கூடும்.


வீட்டிலே எளிமையாக சமையல் பொருள்களை வைத்து எப்படி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கலாம் என்று பார்க்கலாம்.

💟எலுமிச்சை மற்றும் தேன்
2 தேக்கரண்டி எலுமிச்சைசாறு, 2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை சூடுபடுத்தவும்.
பின்னர் ஆறவைத்து, கலவையை மிதமான சூட்டில் முடி அகற்ற வேண்டிய பகுதியில் தடவவும்.
வாக்ஸிங் ஸ்ட்ரிப் அல்லது ஓர் காட்டன் துணியால் ஒட்டி முடி வளரும் திசைக்கு எதிர்திசையில் இழுக்கவும்.
இதை வாரத்தில் இருமுறை செய்யலாம்.

💟மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர்
மஞ்சள்பொடி மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை சூடுபடுத்தவும்.
பின்னர் கலவையை முடி அகற்ற வேண்டிய பகுதியில் தடவவும்.
15 -30 நிமிடம் அப்படியே உலரவிடவும்.
பின்னர் மிதமான சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இதை வாரத்தில் 3 முறை செய்யலாம்

💟முட்டை வெள்ளைகரு மற்றும் சோளமாவு (Corn Starch)
முட்டையில் இருந்து வெள்ளை கருவை பிரித்து எடுக்க வேண்டும்.
பின்னர் சோளமாவு (Corn Starch) மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் கலவையை முடி அகற்ற வேண்டிய பகுதியில் தடவவும்.
20 -25 நிமிடம் அப்படியே உலரவிட உரித்து எடுக்க வேண்டும்.
உரித்து எடுக்கும் பொது தேவையற்ற முடிகள் அதோடு வந்து விடும்.
வாரத்தில் 2-3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

💟பப்பாளி மற்றும்  மஞ்சள்
சிறிது பப்பாளிதுண்டை எடுத்து அரைத்து கூழாக்கி கொள்ளவும்.
பின்னர் அதில் சிறிது மஞ்சள்பொடி சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
15 – 20 நிமிடம் நன்கு மசாஜ் செய்யவும்.
பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும்.
வாரத்தில் 2-3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

💟சர்க்கரை மற்றும் எலுமிச்சைசாறு
எலுமிச்சைசாறு, சர்க்கரை மற்றும் சிறுது நீர் சேர்த்து சூடாக்கவும்.
பின்னர் ஆற வைத்து மிதமான சூட்டில் முகத்தில் தடவவும்.
20 நிமிடம் அப்படியே உலர விட வேண்டும்.
பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும்.
கழுவிய பின்னர் கைவிரல்களால் வட்ட வடிவில் முகத்தில் மசாஜ் செய்யவும்.
வாரத்தில் 2 முறை செய்தால் 3 வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

தர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்...


தவிர்க்க எளிய வழிகள்!

பேசுபவர், கேட்பவர் இருவருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது வாய் துர்நாற்றம். நெருங்கிப் பழகுகிறவர்களே சொல்லத் தயங்கும் பிரச்னை;
நெருக்கமானவர்களை முகம் சுளிக்கவைக்கும் சங்கடம். இந்தப் பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால்,  தகுந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், இதைக் கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் முடியும்.

வாய் துர்நாற்றத்துக்கு என்ன காரணம்?
💎வறளும் வாய்
வாய் அடிக்கடி வறண்டு போவது `க்சீரோஸ்டோமியா’ (Xerostomia) என்று அழைக்கப்படுகிறது. இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்கும். தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருத்தல், புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவை வாய் வறண்டு போவதற்கான காரணங்களாகும்.
💎உணவுகள்
பூண்டு, வெங்காயம் போன்ற உணவு வகைகளில் மணமுள்ள சல்ஃபர் உள்ளது. பால், இறைச்சி, மீன் போன்றவற்றில் அடர்த்தியான புரதம் உள்ளது. இவை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன. காபி, ஜூஸ், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவையும் இந்த பாக்டீரியாக்கள் உருவாகக் காரணமாகின்றன.
💎பல் பராமரிப்பின்மை
இறந்த செல்களை தோல் தானாகவே வெளியேற்றுவதுபோல், பல்லால் வெளியேற்ற இயலாது. பல்லை தினமும் சுத்தம் செய்வதன் மூலம் மட்டுமே பாக்டீரியாக்களை வெளியேற்ற முடியும். பல் பராமரிப்பில் கவனக்குறைவாக இருந்தால், வெளியேற்றப்படாத பாக்டீரியாக்கள் பல்லின் மேல் படலமாகப் படிந்துவிடும். இது `பற்காரை’ எனப்படும். இதுதான் துர்நாற்றத்துக்கு காரணமாக அமையும்.
💎நோய்கள்
சிறுநீரக நோய்கள்,  நுரையீரல் நோய்கள், கல்லீரல் நோய்கள், புற்றுநோய், சர்க்கரைநோய் பிரச்னைகள் இருப்பவர்களின் வாய் சீக்கிரம் வறண்டு போகும். எனவே இவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை ஏற்படும். நோய்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்துகளின் காரணமாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

🌐🌐துர்நாற்றம் போக்க என்ன வழி?
தண்ணீர்
போதுமான அளவு தண்ணீர் குடித்தால், வாய் வறண்டுபோவதைத் தடுக்க முடியும். 
வாயில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களும் உணவுத் துகள்களும் வாய் துர்நாற்றத்துக்கான முதன்மைக் காரணங்களாகும். போதுமான அளவுக்குத் தண்ணீர் குடித்தால், இவை வாயிலிருந்து வெளியேற்றப்படும்.
புகைபிடிப்பதைக் கைவிடுதல்
சிகரெட், புகையிலை சார்ந்த பொருள்கள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். புகையிலைப் பொருட்கள் வாயை வறண்டு போகச் செய்து துர்நாற்றத்தை வாயிலேயே தங்கியிருக்கச் செய்துவிடும். 
இருமுறை பல் துலக்குதல்
தினமும் இரண்டு முறை பல் துலக்குவது பல் இடுக்குகளில் தங்கியிருக்கும் உணவுப் பொருள்களை வெளியேற்றவும், பல்லில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கவும் உதவும். இரவு தூங்கப்போவதற்கு முன்னர் ஒரு முறை பல் துலக்கவேண்டியது மிகவும் அவசியம்.

வாய் கொப்பளித்தல்
பிளாக் டீ அல்லது கிரீன் டீயில் வாயைக் கொப்பளிப்பதால், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறையும் எனக்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிட்டாய்
மிட்டாய்கள்,மின்ட்  பபுள் கம்களை சாப்பிடுவதால் அதிக அளவில் எச்சில் சுரக்கும். இதனால் வாய் வறண்டு போகாது. உற்பத்தியாகும் எச்சில் வாயிலுள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும். இதனால் துர்நாற்றம் குறையும். சர்க்கரைநோயாளிகள் இவற்றைத் தவிர்த்துவிடலாம். அவசரத்திற்கு உதவும் தவிர ஆரோக்கியமானது அல்ல.
இதேபோல் கிராம்பு, சீரகம் போன்றவற்றையும் மெல்லலாம்.

காய்கறி, பழங்கள்
உணவு உண்ட பிறகு கேரட், ஆப்பிள் போன்றவற்றைச் சாப்பிட்டால், எச்சில் சுரப்பு அதிகமாகும். இதனால் வாயிலுள்ள பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும். காலையிலிருந்து சாப்பிடாமல் வெறும் வயிற்றிலேயே இருந்தால், வயிற்றில் அமிலச் சுரப்பு உண்டாகும். இதுவும் துர்நாற்றத்துக்குக் காரணமாக அமையும். 

இதற்கும்பழங்களும், காய்கறிகளும் நல்ல தீர்வு தரும்.
நாக்கைச் சுத்தம் செய்தல்
நாக்கின் சுவை நரம்புகளில் சேர்ந்துள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றுவது துர்நாற்றத்தைப் போக்க உதவும். இதற்குக் கடைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சுத்தப்படுத்தும் கருவியை (Tongue cleaner) வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது பிரெஷ் பயன்படுத்தியும் நாக்கைச் சுத்தம் செய்யலாம்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றியும் வாய் துர்நாற்றம் நீங்கவில்லையென்றால், பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். வாய் துர்நாற்றம் ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம் என்பதால் மருத்துவரைச் சந்திக்கத் தயங்கக் கூடாது.

கூந்தல் வளர மூலிகை எண்ணெய்



கூந்தல் வளர எண்ணெயின் போஷாக்கு மிக முக்கியம். அவை கூந்தலின் வேர்க்கால்களை தூண்டிவிடுகிறது. ஒவ்வொரு என்ணெய்க்கும் தனித்துவம் உள்ளது.
தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆலிவ் எண்ணெய் ஆகியவை கூந்தலின் வளர்ச்சியை தூண்டுகின்றன.
அவற்றோடு மூலிகைகளின் குணங்களும் சேர்ந்தால் ஆரோக்கியமான கூந்தல் மிளிரும்.

🌏மிருதுவான கருமையான கூந்தல் பெற :
கடுமையான முடி உதிர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?
சொட்டை ஆங்காங்கே தெரிவது போலிருக்கிறதா? இந்த எண்ணை நிச்சயம் உங்களுக்கு உதவும்.எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையானவை :
செம்பருத்தி பூ - 5 இதழ்கள்
செம்பருத்தி இலை - 5 இலைகள்
எண்ணெய் - 100 மி.லி.
எண்ணெய் எதுவானாலும் உங்கள் விருப்பப்படி எடுத்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி இதழ்களையும் இலைகளையும் கழுவி , ஈரமில்லாமல் அரைத்துக் கொள்ளுங்கள். நீர் விடக் கூடாது. நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.
இப்போது எண்ணெயை அடுப்பில் சூடுபடுத்துங்கள். எண்ணெய் சூடானதும் இந்த செம்பருத்தி பேஸ்ட்டை அதில் போடவும்.
1 ஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்க்கவும். நுரை அடங்கியதும், அடுப்பை அணைத்து ஆற விடுங்கள். பின்னர் வடிகட்டி இந்த எண்ணையை பாட்டிலில் எடுத்துக் கொள்ளவும்.
இதனை தினமும் உபயோக்கிக்கலாம். முடியின் வேர்கால்களை தூண்டும்படி ஸ்கால்ப்பில் 1 ஸ்பூன் அளவு தேய்த்து வாருங்கள். முடியின் வேர்ப்பகுதியில் மட்டும் தடவுவதால் பிசுபிசுப்பு இருக்காது.
இவ்வாறு செய்து வந்தால், வேர்கால்கள் வலுப்பெற்று, மிருதுவான, மின்னும் கூந்தல் கிடைக்கும். கூந்தல் உதிர்வது நின்று விடும்.

🌏பொடுகிற்கான சிட்ரஸ் எண்ணெய் :
கூந்தல் உதிர்வதற்கு மிக முக்கியமான காரணம் பொடுகுதான்.அதிகப்படியான வறட்சியினாலும், கிருமிகளின் தொற்றாலும் பொடுகு ஏற்படும்.
தொற்றுக்களை அகற்றி, வலுவான கூந்தல் கிடைக்க சிட்ரஸ் நிறைந்த பழங்கள் பயன் தரும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையின் தோலை எடுத்து வெய்யிலில் காயவையுங்கள். பின் அவற்றை பொடித்துக் கொள்ளுங்கள்.
100 மி.லி எண்ணையை சூடு படுத்தி, இந்த சிட்ரஸ் பழப் பொடியை 1 ஸ்பூன் எண்ணெயில் பொடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். நன்றாக ஆறியதும், வடிகட்டி, ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
தினமும் இரவில் தூங்குவதற்கு முன் இந்த எண்ணெயை தலையில் தேய்த்துவிட்டு படுங்கள். நாளடைவில் பொடுகு காணாமல் போய்விடும்.

🌏தலை அரிப்பிற்கான துளசி எண்ணெய் :
அதிகப்படியான வறட்சியினால் தலையில் அரிப்பு எற்படும். மேலும் முடி உதிர்தல் வேகமாக நடக்கும். இவற்றை துளசியின் மருத்துவ குணம் சரிபடுத்துகிறது.
ஒரு கப் துளசி இலைகளை நைஸாக சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து, 100 மி.லி. எண்ணெயை கொதிக்க விடுங்கள். அதில் துளசி பேஸ்ட்டை போடவும். நுரை அடங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விடுங்கள். பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...