Thursday, May 14, 2020

தயிரை எப்படி யூஸ் பண்ணுனா, சருமத்தில் உள்ள கருமை போகும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா?



பெரும்பாலான பெண்கள் முகத்தின் அழகை மேம்படுத்த கடைகளில் விற்கப்படும் விலை அதிகமான அழகு சாதன பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் அழகு நிலையங்கள், ஸ்பா சென்டர்கள் போன்ற இடங்களுக்குச் சென்று அழகைப் பராமரிப்பார்கள். ஆனால் அனைவராலுமே இம்மாதிரியான வழிகளை மேற்கொள்ள முடியாது.


சில பெண்கள் இயற்கை வழியில் சரும பிரச்சனைகளை சரிசெய்ய மற்றும் அழகை மேம்படுத்த முயற்சிப்பார்கள். அப்படி நமது சரும ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரிக்க உதவும் எளிதில் கிடைக்கக்கூடிய ஓர் பொருள் தான் தயிர்.

இந்த தயிர் அனைவரது வீட்டிலுமே பொதுவாக காணப்படும் பொருளாகும். இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்.
முக்கியமாக இந்த தயிருடன் ஒருசில பொருட்களைச் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும் முகம், பொலிவோடு அழகாக காணப்படும். உங்களுக்கு தயிரை எப்படி பயன்படுத்தினால் சருமத்தின் நிறம் அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் காட்சியளிக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானல் தொடர்ந்து படியுங்கள்.

➡️தயிர் மற்றும் எலுமிச்சை
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடல் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் முகத்தை நீரால் கழுவிக் கொண்டு, அந்த ஈரமான முகத்தில் தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு முகத்தை நீரால் கழுவ வேண்டும்.
* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், முகம் பொலிவாக காட்சியளிக்கும்.

➡️தயிர் மற்றும் வெந்தயம்
* ஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைக்க வேண்டும்.
* பின் காலையில் எழுந்ததும் அதை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த, பொலிவிழந்து காணப்படும் முகம் பொலிவோடும் அழகாகவும் காட்சியளிக்கும்.

➡️தயிர் மற்றும் ஆலிவ் ஆயில்
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதனை நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒரு முறை முகத்திற்கு மாஸ்க் போட்டு வர, நல்ல தீர்வு கிடைக்கும்.

➡️தயிர் மற்றும் தேன்
* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பின் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
* பின்பு நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
* இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

➡️தயிர் மற்றும் கற்றாழை ஜெல்
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு இரவில் படுக்கும் முன், இந்த கலவையை முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வையுங்கள்.
* மறுநாள் காலையில், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த செயலால் முகம் எப்போதும் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

➡️தயிர் மற்றும் தக்காளி
* தக்காளியை அரைத்து, அதில்1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.

➡️தயிர் மற்றும் பப்பாளி
* 1 டீஸ்பூன் பப்பாளி கூழுடன், 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் இரவில் படுக்கும் முன் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள, முகச் சருமம் அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

➡️தயிர் மற்றும் பால் பவுடர்
* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 5-10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு குறைந்தது 2 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

➡️தயிர் மற்றும் அரிசி மாவு
* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டீஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் இதனை நன்கு கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.
* இந்த மாஸ்க்கை வாரந்தோறும் தவறாமல் பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.

தொடையில் இருக்கும் கருப்பும் சொரசொரப்பும் போக்கலாம் எப்படி தெரியுமா?


முகத்தைப் பராமரிக்க முடிந்தளவு நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் உள் தொடையில் இருக்கும் கருப்பை நீக்க முயற்சி செய்திருக்கிறோமா? ஆனால் கொஞ்சம் மெனக்கெட்டால் கருமை நீங்கி விடும். எப்படி என்று பார்க்கலாமா?

​தொடையிலும் படரும் கருமை
பெரும்பாலும் கழுத்து, அக்குள் பகுதியில் படரும் கருப்பு சரும நிறத்திலிருந்து வேறுபடுத்தி காட்டு ம். மாநிறத்தில் இருப்பவர்களை விட சற்று வெள்ளை நிறமாக இருப்பவர்களுக்கு இது அழகை குறை ப்பதாக காட்டும்.
இவை வெளிப்புறத்தில் இருக்கும் பிரச்சனை. ஆனால் உள் தொடையில் உண்டாகும் கருமை நிறத் தை சட்டென்று பார்ப்பதில்லை என்பதோடு அதைக் கண்டாலும் பெரிதுபடுத்துவதும் இல்லை. அதைப் பராமரிப்பதும் இல்லை. சற்று தீவிரமாகும் போது அந்த இடத்தில் சொரசொரப்பையும் உண்டாக்கி எரிச்சலை ஏற்படுத்தும்.

​காரணம் என்ன

தொடைகள் இரண்டும் உரசும் போது சரும உரசல் ஏற்படும் போது அந்த இடத்தில் கருமை படர்வது வழக்கம். உடல் பருமனாக இருப்பவர்கள் அனைவருமே இந்த பிரச்சனைக்கு உள்ளாவார்கள். இதில் வயது பேதமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரும நிறத்துக்கு ஏற்றாற் போல் தொடையின் நிறமும் இருக்க வேண்டுமானால் முறையான பரா மரிப்பு இருந்தால் போதும். காற்றோட்டமில்லாத அந்தரங்கமான இடங்களுக்கும் பராமரிப்பு தேவை. இது அழகுக்காக வேண்டி அல்ல, ஆரோக்கியத்துக்காகவும் பராமரிக்க வேண்டும்.

இறுக்கமான ஆடைகளை அணியும் போதும் குறிப்பாக பருமனான ஜீன்ஸ் அணியும் பெண்களின் உள் தொடை அதிக கருமை அடைய வாய்ப்புண்டு. இதை எப்படி நீக்குவது பார்க்கலாம்.
​சொரசொரப்புக்கு ஓட்ஸ் கலவை
தூங்குவதற்கு முன்பு குளித்து தொடையை ஈரம் போக மெல்லிய துணியில் துடைக்கவும். 

பிறகு தொடையின் சொரசொரப்பை போக்க இதை  செய்வோம்.
தேவை:
பொடித்த ஓட்ஸ் - 4 டீஸ்பூன்,
கெட்டித் தயிர்- 5 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,

பொடித்த ஓட்ஸை அகன்ற கிண்ணத்தில் போட்டு தயிர், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். ஒன்றோடொன்று நன்றாக சேரும் வரை கலக்கவும்.

இதேபோன்று எலுமிச்சை, வெள்ளரி, பாசிப்பருப்பு மாவையும் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம். சொரசொரப்புக்கு மஞ்சள் தூள் கலந்தும் பயன்படுத்தலாம்.
இதை தொடையின் உள்பகுதியில் கருமையாக இருக்கும் சருமத்தைச் சுற்றி ஸ்க்ரப் செய்யுங்கள். பத்து நிமிடங்கள் வரை பொறுமையாக ஸ்க்ரப் செய்யுங்கள்.

பிறகு குளிர்ந்த நீரில் கழுவி சருமத்தைத் துடைத்து எடுங்கள். சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி சொரசொரப்பு குறையும். ஒரே முறை மசாஜ் செய்யும் போது சொரசொரப்பு குறைவதை நன்றாக உணரலாம்.
மசாஜ் முடிந்ததும் நல்ல மாய்சுரைஸர் அல்லது கற்றாழை ஜெல்லை அந்த இடத்தில் தடவினால் சருமத்தின் கருப்பு நிறம் மங்கும். ஒரே இரவில் சொரப்பு குறைவதையும் ஒரு வாரத்தில் கருமை நீங்குவதையும் காணலாம்.
தொடையின் சருமத்தில் இருக்கும் சொரசொரப்பை ஒரே நாளில் பாதியாக குறைந்திருப்பதை காணலாம். பிறகு தொடையின் கருமை நீங்க இந்த பேக்கில் ஒன்றை பூசுங்கள்.

1. எலுமிச்சை சாறுடன் வெண்ணெய் சேர்த்து குழைத்து அந்த இடத்தில் மசாஜ் செய்யுங்கள்.

2. எலுமிச்சை சாறுடன் கற்றாழை ஜெல் சேர்த்து மசாஜ் செய்யலாம்.

3. இரவில் படுக்கும் முன்பு பேக் போட்டு முடித்ததும் அசல் சந்தனக்கல்லை பன்னீர் விட்டு உரைத்து கருமை இருக்கும் இடங்களில் பூசி வந்தால் கருமை நீங்கி சரும நிறத்தை அடையும்.

4.தினமும் குளிப்பதற்கு முன்பு நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். சோப்புக்கு பதி லாக குளியல் பொடி பயன்படுத்துவது நல்லது. குளியல் பொடி இல்லையென்றால் பாசிப்பருப்பு மாவு தேய்த்து குளிக்கலாம்.

​இதையெல்லாம் தவிருங்கள்
➡️தொடைக்கு காற்றோட்டம் தேவை இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். ஜீன்ஸ் போன்ற கனமான ஆடைகள் சருமத்துக்கு பாதிப்பை உண்டாக்குபவை. குறிப்பாக இரவு நேரத்திலாவது தளர்வான ஆடைகளை அணிந்து பழகுங்கள்.

➡️தொடைப்பகுதியை பிறர் என்ன பார்க்கவா போகிறார்கள் என்ற மெத்தனத்துடன் உரிய பராமரிப் பைக் கொடுப்பதை தவிர்க்க நினைக்காதீர்கள். கருமை தொடையும் சொரசொரப்பும் இணைந் தால் நடக்கும் போது இரு தொடைகளும் உரசி தோல் உரியும் நிலையும் உண்டாகலாம்.

➡️அழகு என்பது வெளிப்புறத்தில் தெரியும் தோற்றத்துக்கு மட்டுமல்ல. உள்ளே இருக்கும் அந்தரங்க பகுதிக்கும் தான். இனி உங்கள்  முழு உடலையும்  அழகாக வைத்திருங்கள்.
'

பருவம் அடைந்த பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள்


ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றம் நிகழ்வது என்பது பூப்பெய்தும் நிகழ்வு ஆகும். இது முதிர்ந்த பெண்ணாக தன்னை உருமாற்றி கொள்வதற்கான தொடக்கப்புள்ளி.


இப்படி பருவம் அடைந்த பெண்களின் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாவன; புரதசத்து, சுண்ணாம்பு சத்து, இரும்பு, போலிக் அமிலம் போன்றவை. பருவம் அடைந்த பெண்கள் சத்துள்ள உணவாக சாப்பிட வேண்டும்.

இதற்காக கெட்ட கொழுப்பு, காபோஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடக்கொடுக்கிறார்கள். இதனால் சரியான எடையை பராமரிக்க முடியாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இதன்காரணமாக உடல் எடை அதிகரித்து, மாதவிடாய் தள்ளிப்போவது, தைராய்டு, இடுப்புவலி, ரத்தசோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே பருவம் அடைந்த பெண்கள் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

விளையாட்டுத்தனமாக துள்ளித்திரிந்த குழந்தை, பருவம் அடைந்த பிறகு உணவு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் பருவ பெண்கள் சாப்பிட வேண்டிய சில இயற்கை மருத்துவ உணவுகள் பற்றி பாப்போம்.

⏩️எள் உருண்டை:
தேவையான பொருட்கள்
கருப்பு எள்
வெல்லம்
ஏலக்காய்
நல்லெண்ணெய்

செய்முறை
முதலில் எள் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடி செய்த எள்ளுடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி இவற்றை சேர்த்து ஒரு சேர நன்கு பிசையவும்.
பிசையும் போது எள்ளில் இருந்து சிறிது எண்ணெய் வெளியேறும். இதனுடன் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து உருண்டையாகவோ அல்லது அப்படியே கலவையாகவோ சாப்பிடலாம்.

இந்த எள் உருண்டையை தின்பண்டமாக பெண்கள் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பலம் சேர்க்கிறது. எள் உருண்டை இடுப்புக்கு பலம் தரக்கூடியதாகும். இது முறையான உதிரப்போக்கை ஏற்படுத்தி, உடலில் உள்ள கெட்ட இரத்தத்தை வெளியேற்ற உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.

குறிப்பு
எள் உருண்டையை பெண்கள் கருவுற்ற காலங்களிலும், மாதவிலக்கு நேரங்களிலும் எடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

⏩️கருப்பு உளுந்து களி:

தேவையானவை
கருப்பு உளுந்து
வெல்லம்
ஏலக்காய்
நெய்
ஏலக்காய்
செய்முறை
முதலில் உளுந்தை வறுத்துப் பொடி செய்ய வேண்டும். பின் இந்த உளுந்து மாவுடன், தேவையான அளவு நீர் சேர்த்து கலக்கி, கொதிக்க வைக்கவும். கொதித்து பொங்கி வரும்போது, சிறிதளவு வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.

கிளறும் போது இது அல்வா பதத்தில் வரும். அந்த வேளையில் நெய் விட்டு மீண்டும் அதனை கிளற வேண்டும். இப்போது உளுந்தம் களி ரெடி. இது உடலுக்கு நல்ல பலம் தரும். இதனை சிறு பருவம் முதல் பெண்கள் சாப்பிட்டு வரும்போது, உடலுக்கு தேவையான மாவுசத்து மற்றும் புரதம் இதிலிருந்து கிடைக்கிறது.

இந்த உளுந்தம் களி பூப்பெய்த பெண்களின் சீரான மாதவிடாய் மற்றும் 40 வயதிற்கு மேல் ஆன பெண்களின் உடல் பலத்திற்கு மிகவும் உதவுகிறது. மேலும் பெண்களின் மூட்டு வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாகிறது. மற்றும் உடல் சூட்டினை தணிக்க செய்வதோடு, இரத்த கட்டிகளுக்கு மருந்தாகிறது.

⏩️முருங்கை கீரை மசியல்
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை
பூண்டு
வரமிளகாய்
கடுகு
உளுந்தம்பருப்பு
உப்பு
நல்லெண்ணெய்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு உளுந்து, கடுகு இரண்டையும் பொரிய விடவும். பின்னர் முருங்கைக்கீரை சேர்த்து நீர் விட்டு கொதிக்க விடவும். இதனுடன் வரமிளகாய், பூண்டு இரண்டையும் அரைத்து, முருங்கைக்கீரையுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து விடவும். இப்போது முருங்கைக்கீரை மசியல் ரெடி ஆயிடிச்சு.
முருங்கைக்கீரையில் இரும்புசத்து அதிகமாக உள்ளது. இதை வாரத்திற்கு நான்கு நாட்களாவது சாப்பிட்டு வரும் போது, உயிர் சத்துக்கள், சுண்ணாம்புச்சத்து, தாது உப்பு, இரும்புசத்து, வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியன உடலில் சேர்ந்து, உடலுக்கு நல்ல வலு சேர்க்கிறது.

மேலும் முருங்கைக்கீரை பயன்படுத்துவதன் மூலம் வளரும் இளம்பெண்களுக்கு இரத்த விருத்தி அடைய செய்யும். குழந்தை பேறு அடைந்த பெண்களுக்கு பால் நன்றாக சுரக்கவும் முருங்கைக்கீரை உதவுகிறது.

நீங்களும் இந்த உணவுகளில் ஒன்றையாவது பின்பற்றினால் உடல் நலத்தை பேணி பாதுகாத்துக் கொள்ளலாம். ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

தக்காளி போல் தக தக என மின்ன


பெண்களே உங்கள் முகத்தை பளிச் பளிச் என வைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு. அதாவது, தினமும் தக்காளி பழத்தின் சாறினை கொண்டு மசாஜ் செய்தால் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க முடியும்.

தக்காளிப்பழத்தை கூழாக்கி அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்க வேண்டும். ஒரு டீஸ்பூன் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். அந்த கலவையை முகத்தில் பூசிவிட்டு அது நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பிரகாசமாகும்.


எலுமிச்சை பழச் சாறினை தக்காளி பழச் சாறுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் உள்ள துளைகள் சரியாகி முகப்பருக்கள் வருவது குறையும்.

தக்காளி பழத்தை ஜூஸாக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் பூசிவர வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து நன்றாக உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிர்ந்த நீரை பயன்படுத்தக்கூடாது. தொடர்ந்து அவ்வாறு மசாஜ் செய்து வந்தால் சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மாறத்தொடங்கி விடும்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தினமும் தக்காளி பழச்சாறினை முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். சரும எரிச்சலை தடுக்க தினமும் தக்காளி பழத்தினை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

தக்காளி பழச் சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவினால் சருமம் அழகாக மாறுவது மட்டுமில்லாமல் மென்மையாகவும் மாறும். தக்காளி பழத்தை தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...