Wednesday, June 17, 2020

அவகேடோ தரும் அற்புத அழகு,எந்த சருமத்துக்கு எப்படி எதோட பயன்படுத்தணும்?




எல்லா சருமமும் அழகான சருமமே, அதை பராமரிக்கும் முறையில் அவை எல்லாம் இன்னும் கூடுதல் அழகு பெறும். வீட்டில் சிறந்த முறையில் அழகு படுத்தி கொள்ள விரும்பினால் நீங்கள் அவகேடோ பயன்படுத்தலாம். நல்ல கொழுப்பு, வைட்டமின், ஊட்டச்சத்து நிறைந்த சிறந்த உணவு. 

இவை சருமத்துக்கும் நிறைந்த ஊட்டச்சத்தையும், அழகையும் அள்ளிதருகிறது. இந்த பழத்தில் இருக்கும் பி கரோட்டின், லெசித்தின் மற்றூம் லினோயிக் அமிலம் கொண்டுள்ளதுஇவை சருமத்தை வறண்டு போக செய்யாமல் ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. உங்கள் சருமம் எந்தவகையாக இருந்தாலும் சருமபிரச்சனையின்றி அவை மேலும் அழகாக்க அவகேடோ உதவுகிறது. இனி வீட்டில் ஃபேஸ் பேக் போடும் போது எப்படி போடுவது அவகேடோவுடன் எந்த பொருள்களை கலந்து பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

🥑​வறண்ட சருமமாக இருந்தால்


உங்கள் சருமத்தை வறட்சியிலிருந்து காத்து அதை ஈரப்ப்பதமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு இந்த ஃபேஸ் மாஸ்க் உதவும்.
தேவை
அவகேடோ - 1 (பழுத்திருக்க வேண்டும்)
தேன் - 1 தேக்கரண்டி
அவகேடோவை மசித்து தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்தில் குழைத்து கொள்ளவும். இதை முகம் மற்றும் கழுத்துபகுதியில் தடவி கொள்ளவும். அவை நன்றாக காயும் வரை காத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு முகத்தை துடைக்கவும்.
தொங்குவது போலிருக்கும் மார்பகங்களை, ஃபிட்டாக்க இந்த மசாஜ் ட்ரை பண்ணுங்க!
வைட்டமின் ஏ, கொழுப்பு அமிலங்கள், ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த அவகேடோ சருமத்தை வறட்சியிலிருந்து மீட்கிறது, சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. கூடுதலாக தேன் சருமத்துக்கு இயற்கையாகவே பளபளப்பை தருகிறது. வறண்ட சருமத்தில் இருக்கும் வடுக்கள், புள்ளிகள் போன்றவற்றையும் குறைக்கிறது.பருக்கள் இல்லாத பட்சத்தில் அதிக வறட்சியை சந்தித்தால் நீங்கள் தேனுக்கு மாற்றாக தயிரையும் பயன்படுத்தலாம். வாரம் இருமுறை செய்துவந்தால் வறட்சி நீங்கும். ஈரப்பதம் இருக்கும்.

🥑​எண்ணெய் சருமம்


இருப்பதிலேயே அதிக பிரச்சனையை சந்திப்பவர்கள் ஆயில் ஸ்கின் கொண்டவர்கள் தான். மேக் அப் இலேசாக இருந்தாலே முகத்தில் எண்ணெய் வடிந்து அதை மிகைப்படுத்தி காட்டும். அதனால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சுதலை அவ்வபோது செய்ய வேண்டும்.
தேவை
அவகேடோ -1
முட்டையின் வெள்ளைக்கரு - 1
அவகேடோ பழத்தை மசித்துவைக்கவும். முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்து பிரித்து மசித்துவைத்துள்ள அவகேடோவுடன் சேர்த்து முகம் மற்றும் கழுத்துபகுதியில் தடவி உலர விடவும். அவை உலர்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவி விட வேண்டும்.
சருமத்துளைகளை மேலும் குறுக்கி அதிலிருக்கும் எண்ணெய்பசையை அப்புறப்படுத்த வெள்ளைகரு உதவுகிறது. சருமத்தை இறுக்க ரைபோஃப்ளேவின், நியாசின் மற்றும் ஃபோலெட் சத்துகள் அவகேடோவில் உண்டு. இவை இரண்டும் சருமத்தை பாதுகாக்க செய்கின்றன. இந்த வகை ஃபேஸ் மாஸ்க் எல்லோருக்குமானது என்றாலும் கூட எண்ணெய்பசை கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த ஃபேஸ் மாஸ்க்.

🥑​காம்பினேஷன் ஸ்கின்

சிலருடைய சரும எண்ணெய் சருமமாகவும் வறட்சி கலந்தும் இருக்கும். இவர்களுக்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க் இது.
தேவை
அவகேடோ - 1
கற்றாழை ஜெல் - 3 டீஸ்பூன்
சுத்தமான தேங்காயெண்ணெய் - 4 டீஸ்பூன்
அவகேடோவை நன்றாக மசிக்கவும். அதனுடன் தேங்காயெண்ணெய், கற்றாழை சாறு கலந்து பேஸ்ட் போல் குழைக்கவும். பிறகு முகம் மற்றும் கழுத்துபகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரத்துக்கு 2 முறை செய்துவரலாம்.
இதனால் முகத்தில் தேவையான அளவு ஈரப்பதம் தக்க வைக்க உதவுகிறது. கற்றாழை மென்மையை தரக்கூடியது. இவை முகத்தை எப்போதும் ஃப்ரெஷ்ஷாக வைக்க உதவுகிறது.


🥑​எல்லாவகை சருமத்துக்கும்

அவகேடோ - 1
ஓட்ஸ் - 1 தேக்கரண்டி
பால் - 3 டீஸ்பூன்
பாலில் ஓட்ஸை ஊறவைக்கவும். இதனால் இவை மிருதுவாகும். அவகேடோவை மசித்து அதனுடன் பாலில் ஊறிய ஓட்ஸை சேர்த்து நன்றாக கலக்கவும். மீண்டும் ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து பிறகு முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்யலாம்.

ஓட்ஸை அப்படியே பயன்படுத்துவதன் மூலம், சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், தூசி மற்றும் அழுக்கை வெளியேற்ற உதவுகிறது. சருமத்துவாரங்களில் இருக்கும் அழுக்கு வரை நீக்கி சருமத்துக்கு வேண்டிய ஊட்டச்சத்தையும் தருகிறது. பொதுவான முகச்சுத்தமாக ஆனால் சீராக செயல்படுகிறது.

​➡️➡️குறிப்பு
அவகேடோவை கொண்டு ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தும் போது அவை நன்றாக பழுத்த பழமாக இருக்கும்படி தேர்வு செய்யுங்கள். அப்போதுதான் அவை முகத்தி ஒட்டும்.எப்போது எந்த ஃபேஸ் பேக் பயன்படுத்தினாலும் அதை பயன்படுத்திய பிறகு உங்கள் முகத்தில் உண்டாகும் மாற்றத்தை கவனிக்கவும்.
ஃபேஸ் மாஸ்க் போடும் போது முகத்தில் மட்டும் அல்லாமல் கழுத்துபகுதியிலும் பயன்படுத்துங்கள். இல்லையெனில் முகம் ஒரு நிறத்தில் பளிச்சென்றும் கழுத்து நிறம் வேறுமாதிரி மங்கியும் இருக்கும்.ஃபேஸ் மாஸ்க் கலந்த பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து முகத்துக்கு போடுவதை வழக்கமாக கொள்ளுங்கள். வறண்ட சருமத்துக்கு போடும் போது கூடுதலாக ஆலிவ் ஆயில் சேர்க்கலாம்.

முடி கருப்பா இருக்க நெல்லிக்காய் ஹேர்டையா.. யூஸ் பண்ணிபாருங்க



முடி கருமையாக இருக்கவும் இளநரை வராமல் இருக்கவும் நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது. அந்த நெல்லிக்காய் கொண்டு ஹேர்டை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


நெல்லிக்காய்
நெல்லிக்காய். வைட்டமின் சி சத்து கொண்ட கனி. ஆயுளை நீட்டிக்கும் கனி என்றும் இதற்கு பெயர் உண்டு. உடல் உள்ளுறுப்புகளுக்கும் வெளியிலும் இவை அதிகப்படியான சத்துக்களை தரக்கூடியது. நெல்லிக்காய் அழகு குறிப்பில் என்றால் அது நிச்சயம் கூந்தலுக்குதான். கூந்தல் பிரச்சனைகளான வறட்சி, உதிர்வு, மெலிவு போன்ற பிரச் சனைகளை தீர்க்கும் இயற்கை வைத்தியத்தில் இதற்கு தனி இடம் உண்டு.
இளநரை பிரச்சனை தற்போது அளவுக்கதிகமாக இளவயதினரை தாக்கி வருகிறது. இதனால் 40 வயது தொடங்கும் போதே தலை முழுக்க வெளுப்பை வரவழைத்து விடுகிறது. வந்த பிறகு இளநரை போக்குவது அதிக சிரமம் என்பதால் ஆரம்பத்திலேயே அல்லது வருவதற்கு முன்பே நெல்லியை பயன்படுத்தி முடியின் அடர்த்தியையும் கூந்தலின் கருமையையும் போக்கலாம். இதற்கு எப்படி வீட்டிலேயே நெல்லி ஹேர் டை தயாரிப்பது பார்க்கலாம்.


💟💟ஹேர்டை
கூந்தலில் கருமைக்கு பொதுவாக இயற்கை ஹேர் டை பயன்படுத்துவதை விட செயற் கையை தான் அதிகம் நாடுகிறோம். காரணம் செயற்கை ஹேர்டையானது உடனே கூந்தலுக்கு கருமை நிறம் தந்துவிடுகிறது. ஆனால் இயற்கை பொருள்கள் முடியின் நிறத்தை கருமையாக்க சற்று காலம் எடுத்துகொள்கிறது. ஆனால் கெமிக்கல் கலந்த ஹேர் டைக்கள் பயன்படுத்துவதால் அதிலும் தொடர்ந்து பயன்படுத்தும் போது இவை கேன்சர் உண்டாக்கிவிடும் அபாயமும் உண்டு. அதனால் தான் இயற்கை பொருள்களை பயன்படுத்த வலியுறுத்துகிறார்கள்.அதனால் தான் கூந்தல் பராமரிப்பை வளரும் பருவம் முதலே முறையாக கடைபிடிக்கும் போது இளநரை பிரச்சனை வராமல் தடுக்கிறது.


பதின்ம வயது முதலே கூந்தலுக்கு ஆயில் மசாஜ், கூந்தல் பேக் போட்டு தலைக்கு குளிப் பதன் மூலம் முடி விரைவில் இளநரையாவது தடுக்கலாம். அதோடு இந்த இயற்கை பேக் எல்லாமே கூந்தலுக்கு இயற்கை ஹேர்டை போன்று கருமையை தரக்கூடியவை என்ப தால் பக்கவிளைவுகள் குறித்தும் கவலைப்படவேண்டியதில்லை.


​இயற்கை ஹேர்டையில் நெல்லி
இயற்கை பொருளில் மருதாணி, கறிவேப்பிலை, அவுரி இலை, பூந்திகொட்டை போன் றவை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் நெல்லியும் சிறப்பாக வேகமாக செயல்படக்கூடியதே. அதிக விலையும் கிடையாது என்பபதோடு எல்லா சீஸனிலும் கிடைக்க கூடியது.அதனால் மொத்தமாக வாங்கி தயாரித்து தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம்.


நெல்லியை வாங்கி அதன் கொட்டைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள் ளுங்கள். நிழலில் உலர்த்தி வைத்துகொள்ளுங்கள். பிறகு அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துவிடுங்கள். ஒரு மாதத்துக்குள் இதை பயன்படுத்தி விட வேண்டும். அப்போதுதான் இதன் சத்து முழுமையாக முடிக்கு கிடைக்கும்


➡️➡️​எப்படி செய்வது


தலைக்கு குளிப்பதற்கு முன் தினம் இரும்பு வாணலியில் (ஹேர் டை பயன்பாட்டுக்கு கண்டிப்பாக இரும்பு வாணலியை பயன்படுத்துங்கள்) தேவையான அளவு நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்குங்கள். இவை கருப்பாக மாறும் போது தேவையான அளவு நீர் விடுங்கள். அந்த நீரில் அவை வேகட்டும். பிறகு நெல்லிக்காய் வெந்ததும் அடுப்பை அணைத்து இரும்பு வாணலியை மூடி வைத்து விடுங்கள்.

மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரை வீணாக்காமல் அதை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுங்கள். இப்போது வெறும் கைகளாலேயே தலையைசிக்கில்லாமல் சீவி பகுதி பகுதியாக பிரித்து தலை முழுவதும் ப்பூசுங்கள். குறிப்பாக முடியின் வேர்க்கால்களில் தடவி விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து குளியுங்கள். ஷாம்பு, சீயக்காய் எதையும் பயன்படுத்த வேண்டாம். அடுத்த நாள் ஷாம்பு போட்டு குளித்துவிடுங்கள்.


💗💗குறிப்பு
நிச்சயம் நல்ல பலனை தரும். முடியின் நிறம் கருமையாக மாறுவதை கண்கூடாக பார்க்கலாம். நெல்லிக்காய் குளுமை என்று தவிர்க்க வேண்டாம். ஏனெனில் நெல்லிக் காயை உலரவைத்து அடுப்பில் வறுத்து வேகவிடுவதால் இதில் இருக்கும் குளிர்ச்சி அதிகம் உடலில் சேராது. அதனால் வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் முதலில் பயன்படுத்தும் போது 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு அவை பாதிப்பை ஏற்படுத்தாவிட்டால் சிறிது சிறிதாக அதிகரிக்கலாம்.


⏩️⏩️அதே நேரம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை குளித்து பிறகு படிப்படியாக குறைத்து வாரம் ஒரு முறை தேய்த்து குளிக்கலாம். ஆண்கள். பெண்கள் இருவருமே இதை பயன் படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இளநரை இருப்பவர்கள் தொடர்ந்து இதை பயன் படுத்தினால் மூன்று மாதங்களில் நல்ல பலன் தெரியும்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...