Wednesday, May 27, 2020

அரைமணி நேரத்தில் உங்களை கலராக்கும் அரிசிமா..

நாள் முழுக்க வெளியில் அலைந்து விட்டு, வீட்டுக்குள் வந்ததுத் கண்ணாாடியைப் பார்த்தால் நமக்கே நம்முடைய முகத்தைப் பார்க்கப் பிடிக்காது. ஏனென்றால், வெயில், மாசு, தூசிகள் என முகம் அழுக்கு படிந்து, கருமையாகத் தோற்றமளிகும். இப்படி இருக்கும் முகத்தை பார்த்தால் மனதில் புத்துணர்வு எப்படி உண்டாகும். எந்த வேலையும் செய்யத் தோன்றாது. இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கும் இருக்கா?... இத எப்படிதான் சரி பண்றது?...

மூஞ்சிய தூக்கி வெச்சிக்கிட்டு கவலைப்பட்டுகிட்டு உட்கார்ந்திருக்காம, மொதல்ல கிச்சனுக்குள்ள போங்க... பத்தே நிமிஷத்துல உங்க முகம் பளபளக்கும் வித்தை அங்கே தான் இருக்கிறது. ஆமாங்க... உடனடியாக முகத்தை கலராக்கும் ஒரு பொக்கிஷம் இங்கே தான் இருக்கிறது. அது தான் அரிசி மாவு. ஆமாங்க அரிசி மாவு முகத்தில் அப்ளை செய்தால், உடனடி கலர் கிடைக்கும். சருமம் பளபளக்கும். அந்த அரிசி மாவை எந்தெந்த பொருள்களோடு கலந்து பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
முகம் பளபளப்பாக இருந்தாலே மன அழுத்தங்கள் நம்மை விட்டு வெகுதூரம் ஓடிப்போய் விடும்.
தூசிகளால் சருமத்துளைகளுக்குள் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றுகிற மிகச்சிறந்த ஸ்கிரப்பாக அரிசி மாவு பயன்படுகிறது.
விசேஷங்களுக்கு செல்லும் போது முகத்தில் தடவுகிற பவுண்டேஷன் உங்கள் சருமத்துக்கு கொடுக்கும் பளபளப்பை உடனடியாக அரிசி மாவு உங்கள் சருமத்துக்குக் கொடுக்கும்.


முகத்தின் நிறம் உடனடியாக அதிகரிக்கும். ஆம். அரிசி மாவு நிச்சயம் உங்கள் சருமத்தி்ல மிகப்பெரிய மேஜிக்கை செய்யும்.

➡️அரிசி மாவு பேஸ்ட்

அரிசி மாவு என்பது பெரிதாக ஒன்றும் சிரமப்பட வேண்டிய விஷயமல்ல. வேகவைக்காத பச்சரிசியை நன்கு நைசாக அரைத்துப் பயன்படுத்துவது தான் அரிசி மாவு. அதை பேஸ்டாக்குவதற்கு சிறிது தண்ணீரோ அல்லது சிறிது பாலோ சேர்த்துக் கொள்ளலாம்.


➡️அரிசி கழுவிய நீர்
அதேபோல், அரிசியை கழுவிய நீர் இருக்கிறதல்லவா அது அழுக்கு என்று மட்டும் கீழே கொட்டிவிடாதீர்கள். அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அந்த நீரைக் கொண்டு முகம் கழுவலாம். குளிக்கும் தண்ணீரோடு சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி குளிக்கவும் பயன்படுத்தலாம்.

➡️எப்படி சருமம் கலராகிறது?
நாம் போடாத விலையுயர்ந்த க்ரீம்கள் இல்லை. வீட்டு வைத்தியமும் செய்து பார்த்தாச்சு. அதப்படி அரிசி மாவு மட்டும் உடனடியாக சருமத்தைக் கலராக்கும் என்று தானே கேட்கிறீர்கள். இது எப்படி என்று பார்ப்போம்.
அரிசி மாவில் மிக அதிக அளவில் பாரா அமினோ பென்சோயிக் அமிலம் இருக்கிறது. இது மிகச்சிறந்த சன் ஸ்கிரீனா நம்முடைய சருமத்துக்குப் பயன்படுகிறது. இந்த அமிலம் நம்முடைய உடலில் வைட்டமின் சி யை அதிகப்படுத்தும்.
அதேபோல், ஃபெருலிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. இது சூரிய கதிர்களிடம் இருந்து நம்முடைய சருமத்தைக் காப்பாற்றும். வைட்டமின் C மற்றும் E செய்யும் இரண்டு வேலையையும் சேர்த்து இந்த அரிசி மாவு நமக்கு செய்கிறது. அதாவது ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.
இதிலுள்ள வைட்டமின் B சருமத்தை எளிதில் வயதான தோற்றத்தைக் கொடுக்காமல் பாதுகாக்கிறது.

⏩️⏩️எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
சருமத்தைக் கலராக்க உதவும் இந்த அரிசி மாவை எப்படியெல்லாம் எந்ததெந்த பொருள்களோடு சேர்த்துப் பயன்படுத்தலாம்?
குறிப்பாக, அரிசி மாவை பால், உருளைக்கிழங்கு, தயிர், மஞ்சள், தேன், கற்றாழை, முட்டை ஆகியவற்றுாடு சேர்த்துப் பயன்படுத்தும்போது மிகச் சிறந்த பலனை, உடனை ரிசல்ட்டைப் பெற முடியும

💗அரிசிமாவும் பயத்த மாவும்
அரிசி மாவையும் பயத்த மாவையும் சேர்த்து பயன்படுத்தும் போது உங்களுக்குப் பலன் இரட்டிப்பாகும். பயத்த மாவு சருமத்தை பட்டுப் போல் மென்மையாக்கும்.
தேவையான பொருள்கள்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
பயத்த மாவு - 1 ஸ்பூன்
மஞ்சள் - சிறிதளவு
தயிர் - 2 ஸ்பூன்
செய்முறை
மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, நன்கு மை போல பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதை முகத்தில் புருவம், கண்ணிமைகள், உதடு ஆகிய இடங்களை விட்டு விட்டு கழுத்து வரை அப்ளை செய்யுங்கள்.
சில நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து விட்டு, பத்து நிமிடம் வரை உலர விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் போகும். உடனடியாக உங்கள் முகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

💗அரிசி மாவும் கற்றாழையும்
கற்றாழை முகம், தலைமுடி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடியது என்பது நம் எல்லோருக்குமே தெரியும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவை முகத்துக்கு ஈரப்பதத்தையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடியது. அதை அரிசி மாவோடு கலந்து எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
செய்முறை
கற்றாழை ஜெல், அரிசி மாவு இரண்டையும் ஒரு பௌலில் போட்டுக் கொண்டு, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளுங்கள். அந்த கலவையை முகத்தில் தடவி, வட்ட வடிவில் சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்து விடுங்கள்.
பின்பு 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டு, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

💗அரிசி மாவும் பாலும்

பால் மிகச்சிறந்த கிளன்சராக சருமத்தில் செயல்படுகிறது. அதோடு சருமத் துளைகளுக்குள் தங்கியிருக்கும் அழுக்குகளை நீக்கி, முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றைப் போக்குவதில் பால் மிக முக்கியப் பங்காற்றுகிறது. அதை அரிசி மாவோடு எப்படி பயன்படுத்தலாம்?
தேவையான பொருள்கள்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
காய்ச்சாத பால் - 4 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்

செய்முறை
அரிசி மாவு, பால், தேன் ஆகியவற்றை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு நன்கு கட்டியில்லாமல் கலக்குங்கள். இந்த அரிசி மாவு கடைகளில் வாங்குவதற்கு பதிலாக, வீட்டிலேயே கூட அரிசியை மிக்சியில் போட்டு அரைத்தும் பயன்படுத்தலாம்.
கொஞ்சம் திக்கான பேஸ்ட்டாக கிடைக்கும். அதில் மேலும் சில துளிகள் பால் விட்டு கலக்குங்கள். ஏனெனில் அரிசி மாவு பாலை நன்கு உறிஞ்சுக் கொள்ளும்.
இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் ரப் செய்து தேயுங்கள். 20 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே வைத்திருங்கள். பின் நன்கு உலர்ந்த பின் கழுவி விட்டால் போதும். முகம் பட்டுப்போல மென்மையாகிவிடும். கலரும் கூடியிருப்பதை உங்களால் நன்கு உணர முடியும்.

💗அரிசி மாவும் முட்டை வெள்ளைக்கருவும்

அரிசி மாவு மட்டும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்த கலவை முகத்தில் உள்ள தளர்ந்து போயிருக்கும் தசைகளையும் இருக்கமாகச் செய்யும். இதனால் சருமத்தை வயதான தோற்றத்தை தவிர்த்து இளமையாக வைத்திருக்க முடியும். அதிகப்படியான மெலனின் சுரப்பை தடுக்கிறது. மெலனின் அதிகமாக சுரப்பதால் தான் சருமம் கருமையடைகிறது.
தேவையான பொருள்கள்
அரிசி மாவு - 3 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 1
செய்முறை
மேலே கூறப்பட்டுள்ள பொருள்களை ஒரு பௌலில் நன்கு கலந்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அவற்றை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அக்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். நன்கு உலர்ந்த பின்பு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு, முகத்தை கழுவுங்கள். இதை வாரத்துக்கு மூன்று முறை செய்து வந்தால் போதும், செக்க சிவந்த முகத்தை பெறலாம்.

💗அரிசி மாவும் தயிரும்

அரிசி மாவு மற்றும் தயிர் இரண்டுமே சருமத்துக்கு பிளீச்சாகப் பயன்படுகிறது. இது சருமத்தின் நிறத்தை மெருகூட்டுகிறது. தயிர் சருமத்துக்கு சிறந்த மாய்ச்சரைஸராகவும் பயன்படுகிறது.
தேவையான பொருள்கள்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்
செய்முறை
அரிசி மாவு மற்றும் தயிர் இரண்டையும் ஒரு பௌலில் போட்டு, கட்டியில்லாமல் நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதை புருவம், கண்களைச் சுற்றி, உதட்டுப் பகுதியைத் தவிர்த்து மற்ற இடங்களில் கழுத்து வரையிலும் அப்ளை செய்யுங்கள்.
பின்பு 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டுவிடுங்ககள். நனகு உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி விட்டு உங்களுடைய முகத்தை நீங்களு கண்ணாடியில் பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். முகம் புத்துணர்வோடு கூடுதல் நிறமும் பெற்றிருப்பதை உணர்வீர்கள். இதில் நீங்கள் ஏதாவது ஒன்றை  வாரத்துக்கு ஒரு  முறை செய்து பாருங்கள். சூப்பர் ரிசல்ட் கிடைக்கும் உங்களுக்கு.

இளமையான முகத்திற்கு காபி தூளை எப்படி பயன்படுத்த வேண்டும்..

காபி அனைவருக்கும் பிடித்த பானம். காபியை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அந்த வகையில் இந்த உலகில் காபி பிரியர்கள் அதிகம் உள்ளனர். காபி ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் காபி தூளை வைத்து சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும். காபியில் இருக்கும் வேதிப்பொருட்கள் சருமத்தில் உள்ள கொலோஜன் என்று கூறப்படும் சருமத்தை இருக்கி பிடிக்கும் தசையை மேன்படுத்த உதவும்.


இதனால் தளர்ந்த சருமம் இறுகி புதுத்தோற்றம் பெற காபி உதவும். மேலும் சருமத்தில் மேல் படிந்திருக்கும் இறந்த செல்களை உறித்து நீக்கும். அந்த வகையில் என்றும் இளமையுடன் இருக்க காபி தூளை (coffee powder) எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம்.
💎காபி தூள் ஸ்கரப்
முகத்திற்கு ஸ்கரப்பாக காபி தூளை பயன்படுத்தலாம். இது முகத்திற்கு கெமிக்கல்கள் கலந்த ஸ்கரப்பை போல கெடுதல் விளைவிக்காது. காபி பொடியில் சிறிதளவு கரும்பு சக்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்திற்கு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்வதன் மூலமாக முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும்.வாரம் ஒரு முறை செய்யலாம் 

💎காபி தூள், முல்தானி மெட்டி, கற்றாழை ஜெல் உள்ளிட்டவற்றை கலந்து கொள்ள வேண்டும்.  இதனை வாரம் இரு முறை முகத்தில் ஸ்கரப் செய்து கழுவி வர சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீங்கி புத்துணர்ச்சியாக இருக்கும்.
💎அரை கப் காபி தூளை, சிறிதளவு பால் சேர்த்து கெட்டியான பசையாக்கி கொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள்ஸ்கரப் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர இறந்த செல்கள் நீங்கி பிரகாசமான முகம் பளிச்சிடும்.

💎காபி தூளில் (coffee powder) சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் ஸ்கரப் செய்து பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி வரம் இரண்டு முறை செய்து வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவாகும்.

💎3 டீஸ்பூன் காபி தூளுடன், 1 டீஸ்பூன் பால் மற்றும் சிறிது கசகசா சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, இறுதியில் ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுங்கள். இதனால்  முகம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
💎காபி பவுடர், சர்க்கரை இரண்டையும் சமமாக கலந்து சிறிது தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் ஸ்கிரப் போன்று பயன்படுத்தலாம். இதனால் சருமத்தின் இறந்த செல்ஸ் நீங்கி முகம் இன்ஸ்டன்ட் பொலிவு பெறும்.
💎காபி தூள் மற்றும் பட்டை பொடி இரண்டையும் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்து வந்தால் இறந்த செல்கள் அகன்று முகம் பிரகாசமாகும். பட்டை தூள் சருமத்தில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
💎காபி தூள் பேஸ் பேக்
கடலை மாவுடன், காபி தூள் (coffee powder) சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக்க வேண்டும். இதனை முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவினால் முகம்  பளிச்சென்று தோன்றும்.
💎இரண்டு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்து 10 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் சருமமானது மென்மையாக இருக்கும்.
காபி தூளை எலுமிச்சை சாற்றோடு கலந்து முகத்தில் பேக் போன்று பயன்படுத்தினால் ஃபேசியல் செய்தது போல் முகம் மின்னும். சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் எலுமிச்சைக்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்!!
💎கடல் உப்புடன் காபி தூள் சேர்த்து ஆலிவ் எண்ணெயில் கலந்து சருமத்தில் 15 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து பின் கழுவவும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமையை நீங்கும்.
💙ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி தூள் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரால்  கழுவ வேண்டும். அதன் பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி லேசாக மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமம் மென்மையாக இருக்கும்.
💎காபி பொடி உடன் ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை சேர்த்து உடலில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை உங்களது சருமத்திற்கு ஏற்ற வகையில் தினமும் கூட செய்யலாம். இவ்வாறு செய்வதினால் உடல் முழுவதும் அழகு பெற முடியும்.

குழந்தை பிறந்த பின் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கும் உணவுகள்!!!


குழந்தை பிறந்த பின்னர் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதோடு, சில பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அதில் ஒருசிலப் பிரச்சனைகளைப் பற்றி பல பெண்களுக்கு தெரியாது. ஏனெனில் அதனை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அது தான் மலச்சிக்கல். ஆம், மலச்சிக்கல் பிரச்சனை,
பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாகும். பொதுவாக பிரசவத்திற்கு பின் பெண்களின் செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும். இந்நேரத்தில் அவர்களால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்க முடியாது. அவ்வாறு கொடுத்தால், கடுமையான வலியானது ஏற்படும்.
அதிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, இத்தகைய பிரச்சனை உடலில் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய முயல வேண்டும். இல்லாவிட்டால், அது குழந்தையின் உடலில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதற்கு முதலில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பின்பற்ற வேண்டியது சரியான டயட் தான்.

முறையான டயட்டை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மேற்கொள்ளாவிட்டால், அது உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமாக மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே பெண்கள் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் செரிமானமானது சீராக செயல்பட்டு, கழிகளானது எளிதில் வெளியேற்றப்படும். இப்போது பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கும் உணவுகள் எவையென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து உணவில் சேர்த்த மலச்சிக்கலில் இருந்து விடுபடுங்கள்.

⏩️வெந்தய கீரை (Dill Leaves)
சூப் மற்றும் குழம்பில் சேர்க்கப்படும் டில் கீரையை பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட்டால், அது தாய்ப்பாலை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும்.

⏩️பசலைக் கீரை
பசலைக் கீரையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த பசலைக் கீரையில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்களால், உடலில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் குணப்படுத்தலாம். அதிலும் பிரசவத்திற்கு பின் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால், நல்ல தீர்வு கிடைக்கும்.

⏩️சீரகம்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு ஒரு சிறந்த இயற்கை நிவாரணி என்றால், 2 டீஸ்பூன் சீரகத்தை நெய்யில் போட்டு வறுத்து, பொடி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம்.

⏩️பழங்கள்
வாழைப்பழம் மற்றும் பெர்ரிப் பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, வேறு எதிலும் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதிலும் இத்தகைய பழங்களை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

⏩️நெல்லிக்காய் ஜூஸ்
தினமும் அரை டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால், குடலியக்கமானது நன்கு செயல்பட்டு, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையானது நிச்சயம் குணமாகிவிடும்.
உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்
ஸ்நாக்ஸ்களில் உலர் திராட்சைகள், பேரிச்சம் பழம், உலர் ஆப்பிள் போன்றவற்றை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

⏩️தண்ணீர்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதால் அடிக்கடி தாகம் எடுக்கும். எனவே தினமும் குறைந்தது 3-4 டம்ளர் தண்ணீர் குடிப்பதுடன், 2 டம்ளர் இளநீர் குடித்தால், உடல் வறட்சி தடைபடுவதோடு, குடலியக்கமும் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

⏩️வேக வைத்த ஓட்ஸ்
ஓட்ஸில் நார்ச்சத்தானது அதிகமான அளவில் உள்ளது. எனவே அதனை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், அவை மென்மையாகி, எளிதில் செரிமானமடைந்துவிடும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும்.

⏩️தயிர்
தயிரை அதிகம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாவதோடு, சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும் குணமாக்கும். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தயிரை சாப்பிடும் போது, மிகவும் குளிர்ச்சியாக சாப்பிடாமல், அறை வெப்பநிலையில் வைத்து சாப்பிட வேண்டும்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...