Sunday, June 14, 2020

வெந்தய ஷாம்பு யூஸ் பண்னுங்க..



கூந்தலை சுத்தம் செய்வதற்கு சீயக்காய்க்கு மாற்றாக ஷாம்புகளை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஷாம்புவுக்கு மாற்றாக இயற்கை ஷாம்பு நாடும் அனைவருக்கும் இது பயன் தரும்.. என்ன எப்படி தயாரிப்பது பார்க்கலாமா?அவசியம்...

கூந்தல் சுத்தம்
கூந்தல் பராமரிப்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றால் கூந்தல் அழுக்கில் லாமல் இருப்பது தான் முதல் வழி. கூந்தலை வாரம் இருமுறையாவது அழுக்கு நீக்க சுத்தம் செய்ய வேண்டும். இதனால் கூந்தலின் வளர்ச்சி அதிகரிக்கும். கூந்தலில் படியும் அதிகப்படியான அழுக்கு முடியின் நிறத்தை செம்பட்டையாக்கி பிறகு இளநரையாக்கும். இதுவும் தீவிரமாகி இளநரையை இளவயதிலேயே அதிகரித்துவிடும்.

ஒருபுறம் கூந்தல் சுத்தமின்மை முடியின் வளர்ச்சியை பாதிக்கிறது என்றால் மறுபுறம் கூந்தலின் போஷாக்கை இராசயனங்கள் கலந்த ஷாம்பு ரகங்கள் பாதிக்கிறது. இத னாலும் கூந்தல் வலுவிழந்து அடர்த்தி குறைந்து மெலிகிறது. இப்படி இரண்டு வகை யாலும் கூந்தல் வளர்ச்சி பாதிக்கும் போது இராசயனங்களுக்கு மத்தியில் கூந்தல் பராமரிப்பை மேற்கொள்வது சிரமமாகவே இருக்கிறது. ஆனால் சற்று யோசித்து முன் னோர்கள் வழியில் இயற்கை பொருள்களை பயன்படுத்தினால் கூந்தல் பாதுகாப்பை உறுதி செய்யலாம். அதுவும் இது ஒன்றே போதுமானது.


​➡️➡️வெந்தயம்
வீட்டில் அஞ்சறை பெட்டியில் நிறைந்து கிடக்கும் வெந்தயத்தின் பலன்களை அளவிட முடியாது. நார்ச்சத்து, ஃப்ளவனாய்டு, ஆல்கலாய்டு, வைட்டமின், தாது சத்துகள் நிறைந்து கிடக்கும் வெந்தயம் உடல் ஆரோக்கியத்திலும் சரும அழகுக்கும் அதிக பயன் தரும் என்பதில் மாற்று கருத்தில்லை. குளிர்ச்சி மிக்க வெந்தயக் கீரை உடல் உஷ்ணத் தை தீர்ப்பது போலவே சருமத்தில் உண்டாகும் சூடு கட்டிகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் சரும பராமரிப்பில் சருமத்தில் உண்டாகும் தேமல், அரிப்பு, வெள்ளை திட்டு போன்றவற்றையும் கருவளையம், கருந்திட்டு பிரச்சனைகளையும் கூட சரி செய்ய கூடியது. வெந்தயத்தையும் சீயக்காயையும் சம அளவு கலந்து தலைக்கு தேய்த்து குளித்துவந்தார்கள். அது போல வெந்தயத்தையும் பாசிப்பருப்பையும் சம அளவு அரைத்து முகம் மற்றும் உடலில் தேய்த்து குளித்துவந்தால் சருமம் மிருதுவாக மென்மையாக இருக்கும்.


➡️​இயற்கை ஷாம்பு

வெந்தயம் அழகு பொருளில் எப்படியெல்லாம் உதவுகிறது என்பது குறித்து பார்த்தோம். அதே போன்று வெந்தயத்தை மட்டும் வைத்து மூலிகை ஷாம்புவை தயார் செய்யலாம். வெந்தயத்தை முன் தினம் இரவு கால் தம்ளர் நீரில் 3 டீஸ்பூன் அளவு ஊறவைத்து விட வேண்டும். மறுநாள் காலை ஊறவைத்த வெந்தயத்தை தண்ணீரோடு சிறிது சிறிதாக சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
அரைக்க அரைக்க தண்ணீர் அளவு குறைந்து நுரைத்து பொங்கும். மீண்டும் முக்கால் தம்ளர் தண்ணீர் விட்டு அரைத்தால் நுரை நுரைக்க பொங்கும். அப்படி நுரைக்க நுரைக்க பொங்கிய ஷாம்புவுடன் புளித்த தயிர் ஒரு கரண்டி விட்டு மீண்டும் மிக்ஸியில் அடிக்கவும். இப்போது ஷாம்பு தயார். வாசனை தேவையெனில் நறுமணத்துக்கு பன்னீர் எசன்ஸ் சேர்த்து கொள்ளுங்கள்.

➡️➡️குளிக்கும் போது

வெந்தயம் சிறு துகள்கள் இல்லாமல் முற்றிலும் மைய அரைத்து இருக்கிறதா என்பதை தலையில் தேய்ப்பதற்கு முன்பு செக் செய்யுங்கள். தலையில் ஷாம்பு போல் ஊற்றி முடி யின் வேர்க்கால்களை நன்றாக தேய்த்து விடுங்கள். அழுக்குகள் வெளியேறும் வகையில் கைவிரல்களை கொண்டு அழுத்தி தேய்த்தால் முடியின் அழுக்குகள் நீங்கும்.

பிறகு நன்றாக அலசவேண்டும். அதிக சூடான நீரில் முடியை அலச வேண்டாம். இது முடியை பலவீனமாக்கிவிடும். மிதமான நீரில் முடியை அலசுவது முடியின் வேர்க்கால் களை வலுவாக்கும். குளித்து முடித்தும் ஹேர் டிரையரை பயன்படுத்தாமல் சுத்தமான துணியால் தலையை துவட்டி முடியில் ஒட்டியிருக்கும் வெந்தய துகள்களை அகற்றி எடுங்கள். இல்லையென்றால் இது வேறு முடியின் மயிர்க்கால்களில் அடைத்து விடக்கூடும்.

⏩️⏩️என்ன பலன்
தொடர்ந்து வெந்தய ஷாம்புவை பயன்படுத்தும் போது முதலில் கூந்தலுக்கு வலு கிடைக் கும். கூந்தல் உதிர்வு ஏற்படாமல் தடுக்கும். உஷ்ணத்தால் முடிகள் வலுவிழப்பது தடைப் படும்.

போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இளநரை பிரச்சனைக்கு உள்ளாகும் கூந்தலுக்கு தேவை யான ஊட்டசத்து கிடைப்பதால் இளநரை கருமையாகும். கூந்தல் நிறம் பொதுவாக அடர்ந்த கருமை கொடுக்கும்.

கூந்தல் மெலிவு இருக்காது. அடர்த்தியும் வளர்ச்சியும் அதிகரிக்கும். நீண்ட கூந்தலை பெறலாம். முடியின் நுனி வெடிக்காது. முடி வறட்சியைத் தடுத்து பளபளப்பாக வைக்க உதவும். பொலிவாக இருக்கும். தலையில் இருக்கும் அழுக்குகள் பொடுகாக மாறுவது தடுக்கப்படும். பேன், ஈறு போன்ற பிரச்சனைகள் வராது. வாரத்துக்கு 2 முறை இந்த வெந்தய ஷாம்புவை கொண்டு முடி அலசினால் ஒரே மாதத்தில் நல்ல பலன் தெரியும்..
வெந்தயம் குளிர்ச்சியானது என்பவர்கள் வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம். இதை அப்படியே தலையில் போட்டு தேய்த்து குளிப்பதால் ஊறவைப்பதில் உண்டாகும் குளுமையை விட குறைவாகவே இருக்கும். சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் 15 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி உடலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கவில்லை என்பதை உறுதி செய்த பிறகு மீண்டும் பயன்படுத்துங்கள். ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஏற்ற மூலிகை ஷாம்பு இது என்பதில் மாற்று கருத்தில்லை.

குறிப்பு :வெந்தய தூள் பயன்படுத்துவதாயின் அதையும் இரவே ஊற வையுங்கள். பின் தயிர் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளுங்கள் 

கர்ப்பத்தின் முகமூடி


கர்ப்ப காலம் என்பதுஒரு சிறந்த அனுபவமாகும். அதே சமயம் கர்ப்ப காலத்தில் தோல் அழற்சி, வறண்ட சருமம் மற்றும் எடை அதிகரிப்பு, நிற மாற்றம் போன்ற தோல் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இந்த தோல் பிரச்சனைகளில் ஒன்று தான் மெலஸ்மா. அதாவது உங்கள் சருமத்தில் கருப்பு நிற, பழுப்பு நிற, கறைபடிந்த திட்டுக்கள் இருந்தால் உங்களுக்கு மெலஸ்மா வந்திருக்கலாம். 


இது பெரும்பாலும் "கர்ப்பத்தின் முகமூடி" என்று அழைக்கப்படுகிறது. இந்த மெலஸ்மா பெரும்பாலும் 50 முதல் 75 சதவீதம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுகிறது. இதற்காக நீங்கள் கவலைக் கொள்ளத் தேவையில்லை.

காரணங்கள்
மெலஸ்மா அல்லது கர்ப்ப கால முகமூடி இது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் போதும் மெலனின் உற்பத்தியைத் தூண்டும்போது ஏற்படுகிறது. இந்த செயல்முறை ஹைபர்பிக்மென்டேஷன் என்றும் அழைக்கப்படுகிறது. மெலஸ்மா ஏற்படும் போது உங்கள் சருமம் சற்று நிறம் மாறி இருக்கும் மற்றும் அடிவயிற்றின் மையத்தில் ஒரு இருண்ட அல்லது கருமை நிற கோடு இருக்கும். மெலஸ்மா ஏற்படுவதற்கு சூரியஒளி மிக முக்கியமான காரணமாக உள்ளது. கோடைகாலங்களில் பொதுவாக மெலஸ்மாவால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் குளிர்காலங்களில் மெலஸ்மாவில் உள்ள நிறமி செயல்படுவதில்லை. இதற்காக நீங்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை மகப்பேறுக்கு பின்னர் அல்லது தாய்ப்பால் கொடுத்தப் பிறகு இவை தானாக மறைந்து விடும்
ஏற்படும் இடங்கள்
மெலஸ்மா முன்னர் குறிப்பிட்டது போல முகத்தின் நடுப்பகுதியில் ஏற்படும். அதாவது நெற்றி, கன்னங்கள், மேல் உதடு, மூக்கு மற்றும் கன்னம் ஆகியவை இதில் அடங்கும். இதைத்தவிர கன்னத்து எலும்புகள் மற்றும் தாடைகளில் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் சில பெண்களுக்கு கழுத்தின் மேற்பகுதியில் மெலஸ்மா ஏற்படும் என்றும், அரிதாக சில பெண்களுக்கு முன் கைகளில் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
குறைக்கும் வழிகள்
நாம் முன்னர் குறிப்பிட்டது போல இவை மகப்பேறுக்கு பின்னர் அல்லது தாய்ப்பால் கொடுத்தப் பிறகு தானாக சரியாகி விடும். ஆனால் இப்போது மெலஸ்மா அதிக அளவில் இருந்தால் அதை சற்று குறைக்க நீங்கள் முயற்சி செய்யலாம்.
⏩️⏩️கற்றாழை.
மெலஸ்மா மற்றும் தோல் வறட்சி ஆகியவற்றில் சிகிச்சை அளிக்க கற்றாழை பயன்படுகிறது. சூரிய ஒளியில் இருந்தும் பாதுகாக்கிறது. கற்றாழை நடுவில் இருக்கும் ஜெல் பகுதியை முகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி காயவிட்டு 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
வயிற்றில் வரி வரியாக வயிற்றில் கோடுகளா??

அதற்கு கற்றாழை ஜெல்லை நேரடியாகவோ அல்லது அதனைக் கொண்டு எண்ணெய் தயாரித்தோ பயன்படுத்தலாம் . உங்களுக்கு கற்றாழை எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். 

தேவையான பொருட்கள்:
கற்றாழை இலைச்சாறு - 50ml
தூய தேங்காய் எண்ணெய் (virgin coconut oil )- 50 ml

1) முதலில் கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்கும் போது அதில் உள்ள மஞ்சள் நிற பகுதியை தப்பித்தவறியும் எடுத்துவிட வேண்டாம்.
(கற்றாழையை நன்கு கூழ் பதத்தில் grinderல் அரைத்து கொள்ளலாம் )
2) பின் ஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, 2  நாட்கள் ஊற வைக்க வேண்டும்.(இதை வெயிலில் வைத்து எடுத்து கொள்ளலாம் )

3) பின்பு ஊற வைத்துள்ள கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, குறைவான தீயில் நன்கு கிளறி விட்டு சூடேற்றி, நீர்மம் முழுவதும் வற்றி ஒரு பதத்திற்கு வந்ததும் ( கற்றாழையின் சிறு சிறு துண்டுகள் Brown நிறத்தில் மேலே மிதக்க தொடங்கியதும்) இறக்கி குளிர வைத்து, வடிகட்டினால், கற்றாழை எண்ணெய் தயார்.

இதை வயிற்றில் மற்றும் சருமத்தில் தடவி 15நிமிடம் அளவில் மசாஜ் செய்து இரவில் வைத்து காலையில் கழுவி கொள்ளலாம். இல்லை இப்படி வைத்து கொள்வது கஷ்டம் என்றால் கொஞ்சம் நேரம் (குறைந்தது 30நிமிடம் ) வைத்து கழுவி விடலாம்...

சுருக்கங்கள் மட்டுமன்றி தோல் கருமையும் அதிகம் இருப்பின் 3 தேக்கரண்டி அளவு எண்ணெய் எடுத்து அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு பூசி மசாஜ் செய்யலாம்.

சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு எலுமிச்சை எரிச்சலை தந்தால் உடனே கழுவி விடுங்கள்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...