Thursday, April 9, 2020

பெண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் 6 ஆபத்தான புற்றுநோய் என்னென்ன தெரியுமா?

பெண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் 6 ஆபத்தான புற்றுநோய் என்னென்ன தெரியுமா?

இன்றைய சமூக சூழ்நிலையில் புற்றுநோய் என்பது மனிதனை அதிகளவில் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களை மட்டும் குறி 


samayam tamil

புற்றுநோய் என்பது மனிதரை கொல்லும் ஒரு உயிர்க்கொல்லி நோயாக கருதப்படுகிறது. புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியின் படி பார்த்தால் இங்கிலாந்தில் பெரும்பான்மையான மக்களின் உயிர் இழப்புக்கு புற்றுநோயே காரணமாக அமைகிறது என்கிறது. இதன்படி மேலும் ஆராய்ந்து பார்த்ததில் இங்கிலாந்தில் புகைப்பிடித்தலால் வரும் புற்றுநோய்கள் ஏராளம். உடற்பயிற்சி, நார்ச்சத்து கொண்ட உணவுகளை நீங்கள் எடுத்துக் கொண்டால் புற்றுநோய் அபாயத்தை 38 சதவீதம் புற்றுநோய் அபாயத்தை தடுக்க முடியும் என்று தேசிய சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

​பெண்களை அதிகம் தாக்கும்


samayam tamil

இங்கிலாந்தில் உள்ள பெண்களுக்கு மிகவும் பொதுவான புற்றுநோயாக மார்பக, நுரையீரல், குடல், கருப்பை, மெலனோமா தோல் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் போன்ற 6 புற்றுநோய்கள் பாதிக்கின்றன.
இந்த புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து விட்டால் உயிர் வாழ அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். அதற்கு பெண்களுக்கு விழிப்புணர்வு அவசியம். ஒவ்வொரு புற்றுநோய்க்கும் ஏராளமான சிகச்சை முறைகள் உள்ளன. இதற்கு பெண்கள் புற்றுநோய் குறித்த அறிகுறிகளை அறிந்து வைப்பது அவசியமாகிறது. எனவே புற்றுநோய் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்ளலாம் அதற்கு என்னென்ன சிகிச்சை முறைகள் பெண்களுக்கு கொடுக்கப்படும் என்பதை மருத்துவர்கள் கூறுகிறார்கள், வாங்க தெரிஞ்சுக்கலாம்

மார்பக புற்றுநோய்

இங்கிலாந்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமல்ல உலகளவில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் அதிகமாக உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். ஒவ்வொரு 55 வயதிற்குட்பட்ட 5000 பெண்கள் புற்றுநோயை அறிகின்றனர். இருப்பினும் மார்பக புற்று நோய் வயதான பெண்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இங்கிலாந்தின் புற்றுநோய் ஆராய்ச்சியின் படி 7 பெண்களில் 1 மார்பக புற்றுநோய் ஆபத்தை சந்திக்கின்றனர். அதே நேரத்தில் இவ்வளவு அபாயம் இருந்தும் பெண்கள் மார்பக சுய பரிசோதனை செய்யத் தவறுகிறார்கள். புபா மற்றும் எச்.சி.ஏ ஹெல்த்கேர் பிரிட்டனின் 2019 ஆய்வில், 4 பெண்களில் ஒருவர் தாங்கள் ஒருபோதும் மார்பகங்களை பரிசோதிக்கவில்லை அல்லது கடைசியாக பரிசோதித்தது ரொம்ப காலத்திற்கு முன்பு என்றும் ஒப்புக் கொள்கிறார்கள்.
எனவே மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன்பு உங்க மார்பகங்களை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பெண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். அதே மாதிரி மார்பக சுய பரிசோதனை செய்வதற்கான விளக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது மார்பக பரிசோதனை செய்ய வேண்டும். ஏராளமான பெண்களுக்கு மார்கத்தில் கட்டிகள் காணப்பட்டாலும் அதில் 10 ல் 9 பேருக்கு அது புற்றுநோய் கட்டியாக இருப்பதில்லை என்கிறது தேசிய சுகாதார மையம்.
இருப்பினும் பெண்கள் தங்கள் மார்பகத்தில் அசாதாரண மாற்றங்களை கண்டால் உடனே மருத்துவரை அணுகி சோதித்து கொள்ளுங்கள்.

நுரையீரல் புற்றுநோய்

பெண்களுக்கு வரும் இரண்டாவது புற்றுநோய் நுரையீரல் புற்று நோய். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் 79 சதவீத வழக்குகள் புகைப்பழக்கத்தால் ஏற்படுகிறது மற்றும் 8 சதவீத வழக்குகள் காற்று மாசுபாட்டால் உண்டாகிறது என்றும் ஆய்வக ரிப்போர்ட் கூறுகிறது. இந்த நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் சரியாக தெரிவதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இதை கவனிக்காமல் விட்டு விடுகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் புற்றுநோய் கட்டிகள் நுரையீரலில் வளர ஆரம்பித்த பிறகே தொடர்ச்சியான இருமல், இரத்தம், மார்பக நோய்த்தொற்றுகள், சோர்வு, எடை இழப்பு மற்றும் மார்பு வலி போன்ற பெரும்பாலான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கிறது.
சில அசாதாரண அறிகுறிகளாக கழுத்துகளில் வீக்கம், முக வீக்கம், கரடுமுரடான சருமம் , விரல் நுனிகளில் வீக்கம் போன்றவை தென்படுகின்றனர்
எனவே அறிகுறிகள் லேசாக தென்பட்டால் கூட மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு நுரையீரல் புற்று நோயா இல்லையா என்பதை இதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்

​கருப்பை புற்றுநோய்

samayam tamil
பொதுவாக கருப்பை புற்றுநோய் மாதவிடாய் நின்ற 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை உடைய பெண்களை அதிகம் தாக்குகிறது என்று தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஆனால் சில நேரங்களில் இளம் பெண்களையும் இந்த கருப்பை புற்றுநோய் விட்டு வைப்பதில்லை.
கருப்பை புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளாக வயிறு வீக்கம், இடுப்பு அல்லது வயிற்று வலி, சாப்பிடுவதில் சிக்கல் அல்லது வயிறு நிரம்பிய உணர்வு, சிறுநீர் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் (அடிக்கடி சிறுநீர் கழிப்பது) போன்ற அறிகுறிகள் உண்டாகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .
இதைத் தவிர தீவிர சோர்வு, முதுகுவலி, மலச்சிக்கல் மற்றும் உடலுறுவின் போது ஏற்படும் வலி போன்றவைகளும் தென்படுகின்றன. இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் அது கருப்பை புற்றுநோயின் பாதிப்பாக இருக்கலாம். எனவே பெண்கள் விழிப்புணர்வோடு செயல்படுவது நல்லது.
அதே நேரத்தில் கருப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரிவதில்லை. எனவே அடிக்கடி பரிசோதனை மேற்கொண்டு முன்னரே கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது. அதே மாதிரி சில காரணிகள் கருப்பை புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. வாய்வழி கருத்தடை மருந்துகள், தாய்ப்பால் கொடுப்பது மற்றும் கர்ப்பம், கருப்பை நீக்கம் ஆகியவை இதில் அடங்குகிறது. அதே மாதிரி உங்க குடும்பத்தில் வேறு யாருக்காவது கருப்பை புற்றுநோய் வரும் அபாயம் இருந்தால் உங்களுக்கும் அது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்

மெலனோமா தோல் புற்றுநோய்

பெண்களுக்கு வரும் 5வது புற்றுநோயாக மெலனோமா உள்ளது. ஆனால் இந்த புற்றுநோயை 86 சதவீதம் வரை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது இந்த மெலனோமா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் விகிதம் 3ல் 1 பங்கிற்கு மேல் (35 சதவீதம்) அதிகரித்துள்ளது.
தோல் புற்றுநோய் நிபுணர்களும் மற்றும் காஸ்மெடிக்ஸ் யுகேயின் மருத்துவர்களும் இது குறித்து கூறுகையில் சூரியனால் தோலில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் வெயில் காலங்களில் வெளியில் செல்லும் போது SPF காரணி அடங்கிய சன்ஸ்க்ரின் லோசன்களை பயன்படுத்த வலியுறுத்துகின்றனர்.
சூரியன் இல்லாமல் மேகமூட்டமான நாட்களில் கூட சூரியக் கதிர்கள் வெளிப்படுகின்றன. எனவே எல்லா நாட்களும் சன்ஸ்க்ரின் பயன்படுத்துவது அவசியமாகிறது என்கிறார்கள். குறிப்பாக வெயில் காலத்தில் சூரியக் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தோல் புற்றுநோய் வரும் அபாயம் அதிகம். ஏனெனில் சூரியக் கதிர்கள் சருமத்தில் சரும எரிச்சலை ஏற்படுத்தி சருமத்தின் தன்மையையே மாற்றி புற்றுநோய் செல்களை உண்டாக்கி விடுகிறது. மேலும் பெண்களின் சருமம் மிருதுவாக இருப்பதால் பாதிப்புகளின் தீவிரம் அதிகம் எனவே பெண்கள் வெளியே செல்லும் போது தவறாமல் சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்

குடல் புற்றுநோய்

குடல் புற்றுநோய் பெண்களுக்கு ஏற்படும் 3 வது புற்றுநோயாக உள்ளது. புற்றுநோய் ஆராய்ச்சி படி 54 சதவீதம் வரை புற்றுநோயை தடுக்க முடியும். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிட்டு வந்தால் குடல் புற்றுநோய் வருவதை தவிர்க்க முடியும். பெண்கள் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை தவிர்த்து குடலை ஆரோக்கியமாக வைக்க முன் வர வேண்டும்

XXL சைஸ்ல இருக்கற நீங்க M சைஸ்க்கு வரணுமா? தினமும் இந்த பழத்த சாப்பிடுங்க...

XXL சைஸ்ல இருக்கற நீங்க M சைஸ்க்கு வரணுமா? தினமும் இந்த பழத்த சாப்பிடுங்க...

எடையைக் குறைக்க வேண்டும் என்ற பெரும் லட்சியத்தோடு தான் இந்த உலகமே அதிகாலையில் எழுந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் என்ன 

samayam tamil

தேங்கும் கொழுப்பு

எடையைக் குறைக்க வேண்டும் என்ற பெரும் லட்சியத்தோடு தான் இந்த உலகமே அதிகாலையில் எழுந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் சில பேர் உடல் பருமனாக இருக்க மாட்டார். ஆனால் முக்கியமாக கொழுப்பு தேங்கும் இடங்களாக, தொடைப் பகுதியும் இடுப்பைச் சுற்றியும் மட்டுமே பெரும்பாலும் இருக்கிறது. சிலருக்கு உடல் முழுக்க கொழுப்பு படிந்து எடை கூடுவதும், சிலருக்கு கையின் அடிப்பகுதி, சிலருக்கு அடிவயிற்றுப் பகுதி, தொடைப்பகுதி மற்றும் இடுப்பகுதிகளில் கொழுப்பு தேங்குவது என்பது எல்லாமே ஒன்று கிடையாது. இவை ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு. உடல் முழுக்க கொழுப்பு இருந்தால் கூட சில குறிப்பிட்ட டயட்டுகளின் மூலமாகக் குறைத்துவிட முடியும். ஆனால் தனித்தனி பாகங்களில் தேங்கும் கொழுப்பைக் கரைப்பது மிகக் கடுமையான விஷயம் தான்.

​இடுப்பு மற்றும் அடிவயிறு சதை

நிறைய பேருக்கு இருக்கும் கவலையே எப்படியாவது இடுப்பைச் சுற்றிலும் மற்றும் தொடைப் பகுதியிலும் இருக்கும் கொழுப்பைக் கரைத்து சிக்கென்று கொஞ்சமாவது ஃபிட்டாக ஆக வேண்டும் என்பது தான். ஆனால் உடல் முழுவதும் இல்லாமல் தனியே குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தசைகளை மட்டும் எப்படி குறைப்பது என்பது தெரியாமல் தான் பெரும் குழப்பத்தில் எதையாவது முயற்சித்து தேவையில்லாமல் ஏற்படும் பக்க விளைவுகளால் இன்னும் கொஞ்சம் எடையை அதிகமாக்கிக் கொள்கிறார்கள். இனி அந்த கவலையெல்லாம் உங்களுக்கு வேண்டாம்.

எப்படி ஈஸியா குறைக்கலாம்?

இடுப்பில் அதிகமாகத் தேங்கியிருக்கும் சதையைக் குறைக்க சில பழங்கள் மிகுந்த உதவியாக இருக்கின்றன. அப்படி எந்தெந்த பழங்களைச் சாப்பிட்டால் இடுப்பில் சேருகிற தேவையில்லாத சதைகள் நீங்கும்? கீழே கொடுக்கப்படும் 4 வகை பழங்களை உங்களுடைய தினசரி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் நினைத்ததை விட, வேகமாகவே உங்கள் தொடைப்பகுதி மற்றும் இடுப்பைச் சுற்றிய பகுதிகளில் உள்ள கொழுப்பைக் கரைத்து விட முடியும்.

ஆப்பிள்

samayam tamil

ஆப்பிள் இடுப்பில் தேங்கியிருக்கும் சதைகளைக் குறைக்க உதவும் பழங்களில் மிகச் சிறந்தது. ஆப்பிளில் இருக்கும் நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்தும். கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது. ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளில் கிட்டதட்ட 95 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. அதில் 25 கிராம் அளவு கார்போஹைட்ரேட், 4 கிராம் நார்ச்சத்து, 14 சதவீதம் வைட்டமின் சி, 6 சதவீதம் பொட்டாசியம் மற்றும் 5 சதவீதம் வைட்டமின் கே ஆகியவை இருக்கின்றன. இவை கிட்டதட்ட ஒரு நாளைக்குத் தேவையான நம் உடலுக்கான ஊட்டச்சத்தில் கிட்டதட்ட 16 சதவீதத்தை நிறைவு செய்கிறது. காலையில் ஒரு ஆப்பிளை எடுத்துக் கொண்டால், மதியம் வரை உங்களுடைய பசியும் கட்டுப்படும். நிறைவான உணர்வோடு உடலும் லேசாக இருக்கும்

​பிளட் ஆரஞ்சு (blood oranges)

samayam tamil

ஆரஞ்சுப் பழத்தில் உள்ள அதிக அளவிலான வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் உங்களுடைய உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். சருமத்தில் சேதங்கள் ஏற்படாமல் இளமையாக வைத்திருக்கும். தொடை மற்றும் இடுப்புப் பகுதகளில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது. கேன்சர் செல்களையும் கூட தாக்கி அழிக்கும் இந்த ஆரஞ்சு நாள் முழுவதுக்குமான எனர்ஜியைத் தரும். அதோடு எடை கூடியதால் உண்டாகும் மன அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் சி ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக இது உங்களுடைய நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்

​மெலன் பழங்கள்

samayam tamil

வாட்டர்மெலன் இயற்கையிலேயே அதிக அளவு மினரல்களும் வைட்டமின்களும் கொண்டது. மற்ற ஸ்நாக்ஸ் போன்றே உணவுகளுக்குப் பதிலாக வாட்டர்மெலன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக மதிய வேளைகளில், அரிசி சாதம், காய், கூட், அப்பளம் என சாப்பிடுகிறவராக அதற்கு பதிலாக ஒரு கப் வாட்டர்மெலன், கொஞ்சம் சாதம், நிறைய காய்கறிகள் எடுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய கலோரியையும் குறைக்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். அதனால் உடலில் தேவையில்லாமல் கொழுப்பு மற்றும் கழிவுகள் எதுவும் சேராது. மிகச்சிறந்த டாக்சிக் உணவாக வாட்டர்மெலன் இருக்கிறது. இதை வெயில் காலத்தில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. மற்ற சமயங்களிலும் சாப்பிடலாம். சிலர் சளி பிடிக்கும் என்று பயப்படுவார்கள். அப்படியெல்லாம் கொள்ளத் தேவையில்லை

காய்ச்சலைப் போக்க உதவும் அற்புத கசாயம்

காய்ச்சலைப் போக்க உதவும் அற்புத கசாயம்

keerai_soup

தீராத காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் புளியாரைக் கீரை மிளகு கசாயம் வைத்துக் குடியுங்கள். காய்ச்சல் பறந்தோடிப் போகும். 
தேவையான பொருட்கள்
புளியாரைக்  கீரை   -  ஒரு கைப்பிடி
மிளகு                            -   10 கிராம்
மஞ்சள் தூள்               -  சிறிதளவு
செய்முறை
முதலில்  புளியாரைக் கீரையை  நன்றாக சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். மிளகைத் தட்டி தூளாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள புளியாரைக் கீரை , மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக்  கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பயன்கள்
இந்தக் கசாயம் அனைத்து விதமான காய்ச்சல்களுக்கும் அருமருந்தாக  உதவும். காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.
- கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

உங்க எலும்பு எப்படி? வீக்கா/ஸ்ட்ராங்கா? சோதித்துப் பார்க்கலாம் வாங்க!

உங்க எலும்பு எப்படி? வீக்கா/ஸ்ட்ராங்கா? சோதித்துப் பார்க்கலாம் வாங்க!

வயதாக ஆக சிலருக்கு பல பிரச்னைகள், பலருக்கு சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான பிரச்னை என்னவென்றால் எலும்பு சார்ந்த பிரச்னைகள் எனலாம். 50 வயதுக்குமேல் நாம் வெளிப்பார்வைக்கு ஆரோக்கியமாகத் தென்பட்டாலும், உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் அது.
ஆஸ்டியோபொராஸிஸ் (osteoporosis) போன்ற வியாதிகள் அறிகுறியே காட்டாமல் திடீரென்று தாக்கிவிடக் கூடும். எனவே கூடுமானவரையில் எச்சரிக்கையுடன் இருப்பதுதான் நல்லது. அதுவும் குறிப்பாக பெண்கள் மேலும் கவனத்துடன் இருப்பது நலம். ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினர் என யாராக இருந்தாலும் அவரவர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருந்தால் மருத்துவமனை செலவுகளை மிச்சப்படுத்தலாம்.
சுறுசுறுப்பான நடைபயிற்சி
காலை, மாலை, இரவு என தினமும் 10 நிமிடங்கள் நடைபயிற்சிக்காக நீங்கள் செலவழிக்க வேண்டும். வாக்கிங் அல்லது ரன்னிங் என எதில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதோ அந்த பயிற்சியை செய்யுங்கள். இதனை வெயிட் பேரிங் எக்ஸர்ஸைஸ் (Weight-bearing exercise) என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள். இதில் முக்கியமானது என்னவென்றால் உங்கள் பாதம் பூமியில் நன்றாக அழுத்தமாக பதிய வேண்டும். அப்போதுதான் உடல் தசைகள் வலுவாகும். நீச்சல் பயிற்சி செய்வதும் மிகவும் நல்லது. 19 லிருந்து 49 வயதுள்ளவர்கள் ஏரோபிக் பயிற்சிகளில் தினமும் ஈடுபடலாம்
புகைப் பழக்கம் வேண்டாம்
எலும்பு ஆரோக்கியத்துக்கு முக்கிய எதிரி புகை பிடிக்கும் பழக்கம். இளம் வயதில் புகைக்க ஆரம்பித்தவர்கள் வயதாக ஆக எலும்புப் பிரச்னைகளை எதிர் கொள்ள நேரும். நீண்ட கால புகைக்கும் பழக்கமுடையவர்களுக்கு ஆஸ்டியோபொராஸிஸ் வர அதிக வாய்ப்புள்ளது. பெண்களைப் பொருத்தவரை மெனோபாஸ் காலகட்டத்துக்குப் பிறகு ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் சுரப்பு குறைந்து ஒருகட்டத்தில் நின்றுவிடும். அப்போது எலும்புத் தேய்மானங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
உடல் எடை குறைக்காதீர்கள்
உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருப்பது முக்கியம் அதே சமயம் எலும்புகள் வலுவுடன் இருப்பதும் முக்கியம். எனவே எடை குறைப்புச் சாதனை செய்கிறேன் பேர்வழி என்று எலும்பும் தோலுமாக மாறி விடாதீர்கள். சிலர் உடல் எடையை குறைக்க உணவைக் குறைத்துக் கொள்வார்கள். இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.
உடல் பருமன் பிரச்னைகளுக்கு தகுந்த மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்ற பின்புதான் டயட்டிங், உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடவேண்டும். சுய மருத்துவம் எந்தளவுக்கு ஆபத்தோ அதே போலத்தான் சுயமாக எடை குறைப்பு விஷயங்களில் ஈடுபடுவதும். சத்துப் போதாமை ஏற்பட்டு எலும்பு வரை அந்த பாதிப்புக்கள் நீடிக்கும். எனவே பத்திரிகையில் படித்தும், ஆன்லைனில் பார்த்தும் கண்டடைந்த குறிப்புகளையும் பின்பற்றத் தொடங்கினால் உடல் எடை வேண்டுமானாலும் குறையலாம். ஆனால் உடல் மெலிந்து, எலும்புத் தேய்மானமும் இலவச இணைப்பாக சேர்ந்து வந்துவிடக் கூடும்.
ஹார்மோன் பிரச்னைகள்
ஆண்களை விட பெண்களுக்குத் தான் எலும்புத் தேய்மானப் பிரச்னைகள் அதிகம் ஏற்படுகிறது. மெனோபாஸ் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் இதனை எதிர்கொள்ள போதிய அளவுக்கு ஊட்டச் சத்துக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 700 மில்லிகிராம் கால்ஷியமும் 10 மைக்ரோ கிராம் அளவு வைட்டமின் டி உங்கள் எலும்புகள் பலமாகவும் உறுதியாகவும் இருப்பதற்குத் தேவை. எனவே கால்ஷியம் மற்றும் வைட்டமின் டி சத்துள்ள உணவுகளை மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிடுங்கள். அதற்காக அதிகப்படியான கால்ஷியம் உடலில் சேர்வதும் ஆபத்துதான். இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆரோக்கியமான சமச்சீரான உணவுதான் சிறந்தது. வைட்டமின் டி சூரிய ஒளியினால் 90 சதவிகிதம் கிடைத்துவிடும். 10 சதவிகிதம் மீன் உள்ளிட்ட சத்தான உணவின் மூலம் கிடைக்கும். 
ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால்
விபத்தினாலோ கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். காரணம் பட்ட காலில் படும் என்பது போல் மீண்டும் அதே இடத்தில் அடிபட்டால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக நேரிடும். வீட்டில் கார்பெட், பாத்ரூம் போன்றவற்றை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். உங்களுக்கு நன்றாக குணம் ஆகும் வரையில் கூடுதல் ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களின் உதவியை நாடுவதில் தவறில்லை.
வரும் முன் காத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்
பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருந்தால் உடல் எடையை மருத்துவரின் பரிந்துரைப்படி குறைப்பது நல்லது. ஏற்கனவே விபத்தினால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், புகைப் பிடிக்கு பழக்கம் உள்ளவர்கள், நோய்க்காக ஸ்ட்ராய்ட் எடுத்துக் கொள்பவர்கள், சிகிச்சை காரணமாக அதிகளவில் வலி நிவாரணி மருந்துகளை உட்கொண்டவர்கள் ஆகியோர் தற்காப்பு நடவடிக்கையாக ஒரு போன் டென்ஸிட்டி ஸ்கேன் (bone density scan) எடுத்துப் பார்ப்பது நல்லது. அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் எலும்புப் பிரச்னைகளின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனம். 
இந்த வழிமுறைகளைத் தவிர முக்கியமானது எதுவென்றால் நம்பிக்கைதான். எனக்கு அந்தப் பிரச்னை வருமோ இது வருமோ என்று கவலைப்பட்டுக் கொண்டே வேண்டாத பிரச்னைகளை எல்லாம் வரவழைத்துக் கொள்ளாதீர்கள். நல்ல எண்ணங்களும், நல்ல மனநிலையும்தான் முக்கியம். நெகடிவ் எண்ணங்கள் தான் பாதிக்கும் மேலான வியாதிகளுக்குக் காரணம். நமக்கு என்னவென்றே தெரியாத வியாதிகளையெல்லாம் இந்த நவீன யுகத்தில் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் பலியாகாமல் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று மனத்தை தெளிவாக வைத்திருந்தால் போதும். உடல் நலம் உள்ள நலம் என எல்லாமே சிறக்கும்.

    பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?

    பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?


    2

    பொதுவாக சிலருக்கு உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் தயங்குவார்கள். இப்படி பற்களில் படிந்து இருக்கும் கறையைப் போக்க சில எளிய வழிகள் இதோ:
    தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும். 
    இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தபிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும். 
    ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இரண்டு எடுத்து நன்றாக அரைத்து, தினமும் காலையில் பல் தேய்த்தவுடன், சிறிதளவு எடுத்து லேசாக பற்களில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்து வர, பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
    பற்களை சுத்தமாக்குவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் அளிப்பதிலும் ஆப்பிளின் பங்கு சிறந்தது. எனவே உணவை சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிளை சில துண்டுகள் சாப்பிட்டு வர, பற்களில் கறை படிவதைத் தடுக்கலாம்.
    கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் பற்களில் உள்ள கறையைப் போக்க மிகச்சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும்.
    1 தேக்கரண்டி கிராம்புத் தூளுடன், 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்து, சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிப்பதன் மூலம் சுத்தமான பற்களைப் பெறலாம்.
     - ஏ.எஸ். கோவிந்தராஜன்

    முகப்பரு பிரச்னையா? கண்ட கண்ட கிரீம்களை போடாதீங்க!

    முகப்பரு பிரச்னையா? கண்ட கண்ட கிரீம்களை போடாதீங்க!


    mm2

    இன்றைய இளம் தலைமுறையினர் உடல்ரீதியாக சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. இது முகத்தின் அழகையே கெடுத்து விடுவதால், கண்ட கண்ட கிரீம்களை வாங்கி போட்டு முகத்தை மேலும் வீணாக்கிக் கொள்கின்றனர். அவ்வாறு செய்யாமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். அதற்கான தீர்வுகளை பார்ப்போம்:
    ஒரு நாளைக்கு 2-3 முறை மிதமான ஃபேஸ் வாஷ் (Face wash) கொண்டு முகத்தைக் கழுவலாம்.
    வாரம் 3-4 முறையாவது மிதமான ஷாம்பு போட்டு தலைமுடியை சுத்தப்படுத்த வேண்டும்.
    முகத்துக்கு மட்டும் தனியாக துண்டு அல்லது டிஷ்ஷூ பயன்படுத்தி முகத்தை துடைக்கவும். தலை துவட்டும் துண்டிலே முகத்தைத் துடைக்கக் கூடாது.
    ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வைத்து குழைத்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் பரு நீங்கும். இனி பருவோ ஆக்னியோ வராது.
    துளசி இலை பவுடர் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமட்டி ஒரு தேக்கரண்டி நன்றாக கலந்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
    வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டரில் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விட வேண்டும். தொடர்ந்து செய்து வர, முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.
    பட்டைத் தூளை தேன் கலந்து குழைத்து பரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவலாம். 2 மாதம் தொடர்ந்து செய்து வர பரு நீங்கும்.
    - கவிதா பாலாஜிகணேஷ்

    இதயம் சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் கசாயம்

    இதயம் சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் கசாயம்

    27-1425012515-araikeerai

    இருதயம் சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் ஆரைக் கீரை தாமரைப் பூ கசாயத்தை குடித்துவர விரைவில் குணமாகும். 
    தேவையான பொருட்கள்
    ஆரைக்  கீரை     -  ஒரு கைப்பிடி
    தாமரைப் பூ.       -  இரண்டு
    ஏலக்காய்.           -   4
    மஞ்சள் தூள்      -  2 சிட்டிகை
    செய்முறை
    முதலில் ஆரைக் கீரை மற்றும் தாமரைப் பூ ஆகியவற்றை  நன்றாக சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயைத் தட்டி தூளாக்கிக் கொள்ளவும்.
    ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள ஆரைக் கீரை , தாமரைப் பூ , ஏலக்காய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக  கொதிக்க வைக்கவும்.
    நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
    பயன்கள்
    இந்தக் கசாயம் இருதயம் சார்ந்த குறைபாடு உள்ளவர்களுக்கு அருமருந்தாகும். இந்தக் கசாயத்தை தினமும் காலை  வேளையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.
    இரவு படுக்கப் போகும் முன்
    வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
    குறிப்பு
    அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.
    - கோவை பாலா 
    இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

    கர்ப்பிணிப் பெண்களின் முதுகு வலியை குணப்படுத்த இதோ எளிய வழி!

    நல்ல பசி எடுக்கணுமா? இந்தக் கசாயத்தைக் குடியுங்கள்!

    keerai soup
    சிலர் நேரத்திற்குச் சாப்பிடமாட்டார்கள், காரணம் பசி இல்லை என்பார்கள். அவர்கள் இந்த கசாயத்தைக் குடித்துவர நல்ல பசி உணர்வைத் தூண்டும். 
    தேவையான பொருட்கள்
    புளியாரைக்  கீரை   -  ஒரு கைப்பிடி
    பூண்டு                          -  10 பல்
    மிளகு                             -   5 கிராம்
    சீரகம்                            -   5  கிராம்
    மஞ்சள் தூள்                 -  சிறிதளவு
    செய்முறை
    முதலில்  புளியாரைக் கீரையை  நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். பூண்டை நன்கு தட்டிக் கொள்ளவும். மிளகைத் தட்டி தூளாக்கிக் கொள்ளவும்.
    ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள புளியாரைக் கீரை ,  பூண்டு , சீரகம் , மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக  கொதிக்க வைக்கவும்.
    நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
    பயன்கள்
    இந்தக் கசாயம்  பசியின்மையைப் போக்கி நன்றாக பசி உணர்வை அதிகரிக்க உதவும் அருமருந்தாகும். பசியின்மை குறைபாட்டால் பாதிக்கப் பட்டவர்கள் தினமும் காலை  மற்றும் மாலை என இரண்டு வேளையும்   இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்து வரவும்.
    இரவு படுக்கப் போகும் முன்
    வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
    குறிப்பு
    அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.
    - கோவை பாலா
    இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
    Cell  :  96557 58609   ,  75503 24609
    Covaibala15@gmail.com  

    நல்ல பசி எடுக்கணுமா? இந்தக் கசாயத்தைக் குடியுங்கள்!

    நல்ல பசி எடுக்கணுமா? இந்தக் கசாயத்தைக் குடியுங்கள்!

    keerai soup
    சிலர் நேரத்திற்குச் சாப்பிடமாட்டார்கள், காரணம் பசி இல்லை என்பார்கள். அவர்கள் இந்த கசாயத்தைக் குடித்துவர நல்ல பசி உணர்வைத் தூண்டும். 
    தேவையான பொருட்கள்
    புளியாரைக்  கீரை   -  ஒரு கைப்பிடி
    பூண்டு                          -  10 பல்
    மிளகு                             -   5 கிராம்
    சீரகம்                            -   5  கிராம்
    மஞ்சள் தூள்                 -  சிறிதளவு
    செய்முறை
    முதலில்  புளியாரைக் கீரையை  நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். பூண்டை நன்கு தட்டிக் கொள்ளவும். மிளகைத் தட்டி தூளாக்கிக் கொள்ளவும்.
    ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள புளியாரைக் கீரை ,  பூண்டு , சீரகம் , மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக  கொதிக்க வைக்கவும்.
    நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
    பயன்கள்
    இந்தக் கசாயம்  பசியின்மையைப் போக்கி நன்றாக பசி உணர்வை அதிகரிக்க உதவும் அருமருந்தாகும். பசியின்மை குறைபாட்டால் பாதிக்கப் பட்டவர்கள் தினமும் காலை  மற்றும் மாலை என இரண்டு வேளையும்   இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்து வரவும்.
    இரவு படுக்கப் போகும் முன்
    வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
    குறிப்பு
    அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.
    - கோவை பாலா
    இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
    Cell  :  96557 58609   ,  75503 24609
    Covaibala15@gmail.com  

    தீராத தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அருமருந்து!



    தீராத தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அருமருந்து!
    karisalanganikeeraiதீராத தலைவலியை தீர்க்க உதவும் கரிசலாங்கண்ணிக் கீரை சோம்பு கசாயத்தை பயன்படுத்தி பயனடையுங்கள். 

    தேவையான பொருட்கள்
    கரிசலாங்கண்ணிக் கீரை   -  ஒரு கைப்பிடி

    சோம்பு.                      -    ஒரு ஸ்பூன்

    மிளகு.                        -   10

    மஞ்சள் தூள்.            -  சிறிதளவு

    செய்முறை
    முதலில் கரிசலாங்கண்ணிக் கீரையை நன்றாக கழுவி ஆய்ந்து கொள்ளவும். மிளகை தூள் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் கீரை , சோம்பு மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்து நீரை 150 மி.லி அளவாகச் சுண்ட வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு குடிக்கவும்.

    பயன்கள்
    இந்தக் கசாயத்தை தலைவலியினால் துன்பப்படும்பொழுது தயார் செய்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். தொடர்ந்து தலைவலியினால்  பாதிக்கப்பட்டவர்கள்  இந்தக் கசாயத்தை தினமும் ஒருவேளை வெறும் வயிற்றில் 48 நாட்களாவது குடித்து வந்தால் தீராத வலைவலியும் தீரும்.

    இரவு படுக்கப் போகும் முன்
    வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

    குறிப்பு
    அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.
    - கோவை பாலா

    இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
    Cell  :  96557 58609 
    Covaibala15@gmail.com

    கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

          அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...