Monday, April 20, 2020

கர்ப்பமா இருக்கும் போது சாப்பிடவே கூடாத உணவு பொருள்கள் என்னென்ன தெரியுமா?

ர்ப்பமா இருக்கும் போது சாப்பிடவே கூடாத உணவு பொருள்கள் என்னென்ன தெரியுமா?

கர்ப்பக்காலத்தில் ஒவ்வாமை இருப்பது இயல்பானது. அதை மாற்றும் வகையில் உணவு பொருள்களின் துணையை மட்டுமே நாட வேண்டும்.


samayam tamil

கர்ப்பக்காலத்தில் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடகூடாது? என்று ஒரு பட்டியலே உண்டு. வாய்க்கு சுவை அளிக்கும் என்று விரும்பும் உணவு கூட அந்த நேரத்தில் உடலுக்கும் வயிற்றில் இருக்கும் கருவுக்கும் ஒவ்வாமையை உண்டாக்கிவிடக்கூடும் என்பதால் ஒவ்வொரு வேளை உணவையும் பார்த்து பார்த்து சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள். கர்ப்பக்காலத்தில் பெண் தனக்கு மட்டுமில்லாமல் வயிற்றில் இருக்கும் கருவுக்கும் சேர்த்து சாப்பிடுவது கட்டாயமாகிறது. அதனால் உணவை சத்துகுறையாமல் குறைபாட்டை உண்டாக்காமல் பார்த்துகொள்வது அவசியமாகிறது. என்னென்ன உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் தெரிந்துகொள்வோம்.

எள் கலந்த உணவு

samayam tamil


முன்னோர்கள் ஆரம்ப கட்ட கருவை கலைக்க பயன்படுத்திய பொருளை கர்ப்பிணிகள் சாப்பிடுவார்களா என்று கேட்கலாம். எள் உருண்டையாக சாப்பிட்டால் தான் கரு கலையும் என்பதில்லை. எள்ளை மற்ற உணவு பொருள்களில் கலந்து சாப்பிட்டாலும் கூட ஆரம்ப கட்ட கர்ப்பத்தில் அவை ஆபத்தைதான் உண்டாக்கும்.ஏனெனில் ஒவ்வாமையை குமட்டலை தவிர்க்க சுக்கு தட்டிபோட்ட எள்ளு உருண்டையை சாப்பிடுபவர்கள் உண்டு.
எள் விதைகள் கர்ப்பப்பையின் உள் இருக்கும் கருமுட்டையை வெளியேற்றும் வகையில் கருப்பை தசையை தூண்டுகிறது. அதனால் எள் கலந்த உணவு பொருள்களை ஆறு மாதங்கள் வரையேனும் தொடாமல் இருப்பது நல்லது.

மெர்குரி அதிகம் இருக்கும் மீன்

மீன்களில் அதிக அளவு இருக்கும் பாதரசமானது வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியிலும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியிலும் குறைபாட்டை உண்டாக்கும் நரம்பியலில் நச்சை உண்டாக்ககூடியது என்பதால் இவை குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்ககூடும். அதனால் சுறா, வாள்மீன் என கடலில் வாழும் பெரிய மீன்களை தவிர்க்க வேண்டும்.
அதே நேரம் சால்மன் மீன், கெளுத்தி, கெண்டை, சிறு மீன்களை சாப்பிடலாம். வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் வரை எடுத்துகொள்ளலாம்.

முட்டை

samayam tamil

புரதம், இறைச்சி மற்றும் முட்டையில் அதிகளவு நிறைந்திருப்பதால் அடிக்கடி சேர்க்கவேண்டும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் கர்ப்பத்தின் முதல் காலகட்டத்தில் எஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும் போது உண்டாகும் ஒவ்வாமை உணர்வு அதிகமாக உணவிலும் பிரதிபலிக்கும். முதல் மூன்று மாதங்களில் முட்டையை எடுத்துகொள்ளும் போது நன்றாக வேக வைத்து, பொரித்து சாப்பிடவேண்டும். ஆஃப் ஆயில், அரை வேக்காட்டில் வேகவைத்து சாப்பிடுவது வயிற்றுபோக்கு வாந்தி பிரச்சனையோடு உடலை பலவீனப்படுத்தவும் செய்யும்.

காஃபின்

samayam tamil

கர்ப்பக்காலம் முழுமையுமே கடைபிடிக்க வேண்டிய விஷயம் இது. காஃபின் நிறைந்த பானங்கள், சாக்லெட் பொருள்கள் போன்றவற்றை அவ்வபோது எடுக்கவே கூடாது. தவிர்ப்பதும் கூட நல்லதுதான்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் இவை கருச்சிதைவை ஏற்படுத்தினால் நாளடைவில் இவை வயிற்றில் இருக்கும் குழந்தையின் உடல் வளர்ச்சியில் குறைபாட்டை உண்டாக்கும். காஃபின் என்பது போதை பொருள் போன்றது. இவை தற்காலிகமாக புத்துணர்ச்சியாக இருப்பது போன்ற உணர்வை தந்தாலும் கூட இவை ஆரோக்கியத்தை கெடுக்க மட்டுமே செய்யும். அப்படியெனில் காஃபிக்கு மாற்றாக க்ரீன் டீ குடிக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் அளவோடு பரிந்துரைக்கப்படும் காபி அளவு கூட க்ரீன் டீயில் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதப்படுத்தப்பட்ட உணவு

samayam tamil
samayam tamil

பதப்படுத்தப்பட்டிருக்கும் உணவுகள் அனைத்திலும் நச்சுத்தன்மை கொண்ட பிஸ் பினால் ஏ என்னும் கெமிக்கல் அடங்கியுள்ளது. கண்ணுக்குத்தெரியாமல் இருக்கும் கிருமிகள் இதில் தங்கிவிடவும் கூடும் என்பதால் கருவுற்ற நாள் பிரசவம் வரை இந்த வகை உணவுகளை நிச்சயம் தவிர்கக் வேண்டும்.
இவை வயிற்றில் வளரும் குழந்தையின் நாளமில்லா சுரப்பி செயல்பாட்டை சேதாரமாக்கும். இதனால் கர்ப்பக்கால பிரச்சனையோடு வேறு பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.உணவிலும் சுவைக்காக சேர்க்கப்படும் அஜினோமோட்டோ முதல் செயற்கை நிறமூட்டிகள் தவிர்க்க வேண்டும். அதே போன்று குளிர்பானங்களும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை குறைக்கவே செய்யும்.

அலர்ஜிக்குள்ளாக்கும் உணவுகள்

samayam tamil

இவை சத்து நிறைந்த ஆரோக்கியமான பொருளாகவும் கூட இருக்கலாம். ஆனால் கருவுற்ற நாளில் நீங்கள் சாப்பிடும் போது அவை உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்கினால் கூர்ந்து கவனியுங்கள். தொடர்ந்து இரண்டாவது முறையும் அதே பொருள் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்கினால் நிச்சயம் அந்த பொருளை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பக்காலம் முழுமையுமே. உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் கர்ப்பக்காலத்தில் மாற்றங்கள் உண்டாகும் போது உடல் ஏற்றுகொள்ளாதவற்றை சத்துள்ளதாயிற்றே என்று மீறி மீண்டும் மீண்டும் திணிக்ககூடாது. அப்படி செய்தால் அவை வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கிவிடும் அது ஆரோக்கியமான பொருளாக இருந்தாலும் கூட.

கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

ர்ப்பமாக இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா, அது பாதுகாப்பானதா, அப்படி இருக்கலாம் என்றால் அதற்குரிய 

samayam tamil

பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா, அது பாதுகாப்பானதா, அப்படி இருக்கலாம் என்றால் அதற்குரிய பொசிஷன்கள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம்.

உடலுறவு கொள்வது சரியானதா?

samayam tamil

கர்ப்பிணிப் பெண் கர்ப்பம் தரித்த நாள் முதல் குழந்தை பெற்றெடுக்கும் வரையில், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மூன்று மாதத்துக்குப் பிறகு கருவைச் சுற்றி 'ஆம்னியான்’ (Amnion) எனப்படும் நீர் நிறைந்த பனிக்குடம் உருவாகும். நடப்பது, உட்கார்வது, படுப்பது எனத் தாயின் உடல் அசைவுகளின்போது கருவில் உள்ள குழந்தை சிதைவுறாமல் இருக்கவே இயற்கை இந்த ஏற்பாட்டைச் செய்கிறது.
அதனால் இந்த சமயத்தில் உடலுறவு கொள்வதையும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பற்றி நீங்கள் உங்களுடைய மருத்துவரின் ஆரோசனையோடு தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

கர்ப்ப கால தொடக்கம்

samayam tamil

பெண் கர்ப்பம் தரித்திருப்பது, பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவரால் உறுதி செய்யப்பட்டதும், அந்தத் தம்பதிகள் உடலுறவு கொள்வதைத் தற்காலிகமாக சிறிது காலத்திற்கு நிறுத்திக் கொள்வது நல்லது. அது வெறும் மூன்று மாதங்களுக்குத்தான். முதல் மூன்று மாதங்களில் உடல் உறவில் ஈடுபட்டால் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக உருவாவதில் சிக்கல், பனிக்குடம் உடைதல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். அதேபோல் கரு பலம் பெறுவதற்கான கால அவகாசத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். மூன்றாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை உறவில் ஈடுபடலாம்.

இரண்டாவது குழந்தை

முதல் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்திருந்தால், அதற்கு அடுத்த கர்ப்பக் காலத்தில் கட்டாயம் உடல் உறவைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை குறை பிரசவம் இல்லாமல் பத்து மாதம் முடிந்து, சிசேரியன் செய்யப்பட்டிருந்தால், அடுத்த குழந்தை கருத்தரித்திருக்கும் வேளையில், உங்களுடைய மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு, உறவில் ஈடுபடுவது நல்லது.
ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருத்தல், கர்ப்பக் காலத்தில் பிறப்பு உறுப்பில் ரத்தப்போக்கு, பிரசவத்துக்கு முன்பே கருப்பையின் வாசல் (Cervix) திறந்த நிலையில் இருப்பது, நஞ்சுக்கொடி (Placenta) கருப்பை வாசலுக்கு வந்துவிடுவது போன்ற பிரச்னைகளை எதிர் கொண்டவர்கள் கர்ப்பக் காலத்தில் உடல் உறவில் ஈடுபடுவதை கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். அதோடு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வதும் மிக அவசியம்.

பொசிசன்கள்

samayam tamil

கர்ப்பிணிக்கு எந்த நிலை சவுகரியமோ அதுதான் சரியான நிலை. குறிப்பாக கணவனின் எடை மனைவியின் வயிற்றை அழுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓர் உதாரணம்... இருவரும் எதிரெதிரே உட்கார்ந்த நிலையில் உறவு கொள்வது ஆபத்தைத் தவிர்க்கும்.
கர்ப்ப காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருப்பதற்காகவே சில பொசிசன்கள் இருக்கின்றன. உதாரணமான ஸ்பூன் என்றொரு பொசிஷன் உண்டு. அதில் கர்ப்பிணிகளின் வயிறு அழுத்தப்படாமல், ஒருக்களித்துப் படுத்திருக்க முடியும். இந்த பொசிஷனின் மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதேபோல், படுக்கை அறையில் முரட்டுத்தனம் கூடாது.

கிருமித்தொற்றை தடுக்க

samayam tamil

பொதுவாக நோய்த்தொற்றுக்கள் உடலுறவின் வழியே ஆணிடம் இருந்து பெண்ணுக்கும், பெண்ணிடம் இருந்து ஆண்களுக்கும் அதிக அளவில் பரவ வாய்ப்புண்டு. அதிலும் கர்ப்ப காலத்தில் அவ்வாறு பரவும் தொற்றுக்கள் குழந்தையையும் பாதிக்க வாய்ப்பு அதிகம். அதனால் உடலுறவுக்கு முன்னர் ஆண், பெண் இருவருமே பிறப்பு உறுப்புகளை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், தொற்றுக் கிருமிகள் கர்ப்பிணியையும் சிசுவையும் பாதிக்கும். குறிப்பாக, வாய் வழி உறவில் நாட்டம் இருப்பவர்கள் சிறிது காலத்திற்கு அதுபோன்ற முறைகளைத் தவிர்த்தல் வேண்டும்.


ஓம வாட்டர் குழந்தைக்கு எப்போது எவ்வளவு வரை கொடுக்கலாம்! என்ன நன்மை கிடைக்கும்!

ம வாட்டர் குழந்தைக்கு எப்போது எவ்வளவு வரை கொடுக்கலாம்! என்ன நன்மை கிடைக்கும்!

கைக்குழந்தை இருக்கும் வீடுகளில் இருக்க கூடிய பொருள்களில் ஓமமும் ஒன்று.

samayam tamil

நவீன மருத்துவம் இல்லாத காலங்களில் முன்னோர்கள் கைவைத்தியத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருந்தார்கள். குறிப்பாக கைக்குழந்தைகள் ஆரோக்கியமாக வளர பாரம்பரியமான மருந்துகளை மட்டுமே பயன்படுத்தினார்கள். கைக்குழந்தை அழுவதற்கு காரணங்களே அறிய முடியாத நிலையில் குழந்தையின் அழுகையை நிறுத்த உதவியது ஓமம் நீர்தான். பிள்ளைவளர்த்தி போன்று ஓமத்துக்கும் குழந்தைகளின் மருத்துவத்தில் மிக முக்கிய இடம் இருந்தது. நவீன மருத்துவம் பெருகிவரும் நிலையில் ஓமநீரை கொடுக்கலாமா என்பது குறித்தும் தெரிந்துகொள்வொம்.

ஓமம்

samayam tamil

ஓமம். வெப்பத்தன்மையும், கார்ப்புச்சுவையும் கொண்டிருக்ககூடியது. ஓமச்செடிகளிடமிருந்து இதன் விதைகளை பெறுகிறோம். உணவில் சுவையை கூட்ட பயன்படுத்து ஓமம் ஜீரணக்கோளாறுகளையும் நீக்குகிறது.
வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்குவதில் முதன்மையாக செயல்படும் ஓமத்தை கைக்குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உள்ளுக்கு எடுத்துகொள்ளலாம். தற்போது பிறந்த குழந்தைக்கு ஓமநீர் எவ்வளவு கொடுக்கலாம், எப்போது கொடுக்கலாம் என்பதையும் அறிவோம்.

ஓம நீர்

samayam tamil

ஓமநீரை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால் கைக்குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம்.
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஓமவிதையை வாங்கி தயாரிக்கலாம். வெறும் வாணலியில் 50 கிராம் அளவு ஓம விதைகளை வறுத்து கொள்ளுங்கள். அதிகமாக வறுக்க வேண்டாம் இலேசாக வாசம் போகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்கவும். பிறகு அதை ஆறவிட்டு 1 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். இவை சுண்டி கால் லிட்டராக வரும் போது இறக்கி வையுங்கள்.
குழந்தைகளுக்கான பக்குவம் இது என்பதால் 50 கிராம் அளவுக்கு 1 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். பெரியவர்களுக்கு என்னும் போது விதைகள் 100 கிராம் அளவுக்கு இருக்கலாம். கூடவே ஓமபொடியையும் சேர்க்கலாம்.

எப்போது

samayam tamil

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலிலேயே உடலில் எதிர்ப்பு சக்தி பெறக்கூடிய அளவுக்கு சத்து இருக்கும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலச்சிக்கல், வயிறு கோளாறு, வயிறு உபாதை போன்ற பிரச்சனைகளையும் அடிக்கடி சந்திக்காது. அதனால் தாய்ப்பால் குடிக்கும் வரை குறைந்தது ஐந்து மாதங்கள் வரை குழந்தைகளுக்கு கைவைத்தியம் தேவைபடாது.
ஆறாம் மாதத்திலிருந்து திரவ ஆகாரம் சேர்க்கும் போது குழந்தைக்கு வயிறு கோளாறு, மாந்தம், வயிறுவலி, மலம் கழிக்கும் போது அவஸ்தை, செரிமானப்பிரச்சனை போன்றவை உண்டாகும். இதனால் குழந்தை அவ்வபோது அழ செய்யும். இந்த நேரத்தில் குழந்தைக்கு ஓமநீருடன் சம அளவு தண்ணீர் கலந்து இனிப்புக்கு தேன் சேர்த்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.ஓமநீரில் தேன் கலக்க வேண்டாம். எப்போது குழந்தைக்கு தருகிறோமோ அப்போது தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

எவ்வளவு

samayam tamil

குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தால் வேறு மாற்றங்கள் என்ன என்பதையும் கவனியுங்கள். மலம் கழிப்பதற்கு முன்பு அழுதால், மலம் இறுக்கி கழிந்தால், வயிறு பகுதி கல் போன்று இறுக்கமாக இருந்தால் வயிறு கோளாறு என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த மாதிரி நேரங்களில் குழந்தைக்கு கால் டீஸ்பூன் அளவு ஓமநீருடன் வெந்நீர் மற்றும் தேன் கலந்து கொடுக்கலாம்.
அடிக்கடி கொடுக்க கூடாது நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே கொடுக்க வேண்டும். தொடர்ந்தும் கொடுக்க கூடாது. ஒரு முறை கொடுத்தாலே குழந்தையின் வயிறு கோளாறு சரியாகிவிடும். குழந்தை வலியை மறந்து சிரிக்க தொடங்கும். குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்காது ஓம நீர் என்றாலும் ஒவ்வாமையை உண்டாக்குகிறதா என்பதையும் தெரிந்துவைத்துகொள்ள வேண்டும். வயிறு இறுக்கமாக இருக்கிறது என்றோ அதிகப்படியாக குழந்தை அழுகிறது என்றோ அளவுக்கு மீறி கொடுக்க கூடாது.

உடலுக்கு பற்று

samayam tamil

பெரும்பாலும் பலரும் இதை மறந்துவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். குழந்தை அழும்போது பிள்ளை வளர்த்தியை சுட்டு தாய்ப்பாலில் குழைத்து தொப்புளைச்சுற்றி பற்று போன்று போடுவார்கள். அதே போன்று ஓமநீரில் பிள்ளை வளர்த்தி குழைத்து பற்று போடலாம்.
குழந்தைக்கு சளி இருந்து மூக்கடைப்பு இருந்தால் ஒமநீரை வெள்ளை துணியை மிதமான வெந்நீரில் கொண்டு நனைத்து அதை குழந்தையின் மூக்கின் மீது வைத்து எடுக்கலாம். மூக்கடைப்பு பிரச்சனை நீங்கும். ஓமத்தை தேங்காயெண்ணெயில் காய்ச்சி மார்பு பகுதியில் தடவி வந்தால் குழந்தையின் சளி கரைந்து வெளியேறும்.

குழந்தைக்கு உணவில்

samayam tamil

10 மாதம் ஆகும் போது குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால் வயிறு கோளாறு உண்டாகும். குழந்தைகளுக்கு மென்மையான உணவுகள் செய்யும் போது இட்லி மீது சிட்டிகை ஓமப்பொடி கலந்து ஊற்றி கொடுக்கலாம். ஓமத்தின் வாசனை தனியாக தெரியும் என்பதால் குழந்தைகள் அதை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை ஓம நீர் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து சம அளவு வெந்நீர் கலந்து கொடுக்கலாம்.
ஒவ்வொரு வாரமும் இதை தவறாமல் கொடுக்கலாம். அப்படி கொடுத்தால் வயிறு பிரச்சனைகள் எதுவுமின்றி குழந்தை நன்றாக சாப்பிட தொடங்கும். செரிமானப் பிரச்சனைகள் இருக்காது. குழந்தைக்கு பசி எடுக்கவும் செய்யும். மந்தமாக இல்லாமல் எப்போதும் உற்சாகமாக வளைய வருவார்கள்.
ஓமநீர் நிச்சயம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு குறிப்பாக வயிற்றுக்கு பாதுகாப்பாக இருக்கும். ஆனால் உரிய அளவில் தகுந்த இடைவெளியில் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உதட்டு சுருக்கத்தை போக்கி பளபள உதட்டை பெற என்ன செய்யணும்?

உதட்டு சுருக்கத்தை போக்கி பளபள உதட்டை பெற என்ன செய்யணும்?

முகத்தில் கண்கள், கண்களை சுற்றி இருக்கும் இடங்களில் மென்மை, உதடு என அனைத்துமே அழகாய் இருந்தால் தான் முகத்தில் அழகு அதிகரிக்கும். தினமும் உதட்டை அலங்கரிக்கும் லிப்ஸ்டிக் வகையறாக்கள் எல்லாமே உதட்டை பளிச்சென்று பளீரென்று காட்டும் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு உதட்டில் எதையும் பயன்படுத்தாவிட்டால் பிறகு உதட்டில் வெடிப்புகள் உண்டாகி உதட்டின் அழகை கெடுத்துவிடக்கூடும். அதனால் இயற்கையாகவே உதட்டை எப்படி பராமரிப்பது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்

தேன்

தேன் வறட்சியிலிருந்து எப்போதும் மீட்கும் குணத்தை கொண்டவை. சருமத்தை பொலிவாகவும் அழகாகவும் மென்மையாகவும் வைத்திருக்க தேனை பயன்படுத்துவதுண்டு. குறிப்பாக சருமத்தை காட்டிலும் மென்மையான உதட்டை வறட்சியிலிருந்து மீட்க தேனால் மட்டுமே முடியும்.
சுத்தமான தேனை தினமும் உதட்டில் தடவி விடுங்கள். இதனால் உதட்டின் வறட்சியை போக்கி உதட்டில் ஈரப்பதம் இருக்கும். தொடர்ந்து பயன்படுத்தும் போது லிப்ஸ்டிக்கால் உண்டாகும் கருமையும் நீங்கும். உதட்டில் ஒரு மினுமினுப்பை காணவும் தொடங்குவீர்கள்
நெய் அல்லது வெண்ணெய்
பார்க்கவே வழவழவென்று இருக்கும் இந்த பொருள் உதட்டையும் வழவழப்பாக வைத்திருக்க நிச்சயம் உதவும். உதட்டில் எப்போதும் வறட்சியில்லாமல் இருக்கவும் வெடிப்புகள் இல்லாமல் செய்யவும் வெண்ணெய் தடவலாம்.

உதடு மென்மையாக இருக்கவும். வசீகரமான உதட்டை பெறவும் தினமும் தூங்குவதற்கு முன்பு நெய் அல்லது வெண்ணெய் தடவி தூங்குங்கள். வெண்ணெய் அல்லது நெய் தடவுவதற்கு முன்பு உதட்டில் லிப்ஸ்டிக் இல்லாமல் அவை இருந்த தடம் தெரியாமல் இருக்கவேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

தேங்காய் எண்ணெய்

வீட்டில் நிச்சயம் தேங்காய் எண்ணெய் இருக்கும். அதனால் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் தேங்காயெண்ணெயை உதட்டின் மீது தடவி வரலாம். சருமத்துக்கு மாய்சுரைசர் பயன்படுத்துவது போன்று தேங்காயெண்ணெய் இயற்கையாகவே உதட்டுக்கு சிறந்த மாய்சுரைசர் என்று சொல்லலாம்.

சுத்தமான தேங்காயெண்ணெயை தினமும் 3 லிருந்து 4 முறை வரை உதட்டின் மீது பயன்படுத்துங்கள். இதனால் உதடு வெடிப்பையும் சந்திக்காது, வறட்சியையும் சந்திக்காது. எப்போதும் லிப் பாம் போடாமலே பளபளவென்று இருக்கும். எண்ணெய் உள்ளுக்குள் சென்றாலும் எதுவும் ஆகாது. ஆனால் எண்ணெய் சுத்தமானதாக இருக்கவேண்டும்.

ரோஸ்வாட்டர்

samayam tamil


முகத்துக்கு பேக் போடும் போது இதை பயன்படுத்துவதுண்டு. முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க க்ளென்சிங் செய்ய இதை பயன்படுத்துவதுண்டு. நீண்டகாலம் லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு உதட்டில் கருப்பு நிறம் படர்ந்திருக்கும். சிலர் அடர்ந்த நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தி இருப்பார்கள். அவர்கள் உதட்டில் கருமை நிற கோடுகளும், உதட்டில் சுருக்கங்களு சேர்ந்து தனியாக தெரியும். இதை சரி செய்யாத நிலையில் உதடு மேக் அப் போடாமல் பார்க்கவே நன்றாக இருக்காது.
இவர்கள் ரோஸ் வாட்டரில் சுத்தமான காட்டனை நனைத்து உதட்டின் மீது தடவி வர வேண்டும். அதிகப்படியான சுருக்கம் இருந்தால் அதில் சமளவு கிளிசரின் கலந்து உதட்டுக்கு தடவினால் விரைவில் உதட்டை இயற்கையாகவே அழகாக்கமுடியும்.
சர்க்கரையுடன் பாதாம் ஆயில்
உதட்டில் இருக்கும் கருமையோடு படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்ற சர்க்கரையில் பாதாம் ஆயிலை கலந்து அதை உதட்டில் மென்மையாக தேய்த்துவர வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி செய்துவந்தால் போதும். உதடு வறட்சியில்லாமல் இருக்கும்.
மேற்கண்ட எல்லாமே உதட்டை இயற்கையாகவே அழகுபடுத்தும் பொருள்கள். இராசயனங்கள் கலக்காமல் லிப்ஸ்டிக் எதுவுமே இல்லை. இவை உதட்டுக்குள் போகும் போது அவை கெடுதலையே உண்டாக்கும். ஆனால் இங்கு கொடுத்திருக்கும் அனைத்து பொருள்களும் உதட்டுக்குள் போனாலும் அவை பாதிப்பை தராது. வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் லிப்ஸ்டிக் பயன்பாட்டை குறைத்து இதை செய்தால் உதட்டின் மென்மையும் பளபளப்பும் வெடிப்பில்லாத அழகையும் விரைவில் பார்க்கலாம்.

சருமத்தில் சுருக்கங்கள் வருவதை தள்ளிபோட செய்யவேண்டியவை!

ருமத்தில் சுருக்கங்கள் வருவதை தள்ளிபோட செய்யவேண்டியவை!

சருமத்தில் சுருக்கங்கள் விழுவதற்கு காரணங்களை ஆராய்ந்து கொண்டிருந்தால் சுருக்கங்கள் அதிகமாகவே செய்யும்.

samayam tamil


சருமத்தில் சுருக்கம் வர காரணம் உடலை போன்று சருமத்துக்கும் வயதாவதுதான். சருமத்தில் எண்ணெய் பசை தேவையான அளௌக்கு இருக்கும் வரை சுருக்கங்கள் விழுவதில்லை. அவை வயதாகும் போது குறைவதால் சுருக்கங்கள் எட்டிபார்க்க தொடங்குகிறது. அதிலும் வறண்ட சருமத்தை கொண்டவர்களுக்கு வேகமாகவே சுருக்கங்களும் வந்தடைகிறது. சருமத்தை சுத்தமாக வைப்பதும், அதிக கெமிக்கல் பயன்படுத்தாமல் சுத்தமான நீரில் கழுவுவதும் உரிய பராமரிப்பை சிறுவயது முதலே மேற்கொள்வதும் சருமபிரச்சனைகளை உண்டாக்காது. அதோடு மேலும் செய்ய வேண்டிய பராமரிப்பு குறித்தும் தெரிந்துகொள்வோம்.

வெள்ளரிக்காய்

samayam tamil

முகத்தில் பயன்படுத்தகூடிய பக்கவிளைவில்லா பொருள்களில் இதுவும் ஒன்று. வெள்ளரிக்காய் வைட்டமி சி மற்றும் கே உள்ளது. ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த வெள்ளரிக்காய் சருமத்தை வளப்படுத்தவும், சரும சுருக்கங்களை தடுக்கவும் உதவுகிறது. சருமத்தில் இறந்த செல்களை அவ்வபோது நீக்கி சரும செல்களை புத்துணர்ச்சி அடைய செய்வதில் வெள்ளரிக்காய் பங்கு முக்கியமானது.
வாரம் ஒருமுறை வெள்ளரிக்காயை மசிய அரைத்து முகம் முழுக்க தடவி காயவைத்து மிதமான நீரில் கழுவி வரவேண்டும். வாரம் ஒருமுறை வெள்ளரிக்காயை முகத்துக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டாம். வறண்ட சருமமாக இருப்பவர்கள் வெள்ளரிக்காயுடன் வைட்டமின் இ ஆயில் கலந்து தடவலாம். இவை படிப்படியாக முகத்தில் சரும சுருக்கங்களை குறைக்கும்.

விளக்கெண்ணெய்

samayam tamil

குளிர்ச்சி மிகுந்த எண்ணெய். புருவத்தில் முடி அடர்த்திக்கும், கருமைக்கும் பயன்படுத்தப்படுகிறது புருவத்துக்கு அழகை கொடுக்ககூட இதை பயன்படுத்துவதுண்டு. விளக்கெண்ணெயை தினமும் இரவில் முகத்தில் தடவி குறிப்பாக கருவளையம் உருவாகும் இடம், உதட்டை சுற்றி, கண்களை சுற்றி இலேசாக மசாஜ் செய்து வர வேண்டும். இவை சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும்.
அதிக அளவு பயன்படுத்தினால் முகத்தில் எண்ணெய் வடியும் சருமமாக மாறிவிடும். இரண்டு அல்லது மூன்று துளிகள் மட்டும் எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவினால் மட்டுமே போதுமானது. வாரத்துக்கு மூன்று முறை மட்டுமே முகத்துக்கு தடவினால் கூட போதுமானது. இதனால் இளவயதில் முகச்சுருக்கங்கள் உருவாவது தடுக்கப்படும்.

தேன்

samayam tamil

தினமும் இரவில் தடவகூடிய பொருள்களில் இதை சேர்க்க முடியாது. ஆனால் சிறப்பான முடிவுகளை தரக்கூடியது தேன். சுத்தமான தேனில் இருக்கும் ஆக்ஸினேற்ற பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தின் பிஹெச் அளவை பராமரிக்க உதவுகிறது. சருமத்தின் செல் செயல்பாட்டையும் சிறப்பாக வைத்திருக்க தேனில் இருக்கும் பாலிசாக்கரைடுகள் உதவுகிறது.
முகத்தை சுத்தமாக கழுவி தேனை இலேசாக மசாஜ் போல் செய்து சுத்தமான நீரில் கழுவி பிறகு முகத்தை சுத்தமாக துடைக்க வேண்டும். வாரம் இருமுறை இதை தொடர்ந்து செய்துவர வேண்டும்

உருளைக்கிழங்கு சாறு

samayam tamil

எதுவுமே இல்லையென்றாலும் வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு ஒன்று போதும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் உருளைக்கிழங்கை மசித்து சாறு பிழிந்து கண்களுக்கும் முகத்துக்கும் தடவி வரவேண்டும். வைட்டமின் சி நிறைந்த உருளைக்கிழங்கு கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை நெகிழாமல் இறுக்கமாக வைத்திருக்க உதவும்.
இரவு நேரங்களிலும் இதை தடவலாம். உருளைக்கிழங்கு சாறை முகம், கழுத்துபகுதியில் தடவி மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் போதுமானது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்து வந்தால் போதும்.

முட்டையின் வெள்ளைகரு

samayam tamil

சருமம் இறுக்கமாக பளபளப்பாக இளமையாக இருக்க விரும்பினால் நீங்கள் முட்டையின் வாசத்தை பொறுத்து சருமத்துக்கு பயன்படுத்த தான் வேண்டும். முட்டையை மஞ்சள் கருவை நீக்கி அதை எக் பீட்டர் கொண்டு அல்லது மிக்ஸியில் அடித்தால் க்ரிம் பதத்துக்கு வரும். அதனுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் கலந்து மீண்டும் நுரைக்க அடித்து பிறகு முகத்துக்கு தடவ வேண்டும் வாரம் ஒருமுறை இப்படி செய்துவந்தால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். சருமத்தில் சுருக்கம் இருந்தாலும் படிப்படியாக மறையும். முட்டையில் இருக்கும் புரதம் சருமத்துக்கு இந்த அற்புதங்களை செய்யும்.
இவையெல்லாம் எளிமையான குறிப்பு. அடிக்கடியோ தினமுமோ செய்ய வேண்டியதில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போது செய்துவந்தால் நிச்சயம் சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கமுடியும்.

கற்றாழையும் வெந்தயமும் கூந்தலுக்கு செய்யும் மாயஜாலம் !

ற்றாழையும் வெந்தயமும் கூந்தலுக்கு செய்யும் மாயஜாலம் !

ஷாம்பும் கண்டிஷனரும் தான் கூந்தலை ஜொலிப்பாகவும் பட்டுபோன்றும் வைத்திருக்கும் என்றால் அந்தகாலத்தில் பெண்கள் எப்படி அழகாக 

samayam tamil

கூந்தல் அழகாய் இருக்க அதிக விலை கொடுத்து தான் பெற வேண்டும் என்பதில்லை. இயற்கையில் இருக்கும் பொருள்களை கொண்டும் கூந்தலை பட்டுபோன்று அழகுபடுத்திகொள்ளலாம்.அதை பயன்படுத்த சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும்.பயன்படுத்தும் பொருள்கள் எல்லாமே பக்க விளைவு இல்லாதவை, அதிக பலன் தருபவை, ஆனால் அதையும் உரிய முறையில் பயன்படுத்தும் போது அதன் பலன் பன்மடங்கு அதிகமாகவே இருக்கும். அப்படியான பொருள்களை கொண்டதுதான் வெந்தயமும், கற்றாழையும். இரண்டுமே அதிக பலன்களை தருபவை. அதை இணைத்து பயன்படுத்தினால் கிடைக்கும் அற்புதமான அழகை பற்றி தெரிந்துகொள்வோம்.

கற்றாழை

samayam tamil

இவை இருந்தால் பியூட்டி பார்லர் பக்கம் கூட செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. கற்றாழை உச்சி முதல் பாதம் வரை அழகுகுறிப்பில் பயன்படுத்தலாம். வறண்ட கூந்தல், இளநரைக்கு தீர்வு, முடி அடர்த்தி, கருமையான கூந்தல் பெற, வளர்ச்சி பெற என்று கூந்தலுக்கும், கரும்புள்ளி, பருக்கள், முகத்தில் வறட்சி, தேமல், கருமை போன்ற பிரச்சனைக்கும் தீர்வாக சருமத்துக்கும் பயன்படுத்துகிறோம்.
கற்றாழையை தனியாகவே பயன்படுத்தலாம் என்பதோடு இவை எந்தவிதமான பக்கவிளைவையும் கூட உண்டாக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கற்றாழை பயன்படுத்தலாம். அழகோடு சருமப்பிரச்சனைகளையும் சேர்த்து களையும் கற்றாழையை அழகு பொருள்கள் உடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

வெந்தயம்

samayam tamil
வெந்தயம் குளிர்ச்சிமிக்கது. உடல் உறுப்புகளுக்கும் வெளிப்பகுதிக்கும் குளுமை தரகூடியது. வெந்தயத்தை பொடித்து வைத்துகொண்டால் அதை முகத்துக்கு பேக் போட்டு வந்தாலே முகத்தில் தனி மினுமினுப்பு கூடும். உஷ்ணமான கூந்தலுக்கு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் கூந்தல் உஷ்ணம் பிரச்சனையிலிருந்து நீங்கிவிடும்.
அந்த காலத்தில் வெந்தயப்பொடியை குளியல் பொடியிலும் தலைக்கு சீயக்காய் பொடியிலும் கலந்து குளிப்பார்கள். வெறும் வெந்தயத்தை பொடித்து பாலில் குழைத்து முகத்தில் தடவி கழுவி வந்தால் ஃபேஷியல் எஃபெக்ட் கிடைக்கும். இப்படி அழகு தரும் வெந்தயத்தையும் கற்றாழையையும் சேர்த்து பயன்படுத்தினால் முடி வளர்ச்சியும் கருமையும் ஆச்சரியப்படுத்தும் அளவு அதிகமாக இருக்கும்.

என்ன செய்ய வேண்டும்

samayam tamil

கற்றாழையை வாங்கி இரண்டு பக்கமும் அதன் முனைகளை வெட்டி எறிந்து நீரில் அலச வேண்டும். அதன் மஞ்சள் நிறம் நீங்கும் அளவுக்கு நீரில் அலசியதும் அதன் இரு பக்கவாட்டிலும் இருக்கும் முற்களை அகற்றிவிடவேண்டும். பிறகு அதன் மடலை இரண்டாக வெட்டி முழுவதுமில்லாமல் பாதி அளவு இருந்தால் போதும். அதில் 5 முதல் 8 டீஸ்பூன் அளவு வரை வெந்தயத்தை சேர்த்து மடலை மூடிவிட வேண்டும்.
வெந்தயம் கற்றாழைக்குள் 10 மணி நேரம் ஊறினால் போதுமானது. ஏனெனில் இதை தேங்காய் எண்ணெயில் ஊற்றி கூந்தல் தைலம் காய்ச்சுவதாக இருந்தால் தான் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஊறவைக்க வேண்டும். ஊறிய வெந்தயத்தில் கற்றாழை ஜெல் முழுவதும் ஊறியிருக்கும்.

முடிக்கு பயன்படுத்தும் போது

samayam tamil

இரண்டுமே குளிர்ச்சி மிக்க பொருள் என்பதால் மிகுந்த கவனத்துடன் கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும். ஊறிய வெந்தயத்துடன் இரண்டு சாம்பார் வெங்காயம், தலையில் ஒட்டுண்ணி, பொடுகு, செதில் உதிர்வு பிரச்சனை இருந்தால் அவர்கள் 6 மிளகு சேர்த்துகொள்ளலாம். இவை குளிர்ச்சியையும் குறைக்கும்.
அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் வழவழவென்ற வெந்தயமும் கற்றாழை ஜெல்லும் சேர்ந்து மேலும் வழவழப்புடன் கூடிய ஜெல் கிடைக்கும். இதை கூந்தலின் மீது மட்டும் வேர் முதல் நுனி வரை தடவி விட வேண்டும். சுத்தமான காட்டனில் இந்த விழுதை தொட்டு தலையின் ஸ்கால்ப் பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போதே ஸ்கால்ப் பகுதியில் குளிர்ச்சி தெரியும். அதனால் முடிக்கு தேய்த்த பிறகு 10 நிமிடங்கள் கழித்து ஸ்கால்ப் பகுதியில் தேய்க்க வேண்டும். பிறகும் 10 நிமிடங்களில் தலைக்கு குளிக்க வேண்டும்.

பட்டு கூந்தல்

samayam tamil

ஒரு முறை பயன்படுத்திய உடனேயே கூந்தலின் தன்மையை நீங்கள் உணர்வீர்கள். கூந்தலை அதிகம் ஷாம்பு, சீயக்காய் இல்லாமல் இலேசாக சேர்த்து தலையை தேய்த்து குளிக்க வேண்டும் கூந்தலை கைகளால் தொடும் போதே அதன் மென்மையை உணரமுடியும். கூந்தலில் மினுமினுப்பும் அதிகப்படியான பளபளப்பும் கொடுக்கும். முடி உதிர்வு பட்டென்று நிற்கும். அலைஅலையாய் பட்டுபோன்ற கூந்தல் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சரியான முறை இது.

குறிப்பு
சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், குளுமை அதிகம் இருப்பவர்கள் இதை பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். 20 நிமிடங்களுக்கு மேல் கண்டிப்பாக கூந்தலில் ஊறவிட வேண்டாம். மாதம் இரண்டு முறை செய்துவந்தால் 5 வது முறையில் கூந்தல் உறுதி பெற்று பலமடையும்.

ஃபேஷியல் செய்தால் சருமத்துக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள்!

ஃபேஷியல் செய்தால் சருமத்துக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள்!

சருமத்தை பாதுகாக்க செய்யும் பல பராமரிப்புகளில் ஃபேஷியலும் முக்கியமானது. இதை வீட்டிலும் செய்யலாம்.

samayam tamil

முகத்தை பொலிவாக்கவும், அழகுபடுத்தவும் விரும்பும் பெண்கள் கண்டிப்பாக செய்துகொள்ளகூடியவற்றில் ஃபேஷியலும் முக்கியமானது. விதவிதமான பொருள்களை கொண்டு ஃபேஷியல் செய்யப்படுகிறது. அதே போன்று சரும பராமரிப்புக்கேற்பவும் ஃபேஷியல் செய்யப்படுகிறது. முகத்தில் சுருக்கள் வராமல் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி முகத்தை புத்துணர்ச்சியாக வைக்கவே ஃபேஷியல் செய்யப்படுகிறது. அரோமோதெரபி ஃபேஷியல், நறுமண எண்ணெய் கொண்டிருக்கும் ஃபேஷியல், முகப்பருக்களை குறைக்கும் ஃபேஷியல், சுருக்கத்தை தடுக்கும் ஃபேஷியல் என்று பலவகைகள் உண்டு. அப்படி சிரத்தையெடுத்து செய்துகொள்ளும் ஃபேஷியலால் முகம் என்ன நன்மைகளை பெறுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

சரும சுருக்கம்

samayam tamil


வயதான பிறகு சருமத்தில் சுருக்கங்கள் விழுவது இயல்பானது. ஆனால் உரிய பராமரிப்பின்றி சிலருக்கு இளவயதில் சுருக்கங்கள் வருவது அதிகரித்துவருகிறது. அதே போன்று உடலில் சத்து குறைபாடு, கொலாஜன் சுரப்பில் குறைபாடு போன்றவையும். அதிகப்படியாக மேக் அப் சாதனங்கள் பயன்படுத்துவதாலும் கூட சருமத்தில் சுருக்கங்கள் விரைவாக வந்தடைகிறது. இதை தடுக்க இளம்பெண்கள் ஃபேஷியல் செய்துகொள்ள வேண்டும் என்றூ அறிவுறுத்துகிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.
முறையாக உரிய இடைவெளியில் ஃபேஷியல் செய்துகொள்ளும் போது முகம் எப்போதும் பொலிவாக இருக்கிறது. மேலும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் இவை தடுக்கிறது என்பதால் ஃபேஷியல் உங்கள் முகத்தை சுருக்கங்களிலிருந்து காப்பாற்றுகிறது என்று சொல்லலாம்.

கருமை உண்டாகாது

samayam tamil

உடல் ஒரு நிறத்திலும் முகம் ஒரு நிறத்திலுமாய் இருக்க காரணம் முகப்பராமரிப்பு இல்லாததால் தான். இவர்கள் கெமிக்கல் கலந்த மேக் அப் சாதனங்களை அதிகம் பயன்படுத்தாமல் அதே நேரம் பியூட்டி பார்லரிலும் சென்று ஃபேஷியல் செய்ய வேண்டியதில்லை. இயற்கையாக அழகு தரக்கூடிய பொருள்களை கொண்டு முகத்துக்கு முறையாக ஃபேஷியல் செய்து வந்தால் முகத்தில் படர்ந்திருக்கும் கருமை நீங்கும். இவை எந்தவிதமான பக்கவிளைவையும் உண்டாக்காது. என்பதோடு சருமத்துக்கு பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால் நிறத்தை மீட்டு கொடுக்ககூடிய ஃபேஷியலை வாரம் ஒருமுறை செய்து வருவது நன்மை தரும்.

சரும சுத்தம்

samayam tamil

ஃபேஷியல் செய்வதால் அதிலும் சீரான முறையில் செய்யும் போது சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமம் சுத்தமடைகிறது. சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும், சிலருக்கு எண்ணெய்பசை அதிகமுள்ள சருமம் இருக்கும். இவர்கள் சருமத்துக்கு தகுந்த பொருள்களை பயன்படுத்தி ஃபேஷியல் செய்வதால் சருமத்தில் அழுக்குகள் வெளியேறி சருமம் சுத்தமாக இருக்கும். பளிச்சென்ற சருமம் இருப்பதால் மேக் அப் பயன்படுத்தாமல் பளிச் முகத்தோடு வளைய வரலாம். இதனால் கூடுதலாக பருக்கள், கரும்புள்ளிகள் பிரச்சனையும் இருக்காது. தசைகள் மிருதுவாகி முகம் மென்மையாகிறது.

இறந்த செல்கள்

samayam tamil
ஃபேஷியலின் போது சருமத்துவாரங்களில் இருக்கும் அடைப்புகள் வெளியேற்றப்படுகிறது. அப்போது இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் புத்துணர்ச்சி பெறுகிறது.கூடுதலாக நீராவி மூலம் முகத்திலிருக்கும் நச்சுகள் நீக்கப்படுவதால் தோல் இளமையாக இருக்கிறது.
ஒவ்வொரு முறை ஃபேஷியல் செய்யும் போது இவை வெளியேற்றப்படுவதால் முகப்பருக்கள் இல்லாமல் மாசு மருவற்ற சருமம் கிடைக்கும். சருமம் பொலிவாக மின்னும். சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் இயற்கையாகவே சருமம் கூடுதல் நிறத்துடன் மினுமினுக்கவும் செய்யும்.

குறிப்பு

samayam tamil

ஃபேஷியல் செய்யும் போது உங்கள் சருமத்துக்கு ஒத்துகொள்ளும் பொருள்களை மட்டும் பயன்படுத்துங்கள். குறிப்பாக பழங்கள், பால், பால் பொருள்கள், பன்னீர், கற்றாழை போன்றவை எப்போதும் சருமத்துக்கு ஊறு விளைவிக்காது அதே போன்று மூலிகை பொருள்களான சந்தனம், முல்தானிமெட்டி போன்றவையும் என்றாலும் உங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ப பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்துங்கள்.
ஃபேஷியல் செய்த பிறகு அதிகப்படியான மேக் அப் போட வேண்டாம்.ஃபேஷியல் செய்வதன் மூலம் சருமம் சுத்தமாகும். சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கும் சருமம் சுருக்கமின்றி இளமையாக இருக்கும். ஆனால் எல்லாமே உரிய முறையில் செய்ய வேண்டும். ஃபேஷியல் முறைகளை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் செய்து கொள்வதன் மூலம் உங்கள் முக அழகை பாதுகாத்துகொள்ளலாம்.

பெண் உறுப்பு: ஆயுளுக்கும் கிருமித்தொற்று இல்லாமல் பாதுகாக்க இதை செய்யுங்க!

பெண் உறுப்பு: ஆயுளுக்கும் கிருமித்தொற்று இல்லாமல் பாதுகாக்க இதை செய்யுங்க!

பிறந்த குழந்தை முதல் அனைவருக்குமே உடல் சுத்தம் என்பது அவசியமானது. குறிப்பாக பெண்கள் அந்தரங்க உறுப்புகளின் சுத்தம். 

உடலில் சருமம் அனைத்துமே மிருதுவானவை. அதை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் அதை சுத்தமாக வைத்திருப்பதும் கூட ஆரோக்கியமானதுதான். பெண் உறுப்பு மிகவும் மென்மையான பகுதி, உடலின் உள்ளுறுப்புகளில் சிறுநீரகப்பாதை, மலக்குடல், கருப்பை வாய் அனைத்தும் இதற்கு அருகருகில் அமர்ந்திருப்பதால் இதை கூடுதல் கவனத்துடன் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துகொள்ளவேண்டும். குறிப்பாக பருவமடைதலுக்கு பின்பு பெண்கள் தங்கள் வயதான காலத்திலும் இதை பின்பற்றவேண்டும். இல்லையெனில் கிருமிகள் தொற்று உருவாவதோடு அருகில் இருக்கும் இடங்களுக்கும் அவை வேகமாக பரவக்கூடும். எப்படி ஆரோக்கிய வைத்துகொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

பெண் உறுப்பு

samayam tamil

பெண் உறுப்பில் எரிச்சல், ஒருவித வாடை, சிறிய கட்டி, சிலருக்கு புண் அல்லது சிறு கொப்பளம், வலி இப்படியான பிரச்சனைகள் வருவதுண்டு. ஒவ்வொரு பெண்ணும் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த ஒரு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு ஒன்று. இளம்பெண்கள் முதல் மாதவிடாய் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள், பிரசவத்துக்கு பின்பு கிருமித்தொற்றுக்கு உள்ளாகும் பெண்கள், மெனோபாஸ் கால வறட்சி என்று ஒவ்வொன்றையும் சந்திக்கிறார்கள்.
முறையான பராமரிப்பை செய்துவந்தாலே யோனி ஆரோக்கியமாக தொற்றில்லாமல் இருக்கும். இதற்கு மெனக்கெடவும் வேண்டியதில்லை என்பதோடு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயமும் என்பதால் இதை கடைபிடிப்பது அனைவருக்கும் நல்லது.

சுகாதாரம் தேவை

பெண் உறுப்பை எப்போதும் எல்லா காலங்களிலும் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். தினமும் இரண்டு வேளை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். சுத்தம் செய்யும் போது முன்னிருந்து பின்பக்கம் சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் கிருமிகள் உள்ளே தொற்றாது. நறுமணமிக்க சோப்புகளை பயன்படுத்த வேண்டாம். மாதவிடாய் காலங்களில் மட்டும் கிருமி நாசினி கொண்ட சோப்புகளை மருத்துவர்களின் அறிவுரையோடு பயன்படுத்துங்கள். பெண் உறுப்பை சுத்தம் செய்த பிறகு ஈரத்தோடு உள்ளாடை அணிய வேண்டாம்.
ஈரத்தை சுத்தமாக துடைத்து பிறகு உள்ளாடை அணிய வேண்டும். இதை பெண் பிள்ளைகள் விவரம் தெரிந்த முதல் கடைபிடிக்க வேண்டும். அம்மாக்கள் கற்றுத்தரவேண்டிய சுகாதாரமான விஷயங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக மாதவிடாய் நாட்களில் நாப்கினை உரிய முறையில் குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றவும் வேண்டும்.

உறவுக்கு பின்

samayam tamil

உடலுறவுக்கு பின் பெண்கள் (குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் போது) பெண் உறுப்பை சுத்தம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். பல பெண்கள் யோனி பிரச்சனை மற்றும் பால்வினை குறித்த நோய்களுக்கு காரணமாக இருப்பது உறவின் போது ஆண்களிடம் இருந்து பாக்டீரியா தொற்று பெண்களின் யோனி உறுப்புக்கு செல்வதால்தான். பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் தான் இந்த பாதிப்புக்கு அதிகம் உள்ளாகிறார்கள். இதனால் தான் யோனிபகுதியில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் போன்ற பிரச்சனையும் அதிக வெள்ளைப்படுதலும் ஒருவித வாடையும் கூட உண்டாகிறது. அதனால் உடலுறவுக்கு பின் பெண் உறுப்பை சுத்தம் செய்வது அவசியம்.

எண்ணெய் வைக்கலாமா?

பெண்கள் மெனோபாஸ் காலங்களிலும் வயதான பிறகும் பெண் உறுப்பில் வறட்சி அதிகரிப்பதை உணர்வது இயல்பானது. ஆனால் இளவயதில் இந்த பிரச்சனை இருந்தால் அதற்கு காரணம் யோனியின் ஆரோக்கிய குறைபாடாக இருக்கலாம்.
யோனியை சுத்தம் செய்ததும் ஈரம் போக துடைத்து சுத்தமான தேங்காயெண்ணெயை பயன்படுத்தலாம். இதனால் யோனியில் இருக்கும் கிருமித்தொற்றை தேங்காயெண்ணெயில் இருக்கும் ஆன்டி பங்கல் வெளியேற்றும். தினமும் இரண்டு வேளையும் கூட எண்ணெய் தடவி படுக்கலாம். இதனால் வறட்சி நீங்கும். அரிப்பு, நமைச்சல் பிரச்சனையும் இருக்காது. அதே நேரம் போதிய அளவு நீர் எடுத்துகொள்ளவும் மறக்க வேண்டாம்.

வாடை இருக்கும் போது

samayam tamil

வெள்ளைபடுதல் இயல்பானது. எல்லா பெண்களுக்கும் இருக்ககூடியது. ஆனால் அளவுக்கதிகமான வெள்ளைபடுதலால் உண்டாகும் துர்நாற்றம் எதுவுமே இல்லாமல் ஏதேனும் ஒருவித வாடையை நீங்கள் உணர்ந்தால் நீங்கள் முதலில் செய்யவேண்டியது இரண்டு வழிகள் தான். ஒன்று பெண் உறுப்பை சுத்தமாக வைத்துகொள்வது. அடுத்தது நீர்ச்சத்து அதிகமாக உடலுக்குள் எடுத்துகொள்வது.
மிதமான நீரில் எலுமிச்சை, புதினா இலைகளை சேர்த்து நாள் முழுக்க குடித்துகொண்டே இருந்தால் அவை தொற்று இல்லாத சாதாரண வாடையாக இருந்தால் 4 நாட்களில் துர்நாற்றம் நீங்கிவிடும். வாடை இல்லை என்றாலும் அவ்வபோது நீரில் எலுமிச்சை பிழிந்து கொடுப்பது உடலுக்கும் பெண் உறுப்புக்கும் நல்லது.

தொற்றை போக்க

samayam tamil

தொற்று இருந்தால் பெண் உறுப்பை சுத்தம் செய்யும் போது நீரில் கல் உப்பை போட்டு கொதிக்கவைத்து மிதமான சூட்டில் கழுவி வரவேண்டும். அப்படி செய்து வந்தால் அந்த உறுப்பில் இருக்கும் தொற்று மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து இருக்கும் உறுப்பிலுள்ள கிருமிகளும் வெளியேறிவிடும்.
மற்றுமொரு முறையும் உண்டு. இதை பெண்கள் விரும்புவதில்லை. ஆனால் நிச்சய பலன் தரக்கூடியது. அகலமான பாத்திரத்தில் மிதமான கல் உப்பு கலந்த வெந்நீரை ஊற்றி அதில் பெண் உறுப்பு படும்படி பத்துநிமிடங்கள் அமர்ந்து இருக்கவேண்டும். அப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்துவந்தாலே உறுப்பில் இருக்கும் தொற்றுகள் உடனடியாக வெளியேறுவதோடு எரிச்சலும் அடங்குவதை பார்க்கலாம்

எரிச்சலை அதிகமாக்கும்

samayam tamil

யோனியில் எரிச்சல், நமைச்சல், அரிப்பு இருக்கும் போது அதை அதிகப்படுத்தும் விதமாக கார உணவுகள், மசாலா சேர்த்த உணவுகள், இறைச்சிகள், செயற்கை சுவையூட்டிகள், குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். இவை மேலும் எரிச்சலை அதிகமாக்க கூடியவை. பெண் உறுப்பில் உண்டாகும் சிறு தொற்றுகளை தானே சரி செய்துகொள்ளும் என்றாலும் அதை கெடுக்கும் விதமாக இந்த உணவுகளை எடுத்துகொள்வது பாதிப்பை அதிகமாக்கவே செய்யும்.

எப்போதும் சேர்க்க வேண்டிய உணவு

samayam tamil

பழங்கள், குறிப்பாக பெர்ரி வகைகள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்தவை அன்றாடம் உங்கள் உணவில் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். தினமும் ஒரு கப் தயிர் அல்லது யோகர்ட் இருக்கட்டும். இதில் இருக்கும் ப்ரோபையாட்டிக் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும். பெண் உறுப்பில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் மேலும் அதிகரிக்க இவை உதவும். அதை போன்றே போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் பழக்கப்படுத்திகொள்ளுங்கள்.
இதனோடு கண்டிப்பாக செய்ய வேண்டிய மற்றுமொரு விஷயம் ஆடை. உடல் உறுப்புகளை பாதுகாக்கும் வகையில் ஆடைகள் இருக்கவேண்டுமே தவிர அதை மேலும் பாதிப்புள்ளாக்கும் வகையில் இருக்க கூடாது. குறிப்பாக உள்ளாடைகளை சுத்தமில்லாமலோ ஈரமாகவோ அணியவே கூடாது. மெல்லிய பருத்தி ஆடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தாலே யோனி பிரச்சனைகள் பாதி காணாமல் போய்விடும்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...