Sunday, April 12, 2020

மேக் அப் போடாம இயற்கை அழகு பெற செய்ய வேண்டியது இதுதான்!

மேக் அப் போடாம இயற்கை அழகு பெற செய்ய வேண்டியது இதுதான்!

samayam tamil

இருக்கிறோம் என்னும் எண்ணமே அளவுக்கதிகமான தன்னம்பிக்கையை கொடுத்துவிடும். தோற்றத்தின் அழகை அதிகரிக்க அழகு நிலையங்களை மட்டுமே நம்பியிராமல் இயற்கை முறையிலும் காக்க முயற்சிக்க வேண்டும். அழகு சாதன பொருள்களால் அழகை கூட்டி காண்பிக்க முடியும். அவை எல்லாமே தற்காலிகமானவையே. ஆனால் சிறுவயதில் இருந்தே அழகை இயற்கையாக பெறுவதற்கு குறிப்பாக சருமத்தை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். இவற்றை சரியான முறையில் பின்பற்றும் போதே வயது கூடினாலும் இயற்கை அழகோடு மிளிர தொடங்குவீர்கள். அப்படி என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்

தண்ணீர்

samayam tamil

ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டின் தொடக்கமும் இதில் தான் தொடங்குகிறது. ஏனெனில் மனித உடல் 70% தண்ணீரை கொண்டுதான் இயங்குகிறது. இவை பற்றாக்குறை இல்லாமல் இருந்தாலே உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடலில் இருக்கும் நச்சுக்கள் அவ்வபோது வெளியேறினாலே உடல் சுத்தமாகும். சுத்தத்தில் சருமம் பளிச்சென்று இருக்கும்.
இயற்கை முறையில் அழகு படுத்த இதைவிட சிறந்த வழிமுறை எதுவுமே இல்லை என்று சொல்லுமளவுக்கு தண்ணீர் பயன்படும். அதைத்தான் இன்று சரும பராமரிப்பு மருத்துவர்களும், அழகு கலை நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள்.

தூக்கம்

samayam tamil

இவையும் உடலுக்கு மிகவும் முக்கியமானதுதான். ஆழ்ந்த தூக்கம் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியம் அழகுக்கும். தினமும் 7 மணி நேரம் முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். தூக்கம் குறைந்தால் முதலில் கண்களில் பாதிப்பு தொடங்கும். பிறகு கருவளையம், கண்களை சுற்றி கருப்பு உண்டாகும். அப்போதாவது விழித்துகொள்ள வேண்டும் இல்லையெனில் அதை தொடர்ந்து முகச்சுருக்கம், வயதான தோற்றம் எல்லாம் வரிசைக்கட்டி நிற்கும்

பழச்சாறுகள்

samayam tamil

தண்ணீர் என்னும் திரவ ஆகாரம் தான் உடலுக்கு தேவை என்கிறீர்களா? சருமத்தின் மினுமினுப்பை கொடுப்பதற்கு ஊட்டச்சத்து வேண்டுமே. அதை எளிதாக பெறுவதற்கு உதவுவது பழச்சாறுகள் தான். எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் காபி, டீ பானங்களை தவிர்த்து பழச்சாறுகளுக்கு மாறுங்கள். உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுவதால் சருமம் இயற்கையாகவே மினுமினுப்பை கொள்ளும். குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்கள் எடுத்துகொள்வது நல்லது.

உடல் சுத்தம்

samayam tamil

சருமத்தை சுத்தமாக வைத்துகொள்வதும் முக்கியம். வெளியில் செல்லும் போது படியும் தூசி, அழுக்கு போன்றவை உச்சி முதல் கால்கள் வரை படிந்துவிடும். அவ்வபோது அதை நீக்காவிட்டால் சருமத்தில் தலையில் தங்கி பிரச்சனைகளை உண்டாக்கும். தினமும் இரண்டு வேளை குளியல் எப்போதும் உங்களை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும்.
அதே நேரம் அதிக நறுமணமிக்க அடர்ந்த நிற சோப்புகட்டிகளை பயன்படுத்தவேண்டாம். சோப்பை அதிகமாக பயன்படுத்தவும் வேண்டாம். வாரம் இருமுறையாவது கூந்தலை சுத்தம் செய்வது அவசியம்

பளிச் புன்னகை

samayam tamil

அழகு முகத்துக்கு கூடுதல் அழகு தருவது பளிச் போன்ற புன்னகைதான். டென்ஷனாக இருக்கிறேன் என்று எப்போதும் முகத்தை கடு கடுவென்று வைத்திருந்தால் சருமத்தில் சுருக்கம் எளிதாக விழுந்துவிடும் என்கிறார்கள். புன்னகைக்கும் போது மனதுக்கும் ரிலாக்ஸ் கிடைக்கிறது. சோர்வு நீங்கிய முகம் எப்போதும் சருமத்துக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். புன்னகை அழகாய் இருக்க பற்களையும் பளிச்சென்று வைத்துகொள்வதும் முக்கியம் என்பதையும் மறக்க வேண்டாம்

இயற்கை அழகு பொருள்

samayam tamil
வாரம் ஒருமுறையாவது முகம், கழுத்து பகுதிக்கு வீட்டிலிருக்கும் பொருள்களை பயன்படுத்துங்கள். தயிர், பால் ,பாலேடு, வெண்ணெய், மஞ்சள் தூள். எலுமிச்சை. பீட்ரூட், கேரட், பப்பாளி, கற்றாழை, பன்னீர், கோதுமை தவிடு, பாசிபருப்பு மாவு.. இப்படி இன்னும் அதிக பொருள்கள் பயன்படுத்துவது குறித்து தெரிந்துவைத்திருப்பீர்கள்.
அதை எல்லாமே சுழற்சி முறையில் அவ்வபோது பயன்படுத்துங்கள். எதுவுமே சருமத்துக்கு ஒவ்வாமையை உண்டாக்காது என்றாலும் ஏதேனும் அப்படியான பிரச்சனைகளை கொண்டிருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள்.

​அழுக்கில்லாமல் வைக்க

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அவ்வபோது வெளியேற்றிவிட்டால் புதிய செல்கள் உருவாகி முகத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். அவ்வபோது இதை நீக்கிவிடவேண்டும். மாதமிருமுறை அல்லது ஒருமுறை ஸ்க்ரப் போன்று இருக்கும் பொருள்களை (சர்க்கரை, ஓட்ஸ் பொடி, கோதுமை தவிடு, ரவை) கொண்டு ஸ்க்ரப் செய்தால் சருமத்துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். கையோடு துளைகளை மூடிகொள்ள ஐஸ் க்யூப் பயன்படுத்துவது, நல்லது. இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் எதுவுமே வராமல் பாதுகாக்கலாம்

அதிக மேக் அப்

samayam tamil

மேக் அப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. ஆனால் உங்கள் சருமத்துக்கேற்ற பொருள்களை பயன்படுத்துங்கள். முதலில் உங்கள் சரும பராமரிப்பு நிபுணர்களிடம் ஆலோசித்து உங்களுக்கான அழகு பொருள்களை பயன்படுத்துங்கள்.
எதை பயன்படுத்தினாலும் இரவு நேரங்களில் அதை கலைத்து முகத்தை சுத்தமான நீரில் கழுவி பிறகு தூங்க செல்லுங்கள். எதையும் பயன்படுத்த விரும்பாதவர்கள் சருமத்துக்கு சன்ஸ்கீரின், மாய்சுரைசர் மட்டும் பயன்படுத்துவதை கடைபிடியுங்கள். இவை சருமத்தை பாதுகாக்கும் பொருள் என்பதால் நிச்சயம் கடைபிடியுங்கள். குறிப்பாக அனைத்து சருமத்துக்கும் ஏற்றது இது.
மேற்கண்ட குறிப்புகள் அனைவருக்கும் அனைத்துவயதினருக்குமே. இதுவரை இல்லையென்றாலும் இப்போது இதை பின்பற்றுங்கள். குறைந்தது ஒரு மாதத்தில் நல்ல ரிசல்ட் நீங்களே உணர்வீர்கள்

copy in:https://tamil.samayam.com/lifestyle/beauty/how-to-maintain-face-beauty-naturally-at-home/articleshow/74977922.cms?story=8

முடிக்கு கண்டிஷனர் போடும் போது இதை கவனியுங்க, இல்ல முடி உதிர்வு அதிகரிக்கும்!

முடிக்கு கண்டிஷனர் போடும் போது இதை கவனியுங்க, இல்ல முடி உதிர்வு அதிகரிக்கும்!

samayam tamil

முடி பட்டுப்போன்று இருக்க ஷாம்புவுக்கு பிறகு கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். இவை எண்ணெய் தன்மையோடு கூந்தலின் வறட்சியைத் தடுக்க உதவுகிறது. கண்டிஷனரை பயன்படுத்தும் முறைகள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. கண்டிஷனர் பயன்படுத்தாதவர்கள் தலைக்கு குளிக்கும் முன்பு சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை கூந்தலின் ஸ்கால்ப் பகுதியில் தடவுவதுண்டு. இவை கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக செயல்படும். இவையில்லாமல் வெளியிலிருந்து கூந்தலுக்கு பிரத்யேகமான கண்டிஷனர் வாங்கி பயன்படுத்தும் போது அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்

​எண்ணெய் வேண்டாம்

samayam tamil

கூந்தல் அதிகப்படியாக பளபளக்கும் என்று சிலர் தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தலையில் தேய்த்து ஊறவிடுவார்கள். பிறகு ஷாம்புவை கொண்டு அலசியதும் மீண்டும் கண்டிஷனர் பயன்படுத்துவார்கள். இந்த இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் கூந்தல் கூடுதலாக பொலிவாக இருக்கும் என்று நினைப்பார்கள். 

னால் எண்ணெய் குளியலின் போது கூந்தலுக்கு கண்டிஷனர் பயன்படுத்த வேண்டாம். அதே போன்று இயன்றவரை சீயக்காய் பயன்படுத்தலாம். கூந்தலுக்கு ஷாம்பும் சீயக்காயும் மாறி மாறி பயன்படுத்த கூடாது என்பவர்கள் பயத்தம் மாவை தேய்த்து குளித்து பிறகு ஷாம்பு கொண்டு தலையை அலசிகொள்ளலாம். ஆனாலும் அன்றைய தினம் கூந்தலுக்கு கண்டிஷனர் தேவையில்லை.

​குறைந்த அளவு

samayam tamil


கூந்தலின் அளவுக்கேற்ப கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். முடிக்கு மென்மையை தரும் என்பதால் அதிகப்படியாக பயன்படுத்தும் போது அவை முடியை வலுவிழக்க செய்யும். தரமான கண்டிஷனராகவே இருந்தாலும் கூட அதில் கலந்திருக்கும் கெமிக்கல் முடிக்கு சேதத்தை உண்டாக்கவே செய்யும்.
அதே போன்று கண்டிஷனரை பயன்படுத்தும் போதும் இரண்டு துளி தண்ணீர் சேர்த்து குழைத்து பயன்படுத்துவதும் நல்லது. இதனால் முடிகளில் அதிகப்படியான கண்டிஷனர் தேவைப்படாது. முடிக்கு மென்மையை மட்டுமே தரும் கண்டிஷனரை முறையாக பயன்படுத்தாவிட்டால் அவை உதிர்வையும் உண்டாக்கிவிடும்.

​ஷாம்பு கண்டிஷனர் இரண்டும் ஒன்றாக இருந்தால்

samayam tamil

தற்போது ஷாம்பும் கண்டிஷனரும் இரண்டும் சேர்த்து தயாரிக்கப்பட்டவை கடைகளில் கிடைக்கிறது. ஆனால் இவை இரண்டையும் பயன்படுத்துவதன் மூலம் கூந்தலிலிருக்கும் அழுக்குகளும் நீங்காது. கூந்தலுக்கு கண்டிஷனரும் கிடைக்காது. அதனால் கூந்தலுக்கு தனி ஷாம்புவையும் மென்மைக்கு தனியாக கண்டிஷனரையும் பயன்படுத்துங்கள்.
கண்டிஷனர் வாங்கும் போது ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை கலந்த கண்டிஷரை பயன்படுத்துங்கள். இவை கூடுதலாக உங்கள் முடியை பாதுகாக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் செய்யும்.

​எங்கு பயன்படுத்த வேண்டும்

samayam tamil

ஷாம்பு பயன்படுத்தும் போது கூந்தலின் மீது பயன்படுத்த வேண்டியதில்லை. தலையின் ஸ்கால்ப் பகுதியில் மட்டும் தடவவேண்டும். அதே போன்று கண்டிஷனர் பயன்படுத்தும் போது தலையின் ஸ்கால்ப் பகுதியில் போட கூடாது. கூந்தலின் மீது மட்டுமே தடவ வேண்டும்.ஸ்கால்ப் பகுதியில் கண்டிஷனர் பயன்படுத்தினால் முடிகள் பலமிழந்து மிகவும் மென்மையாகி உதிரத்தொடங்கும். இதனாலும் முடி உதிர்வு உண்டாகும். கண்டிஷனர் பயன்படுத்துவதால் முடி கொட்டுகிறது என்று பலரும் தவறாக நினைக்க காரணம் சரியான முறையில் பயன்படுத்தாததுதான்

எப்போதும் கண்டிஷனர்

samayam tamil

கூந்தல் வளர்ச்சி, கருமை, அடர்த்தி எல்லாமே நன்றாக இருக்கும்பட்சத்தில் ஷாம்பு பயன்படுத்துபவர்கள் கண்டிஷனரை பயன்படுத்தவும் தயங்க கூடாது. கூந்தல் மென்மையாக தான் இருக்கிறது அதனால் கண்டிஷனரை பயன்படுத்த வேண்டாம் என்று நினைப்பது கூந்தல் உதிர்வை அதிகரிக்க தொடங்கும். அதனால் வாரத்துக்கு மூன்று நாள்கள் தலைக்கு குளித்தாலும் கூட அப்போதெல்லாம் கண்டிஷனரும் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் ஷாம்புக்கள் முடியை வறட்சி அடைய செய்யும்.

தவிர்க்க


samayam tamil

கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது என்றாலும் உங்கள் கூந்தலின் தன்மைக்கேற்ப கண்டிஷனரை பயன்படுத்துங்கள். உங்கள் கூந்தல் மிகுதியான எண்ணெய்பசையை கொண்டிருந்தால் நீங்கள் கண்டிஷனர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் கூந்தல் அதிக வறட்சியை கொண்டிருந்தால் நீங்கள் கண்டிஷனர் பயன்படுத்தும் போது க்ரீம் வகையான ஜெல்லை தேர்வு செய்வது அவசியம். உங்களுக்கு எதை பயன்படுத்துவது என்று தெரியவில்லையெனில் க்ரீம், ஜெல், ஃபோம் என பல தன்மையில் இவை உண்டு. இதில் எதை பயன்படுத்துவது என்பதை உங்கள் அழகு கலை நிபுணரோடு உங்கள் கூந்தல் தன்மைக்குரிய கண்டிஷனரை தேர்வு செய்யுங்கள்.
கூந்தலுக்கு கண்டிஷனர் தேவை. ஆனால் சரியானதை தேர்வு செய்வதும் அவசியம்.. அப்போதுதான் கூந்தல் வளர்ச்சி உறுதியாகவும், பொலிவாகவும் இருக்கும்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...