Friday, June 12, 2020

காலையில் எழுந்ததும் கண்ணு வீங்கி பன்னு மாதிரி இருக்கா? இப்படி செய்யுங்க காணாம போயிடும்..


கண்களுக்கு கீழ் கருவளையம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். எளிதாக அதைத் தடுக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதும் போதுமான அளவில் தெரிந்துவைத்திருக்கிறோம். அப் படி கண்களுக்கு கீழ் வரும் மற்றொரு பிரச்சனை உப்பிய கண்கள். கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கம் இது. இது ஏன் வருகிறது எப்படி இதை சரி செய்து கண்களை பாதுகாக்கலாம் தெரிந்து கொள்வோமா?

➡️​உப்பிய வீக்கம்
தூங்கி எழுந்தவுடன் கண்ணாடியில் பார்க்கும் வழக்கம் எல்லாருக்குமே உண்டு. முகத்தின் அழகை எடுத்துகாட்டும் கண்களில் வீக்கம் இருந்தாலும் நமக்கு தெரிவதுண்டு. சிறிய வீக்கமோ அல்லது பெரிய வீக்கமோ எதுவாக இருந்தாலும் வீக்கம் வந்தாலே உப்பிய கண்கள் அழகை கெடுத்துவிடும்.
இனி தினமும் உங்கள் கண்களையும் உற்று நோக்குங்கள். உங்கள் கன்னமும் வீங்கியிருக்க வாய்ப் புண்டு. முறையான பராமரிப்பு அன்றாட வாழ்வியல் முறையில் சில மாற்றம் போன்றவையே இதை சரிபடுத்த போதுமானது.

➡️​காரணம் என்ன
வயதானவர்களுக்கு கண்களின் கீழ் வீக்கம் உண்டாகும். சருமத்தில் உண்டாகும் சுருக்கம் இதற்கு காரணமாகலாம். மிதமிஞ்சிய கொழுப்பு பை போல் தேங்கி கண்களுக்கு கீழ் வீக்கத்தை உண்டாக் கும். அதிகப்படியான உப்பு, அதிகப்படியான நீர்,ஒவ்வாமை போன்றவை நீரை சேர்த்து இந்தஇடத்தில் தேக்கி வீக்கத்தை உண்டாக்கும். இதனால் கண்களில் வறட்சி இருக்கும்.
வெகு சிலருக்கு இவை உடல் ஆரோக்கிய குறைபாட்டை எடுத்துக்காட்டும் அறிகுறியாகவும் சொல் கிறது மருத்துவத்துறை.சிறுநீரக பிரச்சனையைக் கொண்டிருப்பவர்களுக்கு கூட இந்த அறிகுறி தோன்ற வாய்ப்புண்டு.

➡️​போதிய உறக்கம்

தூக்கமின்மை பிரச்சனை தான் முதல் காரணம் என்று சொல்லலாம்.நன்றாக ஆழ்ந்த உறக்கம் 8 மணி நேரம் வரை இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். கண்களுக்கு கீழ் வீக்கம் இருப்ப வர்கள் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் 7 மணி நேரத்திலிருந்து 9 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டும்.
தூக்கமின்மை பிரச்சனையும், இரவு நீண்ட நேரம் விழித்திருந்து உறங்குவதும், அதிகப்படியான மேக் அப் கலைக்காமல் அப்படியே துங்குவதும் கூட கண்களில் வீக்கத்தை உண்டாக்கும். கண்க ளில் வீக்கம் இருந்தால் இரண்டு நாட்கள் இந்த முறையை பின்பற்றி பாருங்கள். பிறகு வீக்கம் குறைந்து வருவதை நீங்களே உணரலாம்.

➡️ஐஸ்கட்டி
காலை எழுந்ததும் வீக்கத்தை கழுவி கண்களில் வீக்கம் இருக்கும் இடத்தை சுற்றி ஐஸ்கட்டிகளை ஒரு துணியில் சுற்றி எடுத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். தட்டையான ஸ்பூன் போன்ற கரண்டியை சுத்தப்படுத்தி இரவு ஃப்ரீஸரில் வைத்து காலை எழுந்ததும் ஃப்ரீஸரிலிருந்து அந்த குளிர்ந்த தட்டையான கரண் டியை (ஸ்பூனாகவும் இருக்கலாம்) எடுத்து வீக்கம் இருக்கும் பகுதியில் அழுத்தி தேய்த்து வந் தால் வீக்கமானது குறையதொடங்கும்.

ஐஸ்கட்டிகள் வைப்பது சிரமமாக இருந்தால் இந்த கரண்டி முறையை செய்யுங்கள். அல்லது மெல்லிய துணியில் சுற்றியும் அழுத்தி தேய்த்து விடுங்கள்.


➡️டீ பேக்

தண்ணீரை கொதிக்க வைத்து தேநீர் பைகள் இரண்டை போட்டு விடுங்கள். அதன் சாறு இறங்கி யதும் அந்த டீபேக்கை எடுத்து கண்ணத்தில் வீங்கிய பக்கம் வைத்து ஒற்றி எடுங்கள். தொடர்ந்து பத்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் வீக்கம் வற்றும். மிதமான சூட்டில் இருப்பதை விட குளிர்ந்து இருந்தால் இவை நல்ல பலனை தரும். டீ தூளில் உள்ள டேனின்ஸ் சருமத்தில் இருக்கும் சுருக்கும் குறைக்கும் தன்மை கொண்டது. தினமும் காலை எழுந்ததும் மறக்காமல் இதை செய்துவந்தால் வீக்கம் வற்றும் . செய்யுங்கள். அல்லது மெல்லிய துணியில் சுற்றியும் அழுத்தி தேய்த்து விடுங்கள்.

➡️​வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி ஃப்ர்ட்ஜில்வைக்கவும்.. நன்றாக குளிர்ந்ததும் அதை எடுத்து கண்கள், கண்கள் கீழுள்ள பகுதி, வீக்கம் இருக்கும் இடங்களின் மீது வைக்கவும். கால்மணி நேரம் கழித்து அதை எடுக்கலாம். ஓய்வாக இருக்கும் போது இதை செய்யுங்கள்.
வெள்ளரிக்காயில் இருக்கும் கேஃபிக் மர்றும் ஆஸ்கார்பிக் அமிலமானது கண்களின் கீழ் வீக்கத்தில் தேங்கியிருக்கும் நீரின் தேக்கத்தை குறைக்கும். தொடர்ந்து செய்யும் போது ஒரு வாரத்தில் நல்ல பலன் தெரியும். கூடுதலாக கண்களின் கீழ் உள்ள கருவளையமும் மறையும்.

➡️உப்பு

அதிகப்படியான உப்பு உடலில் சேரும் போது அவை உயர் இரத்த அழுத்தம் பிரச்சனைகளை மட்டும் அல்லாது அதிகப்படியான நீர் சேர்ந்து அவை கண்களில் வீக்கத்தை உண்டு செய்யும். உப்பு அதிகமி ருக்கும் உணவு வகைகளை எடுத்துகொள்வதன் மூலமும் சிலருக்கு கண்களில் வீக்கம் உண்டாகக் கூடும். அதனால் உப்பு அதிகம் உள்ள உணவை தவிர்ப்பதும் உப்பிய கண்ணத்தை சம நிலைக்கு கொண்டுவர உதவும்.

➡️​தலையணை

கண்கள் வீக்கத்தை சந்திக்கும் போது தலையை சமமாக வைத்து படுக்க கூடாது. இரவு நேரங்களில் தலை உயரமாக இருக்கும்படி தலையணை வைத்து படுப்பது நல்லது. நேராக தலை வைத்து படுக் கும் போது வீங்கிய கண்களின் கீழ் மேலும் தண்ணீர் தேங்கிவிடும் வாய்ப்புண்டு. அதனால் படுக் கும் போது தலைக்கு கீழ் உயரமான தலையணை வைத்து படுத்தால் மேலும் வீக்கம் உண்டாகாமல் இருக்கும்.

➡️​அதிக மேக்கப

சருமத்துக்கு ஒவ்வாத பொருள்களை பயன்படுத்தும் போது கண்கள் வீக்கத்தை சந்திக்கின்றன. முகத்துக்கு போடும் க்ரீம்கள் அதில் இருக்கும் இராசயனங்கள் அலர்ஜியை உண்டாக் கும். இவை தவிர வெளியில் செல்லும் போது பரவும் தொற்று, கிருமி போன்றவையும் கண்களில் வீக்கத்தை உண்டாக்கிவிடக்கூடும். இரவு நேரங்களில் படுக்கும் போது முகத்தை நன்றாக கழுவி கண்களையும் குளிர்ந்த நீர் விட்டு நன்றாக கழுவி உலர வைத்து படுத்தால் கண்களின் வீக்கம் மட்டுப்படும்.

முடிக்கு தேனா?? அய்யய்யோ முடி சீக்கிரம் வெள்ளை ஆகுமா? இல்ல வளருமா!


முடியின் பராமரிப்புக்கு எத்தனையோ இருக்கும் போது தேனை போய் பயன்படுத்தலாமா என்று கேட்கலாம்.
தேன் இனிமையானது நாவிற்கும் உடலுக்கும் அதிக இனிப்பு தரக்கூடியது. சரும பராமரிப்பிலும் மிக முக்கியமாக பயன்படுத்தகூடியது. சருமத்தில் தேன் பயன்படுத்தும் போது முகப்பரு, கரும்புள்ளிகள், வடுக்களை தீர்த்து சருமத்தை அழகாக்குவது போன்றே கூந்தலுக்கும் நன்மை செய்கிறது.
கூந்தலுக்கு தேனை பயன்படுத்தினால் பலரும் முடி வெள்ளையாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அது பொய். ஆனால் கூந்தலுக்கு தேன் தரும் அற்புத நன்மைகள் பல உண்டு. இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், கூந்தலை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. கூந்தலுக்கு தேனை எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.


💗​பொடுகை விரட்டி அடிக்க - தேனை கூந்தலுக்கு எப்படி பயன்படுத்துவது
பொடுகு பிரச்சனைக்கு தேனும் கூட பலனளிக்கும். 10 டீஸ்பூன் தேனில் 3 டீஸ்பூன் தண்ணீர் கலந்து நன்றாக குழைத்து பொடுகு தலையில் தடவவும்.
உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து கூந்தலை சுத்தமான நீரில் அலசி எடுத்தால் பொடுகு உதிரும். வாரம் ஒரு முறை இப்படி செய்ய வேண்டும்.

💗​கூந்தல் சுத்தம் - தேனை கூந்தலுக்கு எப்படி பயன்படுத்துவது

உச்சந்தலையில் படியும் அழுக்குகளால் தான் முடி உதிர்வு, நுனிபிளவு, பொடுகு பிரச்சனைகள் உண்டாகிறது. தலைக்கு குளிப்பதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி தேனுடன் மூன்று மடங்கு தண்ணீர் கலந்து வைக்கவும். கூந்தல் முழுக்க சுத்தமான நீரை கொண்டு ஸ்ப்ரே செய்து பிறகு இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். முடி உதிர்தலை தடுத்து கூந்தலை வறட்சியில்லாமல் ஈரப்பதமாக்க வைத்திருக்க உதவும்.

💗மென்மையான மற்றும் பளபளப்பு - தேனை கூந்தலுக்கு எப்படி பயன்படுத்துவது

கூந்தல் வறட்சியை போக்குவதற்கு தேன் போன்று கூந்தலை மென்மையாக்கவு தேன் பயன்படுகிறது. . கூடவே பளபளப்பும் தருகிறது. இதற்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். தேனுடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
ஒரு கப் கெட்டித்தயிருடன்4 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். அதை கூந்தல் முழுக்க தடவி ஸ்கால்ப் முதல் நுனி வரை தடவ வேண்டும். பிறகு கூந்தலுக்கு ஹேர் பேக் கவர் போட்டு அரை நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தால் போதும். கூந்தல் பளபளப்பாக மென்மையாக இருக்கும். வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தினாலே போதுமானது.


💗​பிளவுபட்ட கூந்தலுக்கு - தேனை கூந்தலுக்கு எப்படி பயன்படுத்துவது


கூந்தல் நுனியில் பிளவு என்பது கூந்தல் வறட்சிக்கு பிறகு உண்டாவது. சிலருக்கு கூந்தலின் நுனியில் பிளவும் வெடிப்பும் இருக்கும். இந்த வெடிப்பை போக்க தேனும் உதவும்.
கொழுப்பு நிறைந்த ஒரு கப் பாலை எடுத்து, 3 டீஸ்பூன் தேன் எடுத்து கலந்து இலேசாக சூடேற்றவும். பிறகு இளஞ்சூடாக இருக்கும் போது நுனியில் மட்டும் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.வாரம் இரண்டு முறை இப்படி செய்துவந்தால் நுனி பிளவு குறைந்து கூந்தல் வளார்ச்சியடையும்.

💗​கூந்தலின் வளர்ச்சிக்கு - தேனை கூந்தலுக்கு எப்படி பயன்படுத்துவது

முடி வலிமையாக உறுதியாக இருந்தால் வளர்ச்சியும் சீராகவே இருக்கும். முடி பலவீனமாகும் போது உதிர்தலும் உண்டாகும். 2 முட்டையின் வெள்ளைக்கரு, ஆலிவ் ஆயில் 3 டீஸ்பூன், தேன் - 5 டீஸ்பூன்.
முட்டையின் வெள்ளைக்கருவுடன் முதலில் எண்ணெய் கலந்து இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு தேனை சேர்த்து மேலும் நன்றாக கலந்து கூந்தலில் ஸ்கால்ப் பகுதி முதல் நுனி வரை தடவி விடவும். இதை கூந்தலில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பிறகு தலைக்கு குளித்துவந்தால் கூந்தல் வலுவாக இருக்கும். அதிக அடர்த்தியுடன் இருக்கும். வளர்ச்சியும் வேகமாக இருக்கும். இனிகூந்தலுக்கு தேனையும் சேர்த்து பயன்படுத்துங்கள்.

தைராய்டு பற்றி நாம் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 7 விஷயங்கள் என்னென்ன

இன்று உலகம் முழுவதும் பல பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. பல பேர் தங்களுக்கு தைராய்டு இருப்பதை அறியாமலேயே இருக்கின்றனர். ஒரு ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆகும். தைராய்டு இருப்பதை கண்டுபிடிக்க சில அறிகுறிகள் மற்றும் தைராய்டு பிரச்சனைகளை பற்றி தற்பொழுது பார்க்கலாம்.
தைராய்டு என்பது பட்டாம்பூச்சியின் வடிவில் இருக்கக்கூடிய ஒரு உறுப்பு ஆகும். இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதன் அளவை அதிகரிக்க செய்கிறது. மேலும் அதன் மூலம் நியூட்ரிஷன் மற்றும் ஆக்ஸிஜனை உடல் பெற உதவி செய்கிறது. இந்த தைராய்டு பிரச்சனை நமக்கு ஏற்பட்டால் பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும்.
குறிப்பாக இதயத்துடிப்பு உடலின் சக்தி போன்றவைகளில் குறைபாடு ஏற்படும். அமெரிக்காவிலுள்ள நேஷனல் லிப்ரரி ஆஃ மெடிசின் என்கிற நிறுவனமானது கிட்டத்தட்ட 12 சதவீதம் மக்கள் தைராய்டு பிரச்சனையால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்று கண்டுபிடித்து உள்ளனர். அந்த 12 சதவீதத்தில் கிட்டத்தட்ட 8 சதவீத மக்கள் பெண்களாக இருக்கின்றார்கள். என்பதையும் அவர்கள் கணித்துள்ளனர். ஆண்களை விட பெண்களுக்கே இதன் மூலம் அதிக பிரச்சினை ஏற்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்கள்.
அதிகமான தைராய்டு பிரச்சனையும் குறைந்த தைராய்டு பிரச்சனையும் இரண்டுமே மெட்டபாலிசத்தை பிரச்சினைக்கு உள்ளாகும். குறைந்து தைராய்டு பிரச்சினையை ஹைபோ hypothyroidism என்று கூறுவார்கள். அதிகமான தைராய்டு அளவு பிரச்சனையை hyperthyroidism என்று கூறுகிறார்கள். இந்த தைராய்டு பிரச்சினை இருப்பதை அறிய ஒருசில அறிகுறிகள் தென்படும் அதைப்பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

➡️​உடல் எடை
தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு திடீரென அவர்கள் உடல் எடை கூடுவதை அவர்களால் உணர முடியும். ஏற்கனவே இருக்கும் அதே வாழ்க்கை முறை அதே உணவு கட்டுப்பாட்டு முறையில் இருந்திருந்தாலும் திடீரென அவர்களின் உடல் எடையில் மாறுதல் ஏற்படும். உடல் எடை அதிகமாக ஆகிவிடும். இந்த உடல் எடை ஏறுவது பொதுவாகவே ஹைபோ தைராய்டு என்று கூறுவார்கள். சரியான உணவை சாப்பிட்டு வந்தாலும் ஏற்கனவே இருந்தது போலவே இருந்தாலும் திடீரென உடல் எடை ஏறுவதை நம்மால் பார்க்க முடியும். இதேபோல் திடீரென உங்களது உடல் எடை குறைந்து வந்தாலும் நன்றாக சாப்பிட்டும், அதிகமாக உங்கள் உடல் எடை குறைந்து வந்தாலோ, அதை ஹைப்பர் தைராய்டு என்று கூறுகிறார்கள். இதை இரண்டுமே நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

➡️​கழுத்து
தைராய்டு உள்ளவர்களுக்கு கண்ணால் பார்க்க கூடிய முக்கியமான அறிகுறி என்பது கழுத்து வீங்குவது. கழுத்து வீக்கம் என்றால் ஒரு பகுதியில் மட்டும் வீங்குவதில்லை. பொதுவாகவே தனது ஏற்கனவே இருந்ததை விட அதிகமாக கூடிவிடும். சிலருக்கு கழுத்து தடிமனாக இருக்கும். அவர்களுக்கு ஒரு வேளை தைராய்டு பிரச்சனை இருக்கலாம். தைராய்டு சுரப்பியானது கழுத்தை தடிமன் ஆகிவிடுகிறது இது இரண்டு வகை தைராய்டு பிரச்சனைகளுக்கும் ஏற்படுகிறது. தைராய்டு மூலம் ஏற்படக்கூடிய கேன்சர் பிரச்சனைகளுக்கும் இந்த கழுத்து தடிமனாகவும் பிரச்சனை இருக்கிறது.

➡️​இதயத்துடிப்பு
தைராய்டு உறுப்பில் கோளாறு ஏற்பட்டால் நிச்சயமாக இதயத் துடிப்பிலும் மாறுதல் ஏற்படும். அனைவருமே அவ்வப்போது நம் இதயத் துடிப்பை கண்காணித்து வருவது மிகவும் நன்மை. ஹைபோ தைராய்டு இருப்பவர்கள் தங்களது இதயத் துடிப்பின் அளவு குறைவதை அறிய முடியும். ஹைப்பர் தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தங்களது இதயத்துடிப்பு அதிகமாவதை அறியமுடியும் அவ்வபோது நம் இதயத் துடிப்பை கண்காணித்து கொள்வது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் ஏதாவது உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட வேலைகளை செய்யும் பொழுது தானாகவே உங்கள் இதயத்துடிப்பு அதிகமாகும். அது அனைவருக்கும் உள்ளதுதான். சாதாரண நேரங்களிலும் உங்கள் இதயத் துடிப்பில் இது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால் நிச்சயமாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

➡️​மனநிலை
உங்கள் மனநிலை சோர்வாகவும் சுறுசுறுப்பு இல்லாமலும் எந்த வேலை செய்வதற்கும் ஈடுபாடும் குறைந்து எப்பொழுதுமே உடல் சோர்வாகவும் மனமும் எப்போதும் ஏதோ ஒரு சிந்தனையில் மன அழுத்தத்துடன் இருந்தால், உங்களுக்கு ஹைபோ தைராய்டு பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. இதே போல் எப்பொழுதும் மனது படபடப்பாகவும் பதட்டத்துடனும் அதிகமான எரிச்சலூட்டும் மனநிலையில் உங்களது மனம் இருந்தால் உங்களுக்கு ஹைப்பர் தைராய்டு இருக்க வாய்ப்புள்ளது.

➡️​முடி உதிர்தல்
முடி உதிர்தல் பிரச்சனைக்கு பல விதமான காரணங்கள் இருக்கிறது. தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும் முடி உதிர்தல் பிரச்சனை வந்து விடுகிறது. அமெரிக்காவிலுள்ள நேஷனல் லிப்ரரி ஆஃ மெடிசின் நிறுவனம் கிட்டத்தட்ட 25 முதல் 30 சதவீத அமெரிக்கர்களுக்கு தைராய்டு உள்ளவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருப்பதாக கணித்துள்ளனர். அது தைராய்டின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்பதாக கணித்துள்ளனர். இதுவே முடி நரைத்தல் முடியின் நிறம் மங்குதல் போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு தைராய்டின் அளவு அதிகமாக இருக்கும் அதாவது ஹைபர் தைராய்டு என்று குறிப்பிடுகிறார்கள்.

➡️​தட்பவெப்ப மாற்றம்
நம் உடலில் தட்பவெப்ப நிலையில் மாற்றம் தென்பட்டால் அதாவது சிலருக்கு எப்போதுமே உடல் சூடாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். சிலருக்கு உடல் எப்பொழுதுமே மிகவும் குளிராக இருப்பதுபோல தென்படும். இவை இரண்டுமே தைராய்டு பிரச்சினையின் அறிகுறி என்று குறிப்பிடுகிறார்கள். உடல் எப்போதுமே குளிர்ந்த நிலையில் இருப்பதுபோல இருப்பவர்களுக்கு ஹைபோ தைராய்டு பிரச்சினை இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதேபோல் உடல் எப்பொழுதுமே கொதிப்பதுபோல நிலையில் இருப்பவர்களுக்கு ஹைப்பர் தைராய்டு பிரச்சனை என்று குறிப்பிடுகிறார்கள். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவர்களை அணுகி சோதித்துக் கொள்வது அவசியம்.

➡️​மாதவிடாய்
பெண்களுக்கு அதிகமான அளவில் ரத்தப்போக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்பட்டால் அது ஹைப்போ தைராய்டு பிரச்சனை என்று கூறுகிறார்கள். அதே போல் பெண்களுக்கு சரியான நேரத்தில் மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால் அவர்களுக்கு ஹைப்பர் தைராய்டு பிரச்சனை என்று கூறுகிறார்கள். மேலே குறிப்பிட்ட அனைத்து அறிகுறிகளும் உங்களுக்கு தென்பட்டால் நிச்சயமாக உங்கள் மருத்துவரை அணுகி பூரண சோதனை செய்துகொள்வது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அனைத்து அறிகுறிகள் தென்பட்டாலும் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் நான்கு அல்லது மூன்று தென்பட்டாலும் உங்கள் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...