Wednesday, September 16, 2020

தளர்ந்து தொங்கும் மார்பகங்களைப் பற்றிய சில தவறான கருத்துக்கள்!

 



பெரும்பாலான பெண்கள் மட்டுமே சந்திக்கும் ஓர் அழகு பிரச்சனை தான் தளர்ந்து தொங்கும் மார்பகங்கள். இது வயது, ஹார்மோன் பிரச்சனைகள், பிரசவ காலத்திற்கு பின், எடை குறைவு மற்றும் சில நேரங்களில் உடல் எடை அதிகரிப்பின் காரணமாகவும் ஏற்படும். எனவே மார்பகங்களுக்கு சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டு வர வேண்டியது அவசியம். மார்பகத்தை பெரிதாக்குவதற்கான வழிகள்!!!

தற்போது தொய்வடைந்த மார்பகங்களுக்கான ஏராளமான மசாஜ் க்ரீம்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்த க்ரீம்களைப் பயன்படுத்தினால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவே அவற்றைத் தவிர்த்து, இயற்கை வழிகளை நாடுவதே மார்பகங்களுக்கு நல்லது.


இங்கு தளர்ந்து தொங்கும் மார்பகங்கள் குறித்து மக்களிடையே உள்ள சில தவறான கருத்துக்களும், உண்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

➡️➡️மார்பக உடற்பயிற்சிகளை செய்து வந்தால் மார்பகங்கள் தளர்வதைத் தடுக்கலாம்!


மார்பகங்களில் எந்த ஒரு தசைகளும் இல்லை. அது இழைம திசுக்களை மட்டுமே கொண்டுள்ளது. எனவே உடற்பயிற்சியின் மூலம் மார்பகங்களை பெரிதாக்க முடியாது. இருப்பினும் மார்பகங்களுக்கான உடற்பயிற்சியை செய்வதன் மூலம், மார்பகங்கள் நிலைமாறாமல் இருக்கும். அதிலும் புஷ் அப் செய்வதன் மூலம், மார்பகங்களின் வடிவம் அழகாக்கப்பட்டு, மார்பகங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் வெளியேற்றப்படும். எனவே உங்கள் மார்பகங்கள் தளர்ந்து தொங்காமல் இருக்க வேண்டுமெனில், பளு தூக்குதல், செஸ்ட் பிரஸ் போன்றவற்றை செய்து வாருங்கள்.

➡️➡️தாய்ப்பால் கொடுப்பது மார்பகங்களைத் தளர்த்தும்!

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் எப்போதும் மார்பகங்கள் தளர்வதில்லை. பிரசவத்திற்கு பின் அதிகப்படியான எடை ஒரே நேரத்தில் குறைவதால் தான் மார்பகங்கள் தளர்கிறது. எனவே இதனைத் தவிர்க்க பிரசவத்திற்கு பின் நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் போதிய அளவில் நட்ஸ்களை சாப்பிட வேண்டும்.

➡️➡️பிரா அணிவதன் மூலம் மார்பகங்கள் தளர்வதைத் தடுக்கலாம்!




மற்றொரு கட்டுக்கதை பிரா அணிவதன் மூலம் மார்பகங்கள் தளர்ந்து தொங்குவதைத் தடுக்கலாம் என்பது. பிராவை 24/7 அணிவதன் மூலம் மார்பகங்கள் தளர்வதைத் தடுக்கலாம் என்பது உண்மையல்ல. ஆனால் சரியான மற்றும் ஃபிட்டான பிரா அணிவதன் மூலம் தளர்ந்த மார்பகங்களுக்கு ஆதரவைத் தான் கொடுக்க முடியுமே தவிர, சரிசெய்ய முடியாது.

➡️➡️சிறிய மார்பகங்கள் தளராது!

இது மற்றொரு மடத்தனமான கட்டுக்கதை. அது என்னவெனில் பெரிய மார்பகங்கள் தான் தொய்வுறும் என்பது. உண்மையில் மார்பகங்களில் உள்ள கொழுப்பு மற்றும் மார்பக திசுக்களின் அளவைப் பொறுத்து தான் தொய்வுறுவது உள்ளது. அதிலும் மார்பகங்களில் கொழுப்புக்கள் அதிகமாகவும், மார்பக திசுக்களின் அளவு குறைவாகவும் இருந்தால் தான் மார்பகங்கள் தொய்வுறும்.

➡️➡️மார்பகங்கள் தளர்ந்தால் சரிசெய்ய முடியாது!

இது தவறான கருத்து. மார்பகங்கள் தளர்ந்தால், அதனை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் மீண்டும் உறுதியுடன் இருக்கச் செய்யலாம். அதற்கு நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, மார்பகங்களில் எண்ணெய் மசாஜ் செய்வது, தண்ணீர் அதிகம் குடிப்பது, சில மார்பக பயிற்சிகளை செய்வதன் மூலம், உறுதியிழந்த மார்பகங்களின் உறுதித்தன்மையை அதிகரிக்கலாம்.

முகத்தை ஜொலிக்க மூன்றே பொருள்களில் ஃபேஸ் வாஷ் பவுடர், இப்படிதான் தயாரிக்கணும்!

முகத்தை அழகாக்கத்தான் ஃபேஷியலும் முகத்துக்கு பராமரிப்பும் ஆனால் இதெல்லாம் செய்யாமலே முகத்தை அழகாக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?


முகத்துக்கு செய்ய வேண்டிய பராமரிப்புகளே இல்லாமல் முகத்தை பொலிவாக வைக்க உதவும் பொருள்கள் நம் அருகிலேயே இருக்கிறது. முகத்துக்கு க்ளென்சிங், டோனிங், மாய்சுரைசர், ஃபேஸ் பேக் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தால் தான் அழகை பராமரிக்க முடியும் என்று பலரும் நினைத்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இயற்கையான பொருள்களை கொண்டு இது எல்லாவற்றையும் ஒன்றிலேயே செய்துகொள்ள முடியும். அதுவும் இயற்கையாக ஆரோக்கியமாக என்று சொல்லலாம். முகம் மினுமினுக்க, ஜொலி ஜொலிக்க செய்ய முகத்துக்கு ஒன்றை மட்டுமே செய்தால் போதும். இந்த ஃபேஸ் பேக் பவுடரை வீட்டில் எப்படி தயாரிப்பது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

➡️​ரோஜா இதழ்கள் - முகப்பவுடர் தயாரிப்பில்..



அழகான ரோஜாக்கள் நறுமணத்தில் மட்டும் தனித்துவம் வாய்ந்தது என்று சொல்ல முடியாது. அவை அழகையும் கொடுக்கவல்லது என்பதை பயன்படுத்தினாலே தெரிந்துவிடும். அழகிற்கு அழகு சேர்க்க விரும்பும் பெண்கள் தாராளமாக இதை பயன்படுத்தலாம். கலப்படமில்லாமல் அழகு தரும் ரோஜாப்பூக்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரையான அனைத்து அழகு தயாரிப்பிலும் பயன்படுகிறது. பன்னீர் இருந்தால் போதும் முகத்தை எளிதாக அழகுப்படுத்திகொள்ளலாம் என்று சொல்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள். அந்த பன்னீரை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். அந்த லிங்கை இங்கு இணைத்திருக்கிறேன்.

தேவை

நாட்டு ரோஜா இதழ்கள் - 4 கப்

தனிரகங்களாக இருக்கும் ரோஜாக்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். நாட்டு ரோஜா இதழ்கள் அழுத்தமில்லாமல் மென்மையாக இருக்கும். இவை நீண்ட நேரம் இல்லாமல் சில நிமிடங்களில் உதிர்ந்துவிடக்கூடும்.

இதுதான் அசல் ரோஜாக்களுக்கான அடையாளம். இந்த ரோஜாக்களை வாங்கி இதழ்களை தனியாக எடுத்து வையுங்கள். ரோஜா இதழ்களை உலர்த்தி வைக்கவும்.

➡️​ஓட்ஸ் - முகப்பவுடர் தயாரிப்பில்..




ஓட்ஸ் என்பது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டும் அல்ல, சருமத்துக்கும் நல்லது. தானிய வகையை சார்ந்த ஓட்ஸ் முகத்தில் எண்ணெய்பசை வராமல் தடுக்க உதவுகிறது. இதிலிருகும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் சருமத்தை வறட்சியில்லாமல் காக்க செய்கிறது. அதோடு இறந்த செல்களை நீக்கவும் உதவுகிறது. ஓட்ஸில் இருக்கும் செபோனின் சருமத்தை சுத்திகரிக்கவும், அழுக்குகளை நீக்கவும் உதவுகிறது. எண்ணெய் பசையை நீக்குவதோடு அவை சருமத்துக்கு ஈரப்பதமும் அளிக்கிறது.

தேவை

ஓட்ஸ் - 2 கப் அளவு

➡️​பாதாம் - முகப்பவுடர் தயாரிப்பில்..




பாதாம் எப்படி உடலுக்கு அதிகப்படியான நன்மை தருகிறதோ அதே போன்று சருமத்துக்கும் அழகை தருகிறது. சருமத்துக்கு சத்து கொடுப்பதிலும் இவை முதலிடம் என்றாலும் விலை அதிகம் என்பதால் இதை பெரும்பாலும் அதிகம் பயன்படுத்துவதில்லை ஆனால் அழகுக்கு பயன்படுத்தப்படும் க்ரீம்களை விலை கொடுத்து வாங்குவதற்கு மாற்றாக பாதாம் கொட்டையை பயன்படுத்தினால் போதுமானது.

தேவை

பாதாம் - கால் கப் அளவு

பாதாம் கொட்டையை ஊற வைத்து தோலுரித்து உலர்த்த்திவிட வேண்டும். அவை ஈரப்பதமில்லாமல் இருக்க வேண்டும்.

​➡️குங்குமப்பூ - முகப்பவுடர் தயாரிப்பில்..




குங்குமப்பூ நிறம் கொடுக்கும் என்பதை அனைவரும் அறிவோம். முகத்தின் நிறம் மங்கி கருமை அடைவதை மாற்றி இயற்கையாகவே நிறம் தருவது குங்குமப்பூ என்று சொல்லலாம். அப்படி உங்கள் அழகான முகம் நிறம் இழந்தால் அவை அழகாய் மாற குங்குமப்பூ உதவும். இதன் விலையும் அதிகம் என்றாலும் அவை முகத்தின் நிறத்தை மாற்ற உதவக்கூடும். குங்குமப்பூவும் அதிக விலையாக இருந்தாலும் இவை முகத்துக்கு இயற்கையாக அழகை தரும் என்பதால் இவற்றையும் சேர்க்க வேண்டும்.

தேவை

குங்குமப்பூ - 5 கிராம் அளவு

​தயாரிக்கலாம் - முகப்பவுடர் தயாரிப்பு

முதலில் மிக்ஸியில் ஓட்ஸ் பவுடரை போட்டு மைய அரைக்கவும். ஓட்ஸ் சீக்கிரமாக பொடியாகாது. அதனால் முதலில் ஓட்ஸை நன்றாக பொடிக்கவும். பிறகு இதை சலித்து எடுக்கவும். (ஸ்க்ரப் செய்ய இந்த பொடி பயன்படுத்துவதாக இருந்தால் சலித்தவற்றில் மீதியிருப்பதை தனியாக எடுத்துவைக்கலாம்)

ரோஜா இதழ்கள். நன்றாக உலர்ந்த பாதாம் கொட்டையையும், குங்குமப்பூவையும் சேர்த்து மைய பொடிக்கவும். இடையிடையே விட்டு விட்டு மிக்ஸியில் சுற்று சுற்ற வேண்டும். இல்லையெனில் அவை ஈரமாகி கட்டியாகிவிடும் என்பதால் இடையிடையே விட்டு விட்டு மிக்ஸியை சுற்றவும். பிறகு சலித்த ஓட்ஸ் மற்றும் பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும். இவை நன்றாக கலந்ததும் கண்ணாடி பாட்டிலில் வைத்து கொள்ளவும்.



முகத்துக்கு பயன்படுத்தும் போது இதை பன்னீர் கலந்து ஃபேஸ் பேக் போன்று பயன்படுத்தலாம். முகம் பளிச்சென்று மின்னும். அதோடு இதை முகத்துக்கு முகப்பொடியாகவும், உடலுக்கு குளியல் பொடியாகவும் கூட பயன்படுத்தலாம். இந்த பொடியை மூன்று மாதத்துக்கு ஒருமுறை தயாரித்தால் போதுமானது.

பாதாம் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என்பது தெரியுமா!

 




பாதாம் பருப்பு ஆரோக்கியமானது என்றால் கூட நிறைய பேருக்கு அது சீரண பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. எனவே பாதாம் பருப்பை யாரெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

பாதாம் பருப்பு ஆரோக்கியமான நட்ஸ் வகை என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் இதை உலகளவில் மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். ஆபிஸ் நேரங்களில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் தேவை என்றால் கூட அதில் பாதாம் தான் முதலிடம் பிடிக்கும். பாதாம் பருப்பில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் விட்டமின் ஈ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இவை உங்க சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும், இதய நோய்களின் வீரியத்தை குறைக்கவும், புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கவும் மற்றும் இரத்த அழுத்த அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் உதவுகிறது.

இருப்பினும் இந்த பாதாம் பருப்புகள் சிலருக்கு பிடிக்காத ஒன்றாக உள்ளது. அவர்களுக்கு வேறுபட்ட சுகாதார பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. எனவே யார் யாரெல்லாம் பாதாம் பருப்பை சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

➡️​பாதாம் பருப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகள்


மற்ற ஆரோக்கியமான உணவைப் போல பாதாமை   அதிகம் உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். எனவே பாதாமை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

➡️மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள்

மலமிளக்கிகள், இரத்த அழுத்தம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளை உட்கொள்பவர்கள் பாதாமை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் உணவில் பாதாமை சேர்ப்பதற்கு முன்பு உணவியல் நிபுணருடன் கலந்துரையாட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறிகிறார்கள். பாதாமில் இயற்கையாகவே மாங்கனீசு அதிகளவில் உள்ளது. இது உங்களுக்கு 0.6 மி. கி கனிமத்தை வழங்குகிறது. இது தினசரி மதிப்பில் 27 சதவீதம் ஆகும். நிறைய பாதாம் பருப்பை உண்பது இதில் மாங்கனீஸ் இருப்பதால் போதைப்பொருள் உணர்வைத் தூண்டும்.

​➡️நட்ஸ் அழற்சி




நட்ஸ் அழற்சி இருப்பவர்கள் பாதாம் பருப்பை சாப்பிட்ட பிறகு படை நோய், வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றை பெறுகின்றனர். அந்த மாதிரியான அழற்சி ஏற்படுபவர்கள் பாதாம் பருப்பை தவிர்ப்பது நல்லது. நட்ஸ் சாப்பிடுவது அனாபிலாக்ஸிஸுக்கு வழிவகுக்கும், இது உயிருக்கு ஆபத்தானது. உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

​➡️விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள்

சிறு குழந்தைகள் மற்றும் சில வயதானவர்கள் விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள் பாதாம் பருப்புகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது மூச்சுத் திணறல் போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது. டிமென்ஷியா, பார்கின்சன் நோய் மற்றும் குறைக்கப்பட்டடிமென்ஷியா, பார்கின்சன் நோய் மற்றும் குறைக்கப்பட்ட இயக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

பாதாமில் அதிகளவு விட்டமின் ஈ உள்ளது. 28 கிராம் பாதாமில் 7.4 மி. கி விட்டமின் ஈ காணப்படுகிறது. இது அன்றாட தேவையில் 15 மி. கி அளவை பூர்த்தி செய்கிறது. இது சோம்பல், மங்கலான பார்வை, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாய்வு ஆகியவற்றை போக்கும்.

முக அழகை பாதுகாக்க வேப்பிலையா, முயற்சி செய்துதான் பாருங்க!

 




வேப்பிலையை கொண்டு சருமத்தை பாதுகாக்கலாம்.ஆனால் எதுடன் எப்படி சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதையும்...

வேப்பிலை கிருமி நாசினி என்பதால் சருமத்துக்கு தாரளமாக பயன்படுத்தலாம். சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே முகத்தில் படியும் தூசுகள் தான். அதை முழுமையாக பாதிப்பில்லாமல் வெளியேற்ற வேப்பிலை உதவுகிறது. வேப்பிலையை அப்படியே அரைத்து பயன்படுத்தும் போது அவை சரியாக மசியாமல் இருக்க வாய்ப்புண்டு. அதனால் வேப்பிலையை எப்போதும் பொடித்து வைத்துகொள்வது நல்லது. வேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், அவை தரும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

​வேப்பிலை பொடி தயாரிப்பு - வேப்பிலை சருமத்துக்கு பயன்படுத்தும் முறை

வேப்பிலை பொடியை முதலில் அரைத்துவிடுவோம். இது சாதாரணமானது தான் என்றாலும் உரிய முறையில் பொடித்தால் ஆறுமாதங்கள் வரை பயன்படுத்த முடியும். வேப்பிலையை ஈர்க் இல்லாமல் இலையை மட்டும் பறித்து சுத்தமாக கழுவ வேண்டும். வேப்பிலையில் மண், பூச்சிகளும் இருக்க வாய்ப்புண்டு என்பதால் அதை கழுவி நீரை உதறி நிழலில் உலர வைக்கவும்.



இலை நன்றாக காய்ந்ததும் மிக்ஸியில் இட்டு பொடிக்கவும். அதை மெல்லிய துளை கொண்ட சல்லடை அல்லது துணியில் போட்டு சலிக்கவும். சலித்த பொடியை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும். இந்த மாதிரி தயார் செய்தால் ஆறு மாதங்கள் வரை பொடி கெடாமல் இருக்கும். அதன் சத்துகளும் குறையாமல் இருக்கும். இப்போது எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

➡️​சரும பிரச்சனை எல்லா சருமத்தினருக்கும் - வேப்பிலை சருமத்துக்கு பயன்படுத்தும் முறை

சருமத்தில் அலர்ஜி, தடிப்பு, அரிப்பு, சிவப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் முதலில் முகத்தில் தங்கியிருக்கும் கிருமிகளை அகற்ற வேண்டும். இவை தேமல், கரும்புள்ளி, கருந்திட்டுகளையும் சரிசெய்யும்.

தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு வேப்ப இலை பொடியை தயிர் அல்லது காய்ச்சாத பாலில் நன்றாக பேஸ்ட் போல் சற்று இளகினாற் போல் குழைக்கவும். இதை சரும அலர்ஜி இருக்கும் இடங்களில் தடவி விட வேண்டும். இவை உலர்ந்ததும் அல்லது 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் 15 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.

➡️தழும்புகள், வடுக்கள் நீங்க - வேப்பிலை சருமத்துக்கு பயன்படுத்தும் முறை



முகத்தில் பருக்களால் தழும்புகளும், வடுக்கள், அம்மை புண்கள், வெண்புள்ளிகள் போன்றவை வரக்கூடும். இந்த பிரச்சனை இருந்தால் வேப்ப பொடியுடன் தேன் குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி, அந்த இடத்தில் மட்டும் தடவ வேண்டும். இரவு நேரங்களில் தடவி வருவதன் மூலம் விரைவான நிரந்தரமான பலன் கிடைக்கும்.

இரவில் பயன்படுத்தும் முன்பு முகத்தை சுத்தமாக கழுவி பிறகு இதை தடவி கொள்ளுங்கள். மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். இரசாயனம் இல்லாத இயற்கை பொருள் என்பதால் பக்கவிளைவு இருக்காது. பலனும் நிச்சயம் கிடைக்கும்.

➡️​முக பொலிவு பெற - வேப்பிலை சருமத்துக்கு பயன்படுத்தும் முறை




எல்லா வகை சருமத்தினரும் வேப்பிலையை ஃபேஸ் பேக் போட பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் 2 டீஸ்பூன் வேப்பிலை பொடியுடன் 4 டீஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்து குழைத்து முகத்திலும் கழுத்திலும் தடவி வந்தால் முகத்தில் எண்ணெய் வடிவது குறையும்.

➡️வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் தேன், நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் தடவினால் வறட்சி நீங்கி முகம் பொலிவும் மென்மையும் கிடைக்கும். மென்மையான சருமம் கொண்டவர்கள் வேப்பிலையுடன் வெந்தயப்பொடி சேர்த்து பன்னீர், பால் கலந்து தேய்த்து வந்தால் பொலிவு கிடைக்கும். முகம் பளிச்சென்று மின்னும்.

➡️​ப்ளீச் செய்ய - வேப்பிலை சருமத்துக்கு பயன்படுத்தும் முறை

வேப்பிலை பொடியை சுத்தமான நீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இதை முகம் ப்ளீச் செய்ய டோனராக பயன்படுத்தலாம். கணினியில் வேலை செய்பவர்கள் கண்கள் சோர்வுடனும் வலியுடனும் இருக்கும். தினமும் கண்களை இந்த நீரை கொண்டு கழுவினால் கண் சூடு குறையும். சருமத்தை அவ்வபோது இந்த நீரில் கழுவி வந்தால் அரிசி கழுவிய நீர் போன்று முகம் பளிச்சென்று இருக்கும்.

இராசயனம் கலக்காத வேப்பிலை பராமரிப்பால் இராசயனம் கலந்த க்ரீம்கள் பயன்படுத்தினாலும் கூட சருமத்துக்கு பாதிப்பு நேராது. தொடர்ந்து வேப்பிலையை பயன்படுத்தினால். எளிய செலவில்லாத ஆரோக்கியமான அழகு தரும் வேப்பிலையை நீங்களும் பயன்படுத்தி தான் பாருங்களேன்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...