Friday, May 1, 2020

கோடை காலத்தில் வேம்பு இலை, பூ, காயின் மருத்துவப் பயன்கள்

கோடை காலத்தில் வேம்பு இலை, பூ, காயின் மருத்துவப் பயன்கள்

தொகுப்பு  | April 9, 2020, 11:38 AM IST


femina

ஆயூர்வேத மருந்துகளில் வேம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. வேப்பிலையில் நிம்பின், நிம்போலைடு, பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி போன்ற பண்புகளை கொண்டிருக்கிறது.இவை அனைத்து சருமத்திற்கு நன்மை தருகின்றன. வேப்பிலை சருமத்திற்கு என்ன பயனளிக்கிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

சருமத்தை ஈரப்பதமாக்கும்:
வேப்ப இலைகள் சருமத்தை ஈரபதமாக்கி மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது. முகப்பரு காரணமாக ஏற்படும் வடுக்கள் மற்றும் தோல் நிற மாற்றத்தை குறைக்கிறது.வேப்பிலை முகப்பருவை குணப்படுத்தும் பண்பு உள்ளது. வேப்பிலையின் சாற்றை முகப்பருவின் மேல் தடவி வந்தால் முகப்பரு மறையும்.வறண்ட சருமம் உடையவர்கள் வேப்பிலையை குளிக்கும் தண்ணீரில் போட்டு அரைத்து சருமத்திற்கு பூசி குளிக்கலாம்.

பொடுகு மற்றும் முடி உதிர்வு:
ஒரு கப் வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலைக்கு தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை மற்றும் முடி பிரச்சனை விரைவில் குணமாகும்.இதனை அடிக்கடி செய்து வந்தால் பொடுகுத் தொல்லை மறைந்து விடும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலனை தரும்.

femina

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்:
வேம்பு இரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும் தினமும் இரண்டு அல்லது மூன்று வேப்ப இலைகளை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.அதில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இது உடலில் உள்ள ஹார்மோன் அளவை கட்டுப்படுத்துகிறது. தினமும் காலையில் வேப்பங்கொழுந்து அல்லது பூவை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும்.

கால் ஆணிகளை குணப்படுத்தும்:
வேம்பு ஆணி நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெயை பூசி வந்தால் விரைவில் ஆணி நோய் குணமாகும்.சரும அரிப்பு, சர்க்கரை நோயாளிகளுக்கு இவை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

femina

தசை மற்றும் மூட்டு வலியை குணப்படுத்தும்:
வேம்பில் அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளது. இது தசை மற்றும் மூட்டு வலியை நீக்குகிறது.ஒரு கப் தண்ணீரில் இலைகளை வேக வைத்து அதை வடிகட்டி குளிர்விக்கலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் வேப்ப எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம்.மூட்டு வலிக்கு முடக்கத்தான் இலை, வேப்பிலை இரண்டையும் சேர்த்து அரைத்து முழங்காலில் பற்றுப் போட்டு வந்தால் வலி குணமடையும்.

கண்களுக்கு புத்துணர்ச்சி:
வேப்பிலை இலைகளை பத்து நிமிடம் கொதிக்க வைத்து குளிர வைக்கவும். அதை கண் இமைகளில் மற்றும் கண்களை கழுவ வேண்டும்.இவை கண்களை குளிர வைக்கும்.வெயில் காலத்தில் இப்படி செய்து வந்தால் கண்களுக்கு நல்லது. உடல் உஷ்ணத்தை குறைத்து கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் சரியாகும்.பார்வை நன்றாக தெரியும்.

கபசுர குடிநீரை அருந்தலாமா? அரசு மருத்துவர் விளக்கம்

கபசுர குடிநீரை அருந்தலாமா? அரசு மருத்துவர் விளக்கம்

தொகுப்பு  | April 13, 2020, 4:03 PM IST


femina


கொரோனா வைரஸ் பரவுவதைவிட அது சார்ந்த வதந்திகள் தான் அதிவேகமாக பரவி வருகிறது. வெயில் அதிகமாக இருந்தால் கொரோனா வைரஸ் செத்துவிடும் என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவுகிறது. தற்போது வீட்டில் இருக்கும் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக செல்போன்களில் வலைத்தளத்தை தான் பார்த்து வருகிறார்கள். இதில் கொரோனா வைரஸ் தொடர்பாக வேகமாக பரவி வரும் தகவலில் எது உண்மை? எது பொய் என்று தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைகின்றனர். எனவே மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீரை குடிப்பதும் அதிகரித்து விட்டது. இந்த கபசுர குடிநீரை குடிப்பது நல்லதா? அதனால் என்ன பயன்? என்று தெரியாமலேயே பலர் குடித்து வருகிறார்கள். எனவே இந்த கபசுர குடிநீரை குடிப்பதால் ஏற்படும் பயன் குறித்து கோவை அரசு மருத்துவமனை முன்னாள் மருத்துவ இருப்பிட அதிகாரி மருத்துவர் சவுந்திரவேல் கூறியதாவது:-

கபம் என்றால் சளி, சுரம் என்றால் காய்ச்சல், அதாவது சளி, காய்ச்சலை அகற்றுவதுதான் கபசுரம். ஆடாதோடா இலை, கற்பூரவல்லி, சுக்கு, மிளகு உள்பட 18 வகையான மூலிகை பொருட்களை கலந்து செய்ததுதான் கபசுர குடிநீர். இதில் நிலவேம்பு கசாயமும் சேர்க்கப்பட்டு உள்ளது. பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகியவை வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. இதனால் பலர் இந்த கசாயத்தை வாங்கி குடித்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கபசுர குடிநீர் பல இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அரசு சார்பிலும் இந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

femina

இது கொரோனா வைரசுக்கான மருந்து இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் குடிநீர்தான். கபசுர குடிநீரை குடிக்கும்போது, சளி இருந்தால் அதை எளிதாக அகற்றி விடும். அதுபோன்று நுரையீரலில் உள்ள அணுக்களின் அளவை அதிகரித்து எளிதாக சுவாசிக்கக்கூடிய பலனையும் கொடுக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதான் இந்த கபசுர குடிநீரை அனைவரும் குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். சில இடங்களில் இதை குடிநீராகவே வழங்குகிறார்கள். சில இடங்களில் பொடியாக கொடுக்கிறார்கள்.

ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால், 5 கிராம் கபசுர பொடியை எடுத்து பாத்திரத்தில் போட்டு 5 தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நீங்கள் ஊற்றிய தண்ணீர் பாதியாக குறையும் அளவுக்கு காய்ச்ச வேண்டும். பின்னர் ஒவ்வொருவரும் அரை தம்ளர் அளவுக்கு காலை, மாலை என 5 நாளுக்கு குடித்தால் சளி, காய்ச்சல் எதுவும் வராது. காலையில் குடிக்கும்போது சாப்பிட்டுவிட்டு குடிக்கக்கூடாது. வெறும் வயிற்றில் குடித்தால்தான் உடலில் உள்ள சளி குறையும். எனவே இந்த நடைமுறையை பின்பற்றி கபசுர குடிநீரை குடித்தால் நல்லது. அதை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். இதில் நிலவேம்பு கசாயமும் சேர்ந்து இருப்பதால், உடலுக்கு நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

சருமப் பாதுகாப்பிற்கு



சருமப் பாதுகாப்பிற்கு

தொகுப்பு  


Femina

தோல் நிறத்தை பராமரிக்கவும் புறஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் எளிய வழி வெயிலிலிருந்து பாதுகாக்கும் பாடி மாய்ஸ்சுரைஸர் கிரீம்தான்.

உங்கள் முகத்தை தொடர்ந்து பராமரிப்பது அதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது, ஆனால் உடலின் மற்ற பாகங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இயற்கை யான தோல் உதிர்ப்பு கொண்ட மாய்ஸ்சுரைஸர் சரும நிறத்தை சமநிலையோடு வைத்திருப்பதுடன், உடலுக்கும் முகத்துக்குமான நிற வேறுபாட்டையும் குறைக்கிறது. புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும் எஸ்.பி.எஃப். கொண்ட ஒரு லோஷனைத் தேர்ந்தெடுங்கள்.
சருமத்தை மென்மையாக்க தேவையான பொருள்கள் பாடி மாய்ஸ்சுரைஸர்களில் உண்டு. மாய்ஸ்சுரைஸர்கள் சருமத்தின் மேல் அடுக்கில் செயல்பட்டு, ஈரப்பதம் வழங்குவதோடு, ஈரப்பத அடுக்கு உலர்வதை குறைக்கிறது. சன் புரொடெக்ஷன் ஃபேக்டர் என்பதே எஸ்.பி.எஃப். இது புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பாதிப்பதை தடுக்கிறது. இந்திய கோடை காலத்துக்கு 30 முதல் 50 வரையிலான எஸ்.பி.எஃப். சிறந்தது.

தோல் வகை ஏற்றது எது?
எண்ணெய்ப்பசை சருமம்: பருக் களைத் தடுக்க தண்ணீரைச் சார்ந்த எண்ணெய் பசையற்ற மாய்ஸ்சுரைஸரைத் தேர்ந்தெடுங்கள்.
உலர்ந்த சருமம்: கிரீம் மாய்ஸ் சுரைஸர் உங்களுக்கு ஏற்றது.
சாதாரண, கலவை சருமம்: நுண் துளைகளை அடைத்து பருக்களை ஏற்படுத்தாத மாய்ஸ்சுரைஸர்.

வீட்டிலேயே கூந்தலுக்கு மாஸ்க் போடுவது எப்படி?

வீட்டிலேயே கூந்தலுக்கு மாஸ்க் போடுவது எப்படி?


femina

அவோகேடாவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உடைந்த உங்கள் முடியை உறுதியாக்கி உடையாமல் பாதுகாக்கிறது. உங்கள் முடியின் அளவு தோள்பட்டை வரை இருந்தால் ஒரு அவகேடா எடுத்து பாதியாகவும், இடுப்பு வரை இருந்தால் ஒரு முழு அவகேடோவும் அல்லது மிக வறண்ட மற்றும் நீளமான முடி இருந்தால் 2 அவோகேடோ எடுத்துக் கொள்ளுங்கள்.

அவகேடாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆக மாறும் வரை அரைத்துக் கொள்ளுங்கள். மேலும் அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆலிவ் ஆயில் முடியை வளர வைக்கவும் வறண்ட முடியை சரி செய்யவும் உதவும். எனவே இத்துடன் ஒன்று முதல் மூன்று தேக்கரண்டியளவு ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் முடியை நனைத்து விட்டு கலவையை எடுத்து உச்சந்தலை மற்றும் முடியின் வேர்களில் இருந்து முடியின் நுனிப்பகுதி வரை தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள்.

பின்னர் முடியை தூக்கிக்கட்டி பிளாஸ்டிக் கவர் அல்லது ஷவர் கேப் கொண்டு மூடி வைக்கவும். இது வெப்பத்தை உள்ளே விடாமல் வைத்திருக்க உதவும். இந்த கலவையைத் தலையில் அரைமணி நேரம் வைத்து பின்னர் நன்றாக காய்ந்த பின்னர் நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள். இந்த முயற்சியை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

கூந்தலில் எண்ணெய் பிசுபிசுப்பை தவிர்க்க சரியான தீர்வு!

கூந்தலில் எண்ணெய் பிசுபிசுப்பை தவிர்க்க சரியான தீர்வு!


femina

எண்ணெய் பசை மிக்க கூந்தல் பெண்களுக்கு மிகப்பெரிய எதிரியாகலாம். எண்ணெய் பசை மற்றும் வியர்வை ஒன்றாக சேரும் போது, உங்கள் கூந்தல் மீது பாதிப்பை உண்டாக்கி, அதை கடினமாக, மங்கலாக ஆக்கலாம். மேலும் இவை உங்கள் கூந்தலை எண்ணெய் பிசுபிசுப்பாக்கிவிடும். பிசுபிசுப்பான தலைமுடி எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் சுத்தமான, அழுக்கில்லாத கூந்தலை விரும்பும் போது இந்த தன்மை இன்னும் எரிச்சல் தரும்.

ஸ்டிரைட்னர்கள் உங்கள் கூந்தலுக்கு வரப்பிரசாதமாக அமையலாம் என்றாலும் கூட, உங்கள் உச்சந்தலை பிசுபிசுக்கு அதுவும் காரணமாகலாம். உங்கள் தலை முடி எந்த அளவுக்கு நேரானாதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதில் உச்சந்தலை எண்ணெய்பசை கலந்திருக்கும். ஆண்டு முழுவதும் உங்களுக்கு எண்ணெய் பசை மிக்க உச்சந்தலை பிரச்சனை இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவை மாற்றுவது அவசியம். மாய்ஸ்சரைசிங் ஷாம்புவிற்கு பதிலாக ஹேர் கிளின்சரை நாடவும். நர்சிஹிங் ஆயில் கேர் ஷாம்பு பயன்படுத்தலாம். இது உங்கள் கூந்தலில் இயற்கையான எண்ணெய் பசையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.


femina


உங்கள் கூந்தலின் குறிப்பிட்ட பகுதி பிசுபிசுப்பாக இருந்தால் நீங்கள் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை சரியாக அலசுவதில்லை என்று பொருள். இந்த நிலையை தவிர்க்க, உங்கள் கூந்தலை பகுதி பகுதியாக பிரித்து அனைத்து பகுதிகளிலும், ஷாம்பு மற்றும் கண்டிஷனர் நீக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் கூந்தலை அலசவும். நீங்கள் எப்போது அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தாலும், உங்கள் கூந்தலை புளோ டிரை செய்து நன்றாக உலர வைக்கவும். இது உச்சந்தலையில் சேரும் எண்ணெய் பசையை அகற்ற உதவும். இதனால் இப்போது தான் குளித்து விட்டு வந்தது போன்ற கூந்தல் தோற்றத்தை அளிக்கும்.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் கேரட் & வாழைப்பழ மாஸ்க்!

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் கேரட் & வாழைப்பழ மாஸ்க்!


femina

ஒவ்வொரு பெண்ணின் உடல் அமைப்பிற்கு அழகு சேர்ப்பது தலை மற்றும் அதில் இருக்கும் கூந்தல். இந்த தலைமுடியைப் பாதுகாக்க நாம் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். முடி மென்மையாக இருக்க, முடி உதிராமல் இருக்க, முடி கருமையாக இருக்க என்று பல்வேறு வழிமுறைகளில் கூந்தல் அழகை நாம் பராமரித்து வருகிறோம். இப்படி எல்லா விதத்திலும் உங்கள் முடியை பராமரிக்க ஒரு அற்புத பொருள் உண்டு. அதுவே கேரட். உங்க கூந்தலுக்கு மிகுந்த நன்மையைத் தரும் ஒரு பொருள் கேரட்.

பல்வேறு முக்கிய நன்மைகளை கூந்தலுக்கு தரும் சாத்தியங்களைக் கொண்டதாக கேரட் இருப்பதால், பல்வேறு கூந்தல் பராமரிப்புப் பொருட்களில் கேரட் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இப்படி வெளிதயாரிப்புப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே கேரட் கொண்டு நமது கூந்தல் அழகைப் பராமரிக்க முடியும்.

பல்வேறு செயற்கை பொருட்கள் மற்றும் ரசாயங்களுடன் சேர்த்து தயாரிக்கப்படும் இத்தகைய பொருட்களை சந்தையில் வாங்குவதை விடுத்து வீட்டிலேயே நற்பதமான கேரட் கொண்டு தயாரிக்கும் ஹேர் பேக் அல்லது ஹேர் மாஸ்க் உங்களுக்கு சிறப்பான நன்மைகளைத் தரும். உங்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கு கேரட் பயன்படுத்தி செய்யும் இந்த தீர்வுகளை முயற்சித்துப் பாருங்கள். கேரட்டுடன் இதர மூலப்பொருட்களை சேர்த்து உங்கள் கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துவோம் வாருங்கள்!

கேரட் மற்றும் வாழைப்பழ ஹேர் மாஸ்க் தயாரிக்க
தேவையான பொருட்கள்:
* கேரட் - 1
* வாழைப்பழம் - 1
* யோகர்ட் - 2 மேசைக்கரண்டி


femina

பயன்படுத்தும் முறை:

* மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக அரைத்து ஒரு மென்மையான விழுதாக்கிக் கொள்ளவும். * உங்கள் உச்சசந்தலையில் இந்த விழுதைத் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். உங்கள் உச்சந்தலையில் உள்ள எல்லா முடிகளிலும் இந்த விழுது இருக்கும்படி முழுவதுமாகத் தடவவும். * அரை மணி நேரம் அப்படியே ஊறவிடவும். * பிறகு மென்மையான மூலிகை ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

கருமையான மற்றும் நீளமான கூந்தலைப் பெறும் இயற்கை வழிமுறைகள்!

femina

கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் ­­இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமாஞ் அடர்த்தியாஞ் கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்.

* நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.

* இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.

* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* விளக்கெண்ணெயைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.

* கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

* அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.

* தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.

femina

* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.

* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.

* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

கருமை மற்றும் நீளமான கூந்தல் விரும்பும் பெண்களுக்கு 10 டிப்ஸ்!

கருமை மற்றும் நீளமான கூந்தல் விரும்பும் பெண்களுக்கு 10 டிப்ஸ்!


கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமாக அடர்த்தியாக கருமையாக வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்!

1. நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.

2. இரண்டு தேக்கரண்டி வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.

3. தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

4. விளக்கெண்ணெயைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.

5. கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

6. அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.

7. தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.

femina

8. பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.

9. தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.

10. தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

முகத்துக்கு அடிக்கடி பயன்படுத்தகூடாத பொருள்கள்

வீட்டில் இருக்கும் பொருள்களை எப்படி எத்தனை முறை பயன்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். முகத்துக்கு அடிக்கடி பயன்படுத்தகூடாத பொருள்கள் என்னவென்று பார்க்கலாம்.

முகத்துக்கு அடிக்கடி பயன்படுத்தகூடாத பொருள்கள்

பொதுவாகவே பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்களை அழகாக காட்டிகொள்வதில் சற்று அதிகமாகவே மெனக்கெடுகிறார்கள். ஒரு பக்கம் பியூட்டி பார்லர் சென்று அழகு படுத்திகொள்கிறார்கள். பிறகு வீட்டிலிருக்கும் போதும் அழகு பராமரிப்பு செய்கிறார்கள்.

குறிப்பாக வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு அழகுப்படுத்தி கொள்வது சாத்தியம் என்பதை ஒப்பு கொள்ள வேண்டும். ஆனால் அப்படி பயன்படுத்தும் பொருள்களுடன் கூடுதலாக கலக்கும் பொருள்கள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். சமயங்களில் அவை சருமத்தில் ஒவ்வாமையை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு

முகப்பருவுக்கு என்ன செய்யலாம் கரும்புள்ளி வந்தால் என்ன போட வேண்டும், கருவளையம் மறைய செய்ய வேண்டியது என்ன முகம் வெள்ளையாகுமா இப்படியான அழகு தரும் கேள்விகளை முன் வைக்கும் பெண்கள் அதிகரித்துவருகிறார்கள். ஆனால் அப்படி பயன்படுத்தும் பொருள்கள் சருமத்துக்கு நல்லதா? அவை நிச்சயம் பலன் தருமா? இதனால் சரும பிரச்சனைகள் உண்டாகுமா? இது குறித்து யாரும் கேட்பதில்லை.

சருமத்தில் அதிகப்படியான பிரச்சனைகள் வந்த பிறகு தான் சரும பராமரிப்பு நிபுணர்களை நோக்கி ஓடுகிறார்கள். வீட்டில் இருக்கும் பொருள்களை எப்படி எத்தனை முறை பயன்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் நல்லது. ஆனால் அதை அப்படியே பயன்படுத்தாமல் சம அளவு தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். முகத்தின் மினுமினுப்புக்கு ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்துவதும் உண்டு. அதே போன்று முகத்தில் இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தும் சர்க்கரை, பேக்கிங் சோடா இவையெல்லாம் எப்போதாவது பயன்படுத்த வேண்டியவை. அப்படியே பயன்படுத்தினாலும் கண்களுக்கு அருகில் வாய்ப்பகுதியில், மூக்கு துவாரங்களில் இதை அதிகம் பயன்படுத்தவோ கொண்டு செல்லவோ கூடாது. அந்த இடங்கள் எல்லாமே மிருதுவானவை. அப்படியானால் இதையெல்லாம் பயன்படுத்தகூடாதா என்று கேட்கலாம்.

அழகு பொருள்களுடன் கலந்து உரிய முறையில் பயன்படுத்தலாம். அதே நேரம் அடிக்கடி பயன்படுத்தாமல் வாரம் ஒருமுறை மாதம் இருமுறை பயன்படுத்துவது ஆபத்தில்லை. சர்க்கரை மாற்றாக கோதுமை தவிடு பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறை சம அளவு நீர் கலந்து ஃபேஸ் பேக் -போடும் போது கலக்கலாம். பேக்கிங் சோடா இயன்றவரை தவிர்ப்பது நல்லது என்பது சரும பராமரிப்பு நிபுணர்களின் அறிவுரை. ஆப்பிள் சீட வினிகரை பயன்படுத்தும் போது மேலாக அதன் நீரை பயன்படுத்தினாலும் கூட போதுமானது. எப்படியாக இருந்தாலும் தினமும் இதை பயன்படுத்தினால் சருமம் எரிச்சலுக்கு உள்ளாகும்.

சிலர் அடிக்கடி பேஸ் மாஸ்க் பயன்படுத்துவது உண்டு. இதை அடிக்கடி முகத்துக்கு பயன்படுத்தும் போது சருமத்தின் முதல் அடுக்கில் இருக்கும் தோல்களும் உரிந்து சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். வெயில் காலங்களில் சற்று கூடுதலாக எரிச்சலை உண்டாக்கும்.

இவை எல்லாவற்றையும் விட அழகை பாதிக்காமல் தரும் எண்ணற்ற பொருள்கள் உண்டு. காய்கறிகள், பழங்கள், சந்தனம், பாசிப்பயறு, மஞ்சள் போன்றவை சருமத்துக்கு பாதிப்பை உண்டாக்காது. எலுமிச்சை சிட்ரஸ் குணங்கள் நிறைந்ததால் அதிகப்படியாக பயன்படுத்தும் போது அவை எரிச்சலை உண்டாக்ககூடும் அவ்வளவே.

மாதவிலக்கின் போது நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள்

மாதவிலக்கின்போது உதிரப்போக்கு மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை நடைபெறும். இந்த உதிரப்போக்கு நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

மாதவிலக்கின் போது நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள்

பருவமடைந்த ஒரு பெண்ணிற்கு ஒவ்வொரு மாதமும் (28 நாட்கள்) சினைப்பையிலிருந்து ஒரு கருமுட்டை முதிர்ச்சியடைந்து, சினைக்குழாய்க்கு வரும். இரண்டு சினைப்பைகள் இருந்தாலும் ஒரு மாதம் ஒரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை மட்டுமே வெளிவரும், அடுத்த மாதம் மற்றொரு சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை வெளிவரும். 

கருப்பையில் இருந்து வெளியேறும் இந்த கருமுட்டையானது ஆணுடைய விந்துடன் இணைந்தால் கருப்பையில் தங்கி குழந்தையை உருவாக்கும். கருவின் வளர்ச்சிக்காகக் கருப்பையின் உட்புறத்தில் ரத்த நாளங்களான மெல்லிய உள்ளுறை ஒன்றும் ஒவ்வொரு மாதமும் உருவாகும். கருமுட்டை கருவுறாதபோது, அத்துடன் சேர்ந்து கருப்பையில் இருக்கும் இந்த ரத்த நாளங்களான உள்ளுறையும் சிதைந்து கருப்பை வாய் வழியே வெளியாகிவிடும். இந்த உதிரப்போக்கையே மாதவிலக்கு என்கிறோம்.

ஒரு பெண்ணின் இளம் வயதில் முதன்முதலாய் இந்த நிகழ்வு ஏற்பட்டு உதிரப்போக்கு ஆவதையே பூப்பெய்தல், பருவமடைதல், வயதிற்கு வருதல் என்று அழைக்கிறார்கள். இது 10-ல் இருந்து 16 வயதிற்குள் நிகழ்கிறது. 18 வயதிற்கும் மேலும் ஒரு பெண் பூப்படையவில்லை என்றால் மகப்பேறு மருத்துவரைச் சந்தித்து ஆலோசிப்பது அவசியம். மாதவிலக்கின்போது உதிரப்போக்கு மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை நடைபெறும். இந்த உதிரப்போக்கு நாட்கள் அதிகமானாலும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெறுவது நல்லது. 

மாதவிலக்கு நாட்களில் சுத்தமான நீரில் தினசரி குளிப்பது அவசியம், தீட்டு என நினைத்துக்கொண்டு குளிக்காமல், மேலாடை மற்றும் உள்ளாடைகளை மாற்றாமல் இருப்பது சுகாதாரமல்ல.

* அந்நாட்களில் தேங்கிய நீர் நிலைகளான ஆறு , ஏரி, குளம், குட்டை, கிணறுகளில் குளிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மாதவிலக்கின் போது கருப்பையின் வாய்ப் பகுதி திறந்து இருக்கும், அப்போது சுத்தமில்லாமல் நீரில் குளிப்பது தொற்று கிறுமிகள் பிறப்புறுப்பை பாதிக்க வழிவகுக்கும்.

* மாதவிலக்கு நாட்களில் தினமும் இரு முறையாவது பிறப்புறுப்பை நன்கு கழுவ வேண்டும். சுத்தமான பருத்தி உள்ளாடைகளையே பயன்படுத்த வேண்டும். உதிரப்போக்கை உறிஞ்சுதற்கு நாப்கின்களை பயன்படுத்தலாம், துணிகளைப் பயன்படுத்துவது என்றால் அவற்றை நன்கு துவைத்து வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்தி உபயோகிக்க வேண்டும், அழுக்குத் துணிகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.


*நிறைய தண்ணீர் குடியுங்கள்
பலர்  பீரியட்ஸின் போது கழிப்பறையை பயன்படுத்துவதை எரிச்சலான ஒரு விஷயமாக நினைத்து,  அந்த நாட்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள்.
ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு வயிற்றுவலி குறையும். தண்ணீருக்கு பதில் ஜூஸ்களையும் குடிக்கலாம்.

* சானிடரி நாப்கின்களை ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது மாற்ற வேண்டும். உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை நிச்சயம் மாற்ற வேண்டும். 

* மாதவிலக்கின் போது பள்ளி, கல்லூரி அல்லது வேறு விசேஷங்களுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது ஓரிரு நாப்கின்களை பையில் வைத்து கொள்ளுங்கள் 

வெள்ளைப்படுதல் அடர் பழுப்பு நிறமாக இருந்தால்...

வெள்ளைப்படுதல் மாதவிலக்கிற்கு சில நாட்களுக்கு முன் வரும். இதனால் பிரச்சனையில்லை. ஆனால் வெள்ளைப்படுதல் அடர் பழுப்பு நிறமாக இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

வெள்ளைப்படுதல் அடர் பழுப்பு நிறமாக இருந்தால்...

வெள்ளைப்படுதல் மாதவிலக்கிற்கு சில நாட்களுக்கு முன் வரும். இதனால் பிரச்சனையில்லை. நமது கர்ப்பப்பையில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்களை கர்ப்பப்பையே வெஜைனா மூலம் வெளியேற்றும். இது சாதாரணமானது தான்.

ஆனால்  வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் கிருமித்தொற்று அதிகமாக இருக்கும் என்று அர்த்தம். இதனை உடனேயே சரிப்படுத்திவிடலாம்.


ஆனால் வெள்ளைப்படுதல் அடர் பழுப்பு நிறமாக இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உடனடியாக மருத்துவரை நாடவும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

மாதவிலக்கு பின்பு....

மாதவிலக்கு முடியும் நேரத்தில் வந்தால் அது இறந்த ரத்த செல்கள் கலந்து பழுப்பு நிறமாக வெள்ளைப்படுதல் வெளிப்படும்.

மாதவிலக்கு முன்பு...

மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு முன் உண்டானால் உங்கள் உடலில் பொரோஜஸ்டிரான் அளவு குறைவாக இருக்கிறது என அர்த்தம்.

இடையில் வந்தால்...

மாதவிலக்கிற்கு இடைப்பட்ட நாட்களில் வந்தால் உண்டாகியிருக்கலாம் அல்லது ஹார்மோன் பிரச்சனையாக இருக்கலாம்.

பெண்களின் உள்ளாடையும்.. உடல் நலமும்..

நிறைய பெண்கள் நைலான், பாலியெஸ்டர், லைக்ரா போன்ற காற்று உட்புக அனுமதிக்காத செயற்கை உள்ளாடைகளை அணிகிறார்கள். அவை ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் நல்லதல்ல.

பெண்களின் உள்ளாடையும்.. உடல் நலமும்..

உள்ளாடைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. நிறைய பேர் உள்ளாடை விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள். ஈரமான,
இறுக்கமான உள்ளாடைகளை அணிவது நல்லதல்ல. அது சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்துவதோடு நோய் தொற்று ஏற்படகாரணமாகிவிடும்.

துணிகளை துவைத்தபின்பு நறுமணம் வீசச்செய்யும் ‘டிடர்ஜெண்டுகளை’ நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அவை சருமத்திற்கு தீங்குவிளைவிக்காததாக இருக்க வேண்டும்.

பெண்கள் நிறைய பேர் இடுப்பு தசையை குறைக்கும் நோக்கத்துடனும், கட்டுடல் அழகை தக்கவைக்கவும் ‘ஷேப்வேர்’ எனப்படும் உள்ளாடைகளை அணிகிறார்கள். அதனை நீண்ட நேரம் அணிந்தால் ரத்த ஓட்டம் தடைப்படும். அதோடு வாயு, உடல் வீக்கம், அஜீரணம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

சிலருக்கு உடல் பகுதியில் தேவையற்ற முடி வளரும். முடியை சூழ்ந்து வீக்கம், தடிப்பு போன்ற பிரச்சினையும் உருவாகும். இறுக்கமான உள்ளாடை அணிபவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நீண்டகாலமாக இறுக்கமான உள்ளாடை அணிபவர்களுக்கு ஈஸ்ட் நோய்தொற்று பாதிப்பு அதிகரிக்கும்.

உள்ளாடைகள் வழியே சருமத்திற்கு போதுமான அளவு காற்று ஊடுருவி செல்ல வேண்டும். நிறைய பெண்கள் நைலான், பாலியெஸ்டர், லைக்ரா போன்ற காற்று உட்புக அனுமதிக்காத செயற்கை உள்ளாடைகளை அணிகிறார்கள். அவை ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் நல்லதல்ல. பருத்தி போன்ற காற்று ஊடுருவக்கூடிய உள்ளாடைகளே சிறந்தது.

இந்த பரிசோதனைகள் பெண்களின் கருவுறாமையை கண்டறிய உதவும்

பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருவுறாமை பிரச்சனையைக் கண்டறியப் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

இந்த பரிசோதனைகள் பெண்களின் கருவுறாமையை கண்டறிய உதவும்

பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருவுறாமை பிரச்சனையைக் கண்டறியப் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதைக் கொண்டு சுரப்பியில் உள்ள ஏற்ற இறக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் தைராய்டு சுரபியின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.

மார்பகம் மற்றும் இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யப்படுகிறது.

லேப்ரோஸ்கோப் மூலம் உள்ளுறுப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவது.

எக்ஸ்ரே மூலம் சில அறிகுறிகளைக் கண்டறிய முடியும்.

ஹிஸ்டிரோசல்பிங்கோகிராப்பி மூலம் கருப்பை சீர்குலைவுகளைக் கண்டறிந்து தெரிந்து கொள்வது.

அல்ட்ரா சவுண்ட் மூலம் கர்ப்பப்பை மற்றும் கரு முட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது.

இவை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனை முறைகள் இன்று மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எளிதாகவும், இன்னும் சிறப்பாகவும் உங்கள் உடலில் இருக்கும் பிரச்சனையைக் கண்டறிந்து உங்கள் உடலில் இருக்கும் கருவுறாமைக்கான சிக்கல்களைச் சரி செய்ய முடிகிறது

தாம்பத்தியத்தை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு அணுகும் தம்பதிகள்

தாம்பத்தியம் என்பது திருவிழா போன்றது. அது மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டியது. தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள்.


தாம்பத்தியத்தை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு அணுகும் தம்பதிகள்

கணவன்- மனைவி இருவரும் அந்தரங்க சுத்தத்தை கடைப்பிடித்தால் மட்டுமே, அவர்களால் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவிக்க முடியும். தாம்பத்திய செயல்பாட்டை தம்பதிகள் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். ஒரு பிரிவினர் அதில் முழு ஈடுபாடு காட்டாமல் அதை ஒரு சடங்காக மட்டுமே கருதுகிறார்கள். இன்னொரு பிரிவினர் புதுவிதமாக, வித்தியாசமாக அனுபவிக்க வேண்டிய கலையாக அதைப் பார்க்கிறார்கள். சடங்காக நினைக்கும் முதல் வகை ஜோடியினர் பெரும்பாலும் உடல் அந்தரங்க சுத்தத்தில் அக்கறை செலுத்துவதில்லை. ஏனோதானோவாக நடந்து கொள்கிறார்கள். கலையாக கருதும் இரண்டாவது வகையினரே சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக் கிறார்கள்.

தாம்பத்தியம் என்பது திருவிழா போன்றது. அது மனப்பூர்வமாக, உடல்ரீதியாக கொண்டாடப்பட வேண்டியது. அதை முழுமையாக கொண்டாடுவதற்கு தம்பதிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக வேண்டியது அவசியம். அத்தகைய தயார் நிலையில், குறிப்பிடத்தக்கது சுத்தம். உடல் சுத்தமாக இருக்கவேண்டும். அதோடு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கவேண்டும்.

தம்பதிகளின் உடல் சுத்தத்தில் முதலிடம் பெறுவது, சருமம். மனித உடலை அற்புதமாக மூடி அதற்கு அழகையும், பாதுகாப்பையும் தருவது சருமம்தான். சராசரியாக ஒரு மனித உடலை, 20 சதுர அடி சருமம் மூடியிருக்கிறது. உடலில் பெரிய உறுப்பாக கருதப்படும் இந்த சருமத்தை சுத்தமாக வைத்திருந்தால் உடலையே சுத்தமாக வைத்திருப்பதாக அர்த்தம். சருமத்தை சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா, பங்கஸ் போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் வாழும் கூடாரம் போல் உடல் மாறி விடும். அப்போது நாற்றம் வீசுதல், சொறி ஏற்படுதல் போன்றவை உருவாகும். எப்போதாவது உடலை சுத்தம் செய்வதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக சுத்தம் செய்தால்தான் சுகாதாரமாக வைத்துக்கொள்ள முடியும்.

‘அதுதான் நான் தினமும் குளித்துவிடுகிறேனே’ என்கிறீர்களா.. சரிதான். ஆனால் காக்காய் குளியல் போடாமல் நன்றாக குளிக்கவேண்டும். சோப்பு பயன் படுத்திதான் எல்லோரும் குளிக்கிறார்கள் என்றாலும், அந்த சோப்பை எந்த இடத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும். ஆண், பெண் இருவரும் ரோமம் நிறைந்த பகுதிகளில், ரோமம் வளரக்கூடிய பகுதிகளில் சோப்பை தேய்த்து நன்றாக குளிக்கவேண்டும். மணக்கும் தன்மைகொண்ட ஏதாவது திரவம் ஒன்றை சேர்த்து மிதமான சுடுநீரில் குளிப்பது நல்லது. அக்குள், தொடை இடுக்கு, காதுகளின் பின்பாகம், தொப்புள், மார்பக இடுக்குகள், பிறப்பு உறுப்பு பகுதி, பின்பகுதி போன்றவைகளில் இருக்கும் அழுக்கு நீங்கும் அளவுக்கு குளிக்கவேண்டும்.

ஆணும், பெண்ணும் தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். நீங்கள் உறவுக்கு தயாராக இருந்தால், உறவு வைத்துக்கொள்ளும் நேரத்திற்கு சற்று முன்பு இரண்டாவது குளியலை வைத்துக்கொள்ளலாம். இது உறவுக்கு மட்டுமல்ல, உறக்கத்திற்கும் ஏற்றது.

பெரும்பாலான தம்பதிகள் முத்தத்தோடுதான் உறவைத் தொடங்குகிறார்கள். அதனால் உறவுக்கு நுழைவு வாசல் போன்று வாய்தான் இருக்கிறது. வாய், உதடுகள், பற்களை கணவன்-மனைவி இரு வருமே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பற்களைத் துலக்கி, வாயை சுத்தம் செய்வதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். இந்த இரண்டு நிமிட சுத்தம் தாம்பத்தியத்தை மிகவும் இனிமையாக்கி விடும். வாய் துர்நாற்றத்தால் பெரும்பாலானவர்கள் அவதிப்படுகிறார்கள். வாய் துர்நாற்றம் தாம்பத்திய ஆர்வத்தைக் குறைத்துவிடும். வாயில் பிரச்சினை இருந்தாலும், பற்களில் கேடு இருந்தாலும், வயிற்றில் கோளாறுகள் இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். அதனால் டாக்டரிடம் ஆலோசனை பெற்று காரணத்தைக் கண்டறிந்து உடனே அதனை சரி செய்திடுங்கள்.

தாம்பத்திய இன்பத்தை நன்றாக நுகர விரும்புகிறவர்கள் கைகளையும், கால்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். கை, கால் நகங்களையும் வெட்டிவிட வேண்டும். நீண்ட நகங்கள், தம்பதிகள் தன்னை மறந்த நிலையில் இருக்கும்போது கூர்மையான ஆயுதங்களாக மாறி, அவர்களை காயப்படுத்திவிடக் கூடும். கை நகங்களை வெட்டி, அழுக்குகளை நீக்கி பராமரிப்பது, குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அக்குள் மற்றும் பிறப்பு உறுப்பு பகுதிகளில் இருக்கும் ரோமங்களை ‘ஷேவ்’ செய்து அப்புறப்படுத்த வேண்டும். அந்தப் பகுதியை இளம் சுடுநீரால் அவ்வப்போது கழுவவேண்டும்.

பெண்கள் மாதவிலக்கு காலகட்டத்தில் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மாதவிலக்கு நாட்களில் 3 முதல் 5 மணி நேரத்திற்குள் ‘சானிட்டரி பேடு’ மாற்ற வேண்டும். அந்தப் பகுதியை நன்றாக சுத்தம் செய்யவும் வேண்டும். சானிட்டரி பேடு மாற்றாவிட்டால் பாக்டீரியா தொற்றுகள் உருவாகி, நாற்றம் வீசத் தொடங்கிவிடும். மாதவிலக்கு நாட்களில் தினமும் இருமுறை இளம் சுடுநீரும், வீரியம் குறைந்த சோப்பும் பயன்படுத்தி, பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். உணவருந்திய பின்பு கையை கழுவுவது எப்படி அவசியமோ, அதுபோல் உறவு முடிந்த பின்பும் கணவன்-மனைவி இருவரும் உறுப்புகளை சுத்தம் செய்யவேண்டும்.

பெண்களுக்கு அழகு எப்போதும் அவசியம்

பெண்களுக்கு அழகு எப்போதும் அவசியம்






















வீட்டு வேலை, அலுவலக பணி என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த பெண்கள், இப்போது சற்று ஆசுவாசம் அடைந்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக, காலையில் அவசர அவசரமாக எழுந்து வீட்டுவேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் இப்போது இல்லை. வீட்டில் கிடைக்கும் இந்த ஓய்வு நேரங்களை சரும பராமரிப்புக்கு ஒதுக்கி, தங்களின் சரும அழகை இல்லத்தரசிகள் மெருகேற்றிக்கொள்ளலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:-

முகத்தை சுத்தப்படுத்துங்கள்:- முதலில் முகத்தை நன்றாக கழுவி பளிச்சென்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு அகன்ற கிண்ணத்தில் 4 டேபிள் ஸ்பூன் பாலை ஊற்றிக்கொள்ளவேண்டும். பருத்தி பஞ்சை உருண்டையாக உருட்டி அதனை பாலில் முக்கி முகத்தை துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் ஈரமான கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பரை கொண்டு முகத்தை துடைத்துவிட வேண்டும்.
முகத்தில் பூசுங்கள்:- அடுத்ததாக முகத்தில் பூசுவதற்கு எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன், தேன் அரை டீஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றையும் அகன்ற கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். கிரீம் பதத்துக்கு வந்ததும் கைவிரல்கள் அல்லது பிரஸ்சில் எடுத்து முகத்தில் அழுத்தமாக பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். பின்னர் ஸ்பாஞ்ச் கொண்டு முகத்தை துடைத்துவிட வேண்டும்.

மசாஜ் செய்யுங்கள்:- பின்னர் முகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். கற்றாழை ஜெல் 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஆகிய மூன்றையும் அகன்ற கிண்ணத்தில் கொட்டி நன்றாக கிளறி கிரீம் தயார் செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கிரீமை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு மென்மையான டிஸ்யூ பேப்பர் அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு முகத்தை துடைக்க வேண்டும்.

மற்றொரு மசாஜ்:- மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடலை பருப்பு மாவு 2 டேபிள்ஸ்பூன், பால் 2 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 டேபிள்ஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் தேனை தவிர்த்துவிடலாம். எல்லா பொருட்களையும் கிண்ணத்தில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு தண்ணீரில் முகத்தை கழுவிவிடலாம். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை இந்த வழிமுறையை பின்பற்றி வந்தால் சருமம் பளபளப்புடன் ஜொலிக்க தொடங்கும்.

இரவில் மறக்காமல் இதை செய்தால் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்

இரவு தூங்கும் முன் செய்யும் சில விஷயங்கள் ஆரோக்கியமான சரும அழகைத் தரும். இரவில் நீங்கள் அளிக்கும் பராமரிப்பு சருமத்திற்கு கூடுதல் பலனைத் தரும்.

இரவில் மறக்காமல் இதை செய்தால் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்

முறையான சரும பராமரிப்புகளைப் பின்பற்றினாலே பொலிவான அழகைப் பெறலாம். குறிப்பாக இரவு தூங்கும் முன் செய்யும் சில குறிப்புகள் ஆரோக்கியமான சரும அழகைத் தரும். ஏனெனில் இரவில்தான் உங்கள் சருமத் துகள்கள் விரிந்து சுவாசம் பெறும். அந்த சமயத்தில் நீங்கள் அளிக்கும் பராமரிப்பு கூடுதல் பலன் தரும்.

முகம் கழுவுதல் : முதலில் உங்கள் சருமத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவுதல் அவசியம். இதனால் சருமத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய், பிசுபிசுப்பு, அழுக்கு, இறந்த செல்கள் போன்றவை நீங்கி சருமத்தை தெளிவாக்கும்.


சீரம் : சருமத்திற்கு ஈரப்பதம் அளித்தல் மிக மிக அவசியம். இதனால் வறண்ட மற்றும் வெடிப்பான சருமத்தை தவிர்க்கலாம். இதற்கு தேன், தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைஸர் சீரம் போன்றவையும் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.

நைட் கிரீம் : சீரத்தை சருமம் உள்ளிழுத்தபின் நைட் கிரீம் பயன்படுத்தலாம். காலையில் எழுந்து பார்க்கும்போது பொலிவான சருமத்தை தரும். டல்லாக தோற்றமளிக்கும் சருமத்தை பளிச்சிட வைக்கும் சக்தி நைட் கிரீம்கள் செய்யும்.

மேலே குறிப்பிட்ட விஷயங்களை செய்ய நேரமில்லை என்றாலும் முகத்தை கழுவுவதை மட்டும் கட்டாயம் கடைபிடியுங்கள். அதுவே சருமத்திற்கு போதுமானது.

நரை முடிக்கு சிறந்த பீட்ரூட் ஹேர் டை

இந்த இயற்கை பீட்ருட் ஹேர் டை இளநரை மற்றும் நரை முடி உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று வாரங்கள் பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக இளநரை மற்றும் நரை முடி பிரச்சனை உடனே சரியாகும்.

நரை முடிக்கு சிறந்த பீட்ரூட் ஹேர் டை

இந்த இயற்கை பீட்ருட் ஹேர் டை இளநரை மற்றும் நரை முடி உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று வாரங்கள் பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக இளநரை மற்றும் நரை முடி பிரச்சனை உடனே சரியாகும்.

தேவைப்படும் பொருட்கள்:
கறிவேப்பில்லை – ஒரு கப்
சிவப்பு செம்பருத்தி பூ – 10
எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
தண்ணீர் – 200 மில்லி
பீட்ருட் – ஒன்று
காபி தூள் – மூன்று ஸ்பூன்

அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைக்கவும். அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். தண்ணீர் நன்றாக சூடாகியதும், அவற்றில் மூன்று ஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். காபித்தூள் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கும் போது நன்றாக நுரை கிளம்பும் என்பதால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.

மிக்சி ஜாரில் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக பீட்ருட்டை நறுக்கி போட்டு  அதனுடன் ஒரு கப் கறிவேப்பிலை, 10 சிகப்பு செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு இந்த கலவையை அடுப்பில் வைத்துள்ள காபித்தூள் கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். ஒரு 10 நிமிடங்கள் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எடுக்கவும்.

இந்த கலவை ஒரு மணி நேரத்துக்குள் நன்றாக ஆறிவிடும் என்றாலும், குறைந்தது 12 மணி நேரம் வரை வைத்திருந்து பின்பு தான் இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்த வேண்டும்.  எனவே இந்த கலவையை மாலை நேரங்களில் தயாரித்து இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில், இந்த பீட்ருட் ஹேர் டையை பயன்படுத்தவும்.

தயாரித்து வைத்துள்ள இந்த ஹேர் டையை வடித்து அல்லது அப்படியே கூட பயன்படுத்தலாம். வடிகட்டி பயன்படுத்தும்போது, தலை அலசுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்துவதற்கு முன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து பின்பு ஹேர் டையாக பயன்படுத்தவும்.

இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கையானது என்பதால், தலை முடிகளுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக இந்த கலவையில் சேர்க்கப்பட்டுள்ள கறிவேப்பிலை அதிகளவு இரும்பு சத்துள்ளது, மேலும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது, தலை முடி வேர்களுக்கு நல்ல வலிமை அளிக்கிறது.

மேலும் செம்பருத்தில் உள்ள கொலுஜான் தலை முடிக்கு நல்ல போஷாக்கை அளிக்கிறது. எலுமிச்சை தலையில் உள்ள பொடுகை அகற்ற பெரிதும் உதவுகிறது. அதேபோல் பீட்ருட் இளநரை மற்றும் நரை முடிகளுக்கு நிரந்தரமான கருமை நிறத்தை அளிக்க பெரிதும் பயன்படுகிறது.

இந்த பீட்ருட் ஹேர் டையைதொடர்ந்து மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தி வந்தால் நரை முடி மறைய ஆரமித்துவிடும்.

முகப்பரு, கரும்புள்ளிக்கு நிரந்தர தீர்வு தரும் வாழைப்பழம்

சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு சிறந்த ஃபேஸ்பேக் எப்படி வாழைப்பழத்தை பயன்படுத்தி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
முகப்பரு, கரும்புள்ளிக்கு நிரந்தர தீர்வு தரும் வாழைப்பழம்
                                  வாழைப்பழ பேஸ்பேக்

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் சரும பிரச்சனைகளை சந்திக்கின்றன. குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள் அனைத்தும் சரும அழகையே பாதிக்கின்றன. இவை அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வாழைப்பழம் ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது.

ஒரு பவுலில் பாதியளவு வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவு அல்லது கோதுமை மாவினை சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு 1/4 ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இவற்றை பயன்படுத்துவதற்கு முன். முகத்தை 5 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும்.

பின்பு முகத்தை அழுத்தமாக துடைத்து விட்டு. பின்பு தயாரித்த வாழைப்பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் அனைத்தும் மறைந்து சருமம் பளபளப்பாக மற்றும் வெள்ளையாக காணப்படும்.

சிலருக்கு முகம் எப்பொழுதும் பொலிவிழந்து காணப்படும். அப்படிப்பட்டவர்கள் பாதியளவு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள கருமைகள் மறைந்து, சருமம் பொலிவுடன் காணப்படும்.

சன்லையிட் காரணமாக சருமம் வறட்சி அடைத்து காணப்படும். இந்த சரும வறட்சியை சரி செய்ய வாழைப்பழம் சிறந்த ஃபேஸ்பேக்காக பயன்படுகிறது. இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்டகண்ட ஃபேஸ்வாஷினை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

எனவே ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றில் அரை வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கினை சருமத்தில் நன்றாக அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யவும், பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.

பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த முறையை தினமும் பின்பற்றலாம் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பின் பற்றலாம். இவ்வாறு அப்ளை செய்வதினால் சரும வறட்சி நீங்கி சருமம் மென்மையாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.

கர்ப்பத்தை தவிர்த்து தாம்பத்தியத்திற்கு பாதுகாப்பான நேரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

தம்பதியினர் போதுமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம்.

கர்ப்பத்தை தவிர்த்து தாம்பத்தியத்திற்கு பாதுகாப்பான நேரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?
  கர்ப்பத்தை தவிர்த்து தாம்பத்தியத்திற்கு பாதுகாப்பான நேரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

ஒவ்வொரு திருமணமான தம்பதியினருக்கும், ஒருகட்டத்தில் குழந்தை பெறுவதை தள்ளிப்போட வேண்டுமென்று தோன்றும். அதுவே குழந்தை பெற்றவர்களுக்கோ அடுத்த குழந்தை வேண்டாமென்றோ, சில நாட்கள் போகட்டுமென்றோ நினைப்பார்கள். இந்நிலையில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால், குழந்தை உருவாக்கி விடுமோ என்ற பயத்துடனேயே இருப்பார்கள். இந்த பயத்தினால் செக்ஸையே சிலர் தவிர்த்தும் விடுகிறார்கள். மேலும் இதில் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. கண்டிப்பாக இதை அறியாமை என்றுதான் சொல்லவேண்டும்.

செக்ஸ்க்கு பிறகு கர்ப்பமாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு கருத்தடை  ஊசி, மாத்திரைகளையோ அல்லது வேறு அசௌகரியத்தை உண்டாக்கும் வழிகளோ தேவையில்லை. இதனால் உங்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளும், மன சங்கடங்களும் தான் ஏற்படும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளைத் தவிர்த்து, நீங்கள் இயற்கையாகவே, கர்ப்பமாவதை தவிர்க்க சில பாதுகாப்பான வழிகள் உள்ளது. அது, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தை கணக்கிட்டு, அதன் பின் பாதுகாப்பான (safe period) சில நாட்களை மட்டுமே செக்ஸ்க்குத் தேர்ந்தெடுப்பது தான்.

ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள்.

எனினும், சில தருணங்களில், எதிர்பாராத விதமாக சில பெண்களுக்கு கர்ப்பம் ஏற்பட்டு விடுகின்றது. இது குறிப்பாக, எப்போது முட்டை வெளியேறுகின்றது என்ற கணிப்பு தவறாகும் போது நடக்கின்றது. மேலும் ஓவுலேஷனுக்கு பின், பல பெண்கள் சில நாட்களுக்கு கருவுறும் தன்மையோடு திடமாக இருப்பதும் மற்றுமொரு காரமாக உள்ளது.

இதன் காரணமாகவே தம்பதியினர் போதுமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை விட, ஆணுறை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும். இதனால் உடல் உபாதைகளும் ஏற்படாது.

உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம். அப்படி உங்களால் கணிக்க முடியாமல் போகும் தருணத்தில், வேறு வழி இன்றி நீங்கள் கருத்தடை மருந்து மற்றும் காண்டம் போன்ற சில உதவிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.

ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்
           ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

சமையல் : இத்தனை நாள் வேலை என கூறி தப்பித்திருக்கலாம். தற்போது அது முடியாத காரியம். எனவே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சமையல் வேலைகளைக் கவனிக்கலாம். இதனால் மனைவி தினமும் சமையலறையில் எவ்வளவு கஷ்டப்பருகிறாள் என்பதை கணவர் உணர்ந்து கொள்ளலாம். மேலும் மனைவிக்கு உதவி செய்வதன் மூலம் அன்பையும், நெருக்கத்தையும் அதிகரிக்கலாம்.


விளையாட்டு : வேலை இருக்கும் போது மனைவியுடன் சேர்ந்து விளையாட நேரம் கிடைத்தாது. ஆனால் இப்போது அப்படியில்லை கிடைக்கும் நேரத்தில் மனையுடன் கேரம், செஸ் என இண்டோர் கேம்ஸ் விளையாடலாம். இதனால் உங்கள் மனைவிக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளது, திறமை உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். மேலும் மனதை புரிந்து கொள்ளவும் முடியும்.
ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

உடற்பயிற்சி : வீட்டில் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்யலாம். இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கும்.

தோட்டக்கலை : செடி வளர்க்கிறீர்கள் என்றால் இருவரும் இணைந்து கலை எடுத்தல், தண்ணீர் ஊற்றுதல் என செடி பராமரிப்பு வேலைகளில் ஈடுபடலாம். இதன் மூலம் நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு மனைவி எப்படி வீட்டையும், தோட்டத்தையும் பராமரிக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

தம்ப்திகள் இருவரும் வேலைக்கும் போறவர்களாக இருந்தால் இந்த ஊரடங்கை தம்பதிகள்  இணைந்து பல்வேறு வீட்டு வேலைகளை செய்யவும், மனவிட்டு பேசவும், விளையாடவும், அன்பை பரிமாறி கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புரிதல் ஆரோக்கியமான தம்பத்தியத்திற்கு வழிவகுக்கும். 

பெண்களின் உடல் உபாதைகளை தீர்க்கும் வெந்தயம்

பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

பெண்களின் உடல் உபாதைகளை தீர்க்கும் வெந்தயம்
                         
மாதவிடாய் :

பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிதலைவலிஎரிச்சல்கோபம் போன்ற உணர்வுகளையும் குறைக்க கூடும். மெனோபாஸ் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக அமைந்திடும். பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அதே வேளையில் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.


தாய்ப்பால் :

முளக்கட்டிய வெந்தயத்தில் galactagogou என்ற பால் சுரக்கும் தன்மை இருக்கிறது. இவை பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுக்கிற பெண்கள் தினமும் ஒரு ஸ்பூன் அளவில் அரிசி வடித்த கஞ்சியோடு சேர்த்து  எடுத்துக் கொள்ளலாம்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...