Sunday, April 19, 2020

மூக்கு அழகும் முக்கியம்!



மூக்கு அழகும் முக்கியம்!

உடல் அழகை மேம்படுத்துவதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலானோர் மூக்கை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை.
ஒருசிலர் மூக்கை சுற்றி கரும்புள்ளிகள் படர்ந்திருக்கும். அழுக்குகள் சேர்ந்தும் அவதிக்குள்ளாக்கும். அது முக அழகுக்கு பங்கம் விளைவிக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே மூக்குக்கும், முக அழகுக்கும் பொலிவு சேர்க்கலாம்.

அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ள வேண்டும். வெந்நீர் சற்று ஆறியதும் அதனை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும். அகன்ற போர்வையை தலையில் மூடி முகத்தில் நீராவி படியும்படி ஆவி பிடிக்க வேண்டும். நீராவியால் சருமத்திற்கு எரிச்சலோ, காயமோ ஏற்பட்டு விடக் கூடாது. 10-15 நிமிடங்கள் தொடர்ந்து நீராவியை மூக்கு பகுதியில் நுகர்ந்துவிட்டு டவலால் துடைக்க வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் மூக்குப் பகுதி சுத்தமாக இருக்கும்.

மூக்கில் படர்ந்திருக்கும் கரும்புள்ளிகளை போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்.
இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் குழைத்து மூக்கில் பசை போல் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கிவிடும். மூக்கு பகுதியில் உள்ள அழுக்குகள் அகன்றுவிடும். கரும்புள்ளிகளும் மறையத் தொடங்கும். 

பேக்கிங் சோடாவுடன் வினிகரும் சேர்த்து பயன்படுத்தலாம்.
மூக்கில் ஆங்காங்கே தென்படும் கருப்பு நிற புள்ளிகளை போக்குவதற்கு ஓட்ஸையும் உபயோகிக்கலாம்.

இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸுடன் மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை மூக்கின் மேல் பூசி சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம்.

ஓட்ஸுடன் தக்காளி, தேனையும் பயன்படுத்தலாம். 4 தக்காளி பழங்களை ஜூஸாக்கி அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு ஓட்ஸ் கலந்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும்.
வாரம் ஒரு முறை செய்து வந்தால் போதும். மூக்கு பொலிவுடன் காட்சியளிக்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவை மூக்கில் விரல்களால் அழுத்தி தடவ வேண்டும். அது உலர்ந்ததும் மீண்டும் ஒருமுறை வெள்ளைக்கருைவ பூச வேண்டும். இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். இரண்டு வாரம் தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகளுக்கு தீர்வு காணலாம்.

தேங்காய் பால் அழகு குறிப்புகள்...


சருமத்திற்கு அழகு தரும் தேங்காய் பால்
நம் அன்றாட உணவுகளில் அதிகம் சேர்த்து கொள்வது தேங்காய். அதில் நமது உடலுக்கு தேவையான எண்ணற்ற நன்மைகள் உள்ளன. தேங்காய் நமது சருமத்திற்கும் முடிக்கும் அழகு தரவல்லது. இதனை சரியாக உபயோகிப்பதன் மூலம் நம் சருமம் பல மடங்கு ஆரோக்கியம் பெறுகின்றன. தேங்காய் பால் கொண்டு நமது சருமத்தை எவ்வாறு அழகாக வைப்பது என்று இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

அதில் பல மூல பொருட்களும், வைட்டமின்களும், தாதுக்களும் இதில் இருப்பதால் நமது உடல் ஆரோக்கியத்துக்கும் சரும ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
நமது முகத்தில் ஏற்படும் பெரிய பிரச்சனை முக வறட்சி தான். உங்களுக்கும் முகம் வறட்சியாக உள்ளதா? இதனால் பல கிரீம்களையும், சோப்புகளையும், உபயோகப்படுத்தி பிரயோஜனம் இல்லாமல் இருக்கிறதா? தேங்காய்ப்பாலை உபயோகப்படுத்தி பாருங்கள் இது இயற்கையானதும் உடலுக்கும் நல்லதும் ஆகும். 

💙தேவையற்ற வேதிப்பொருள்கள் கலந்த கிரீம்களை உபயோகிப்பதால் முகப்பொலிவு கெட்டுத்தான் போகின்றன. சரி நாம் தேங்காய் பால் கொண்டு எவ்வாறு ஆரோக்கியம் அடைவது என்று தெரிந்து கொள்வோம்.

இதற்கு தேவையான பொருள்கள்:
தேங்காய் பால் அரை கப்
ரோஸ் நீர் அரை கப்
ரோஜா இதழ் சிறிதளவு
செய்முறை: நாம் குளிக்கும் நீரை சுத்தப்படுத்தி சிறிதளவு சூடுபடுத்திக்கொள்ளவும். அந்த நீரில் தேங்காய் பால், ரோஸ் நீர், மற்றும் ரோஜா இதழ்களை சேர்த்து குளிக்கும் நீரில் கலந்து கொள்ளவும். இதனை தொடர்ந்து குளிக்கும் நீரில் பயன்படுத்தி வந்தால் சருமத்தின் வறட்சியும் சொர சொரப்பான சருமமும் நீங்கி சருமம் மென்மையுடனும் ஈரத்துடனும் இருக்கும்.
இளமையான தோற்றத்திற்கு
நமது உடல் தற்போது உள்ள உணவு பழக்கவழக்கத்தால் விரைவாகவே வயதான தோற்றம் அடைகிறது. 

💙வயதான தோற்றம் இல்லாமல் இளமையான தோற்றத்தோடு இருக்க வேண்டுமா. இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையான பொருட்கள்
பாதாம் 6
தேங்காய் பால் சிறிதளவு

செய்முறை: பாதாமை எடுத்து இரவு முழுவதும் ஊறவைத்து கொள்ளவும் அதனை மறுநாள் எடுத்து தோல் உரித்து அதன் பின் தேங்காய் பாளை சேர்த்து நன்கு அரைத்து அதனை முகத்தில் பூசி ஒரு பத்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இளமையாக வைக்கும்.


💙முக பருக்கள் நீங்க வேண்டுமா?
தேவையான பொருட்கள்
தேங்காய் பால் சிறிதளவு
ஓட்ஸ் 3 ஸ்பூன்
செய்முறை: முகத்தில் உள்ள பருக்களை எளிய வகையில் நீக்குவதற்காக முதலில் ஓட்ஸை அரைத்து அத்துடன் தேங்காய் பால் சேர்த்து நன்றாக மீண்டும் அரைத்து கொண்டு அதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் வரை வைத்து சூடான வெது வெதுப்பான நீரில் கழுவி வருவதால் முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் நீங்கும்.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...