அத்திப்பழத்தில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நம் இதய நோய்க்கு அரணாக, சரும பிரச்சனைகளை தீர்க்க, சிறுநீரக கற்கள் நீங்க இப்படி
அத்திப்பழம் மிகவும் அத்தியாவசியமான பழங்களுள் ஒன்றாகவே குறிப்பிடலாம். மனிதனுக்கு பல வகைகளில் பயன்படும் அத்திப்பழம் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பொதுவாக ஜூலை பிற்பகுதியிலிருந்து அக்டோபர் நடுப்பகுதி வரை இதன் சீசன் இருக்கும். இந்த அத்திப்பழத்தின் உட்புறம் பார்ப்பதற்கு சிவப்பாக இருக்கும். இதை காய வைத்து உலர்ந்த வடிவிலோ அல்லது அப்படியே ப்ரஷ்ஷாகவோ சாப்பிடலாம். அத்தி பழத்தில் புரத சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10 மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள், விட்டமின் சி, விட்டமின் பி, டி, சர்க்கரை, சுண்ணாம்பு சத்து, இரும்பு, தாமிர சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளனஉள்ளது. இந்த அத்தி பழத்தை உலர வைத்து டின்களில் அடைத்தோ அல்லது அத்தி பழம் பொடியாகவோ நாம் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இது நமது எலும்புகள் மற்றும் சருமத்திற்கு முக்கியமானது. இது போன்று இன்னும் ஏராளமான நன்மைகளைத் தரும் அத்திப்பழத்தை பற்றி இப்பகுதியில் காண்போம்
முகப்பருக்கள் மற்றும் கொப்பளங்கள்
அத்திப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நம் முக ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இது முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கொப்பளங்களை போக்குகிறது. இதற்கு பழுத்த அத்திப்பழத்தை முகத்தில் தடவி 15 - 20 நிமிடங்கள் உலர விடுங்கள். பிறகு இதை நீரால் கழுவுங்கள். முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கொப்புளங்களை உலர வைத்து காணாமல் போகச் செய்கிறது. மேலும் பருக்கள் இருந்த வடுக்களையும் மறையச் செய்கிறது. முகழகிற்காக அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து பயன்படுத்தி வரலாம். முகத்தில் அத்திப்பழத்தை பூசும் போது துளைகள் இறுக்கப்பட்டு சரும எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில் சரும துளைகளும் அடைபடாமல் இருப்பதால் சருமம் சுவாசிக்க முடியும். எனவே உங்க முகத் தோற்றத்தை மேம்படுத்த விரும்பினால் அத்திப் பழத்தை பயன்படுத்துங்கள்
மலச்சிக்கல் தீர
அத்திப்பழம் இயற்கையாகவே ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது. எரிச்சலுடன் மலம் கழிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் அத்திப்பழம் சாப்பிட்டு வரலாம். எனவே இரவே 2-3 அத்திப் பழங்களை தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். இதை ஒரு மாத காலத்திற்கு காலையில் எழுந்ததும் சாப்பிட்டு வாருங்கள். உங்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு நல்ல தீர்வளிக்கும்
இதய நோய்கள் மற்றும் சிறுநீரக கற்கள்
உலர்ந்த அத்தி பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறையவே உள்ளது. நாம் அன்றாட உணவில் சேர்க்கும் தக்காளியைப் போல் அத்திப்பழமும் நம் இரத்தத்தை சுத்தம் செய்கிறது. இதில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த இரண்டு விட்டமின்களும் ஒரு ஆக்ஸினேற்றியாக செயல்பட்டு நமக்கு இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் இதய நோய்கள் மற்றும் சிறுநீரக கற்கள் பிரச்சினையில் இருந்து நம்மை காக்கின்றன. ஒரு கப் தண்ணீரில் 6 அத்திப்பழங்களை போட்டு வேகவைக்கவும். பின்னர் அதை தினமும் ஒரு மாதம் கால வரை உட்கொள்ளுங்கள். உங்களுக்கு இதய நோய்கள் மற்றும் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவும்.
எலும்புகளை வலிமையாக்கும்
அந்திப்பழத்தில் எலும்புகளை வலிமையாக்க கூடியதாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் டி போன்ற சத்துக்கள் உள்ளன. 1 உலர்ந்த அத்திப் பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் தேவையில் 3 சதவீதம் வரை பூர்த்தி ஆகிறது. இதை பெண்கள் உண்டு வரும் போது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் முதுகு வலி போன்ற எலும்பு பிரச்சனைகள் வராமல் இருக்கும். கால்சியம் பற்றாக்குறையால் எலும்புகள் மெலிந்து போதல் தடுக்கப்படும்
மார்பக புற்றுநோயை தடுக்கும் மருந்து
தற்போதைய கால கட்டத்தில் பெண்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை மார்பக புற்று நோய். அதிலும் குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிப்படைகின்றனர். ஆனால் பெண்கள் இந்த அத்திப்பழத்தை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்று நோய் அபாயத்தை குறைக்க முடியும். செல்களில் ஏற்படும் செல் பிறழ்ச்சியை தடுத்து புற்றுநோய் செல்கள் உருவாக்கத்தை தடுக்க அத்திப்பழம் பயன்படுகிறது
No comments:
Post a Comment