Friday, April 10, 2020

கரு கரு கூந்தலுக்கு அற்புத எண்ணெய்


நெல்லிக்காய் எண்ணெய் :


நெல்லிக்காய் நரை முடியை தடுக்கும். கூந்தல் வளர்ச்சியை அபாரமாகத் தூண்டும். மென்மையான கூந்தலை தரும்.


செய்முறை. 
 முதலில் 2 டம்ளர் நீரில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து கொதிக்க வையுங்கள்.
நீர் வற்றி அரை டம்ளர் குறையும் வரை சுண்ட காய்ச்சியபின் , அடுப்பை அணைத்து நீரை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டி நீர்தான் நெல்லிக்காய் டிகாஷன்.
பின்னர் துணியில் மீதமிருக்கும் நெல்லிக்காய் துகள்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் டிகாஷன், நெல்லிக்காய் துகள்கள் மற்றும் 100 மி.லி. தேங்காய் என்ணெய் கலந்து கொதிக்க வையுங்கள்.

நீர் முழுவதும் வற்றிப் போன பின் நெல்லிக்காய் எண்ணெய் மட்டும் மீதமிருக்கும். அப்போது அடுப்பை அணைத்து, ஆறியபின் பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

வாரம் இரு முறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால், சிறந்த முறையில் கூந்தல் வளரும். முடி உதிர்தல் நிற்கும்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...