Thursday, May 14, 2020

தொடையில் இருக்கும் கருப்பும் சொரசொரப்பும் போக்கலாம் எப்படி தெரியுமா?


முகத்தைப் பராமரிக்க முடிந்தளவு நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் உள் தொடையில் இருக்கும் கருப்பை நீக்க முயற்சி செய்திருக்கிறோமா? ஆனால் கொஞ்சம் மெனக்கெட்டால் கருமை நீங்கி விடும். எப்படி என்று பார்க்கலாமா?

​தொடையிலும் படரும் கருமை
பெரும்பாலும் கழுத்து, அக்குள் பகுதியில் படரும் கருப்பு சரும நிறத்திலிருந்து வேறுபடுத்தி காட்டு ம். மாநிறத்தில் இருப்பவர்களை விட சற்று வெள்ளை நிறமாக இருப்பவர்களுக்கு இது அழகை குறை ப்பதாக காட்டும்.
இவை வெளிப்புறத்தில் இருக்கும் பிரச்சனை. ஆனால் உள் தொடையில் உண்டாகும் கருமை நிறத் தை சட்டென்று பார்ப்பதில்லை என்பதோடு அதைக் கண்டாலும் பெரிதுபடுத்துவதும் இல்லை. அதைப் பராமரிப்பதும் இல்லை. சற்று தீவிரமாகும் போது அந்த இடத்தில் சொரசொரப்பையும் உண்டாக்கி எரிச்சலை ஏற்படுத்தும்.

​காரணம் என்ன

தொடைகள் இரண்டும் உரசும் போது சரும உரசல் ஏற்படும் போது அந்த இடத்தில் கருமை படர்வது வழக்கம். உடல் பருமனாக இருப்பவர்கள் அனைவருமே இந்த பிரச்சனைக்கு உள்ளாவார்கள். இதில் வயது பேதமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரும நிறத்துக்கு ஏற்றாற் போல் தொடையின் நிறமும் இருக்க வேண்டுமானால் முறையான பரா மரிப்பு இருந்தால் போதும். காற்றோட்டமில்லாத அந்தரங்கமான இடங்களுக்கும் பராமரிப்பு தேவை. இது அழகுக்காக வேண்டி அல்ல, ஆரோக்கியத்துக்காகவும் பராமரிக்க வேண்டும்.

இறுக்கமான ஆடைகளை அணியும் போதும் குறிப்பாக பருமனான ஜீன்ஸ் அணியும் பெண்களின் உள் தொடை அதிக கருமை அடைய வாய்ப்புண்டு. இதை எப்படி நீக்குவது பார்க்கலாம்.
​சொரசொரப்புக்கு ஓட்ஸ் கலவை
தூங்குவதற்கு முன்பு குளித்து தொடையை ஈரம் போக மெல்லிய துணியில் துடைக்கவும். 

பிறகு தொடையின் சொரசொரப்பை போக்க இதை  செய்வோம்.
தேவை:
பொடித்த ஓட்ஸ் - 4 டீஸ்பூன்,
கெட்டித் தயிர்- 5 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,

பொடித்த ஓட்ஸை அகன்ற கிண்ணத்தில் போட்டு தயிர், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். ஒன்றோடொன்று நன்றாக சேரும் வரை கலக்கவும்.

இதேபோன்று எலுமிச்சை, வெள்ளரி, பாசிப்பருப்பு மாவையும் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம். சொரசொரப்புக்கு மஞ்சள் தூள் கலந்தும் பயன்படுத்தலாம்.
இதை தொடையின் உள்பகுதியில் கருமையாக இருக்கும் சருமத்தைச் சுற்றி ஸ்க்ரப் செய்யுங்கள். பத்து நிமிடங்கள் வரை பொறுமையாக ஸ்க்ரப் செய்யுங்கள்.

பிறகு குளிர்ந்த நீரில் கழுவி சருமத்தைத் துடைத்து எடுங்கள். சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி சொரசொரப்பு குறையும். ஒரே முறை மசாஜ் செய்யும் போது சொரசொரப்பு குறைவதை நன்றாக உணரலாம்.
மசாஜ் முடிந்ததும் நல்ல மாய்சுரைஸர் அல்லது கற்றாழை ஜெல்லை அந்த இடத்தில் தடவினால் சருமத்தின் கருப்பு நிறம் மங்கும். ஒரே இரவில் சொரப்பு குறைவதையும் ஒரு வாரத்தில் கருமை நீங்குவதையும் காணலாம்.
தொடையின் சருமத்தில் இருக்கும் சொரசொரப்பை ஒரே நாளில் பாதியாக குறைந்திருப்பதை காணலாம். பிறகு தொடையின் கருமை நீங்க இந்த பேக்கில் ஒன்றை பூசுங்கள்.

1. எலுமிச்சை சாறுடன் வெண்ணெய் சேர்த்து குழைத்து அந்த இடத்தில் மசாஜ் செய்யுங்கள்.

2. எலுமிச்சை சாறுடன் கற்றாழை ஜெல் சேர்த்து மசாஜ் செய்யலாம்.

3. இரவில் படுக்கும் முன்பு பேக் போட்டு முடித்ததும் அசல் சந்தனக்கல்லை பன்னீர் விட்டு உரைத்து கருமை இருக்கும் இடங்களில் பூசி வந்தால் கருமை நீங்கி சரும நிறத்தை அடையும்.

4.தினமும் குளிப்பதற்கு முன்பு நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். சோப்புக்கு பதி லாக குளியல் பொடி பயன்படுத்துவது நல்லது. குளியல் பொடி இல்லையென்றால் பாசிப்பருப்பு மாவு தேய்த்து குளிக்கலாம்.

​இதையெல்லாம் தவிருங்கள்
➡️தொடைக்கு காற்றோட்டம் தேவை இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள். ஜீன்ஸ் போன்ற கனமான ஆடைகள் சருமத்துக்கு பாதிப்பை உண்டாக்குபவை. குறிப்பாக இரவு நேரத்திலாவது தளர்வான ஆடைகளை அணிந்து பழகுங்கள்.

➡️தொடைப்பகுதியை பிறர் என்ன பார்க்கவா போகிறார்கள் என்ற மெத்தனத்துடன் உரிய பராமரிப் பைக் கொடுப்பதை தவிர்க்க நினைக்காதீர்கள். கருமை தொடையும் சொரசொரப்பும் இணைந் தால் நடக்கும் போது இரு தொடைகளும் உரசி தோல் உரியும் நிலையும் உண்டாகலாம்.

➡️அழகு என்பது வெளிப்புறத்தில் தெரியும் தோற்றத்துக்கு மட்டுமல்ல. உள்ளே இருக்கும் அந்தரங்க பகுதிக்கும் தான். இனி உங்கள்  முழு உடலையும்  அழகாக வைத்திருங்கள்.
'

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...