Thursday, April 23, 2020

பிறந்த குழந்தைக்கு குளியல் பொடி, என்னவெல்லாம் சேர்த்தா சருமம் பட்டுபோல் இருக்கும்

பிறந்த குழந்தைக்கு குளியல் பொடி, என்னவெல்லாம் சேர்த்தா சருமம் பட்டுபோல் இருக்கும்

பிறந்த குழந்தைக்கு பேபி சோப்பு, பேபி ஆயில், பேபி ஷாம்பு இவையெல்லாம் விட சிறந்தது வீட்டில் தயாரிக்கும் மூலிகை குளியல் 


குளியல் பொடி தயாரிக்க

குளியல் பொடி தயாரிக்க


ஹைலைட்ஸ்:

  • குழந்தையை குளிப்பாட்டும் போது இந்த பொடியை நன்றாக தேய்த்து உடல் முழுக்க பூசி குளிப்பாட்டுங்கள்.
  • குழந்தையின் நிறம் கூடுதலாக ஜொலிக்கவும், பளபளப்பாக்கவும் செய்கின்றன. பட்டுபோன்ற சருமத்தையும் ..
பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது என்ன பொருள் பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மிருதுவான சோப்பாக இருந்தாலும் அதை விட மென்மையான குழந்தையின் சருமத்துக்கு அவை ஒவ்வாமையை உண்டாக்காமலும் இருக்க வேண்டும். சிறிதளவே இரசாயனங்கள் இருந்தாலும் கூட அவை குழந்தையின் சருமத்தை பாதிக்க செய்யும்.

குழந்தையின் சருமத்தை பாதுகாக்க ஒரே வழி முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை குளியல் பொடிதான். இவை குழந்தையின் பட்டுபோன்ற சருமத்துக்கு எந்தவிதமான பாதிப்பையும் உண்டாக்காது. அதோடு குழந்தையின் சருமம் பட்டுபோன்று வழவழப்பாக மென்மையாகவும் இருக்கும்.

இயற்கை பொருள்களை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை பொடியை நீங்களே தயாரிக்கலாம். எப்படி என்று பார்க்கலாமா?
மூலிகை பொடிக்கு தேவையான பொருள்கள்:

பாசிப்பயறு - 250 கிராம்,
வேப்பிலை, துளசி- தலா 25 கிராம்,
வெந்தயம்- 25 கிராம்,
ஆவாரம்பூ - ஒரு கைப்பிடி,
எலுமிச்சை தோல்- 20 எண்ணிக்கை அளவு,
சந்தனம்- 50 கிராம்,
கஸ்தூரி மஞ்சள் - எண்ணிக்கை 10,
பன்னீர் ரோஜா இதழ்- 100 கிராம்,
வெட்டிவேர்- சிறிதளவு,’
மகிழம்பூ- 10 கிராம்,
பூந்தி கொட்டை - 5
பச்சை அரிசி- ஒரு கைப்பிடி.

கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் தனித்தனியாக உலர்த்தவும். பருப்பு வகைகளை தனியாகவும். இலைகளை பூவிதழ்களை தனியாகவும் காயவைத்து சேகரிக்கவும்.

வசம்பு : பிறந்த குழந்தைக்கு கொடுக்கலாமா? வேண்டாமா?அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..

எலுமிச்சை தோலை சாறு நீக்காமல் நறுக்கி அப்படியே காயவிடவும். பச்சை அரிசியை காயவைக்க வேண்டியதில்லை. வேப்பிலையை காம்பு நீக்கி கொள்ளுங்கள். துளசி இலையையும் உலர்த்தி கொள்ளுங்கள். இவை நொறுக்கும் அளவு காயவேண்டும். பிறகு இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து நைஸாக அரைத்துகொள்ளுங்கள்.
பன்னீர் ரோஜா இதழ்- 100 கிராம்,
வெட்டிவேர்- சிறிதளவு,’
மகிழம்பூ- 10 கிராம்,
பூந்தி கொட்டை - 5
பச்சை அரிசி- ஒரு கைப்பிடி.

கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் தனித்தனியாக உலர்த்தவும். பருப்பு வகைகளை தனியாகவும். இலைகளை பூவிதழ்களை தனியாகவும் காயவைத்து சேகரிக்கவும்.

வசம்பு : பிறந்த குழந்தைக்கு கொடுக்கலாமா? வேண்டாமா?அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..

எலுமிச்சை தோலை சாறு நீக்காமல் நறுக்கி அப்படியே காயவிடவும். பச்சை அரிசியை காயவைக்க வேண்டியதில்லை. வேப்பிலையை காம்பு நீக்கி கொள்ளுங்கள். துளசி இலையையும் உலர்த்தி கொள்ளுங்கள். இவை நொறுக்கும் அளவு காயவேண்டும். பிறகு இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து நைஸாக அரைத்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...