Wednesday, September 16, 2020

முக அழகை பாதுகாக்க வேப்பிலையா, முயற்சி செய்துதான் பாருங்க!

 




வேப்பிலையை கொண்டு சருமத்தை பாதுகாக்கலாம்.ஆனால் எதுடன் எப்படி சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதையும்...

வேப்பிலை கிருமி நாசினி என்பதால் சருமத்துக்கு தாரளமாக பயன்படுத்தலாம். சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே முகத்தில் படியும் தூசுகள் தான். அதை முழுமையாக பாதிப்பில்லாமல் வெளியேற்ற வேப்பிலை உதவுகிறது. வேப்பிலையை அப்படியே அரைத்து பயன்படுத்தும் போது அவை சரியாக மசியாமல் இருக்க வாய்ப்புண்டு. அதனால் வேப்பிலையை எப்போதும் பொடித்து வைத்துகொள்வது நல்லது. வேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், அவை தரும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

​வேப்பிலை பொடி தயாரிப்பு - வேப்பிலை சருமத்துக்கு பயன்படுத்தும் முறை

வேப்பிலை பொடியை முதலில் அரைத்துவிடுவோம். இது சாதாரணமானது தான் என்றாலும் உரிய முறையில் பொடித்தால் ஆறுமாதங்கள் வரை பயன்படுத்த முடியும். வேப்பிலையை ஈர்க் இல்லாமல் இலையை மட்டும் பறித்து சுத்தமாக கழுவ வேண்டும். வேப்பிலையில் மண், பூச்சிகளும் இருக்க வாய்ப்புண்டு என்பதால் அதை கழுவி நீரை உதறி நிழலில் உலர வைக்கவும்.



இலை நன்றாக காய்ந்ததும் மிக்ஸியில் இட்டு பொடிக்கவும். அதை மெல்லிய துளை கொண்ட சல்லடை அல்லது துணியில் போட்டு சலிக்கவும். சலித்த பொடியை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும். இந்த மாதிரி தயார் செய்தால் ஆறு மாதங்கள் வரை பொடி கெடாமல் இருக்கும். அதன் சத்துகளும் குறையாமல் இருக்கும். இப்போது எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

➡️​சரும பிரச்சனை எல்லா சருமத்தினருக்கும் - வேப்பிலை சருமத்துக்கு பயன்படுத்தும் முறை

சருமத்தில் அலர்ஜி, தடிப்பு, அரிப்பு, சிவப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் முதலில் முகத்தில் தங்கியிருக்கும் கிருமிகளை அகற்ற வேண்டும். இவை தேமல், கரும்புள்ளி, கருந்திட்டுகளையும் சரிசெய்யும்.

தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு வேப்ப இலை பொடியை தயிர் அல்லது காய்ச்சாத பாலில் நன்றாக பேஸ்ட் போல் சற்று இளகினாற் போல் குழைக்கவும். இதை சரும அலர்ஜி இருக்கும் இடங்களில் தடவி விட வேண்டும். இவை உலர்ந்ததும் அல்லது 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் 15 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.

➡️தழும்புகள், வடுக்கள் நீங்க - வேப்பிலை சருமத்துக்கு பயன்படுத்தும் முறை



முகத்தில் பருக்களால் தழும்புகளும், வடுக்கள், அம்மை புண்கள், வெண்புள்ளிகள் போன்றவை வரக்கூடும். இந்த பிரச்சனை இருந்தால் வேப்ப பொடியுடன் தேன் குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி, அந்த இடத்தில் மட்டும் தடவ வேண்டும். இரவு நேரங்களில் தடவி வருவதன் மூலம் விரைவான நிரந்தரமான பலன் கிடைக்கும்.

இரவில் பயன்படுத்தும் முன்பு முகத்தை சுத்தமாக கழுவி பிறகு இதை தடவி கொள்ளுங்கள். மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். இரசாயனம் இல்லாத இயற்கை பொருள் என்பதால் பக்கவிளைவு இருக்காது. பலனும் நிச்சயம் கிடைக்கும்.

➡️​முக பொலிவு பெற - வேப்பிலை சருமத்துக்கு பயன்படுத்தும் முறை




எல்லா வகை சருமத்தினரும் வேப்பிலையை ஃபேஸ் பேக் போட பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் 2 டீஸ்பூன் வேப்பிலை பொடியுடன் 4 டீஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்து குழைத்து முகத்திலும் கழுத்திலும் தடவி வந்தால் முகத்தில் எண்ணெய் வடிவது குறையும்.

➡️வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் தேன், நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் தடவினால் வறட்சி நீங்கி முகம் பொலிவும் மென்மையும் கிடைக்கும். மென்மையான சருமம் கொண்டவர்கள் வேப்பிலையுடன் வெந்தயப்பொடி சேர்த்து பன்னீர், பால் கலந்து தேய்த்து வந்தால் பொலிவு கிடைக்கும். முகம் பளிச்சென்று மின்னும்.

➡️​ப்ளீச் செய்ய - வேப்பிலை சருமத்துக்கு பயன்படுத்தும் முறை

வேப்பிலை பொடியை சுத்தமான நீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இதை முகம் ப்ளீச் செய்ய டோனராக பயன்படுத்தலாம். கணினியில் வேலை செய்பவர்கள் கண்கள் சோர்வுடனும் வலியுடனும் இருக்கும். தினமும் கண்களை இந்த நீரை கொண்டு கழுவினால் கண் சூடு குறையும். சருமத்தை அவ்வபோது இந்த நீரில் கழுவி வந்தால் அரிசி கழுவிய நீர் போன்று முகம் பளிச்சென்று இருக்கும்.

இராசயனம் கலக்காத வேப்பிலை பராமரிப்பால் இராசயனம் கலந்த க்ரீம்கள் பயன்படுத்தினாலும் கூட சருமத்துக்கு பாதிப்பு நேராது. தொடர்ந்து வேப்பிலையை பயன்படுத்தினால். எளிய செலவில்லாத ஆரோக்கியமான அழகு தரும் வேப்பிலையை நீங்களும் பயன்படுத்தி தான் பாருங்களேன்.

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...