Thursday, May 7, 2020

கடுகு எண்ணெய் அழகு குறிப்புகள்



சரும பொலிவிற்கு  கடுகு எண்ணெய்,எப்படி பயன்படுத்தணும்?
உடலுக்கு நன்மை செய்யும் எண்ணெய்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதிசயத்தக்க வகையில் அவை சருமத்துக்கும் கூந்தலுக்கும் அளவற்ற நன்மைகளை செய்வதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.
கடுகிலிருந்து தயாரிக்கப்படும் கடுகுஎண்ணெய் இதயத்துக்கு நன்மை செய்கிறது என்பது தெரியும். ஆனால் கடுகு எண்ணெய்க்குள் அழகு தரும் ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன இதை பயன்படுத்தி பார்த்தபிறகு நீங்களே உணர்வீர்கள்.
சருமத்தை சுத்தப்படுத்த உதவும் இயற்கை பொருளாக கடுகு எண்ணெயை சொல்லலாம். 

அதிகமான மேக் அப் போட்டபிறகு அந்த ஒப்பனையை கலைக்க பக்கவிளைவில்லாத கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம் என்கிறார்கள் நிபுணர்கள். சருமத்தின் துளைகளை அடைக்காமல் அழுக்குகளை நீக்கும் முதன்மை பொருளாகவே கடுகு எண்ணெயை சொல்லலாம். குறிப்பாக சருமத்தை பளிச் என்று மாற்றி நிறத்தை அதிகரிக்கவும் இவை உதவுகிறது. அப்படி கடுகு எண்ணெய் தரும் அதிசய அழகு குறித்து பார்க்கலமா?

➡️அழகு செய்வது கொள்வது என்பது வேறு அழகான புன்னகை பெறுவது என்பது வேறு. அழகான புன்னகைக்கு பற்கள் கறையில்லாமல் அழுக்கில்லாமல் பிரகாசமாக இருக்க வேண்டும். என்னதான் இரண்டு வேளை பிரஷ்செய்தாலும் பற்களை பிரகாசவமாக வைத்திருக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் கடுகு எண்ணெயை கொண்டு பற்களை பளிச்சென்று மாற்றிவிடலாம். அதோடு பற்களை சுத்தம் செய்யவும் இவை பயன்படுகிறது.
காலையில் எழுந்ததும் பற்களை வெறும் விரலால் தேய்த்து சுத்தம் செய்த பிறகு கடுகு எண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்துகொண்டு எலுமிச்சை சாறு சேர்த்து அதில் சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குழைத்து அதை கொண்டு பற்களை தேய்த்துவந்தால் ஒரே வாரத்தில் பற்கள் பளிச்தான். எண்ணெய் தேய்க்காமல் பயன்படுத்த நினைப்பவர்கள் இதை வாயில் போட்டு பற்கள் முழுக்க படும்படி வாய் கொப்புளித்து வந்தாலும் பலன் கிடைக்கும்.

➡️​முகம் கலராக -1
வெள்ளையாக இருந்தாலும் கூட பலருக்கும் இன்னும் கலராக வேண்டும் என்னும் ஆசை உண்டு. மாநிறத்தில் இருப்பவர்களுக்கும், கருப்பு நிறத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயம் கலராக மாற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கு கடுகு எண்ணெய் நிச்சயம் உதவும்.
தினமும் இரவு முகத்தை சுத்தமாக அழுக்கு போக கழுவி கடுகு எண்ணெயை எடுத்து முகத்தில் இலேசாக மசாஜ் செய்துகொண்டு வர வேண்டும். இவை முகத்தின் நிறத்தை மாற்றி பளீரென வைக்கும். கூடுதலாக முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகளை போக்கும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் முகம் கலராக மாறுவதை நீங்களே உணர்வீர்கள். அதோடு முக கலருக்கு மற்றும் ஒன்றையும் நீங்கள் செய்ய வேண்டும்.

​➡️முகம் கலராக -2
தேவை
கடுகு எண்ணெய் - 4 டீஸ்பூன்,
தயிர் - 1 டீஸ்பூன்,
வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன்,
பாசிப்பருப்பு அல்லது கடலை மாவு - 2 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - 10 சொட்டுகள்
அனைத்தையும் கலந்து வைத்துகொள்ளவும். முகத்தை சுத்தமாக கழுவி இந்த பேக் போடவும். முகம் மட்டும் அல்லாமல் கழுத்து பகுதி முழுக்க தடவிகொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவி எடுக்கவும். வாரத்துக்கு மூன்று முறை இப்படி செய்தால் முகம் கலராக மாறும்.
எல்லா சருமம் கொண்டவர்களும் கூட இதை செய்யலாம். கடுகு எண்ணெய் கலராக மாற்றினால் கூட பயன்படுத்தும் வெந்தயம் முகத்துக்கு மென்மையை அளிக்கும். மிருதுவாக வைத்திருக்கும்

➡️​உடலும் கலராக
கடுகு எண்ணெய் முகம் மட்டும் கலராக்காது உடலையும் கலராக்கும். உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யும் போது சுத்தமான தேங்காயெண்ணெயுடன் கடுகு எண்ணெயும் சம அளவு கலந்து உடலுக்கு மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக கை, கால், கணுக்கால் முட்டிகளில் தேய்த்துவர வேண்டும். வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உடலுக்கு இப்படி மசாஜ் செய்துவந்தால் உடல் நிறமும் மாறும். பளபளப்பாகவும் இருக்கும். உடலில் கட்டிகள் இருக்கும் இடங்களில் வெறும் கடுகு எண்ணெயை மட்டும் தேய்த்துவரவேண்டும். அப்படி செய்தால் கட்டிகள் இல்லாமல் உடல் முழுக்க பொலிவாகவே இருக்கும்.

⏩️​சருமம் எப்படி பொலிவாகிறது
கடுகு எண்ணெய் வைட்டமின் இ சத்தை உள்ளடக்கியிருக்கிறது. சன்ஸ்க்ரீனுக்கு இயற்கையான மாற்றாகவே கடுகு எண்ணெய் இருக்கிறது. இவை சருமத்தில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றுவதோடு சரும துளைகளுக்குள் சென்று அடைப்பையும் உண்டாக்காது. இதனால் இறந்த செல்கள் வெளியேறுகிறது. புதிய செல்களால் முகம் எப்போதும் பளீரென்று இருக்கிறது. 
ஆயுர்வேத மருத்துவத்தில் உடலுக்கு மசாஜ் செய்ய இந்த கடுகு எண்ணெய் பயன்படுத்துவது கூட சருமத்துக்கு நன்மை செய்வதால் தான்.



No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...