இளமையாக, சுறுசுறுப்பாக, உற்சாகமாகச் செயல்பட ஆழ்ந்த உறக்கம் அவசியம். அது 7 முதல் 8 மணி நேரத் தூக்கமாக இருப்பது நல்லது. பொதுவாக ஆழ்ந்த உறக்கம், உடலை மட்டுமல்லாமல் மனதையும் இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக, மனஅழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
மனஅழுத்தமும் பல்வேறு சரும நோய்களுக்கு முக்கியக் காரணியாக அமைகிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். எனவே, ஆழ்ந்து உறங்குவோம், அழகான சருமத்தைப் பெறுவோம்.. தூங்கும் நேரத்தில்தான் நம்முடைய சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. தூங்கும்போது, கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகமாக புதிய செல்கள் உருவாவதாக ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனால் ஃபேஸ்பேக், நைட் க்ரீம்ஸ் போடுவதற்கு சரியான நேரம் நாம் தூங்கும் நேரம்தான். `
நம் வீட்டிலிருக்கும் பொருள்களைக் கொண்டே சில நைட் க்ரீம்களைத் தயாரிக்க முடியும்.இதில் முக்கியமானது ஆப்பிள் நைட் கிரீம்.
ஆப்பிள் நைட் க்ரீம்
ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை அதிகமாக உள்ளன. மேலும், இதிலுள்ள மாலிக் அமிலமும், ஆன்டிஆக்ஸிடன்ட்டும் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க உதவும்.
தேவையானவை:
ஆப்பிள் - 1
ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 2 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
ஆப்பிள் பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெயுடன் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஓர் அகலமான பாத்திரத்தில் தண்ணீர்விட்டு, அதனுள் இன்னொரு பாத்திரத்தை வைத்து கலவையைச் சூடுபடுத்த வேண்டும். இந்தக் கலவை ஆறியதும் அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலக்கி சுத்தமான காற்றுப் புகாத டப்பாவில் போட்டு, ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
முகத்தைக் கழுவிவிட்டு, தேவையான அளவு இந்த நைட் க்ரீமை முகத்தில் அப்ளை செய்து நன்றாகக் காய்ந்ததும் தூங்கப் போகலாம். அடுத்த நாள் காலையில் முகத்தைக் கழுவினால் மிருதுவான, பளபளப்பான சருமம் கிடைக்கும்
No comments:
Post a Comment