Monday, April 20, 2020

கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

ர்ப்பமாக இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா, அது பாதுகாப்பானதா, அப்படி இருக்கலாம் என்றால் அதற்குரிய 

samayam tamil

பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா, அது பாதுகாப்பானதா, அப்படி இருக்கலாம் என்றால் அதற்குரிய பொசிஷன்கள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம்.

உடலுறவு கொள்வது சரியானதா?

samayam tamil

கர்ப்பிணிப் பெண் கர்ப்பம் தரித்த நாள் முதல் குழந்தை பெற்றெடுக்கும் வரையில், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மூன்று மாதத்துக்குப் பிறகு கருவைச் சுற்றி 'ஆம்னியான்’ (Amnion) எனப்படும் நீர் நிறைந்த பனிக்குடம் உருவாகும். நடப்பது, உட்கார்வது, படுப்பது எனத் தாயின் உடல் அசைவுகளின்போது கருவில் உள்ள குழந்தை சிதைவுறாமல் இருக்கவே இயற்கை இந்த ஏற்பாட்டைச் செய்கிறது.
அதனால் இந்த சமயத்தில் உடலுறவு கொள்வதையும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பற்றி நீங்கள் உங்களுடைய மருத்துவரின் ஆரோசனையோடு தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

கர்ப்ப கால தொடக்கம்

samayam tamil

பெண் கர்ப்பம் தரித்திருப்பது, பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவரால் உறுதி செய்யப்பட்டதும், அந்தத் தம்பதிகள் உடலுறவு கொள்வதைத் தற்காலிகமாக சிறிது காலத்திற்கு நிறுத்திக் கொள்வது நல்லது. அது வெறும் மூன்று மாதங்களுக்குத்தான். முதல் மூன்று மாதங்களில் உடல் உறவில் ஈடுபட்டால் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக உருவாவதில் சிக்கல், பனிக்குடம் உடைதல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். அதேபோல் கரு பலம் பெறுவதற்கான கால அவகாசத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். மூன்றாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை உறவில் ஈடுபடலாம்.

இரண்டாவது குழந்தை

முதல் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்திருந்தால், அதற்கு அடுத்த கர்ப்பக் காலத்தில் கட்டாயம் உடல் உறவைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை குறை பிரசவம் இல்லாமல் பத்து மாதம் முடிந்து, சிசேரியன் செய்யப்பட்டிருந்தால், அடுத்த குழந்தை கருத்தரித்திருக்கும் வேளையில், உங்களுடைய மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு, உறவில் ஈடுபடுவது நல்லது.
ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருத்தல், கர்ப்பக் காலத்தில் பிறப்பு உறுப்பில் ரத்தப்போக்கு, பிரசவத்துக்கு முன்பே கருப்பையின் வாசல் (Cervix) திறந்த நிலையில் இருப்பது, நஞ்சுக்கொடி (Placenta) கருப்பை வாசலுக்கு வந்துவிடுவது போன்ற பிரச்னைகளை எதிர் கொண்டவர்கள் கர்ப்பக் காலத்தில் உடல் உறவில் ஈடுபடுவதை கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். அதோடு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வதும் மிக அவசியம்.

பொசிசன்கள்

samayam tamil

கர்ப்பிணிக்கு எந்த நிலை சவுகரியமோ அதுதான் சரியான நிலை. குறிப்பாக கணவனின் எடை மனைவியின் வயிற்றை அழுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓர் உதாரணம்... இருவரும் எதிரெதிரே உட்கார்ந்த நிலையில் உறவு கொள்வது ஆபத்தைத் தவிர்க்கும்.
கர்ப்ப காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருப்பதற்காகவே சில பொசிசன்கள் இருக்கின்றன. உதாரணமான ஸ்பூன் என்றொரு பொசிஷன் உண்டு. அதில் கர்ப்பிணிகளின் வயிறு அழுத்தப்படாமல், ஒருக்களித்துப் படுத்திருக்க முடியும். இந்த பொசிஷனின் மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதேபோல், படுக்கை அறையில் முரட்டுத்தனம் கூடாது.

கிருமித்தொற்றை தடுக்க

samayam tamil

பொதுவாக நோய்த்தொற்றுக்கள் உடலுறவின் வழியே ஆணிடம் இருந்து பெண்ணுக்கும், பெண்ணிடம் இருந்து ஆண்களுக்கும் அதிக அளவில் பரவ வாய்ப்புண்டு. அதிலும் கர்ப்ப காலத்தில் அவ்வாறு பரவும் தொற்றுக்கள் குழந்தையையும் பாதிக்க வாய்ப்பு அதிகம். அதனால் உடலுறவுக்கு முன்னர் ஆண், பெண் இருவருமே பிறப்பு உறுப்புகளை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், தொற்றுக் கிருமிகள் கர்ப்பிணியையும் சிசுவையும் பாதிக்கும். குறிப்பாக, வாய் வழி உறவில் நாட்டம் இருப்பவர்கள் சிறிது காலத்திற்கு அதுபோன்ற முறைகளைத் தவிர்த்தல் வேண்டும்.


No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...