Sunday, April 12, 2020

மேக் அப் போடாம இயற்கை அழகு பெற செய்ய வேண்டியது இதுதான்!

மேக் அப் போடாம இயற்கை அழகு பெற செய்ய வேண்டியது இதுதான்!

samayam tamil

இருக்கிறோம் என்னும் எண்ணமே அளவுக்கதிகமான தன்னம்பிக்கையை கொடுத்துவிடும். தோற்றத்தின் அழகை அதிகரிக்க அழகு நிலையங்களை மட்டுமே நம்பியிராமல் இயற்கை முறையிலும் காக்க முயற்சிக்க வேண்டும். அழகு சாதன பொருள்களால் அழகை கூட்டி காண்பிக்க முடியும். அவை எல்லாமே தற்காலிகமானவையே. ஆனால் சிறுவயதில் இருந்தே அழகை இயற்கையாக பெறுவதற்கு குறிப்பாக சருமத்தை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். இவற்றை சரியான முறையில் பின்பற்றும் போதே வயது கூடினாலும் இயற்கை அழகோடு மிளிர தொடங்குவீர்கள். அப்படி என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்

தண்ணீர்

samayam tamil

ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டின் தொடக்கமும் இதில் தான் தொடங்குகிறது. ஏனெனில் மனித உடல் 70% தண்ணீரை கொண்டுதான் இயங்குகிறது. இவை பற்றாக்குறை இல்லாமல் இருந்தாலே உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடலில் இருக்கும் நச்சுக்கள் அவ்வபோது வெளியேறினாலே உடல் சுத்தமாகும். சுத்தத்தில் சருமம் பளிச்சென்று இருக்கும்.
இயற்கை முறையில் அழகு படுத்த இதைவிட சிறந்த வழிமுறை எதுவுமே இல்லை என்று சொல்லுமளவுக்கு தண்ணீர் பயன்படும். அதைத்தான் இன்று சரும பராமரிப்பு மருத்துவர்களும், அழகு கலை நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள்.

தூக்கம்

samayam tamil

இவையும் உடலுக்கு மிகவும் முக்கியமானதுதான். ஆழ்ந்த தூக்கம் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியம் அழகுக்கும். தினமும் 7 மணி நேரம் முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். தூக்கம் குறைந்தால் முதலில் கண்களில் பாதிப்பு தொடங்கும். பிறகு கருவளையம், கண்களை சுற்றி கருப்பு உண்டாகும். அப்போதாவது விழித்துகொள்ள வேண்டும் இல்லையெனில் அதை தொடர்ந்து முகச்சுருக்கம், வயதான தோற்றம் எல்லாம் வரிசைக்கட்டி நிற்கும்

பழச்சாறுகள்

samayam tamil

தண்ணீர் என்னும் திரவ ஆகாரம் தான் உடலுக்கு தேவை என்கிறீர்களா? சருமத்தின் மினுமினுப்பை கொடுப்பதற்கு ஊட்டச்சத்து வேண்டுமே. அதை எளிதாக பெறுவதற்கு உதவுவது பழச்சாறுகள் தான். எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் காபி, டீ பானங்களை தவிர்த்து பழச்சாறுகளுக்கு மாறுங்கள். உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுவதால் சருமம் இயற்கையாகவே மினுமினுப்பை கொள்ளும். குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்கள் எடுத்துகொள்வது நல்லது.

உடல் சுத்தம்

samayam tamil

சருமத்தை சுத்தமாக வைத்துகொள்வதும் முக்கியம். வெளியில் செல்லும் போது படியும் தூசி, அழுக்கு போன்றவை உச்சி முதல் கால்கள் வரை படிந்துவிடும். அவ்வபோது அதை நீக்காவிட்டால் சருமத்தில் தலையில் தங்கி பிரச்சனைகளை உண்டாக்கும். தினமும் இரண்டு வேளை குளியல் எப்போதும் உங்களை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும்.
அதே நேரம் அதிக நறுமணமிக்க அடர்ந்த நிற சோப்புகட்டிகளை பயன்படுத்தவேண்டாம். சோப்பை அதிகமாக பயன்படுத்தவும் வேண்டாம். வாரம் இருமுறையாவது கூந்தலை சுத்தம் செய்வது அவசியம்

பளிச் புன்னகை

samayam tamil

அழகு முகத்துக்கு கூடுதல் அழகு தருவது பளிச் போன்ற புன்னகைதான். டென்ஷனாக இருக்கிறேன் என்று எப்போதும் முகத்தை கடு கடுவென்று வைத்திருந்தால் சருமத்தில் சுருக்கம் எளிதாக விழுந்துவிடும் என்கிறார்கள். புன்னகைக்கும் போது மனதுக்கும் ரிலாக்ஸ் கிடைக்கிறது. சோர்வு நீங்கிய முகம் எப்போதும் சருமத்துக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். புன்னகை அழகாய் இருக்க பற்களையும் பளிச்சென்று வைத்துகொள்வதும் முக்கியம் என்பதையும் மறக்க வேண்டாம்

இயற்கை அழகு பொருள்

samayam tamil
வாரம் ஒருமுறையாவது முகம், கழுத்து பகுதிக்கு வீட்டிலிருக்கும் பொருள்களை பயன்படுத்துங்கள். தயிர், பால் ,பாலேடு, வெண்ணெய், மஞ்சள் தூள். எலுமிச்சை. பீட்ரூட், கேரட், பப்பாளி, கற்றாழை, பன்னீர், கோதுமை தவிடு, பாசிபருப்பு மாவு.. இப்படி இன்னும் அதிக பொருள்கள் பயன்படுத்துவது குறித்து தெரிந்துவைத்திருப்பீர்கள்.
அதை எல்லாமே சுழற்சி முறையில் அவ்வபோது பயன்படுத்துங்கள். எதுவுமே சருமத்துக்கு ஒவ்வாமையை உண்டாக்காது என்றாலும் ஏதேனும் அப்படியான பிரச்சனைகளை கொண்டிருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள்.

​அழுக்கில்லாமல் வைக்க

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அவ்வபோது வெளியேற்றிவிட்டால் புதிய செல்கள் உருவாகி முகத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். அவ்வபோது இதை நீக்கிவிடவேண்டும். மாதமிருமுறை அல்லது ஒருமுறை ஸ்க்ரப் போன்று இருக்கும் பொருள்களை (சர்க்கரை, ஓட்ஸ் பொடி, கோதுமை தவிடு, ரவை) கொண்டு ஸ்க்ரப் செய்தால் சருமத்துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். கையோடு துளைகளை மூடிகொள்ள ஐஸ் க்யூப் பயன்படுத்துவது, நல்லது. இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் எதுவுமே வராமல் பாதுகாக்கலாம்

அதிக மேக் அப்

samayam tamil

மேக் அப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. ஆனால் உங்கள் சருமத்துக்கேற்ற பொருள்களை பயன்படுத்துங்கள். முதலில் உங்கள் சரும பராமரிப்பு நிபுணர்களிடம் ஆலோசித்து உங்களுக்கான அழகு பொருள்களை பயன்படுத்துங்கள்.
எதை பயன்படுத்தினாலும் இரவு நேரங்களில் அதை கலைத்து முகத்தை சுத்தமான நீரில் கழுவி பிறகு தூங்க செல்லுங்கள். எதையும் பயன்படுத்த விரும்பாதவர்கள் சருமத்துக்கு சன்ஸ்கீரின், மாய்சுரைசர் மட்டும் பயன்படுத்துவதை கடைபிடியுங்கள். இவை சருமத்தை பாதுகாக்கும் பொருள் என்பதால் நிச்சயம் கடைபிடியுங்கள். குறிப்பாக அனைத்து சருமத்துக்கும் ஏற்றது இது.
மேற்கண்ட குறிப்புகள் அனைவருக்கும் அனைத்துவயதினருக்குமே. இதுவரை இல்லையென்றாலும் இப்போது இதை பின்பற்றுங்கள். குறைந்தது ஒரு மாதத்தில் நல்ல ரிசல்ட் நீங்களே உணர்வீர்கள்

copy in:https://tamil.samayam.com/lifestyle/beauty/how-to-maintain-face-beauty-naturally-at-home/articleshow/74977922.cms?story=8

No comments:

Post a Comment

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...