Wednesday, May 26, 2021

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல பிரதிபலிக்கும். கண் கருவளையம் என்பது கண்களுக்கு கீழே உள்ள தோல் பகுதி மட்டும் கருத்து காணப்படுவதாகும். பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். சில ஆண்களும் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கருவளையம் வந்து விட்டால் ஏதோ துக்க வீட்டில் விசாரிப்பது போல் பார்ப்பவர்கள் எல்லாம் என்ன கருவளையம் என்ன கருவளையம் என்று கேட்டு கேட்டு அவர்களுக்கு தெரிந்த எல்லா மருத்துவத்தையும் சொல்லி மனதளவில் சோர்வடைய செய்து விடுவர்.




கண்களுக்குக் கீழ் உள்ள தோலானது 0.5 மி.மீ தடிமனும் மற்ற இடத்தில உள்ள தோல் 2மி. மீ தடிமனும் கொண்டது.  அதனால் மற்ற தோலை விட கண்களுக்கு கீழ் உள்ள தோல் மிக விரைவில் பாதிப்படைகிறது. மிக விரைவில் கருவளையத்தை மறைய வைக்கலாம்.  கண் கருவளையம் ஏற்பட காரணங்கள் அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் நமக்கு உணர்த்துகிறது. வார விடுமுறையில் வீட்டில் உள்ள போது கீழே கொடுத்துள்ள இயற்கையான மருந்துகளை கண்ணின் கீழ் உள்ள கருவளையத்தின் மேல் போடலாம்.


 ஆனால் வேலை பார்க்கும் இடத்தில் அவ்வாறு போட முடியாது. ஓய்வுக்காக தூங்கவும் முடியாது. அதற்கு என்ன தான் தீர்வு என்று மண்டையை போட்டு குழப்பிக் கொள்ள தேவையில்லை. வேலையின் நடுவே தூங்க முடியாது தான் ஆனால் ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு முறை ஒரே ஒரு நிமிடம் கண்களை மூடி கண் விழிகளை அசைக்காமல் கண்களுக்கு ஓய்வு கொடுக்கலாம். கைக்குட்டையில் தண்ணீரை லேசாக நனைத்து கண்களுக்கு வைத்துக் கொண்டு கண்களுக்கு குளிர்ச்சி கொடுத்ததால் இன்னும் வெகு சிறப்பு.  இரவு அதிக நேரம் விழித்திருத்தல்  தூக்கம் நமது உடலுக்கும் கண்களுக்கும் சிறந்த ஓய்வு ஆகும். சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நமது நேரத்தைக் கழித்தால் கண்ணுக்கு கீழ் கருவளையம் கண்டிப்பாக ஏற்படும். ஒரு நாளுக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  அதிகமாக கண்களை கசக்குதல்  கண்களில் ஏற்படும் தொற்றினால் கண்களில் சில நேரம் அரிப்பு ஏற்படும். இதனால் கண்களை கசக்க நேரிடும். அதிகமாக கண்களை கசக்குவதால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்குக் கீழ் உள்ள தோல் கருமையடைகிறது. அதிகமாக கண்ணை கசக்கி அதனால் உண்டாகும் கருவளையம் அதுவாகவே மறைந்து விடும்.  மரபியல் காரணங்கள்  சிலருக்கு மரபியல் காரணங்களால் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு ஏற்படலாம். சத்துக்குறைவினால் சிலருக்கு கண் கருவளையம் தோன்றும். சத்தான உணவு பழக்கவழக்க முறைக்கு மாறுவதே இதற்க்கு தீர்வு.


முகத்தில் பூசப்படும் கிரீம்கள்  பெண்கள் அன்றாடம் முகத்தில் பல கிரீம்களை உபயோகிக்கின்றனர். இது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. இதனால் மிகவும் மெல்லிய தோலான கண்களுக்கு அடியில் கருமையாக மாறுகிறது. அப்படிப்பட்ட க்ரீம்களை கண்டறிந்து எதிர்காலத்தில் அப்படிப்பட்ட க்ரீம்களை தவிர்த்து கண்ணின் கருவளையம் வருவதை தவிர்க்கலாம்.  இரத்த நரம்புகள்  கண்களுக்கு அடியில் உள்ள இரத்த நரம்புகள் கூட சில நேரம் கருமையாக தோற்றம் அளிக்கலாம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை.  அதிகம் வெயிலில் அலைவது  அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது. இதனால் கருவளையம் ஏற்படுகிறது.


அதனால் வெயில் காலங்களில் கருவளையம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாரம் ஒருமுறையாவது கண்ணை குளிர்ச்சி படுத்தும் விதமாக கேரட் அல்லது வெள்ளரிபிஞ்சை மெல்லிதாய் நறுக்கி கண்ணின் மேல் வைத்தல் நலம் பயக்கும்.  வயது முதிர்வு  கண் கருவளையத்திற்கு வயது மிகவும் முக்கியமான காரணமாகும். வயது அதிகமானால் தோலில் தொய்வு ஏற்பட்டு கண் கருவளையம் ஏற்படும்.  புகை மற்றும் மதுப்பழக்கம்  புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் மிக எளிதாக கண் கருவளையதிற்கு ஆளாகிறார்கள்.  ஹார்மோன்  ஹார்மோன் சுரப்பு சரியாக இல்லாத காரணத்தினால் கருவளையம் ஏற்படலாம்.  நீரிழப்பு  போதுமான அளவு நீர் அருந்தாமல் இருந்தாலும் கருவளையம் ஏற்படும். பெரும்பாலான ஆய்வு முடிவுகள் உடலில் சரியான அளவு நீர் இல்லாததினால் தான் கண் கருவளையம் உண்டாவதாக தெரிவிக்கின்றன.


காலையில் எழுந்தவுடன் ஒரு முழு செம்பு நீர் அருந்துவது வாட்டர் தெரபி எனப்படும் நீர் சிகிச்சையின் முக்கியமான ஒரு பகுதி. ஆரம்பத்தில் முழு செம்பு நீர் அருந்த கஷ்டமாகத்தான் இருக்கும். சிறிது சிறிதாக ஒரு டம்ளர் என்று ஆரம்பிக்க வேண்டும். காலையில் கண் விழித்தவுடன் இந்த முறைப்படி குளிர்ந்த நீர் அருந்துவது பல்வேறு நோய்களை அண்ட விடாது. 


💗💗💗கண் கருவளையதிற்கு தமிழ் மருத்துவம்


♥️கருவளையம் மறைய பாதாம் எண்ணெய்



மருத்துவம்  பாதாம் எண்ணையை கண்ணுக்கு அடியில் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கருவளையம் மறையும்.

 இரவில் பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும்.


♥️ கண் கருவளையம் மறைய வெள்ளரிக்காய் மருத்துவம்

 வெள்ளரிக்காயை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும். 


♥️கண் கருவளையம் மறைய உருளைக்கிழங்கு மருத்துவம் 

உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து பஞ்சில் தொட்டு கண்ணனுக்கு அடியில் தடவ வேண்டும்.15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கண் கீழ் கருவளையம் மறைந்து நல்ல பலனைப் பெறலாம்.


♥️ கண் கருவளையம் மறைய தக்காளி மருத்துவம் 


ஒரு ஸ்பூன் தக்காளி சாருடன் ஒன்றரை ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து கருவளையத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். 


♥️கருவளையம் மறைய கற்றாளை மருத்துவம்

 சோற்றுகற்றாழையின் தோலையும் முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து எடுத்து வந்தால் கருவளையம் மறையும். 


♥️கருவளையம் மறைய தேங்காய் எண்ணெய் மருத்துவம்



  சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும்.


♥️  கருவளையம் மறைய டீ பேக் மருத்துவம் 


டீ பேக்கை ஒரு டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்த பின் அதை வைத்து கண்ணின் கருவளையத்திற்கு ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் கருவளையம் மறைய தொடங்கும். 


♥️கருவளையம் மறைய திராட்சை விதை எண்ணெய் மருத்துவம் 

பொதுவாகவே முகத்திற்கு திராட்சை விதை எண்ணெய் மிகவும் நல்லது. கண்ணுக்கு அடியில் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் கருவளையம் மறையும். 


♥️கருவளையம் மறைய ரோஸ் வாட்டர் ஒரு மருந்து 


பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் நாளடைவில் கருவளையம் மறையும். 


♥️கருவளையம் மறைய தேன் மருத்துவம்

 தேனை கண்ணுக்கு கீழ் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் கருவளையம் மறையும். 

♥️கருவளையம் நீங்க புதினா சாறு மருத்துவம் 

புதினாவை அரைத்து அந்த விழுதை கருவளையத்தில் தடவினால் கருவளையம் மறையும். 

♥️கருவளையம் மறைய பால் ஒரு மருந்து 


குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் மறையும்.

♥️ கருவளையம் மறைய ஆலிவ் ஆயில் மருத்துவம்

 ஆலிவ் ஆயில் கொண்டு கண்களில் மசாஜ் செய்தால் கண்கள் களைப்பு நீங்கி கருவளையம் மறையும். 

♥️கருவளையம் மறைய குங்குமப்பூ மருத்துவம்


 பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து சிறிது நேரம் கழித்து கண்களைக் கழுவினால் கண் கருவளையம் மறையும்.. 

♥️கண் கருவளையம் மறைய கேரட் மருத்துவம் 


கேரட்டை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையமயத் தொடங்கும்.

Saturday, October 10, 2020

முகத்தில் அழுக்கு அதிகமா இருக்குற மாதிரி இருக்கா? அப்ப நைட் டைம் இத யூஸ் பண்ணுங்க...

 

அனைவருக்குமே அழகாக ஜொலிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் உடல் ஆரோக்கியம் பாழாவதோடு, சரும ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு, இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. பொதுவாக உடலிலேயே வயது அதிகரிக்கும் போது மற்ற உறுப்புக்களை விட வேகமாக சருமம் அதன் நெகிழ்வுத்தன்மையை இழந்துவிடும்.



ஒருவர் தங்களின் சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுக்காமல் போனால், இன்னும் வேகமாக சருமம் முதுமைத் தோற்றத்தைப் பெற்றுவிடும். அதனால் தான் பெண்கள் மாதந்தோறும் தவறாமல் தங்கள் அழகிற்கு என்றே தனியாக பணத்தை செலவிடுகிறார்கள். ஆனால் அழகைப் பராமரிக்க அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. நம் வீட்டில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தாலே போதும்.

இப்போது முகத்தின் பொலிவைக் கெடுக்கும் சரும பிரச்சனைகளை விரட்டி, சருமத்தை சுத்தமாகவும் முகத்தை பொலிவோடும் காட்ட உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம். அதைப் படித்து பின்பற்றி நன்மை பெறுங்கள்.

☑️புதினா



புதினாவின் சாற்றினை இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் பெரிய பருக்கள் இருந்தாலும் ஒரே இரவில் சுருங்கிவிடும். இல்லாவிட்டால் புதினா இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவலாம். இதனால் சருமம் புத்துணர்ச்சி அடைவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளும் நீங்கி, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

☑️பப்பாளி



பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது காயங்களைக் குணப்படுத்த வல்லது. பப்பாளியைக் கொண்டு அடிக்கடி மாஸ்க் போட்டால், முகம் இளமையோடு இருக்கும். முக்கியமாக பப்பாளி ஃபேஸ் மாஸ்க் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. அதற்கு  , 2 டீஸ்பூன் பசும்பால் ,  2 டீஸ்பூன் கனிந்த பப்பாளி கூழ், 2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1 டீஸ்பூன்  தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

☑️பாதாம் 



பாதாம் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த பொருளாக கருதப்படுகிறது. முக்கியமாக  சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் நச்சுக்களை நீக்கக்கூடியது. அதற்கு  பாதாம் அரைத்து பொடி செய்து, 2 டீஸ்பூன்  பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தை நீரில் கழுவி விட்டு, பின் அந்த பாதாம்  கலவையை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும். முக்கியமாக கண்களைச் சுற்றி தேய்க்காதீர்கள். பின் 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

☑️மஞ்சள்
மஞ்சளில் ஆன்டி-செப்டிக் பண்புகளைத் தவிர, சருமத்தில் உள்ள கருமையைக் குறைக்க உதவக்கூடியது. மஞ்சள் தூளுடன் அன்னாசி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவினால், கருவளையங்கள் குறையும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதற்கு மஞ்சள் தூளை கரும்பு சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்ய மஞ்சள் தூளுடன் சந்தன பவுடர் சேர்த்து ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவ வேண்டும்.

☑️அரிசி மாவு
அரிசி மாவு சரும சுருக்கங்கள் மற்றும் சரும கருமையைப் சரிசெய்யக்கூடியது. அதற்கு 1/4 கப் அரிசி மாவுடன், 1/4 கப் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

☑️கற்றாழை ஜெல்


கற்றாழை ஜெல் அழகு பராமரிப்பு பொருட்களுள் முக்கியமானவை என்பது அனைவருக்குமே தெரியும். முக்கியமாக இந்த கற்றாழை சூரியக் கதிர்களால் சருமத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பருக்களைப் போக்க உதவுகிறது. அதற்கு தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

☑️தேன்
தேன் ஒரு இனிப்பான பொருள் மட்டுமின்றி, சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தரக்கூடியது. தேன் சருமத்தில் ஏற்படும் பரு வெடிப்பு மற்றும் தொற்றுக்களைத் தடுக்கும். மேலும் இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இத்தகைய தேனை நேரடியாக முகத்தில் தடவி காய்ந்த பின் முகத்தைக் கழுவ, முகம் வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.

Wednesday, September 16, 2020

தளர்ந்து தொங்கும் மார்பகங்களைப் பற்றிய சில தவறான கருத்துக்கள்!

 



பெரும்பாலான பெண்கள் மட்டுமே சந்திக்கும் ஓர் அழகு பிரச்சனை தான் தளர்ந்து தொங்கும் மார்பகங்கள். இது வயது, ஹார்மோன் பிரச்சனைகள், பிரசவ காலத்திற்கு பின், எடை குறைவு மற்றும் சில நேரங்களில் உடல் எடை அதிகரிப்பின் காரணமாகவும் ஏற்படும். எனவே மார்பகங்களுக்கு சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டு வர வேண்டியது அவசியம். மார்பகத்தை பெரிதாக்குவதற்கான வழிகள்!!!

தற்போது தொய்வடைந்த மார்பகங்களுக்கான ஏராளமான மசாஜ் க்ரீம்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்த க்ரீம்களைப் பயன்படுத்தினால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவே அவற்றைத் தவிர்த்து, இயற்கை வழிகளை நாடுவதே மார்பகங்களுக்கு நல்லது.


இங்கு தளர்ந்து தொங்கும் மார்பகங்கள் குறித்து மக்களிடையே உள்ள சில தவறான கருத்துக்களும், உண்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

➡️➡️மார்பக உடற்பயிற்சிகளை செய்து வந்தால் மார்பகங்கள் தளர்வதைத் தடுக்கலாம்!


மார்பகங்களில் எந்த ஒரு தசைகளும் இல்லை. அது இழைம திசுக்களை மட்டுமே கொண்டுள்ளது. எனவே உடற்பயிற்சியின் மூலம் மார்பகங்களை பெரிதாக்க முடியாது. இருப்பினும் மார்பகங்களுக்கான உடற்பயிற்சியை செய்வதன் மூலம், மார்பகங்கள் நிலைமாறாமல் இருக்கும். அதிலும் புஷ் அப் செய்வதன் மூலம், மார்பகங்களின் வடிவம் அழகாக்கப்பட்டு, மார்பகங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் வெளியேற்றப்படும். எனவே உங்கள் மார்பகங்கள் தளர்ந்து தொங்காமல் இருக்க வேண்டுமெனில், பளு தூக்குதல், செஸ்ட் பிரஸ் போன்றவற்றை செய்து வாருங்கள்.

➡️➡️தாய்ப்பால் கொடுப்பது மார்பகங்களைத் தளர்த்தும்!

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் எப்போதும் மார்பகங்கள் தளர்வதில்லை. பிரசவத்திற்கு பின் அதிகப்படியான எடை ஒரே நேரத்தில் குறைவதால் தான் மார்பகங்கள் தளர்கிறது. எனவே இதனைத் தவிர்க்க பிரசவத்திற்கு பின் நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் போதிய அளவில் நட்ஸ்களை சாப்பிட வேண்டும்.

➡️➡️பிரா அணிவதன் மூலம் மார்பகங்கள் தளர்வதைத் தடுக்கலாம்!




மற்றொரு கட்டுக்கதை பிரா அணிவதன் மூலம் மார்பகங்கள் தளர்ந்து தொங்குவதைத் தடுக்கலாம் என்பது. பிராவை 24/7 அணிவதன் மூலம் மார்பகங்கள் தளர்வதைத் தடுக்கலாம் என்பது உண்மையல்ல. ஆனால் சரியான மற்றும் ஃபிட்டான பிரா அணிவதன் மூலம் தளர்ந்த மார்பகங்களுக்கு ஆதரவைத் தான் கொடுக்க முடியுமே தவிர, சரிசெய்ய முடியாது.

➡️➡️சிறிய மார்பகங்கள் தளராது!

இது மற்றொரு மடத்தனமான கட்டுக்கதை. அது என்னவெனில் பெரிய மார்பகங்கள் தான் தொய்வுறும் என்பது. உண்மையில் மார்பகங்களில் உள்ள கொழுப்பு மற்றும் மார்பக திசுக்களின் அளவைப் பொறுத்து தான் தொய்வுறுவது உள்ளது. அதிலும் மார்பகங்களில் கொழுப்புக்கள் அதிகமாகவும், மார்பக திசுக்களின் அளவு குறைவாகவும் இருந்தால் தான் மார்பகங்கள் தொய்வுறும்.

➡️➡️மார்பகங்கள் தளர்ந்தால் சரிசெய்ய முடியாது!

இது தவறான கருத்து. மார்பகங்கள் தளர்ந்தால், அதனை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் மீண்டும் உறுதியுடன் இருக்கச் செய்யலாம். அதற்கு நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, மார்பகங்களில் எண்ணெய் மசாஜ் செய்வது, தண்ணீர் அதிகம் குடிப்பது, சில மார்பக பயிற்சிகளை செய்வதன் மூலம், உறுதியிழந்த மார்பகங்களின் உறுதித்தன்மையை அதிகரிக்கலாம்.

முகத்தை ஜொலிக்க மூன்றே பொருள்களில் ஃபேஸ் வாஷ் பவுடர், இப்படிதான் தயாரிக்கணும்!

முகத்தை அழகாக்கத்தான் ஃபேஷியலும் முகத்துக்கு பராமரிப்பும் ஆனால் இதெல்லாம் செய்யாமலே முகத்தை அழகாக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?


முகத்துக்கு செய்ய வேண்டிய பராமரிப்புகளே இல்லாமல் முகத்தை பொலிவாக வைக்க உதவும் பொருள்கள் நம் அருகிலேயே இருக்கிறது. முகத்துக்கு க்ளென்சிங், டோனிங், மாய்சுரைசர், ஃபேஸ் பேக் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தால் தான் அழகை பராமரிக்க முடியும் என்று பலரும் நினைத்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இயற்கையான பொருள்களை கொண்டு இது எல்லாவற்றையும் ஒன்றிலேயே செய்துகொள்ள முடியும். அதுவும் இயற்கையாக ஆரோக்கியமாக என்று சொல்லலாம். முகம் மினுமினுக்க, ஜொலி ஜொலிக்க செய்ய முகத்துக்கு ஒன்றை மட்டுமே செய்தால் போதும். இந்த ஃபேஸ் பேக் பவுடரை வீட்டில் எப்படி தயாரிப்பது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

➡️​ரோஜா இதழ்கள் - முகப்பவுடர் தயாரிப்பில்..



அழகான ரோஜாக்கள் நறுமணத்தில் மட்டும் தனித்துவம் வாய்ந்தது என்று சொல்ல முடியாது. அவை அழகையும் கொடுக்கவல்லது என்பதை பயன்படுத்தினாலே தெரிந்துவிடும். அழகிற்கு அழகு சேர்க்க விரும்பும் பெண்கள் தாராளமாக இதை பயன்படுத்தலாம். கலப்படமில்லாமல் அழகு தரும் ரோஜாப்பூக்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரையான அனைத்து அழகு தயாரிப்பிலும் பயன்படுகிறது. பன்னீர் இருந்தால் போதும் முகத்தை எளிதாக அழகுப்படுத்திகொள்ளலாம் என்று சொல்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள். அந்த பன்னீரை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். அந்த லிங்கை இங்கு இணைத்திருக்கிறேன்.

தேவை

நாட்டு ரோஜா இதழ்கள் - 4 கப்

தனிரகங்களாக இருக்கும் ரோஜாக்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். நாட்டு ரோஜா இதழ்கள் அழுத்தமில்லாமல் மென்மையாக இருக்கும். இவை நீண்ட நேரம் இல்லாமல் சில நிமிடங்களில் உதிர்ந்துவிடக்கூடும்.

இதுதான் அசல் ரோஜாக்களுக்கான அடையாளம். இந்த ரோஜாக்களை வாங்கி இதழ்களை தனியாக எடுத்து வையுங்கள். ரோஜா இதழ்களை உலர்த்தி வைக்கவும்.

➡️​ஓட்ஸ் - முகப்பவுடர் தயாரிப்பில்..




ஓட்ஸ் என்பது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டும் அல்ல, சருமத்துக்கும் நல்லது. தானிய வகையை சார்ந்த ஓட்ஸ் முகத்தில் எண்ணெய்பசை வராமல் தடுக்க உதவுகிறது. இதிலிருகும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் சருமத்தை வறட்சியில்லாமல் காக்க செய்கிறது. அதோடு இறந்த செல்களை நீக்கவும் உதவுகிறது. ஓட்ஸில் இருக்கும் செபோனின் சருமத்தை சுத்திகரிக்கவும், அழுக்குகளை நீக்கவும் உதவுகிறது. எண்ணெய் பசையை நீக்குவதோடு அவை சருமத்துக்கு ஈரப்பதமும் அளிக்கிறது.

தேவை

ஓட்ஸ் - 2 கப் அளவு

➡️​பாதாம் - முகப்பவுடர் தயாரிப்பில்..




பாதாம் எப்படி உடலுக்கு அதிகப்படியான நன்மை தருகிறதோ அதே போன்று சருமத்துக்கும் அழகை தருகிறது. சருமத்துக்கு சத்து கொடுப்பதிலும் இவை முதலிடம் என்றாலும் விலை அதிகம் என்பதால் இதை பெரும்பாலும் அதிகம் பயன்படுத்துவதில்லை ஆனால் அழகுக்கு பயன்படுத்தப்படும் க்ரீம்களை விலை கொடுத்து வாங்குவதற்கு மாற்றாக பாதாம் கொட்டையை பயன்படுத்தினால் போதுமானது.

தேவை

பாதாம் - கால் கப் அளவு

பாதாம் கொட்டையை ஊற வைத்து தோலுரித்து உலர்த்த்திவிட வேண்டும். அவை ஈரப்பதமில்லாமல் இருக்க வேண்டும்.

​➡️குங்குமப்பூ - முகப்பவுடர் தயாரிப்பில்..




குங்குமப்பூ நிறம் கொடுக்கும் என்பதை அனைவரும் அறிவோம். முகத்தின் நிறம் மங்கி கருமை அடைவதை மாற்றி இயற்கையாகவே நிறம் தருவது குங்குமப்பூ என்று சொல்லலாம். அப்படி உங்கள் அழகான முகம் நிறம் இழந்தால் அவை அழகாய் மாற குங்குமப்பூ உதவும். இதன் விலையும் அதிகம் என்றாலும் அவை முகத்தின் நிறத்தை மாற்ற உதவக்கூடும். குங்குமப்பூவும் அதிக விலையாக இருந்தாலும் இவை முகத்துக்கு இயற்கையாக அழகை தரும் என்பதால் இவற்றையும் சேர்க்க வேண்டும்.

தேவை

குங்குமப்பூ - 5 கிராம் அளவு

​தயாரிக்கலாம் - முகப்பவுடர் தயாரிப்பு

முதலில் மிக்ஸியில் ஓட்ஸ் பவுடரை போட்டு மைய அரைக்கவும். ஓட்ஸ் சீக்கிரமாக பொடியாகாது. அதனால் முதலில் ஓட்ஸை நன்றாக பொடிக்கவும். பிறகு இதை சலித்து எடுக்கவும். (ஸ்க்ரப் செய்ய இந்த பொடி பயன்படுத்துவதாக இருந்தால் சலித்தவற்றில் மீதியிருப்பதை தனியாக எடுத்துவைக்கலாம்)

ரோஜா இதழ்கள். நன்றாக உலர்ந்த பாதாம் கொட்டையையும், குங்குமப்பூவையும் சேர்த்து மைய பொடிக்கவும். இடையிடையே விட்டு விட்டு மிக்ஸியில் சுற்று சுற்ற வேண்டும். இல்லையெனில் அவை ஈரமாகி கட்டியாகிவிடும் என்பதால் இடையிடையே விட்டு விட்டு மிக்ஸியை சுற்றவும். பிறகு சலித்த ஓட்ஸ் மற்றும் பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும். இவை நன்றாக கலந்ததும் கண்ணாடி பாட்டிலில் வைத்து கொள்ளவும்.



முகத்துக்கு பயன்படுத்தும் போது இதை பன்னீர் கலந்து ஃபேஸ் பேக் போன்று பயன்படுத்தலாம். முகம் பளிச்சென்று மின்னும். அதோடு இதை முகத்துக்கு முகப்பொடியாகவும், உடலுக்கு குளியல் பொடியாகவும் கூட பயன்படுத்தலாம். இந்த பொடியை மூன்று மாதத்துக்கு ஒருமுறை தயாரித்தால் போதுமானது.

கண் கருவளையம் மறைய எளிய மருத்துவ டிப்ஸ்..!

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. நமது உடலில் உள்ள சத்து குறைபாடு மற்றும் நோய்கள் போன்றவற்றை நமது முகம் கண்ணாடி போல...